நாளை மற்றுமொரு நாளே
Nalai Matrumoru Naale
Select a cover image
Searching for images...
Saving cover image...
நாளை மற்றுமொரு நாளே
Nalai Matrumoru Naale
- பக்கங்கள்
- 143
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Kalachuvadu Publications
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- Kalachuvadu Fourth Edition
- ISBN-13
- 9788187477204
- ASIN
- B07PXCWBVS
விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலை எவ்விதப் பூச்சும் இன்றி அப்படியே பிரதிபலிக்கும் தமிழ் நாவல்களில் இது மிக முக்கியமானது. ஒரு சாமானிய மனிதனின் ஒரு நாள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகரும் இக்கதை, சமூகத்தின் போலித்தனங்களையும் மனித இயல்பின் பலவீனங்களையும் எதார்த்தமாகப் பதிவு செய்கிறது. எளிய மனிதர்களின் அன்றாடப் போராட்டங்கள், அவர்கள் சந்திக்கும் அவமானங்கள் மற்றும் எதிர்பாராத துணிச்சல்கள் என வாழ்வின் இ…
user_7427
★ 5/5நான் இதுவரை பார்த்திடாத, பேசிடாத மனிதர்கள் பற்றிய கதை. ஆயினும் என்னால் அவர்களின் உலகைப் புரிந்துகொள்ளும்படியாக எழுதியிருக்கிறார் ஜி.நாகராஜன்.
ஒருவனின் அன்றாட வாழ்க்கையை விவரித்து, அவன் மூலம் நம்மை அவனின் உலகிற்கு அழைத்துப்போகிறார். அவனது ஒரு நாளின் அனுபவத்தை நாமும் பெறுவது போலான வாசிப்பு. அந்த அனுபவம் பிடித்ததா இல்லையா என்பது வாசிப்பவரின் மனநிலையைப் பொறுத்தது. ஆனாலும் அனுபவத்தைப் பெறுவது நிச்சயம்.
user_7426
★ 5/5அன்றாட வாழ்வில் நடக்கும் யதார்த்தங்களை தத்ரூபமாக வடிப்பது ஒரு கலை எனில், ஜி.நாகராஜன் அதன் பிதாமகன் என்றே சொல்லத் தோன்றுகிறது.
வாழ்வின் அழகை பலர் எழுதியிருப்பினும், அழகின்மையே வாழ்க்கை — அதை வெல்லவோ வீழ்த்தவோ முடியாது, வாழ்ந்து அனுபவிப்பதே புரிந்துகொள்ள ஆகச் சிறந்த வழி என்பதை கதை மாந்தர்கள் வழியாகக் கடத்தியிருக்கிறார். 35 வருடம் முன்பு எழுதிய நாவல் இன்றும் அதே அனுபவம் தருமெனில் அதுவே கிளாசிக். வரலாறு கடந்து நிற்கும் ஆகச்சிறந்த படைப்பு.
user_7425
★ 4/5வாசிப்பதற்கு சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் காதல், துரோகம், வீரம் என எழுதித் தள்ளிக்கொண்டிருக்கையில், இது சற்று வித்தியாசமாகவும் புதுமையானதாகவும் இருந்திருக்க வேண்டும்.
பாலியல் தொழில் செய்பவர்களை எந்தவிதக் குற்ற உணர்வோடும் அணுகாமல் சாதாரண மனிதர்களாகக் காட்டியதற்கு நன்றி. எந்த இடத்திலும் பாடம் எடுக்காமல், சோக ரசம் பிழியாமல் இருந்ததற்கும் நன்றி. ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டிய நாவல்.
user_7424
★ 4/5இந்த எழுத்து நடையில் வேறு யாராலும் எழுத முடியாது. அற்புதமான புத்தகம்!
1950களின் இந்திய சாமானிய மனிதனின் ஒரு நாள் வாழ்க்கை. இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுத ஒரு மணி நேரம் தேவை — அவ்வளவு ஆழமான படைப்பு.
மறக்க முடியாத வசனம்: "நான் டீ, காஃபி எதுவும் சாப்பிடக் கூடாது; விஸ்கிதான் சாப்பிடனும்னு டாக்டர் சொல்லியிருக்கிறார். எங்க பிளட்டுக்கு அதுதான் ஒத்துக்குது."
user_7423
★ 3/5தமிழ் இலக்கியத்தில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பாலியல் தொழிலாளிகளையும் அவர்களைச் சுற்றி வாழும் விளிம்புநிலை மனிதர்களையும் கதைமாந்தர்களாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். எழுபதுகளிலேயே கலாச்சாரக் கோட்பாடுகளையும் புனிதத்துவங்களையும் கட்டுடைத்து எழுதிய ஜி.நாகராஜன் பாராட்டுக்குரியவர்.
ஆனால் கந்தன் ஏன் ஒரு பாலியல் தொழிலாளிக்காக எல்லாவற்றையும் இழக்க வேண்டும் என்ற கேள்விக்கு இறுதி வரை விடை கிடைக்கவில்லை. சுப்பையா செட்டியார், ஐரின், கம்யூனிசம் பேசும் இளைஞன் போன்ற பாத்திரங்கள் இயல்பாகப் படைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கதையோட்டத்தோடு ஒட்டாத இடைச்செருகல்கள் போல இருந்தது. ஒட்டுமொத்தமாக நல்ல நாவல்தான் — ஆனால் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றை வாசிக்கும் ஆவலுடன் வாசித்த எனக்கு சிறிது ஏமாற்றமே.
Shelves
More like this
பசித்த மானிடம் [Pasittha Maanidam]
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பச…
குறத்தி முடுக்கு [Kurathi Mudukku]
‘குறத்தி முடுக்கு’ ஓர் இடமல்ல, ரத்தமும் நிணமும் சீழும் ஓயாமல் கசியும் ஆறாத ரணம். தான் உயிர்தப்ப, பல்லி துறந்த வால். பிறகு அதே பல்லியின் தினவுக்கு வடிகாலான அவலம். மும்பை…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-1
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
என் இனிய இயந்திரா-1
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
யவன ராணி
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
பிரிவோம் சந்திப்போம்
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…