வைகை நதி நாகரிகம்
Vaigai Nadhi Naagarigam
Select a cover image
Searching for images...
Saving cover image...
வைகை நதி நாகரிகம்
Vaigai Nadhi Naagarigam
- பக்கங்கள்
- 151
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Vikatan Publishers
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 1
- ISBN-13
- 9788184767858
- ASIN
- 8184767854
வைகை நதிக்கரையில் 293 கிராமங்களில் புதைந்திருக்கும் 2500 ஆண்டுகால நாகரிகத்தின் கதையை இந்த நூல் விரிக்கிறது. கீழடி அகழாய்வில் கிடைத்த 5300க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் — தந்தத்தாலான தாயக்கட்டை, ஆப்கானிஸ்தான் பவளமாலை, ரோமானியக் குவளை, தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்கக் கட்டிகள் — சாதியும் மதமும் அறியாத ஒரு நகர நாகரிகத்தின் சாட்சியங்களாக நிற்கின்றன. வைகையின் வடகரையில் "கோதை" என்ற பெண்ணின…
user_10100
★ 3/5கடைசி 50 பக்கங்கள் மீண்டும் மீண்டும் வரும் தகவல்களாக இருக்கின்றன. அதைத் தவிர்த்தால் நல்ல நூல்.
user_10099
★ 5/5அற்புதமாக எழுதப்பட்ட நூல்! குறிப்பாக ஆதாரங்களை வழங்குவதும், பல்வேறு தகவல்களை அழகாக இணைத்திருப்பதும் சிறப்பு. படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் கேள்வி-பதில் பகுதி முந்தைய அத்தியாயங்களில் உள்ள தகவல்களின் மறுபதிப்பாக இருப்பதால் சற்று சலிப்பாக இருக்கிறது.
user_10098
★ 5/5தமிழ் நாகரிகம் மிகப் பழமையானது என்பதற்கான ஆதாரங்களை பெருமையுடன் முன்வைக்கும் நூல். தென்னிந்தியாவுக்கும் கிரேக்கத்துக்கும் இடையிலான வணிகத் தொடர்புகளை நிரூபிக்கும் சான்றுகள் அற்புதமாக உள்ளன. நூலின் முதல் பகுதி நம் முன்னோர்களின் கலை, கைவினை, போர்க்கலை ஆகியவற்றில் எவ்வளவு திறமையானவர்கள் என்பதை உணர்த்துகிறது.
ஆனால் இரண்டாம் பகுதி, இன்றைய இந்திய மற்றும் மாநில அரசியலின் கடுமையான உண்மைகளை வெளிப்படுத்தி நம் பெருமிதத்தை உடைக்கிறது. தமிழ்நாட்டின் பெருமை ஏன் இந்தியாவின் பெருமையாகக் கருதப்படுவதில்லை என்ற கேள்வி எழுகிறது. என் குழந்தைகளுக்கு படங்களுடன் இந்த நாகரிகத்தை விளக்க முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
user_10097
★ 5/5கீழடி பற்றிய மிகச்சிறந்த கட்டுரைத் தொகுப்பு. கீழடி வெறும் ஒரு இடம் இல்லை — தமிழர்களின் கருவூலம், சங்க கால நகர நாகரிகத்தின் அடையாளம். சாதியும் மதமும் அறியாத பழந்தமிழ்ச் சமூகத்தின் உண்மை முகம்.
2200 வருடங்களுக்கு முன் நம்மைக் கொண்டுசெல்கிறார் ஆசிரியர். ஆப்கானிஸ்தான், கிரேக்கம், ரோமாபுரி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பாண்டியர்களின் வணிகப் பெருமையை உணர்த்துகின்றன. அந்துவன் என்ற வீரனும், தங்கமகள் கோதையும் வரலாற்றை மாற்றிய இரண்டு நபர்கள்.
கீழடியில் சாதி என்ற ஒன்றை அறியாத மக்கள் வாழ்ந்துள்ளனர் — இது தமிழகத்தில் கிடைத்த முதல் குடியிருப்புத் தளம். கீழடிக்காகவும் அமர்நாத் இராமகிருஷ்ணனுக்காகவும் நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.
user_10096
★ 4/5வரலாற்றை சோர்வு ஏற்படாத வண்ணம் கீழடி முதல் கிரேக்கம் வரை எளிய நடையில் காட்சிப்படுத்திப் பார்க்கும் வண்ணம் எழுதியுள்ளார். படிப்பதற்கு சுவாரசியமான அனுபவம்.
Shelves
More like this
கி.மு கி.பி
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…
அறியப்படாத தமிழகம்
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…
பண்பாட்டு அசைவுகள்
தமிழகத்தின் நிலவியல், மக்களின் வாழ்வியல் மற்றும் தொன்மையான மரபுகளை மானுடவியல் நோக்கில் ஆராயும் மிக முக்கியமான நூல் இது. 'அறியப்படாத தமிழகம்' உள்ளிட்ட முந்தைய படைப்புகளி…
குமரிக்கண்டமா சுமேரியமா?
தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா? திராவிடர்கள் என்பவர்கள் யார்? தமிழர்களின்…
தெய்வம் என்பதோர்...
ஒரு கிராமத்தின் எல்லையில் நிற்கும் காவல் தெய்வம், வயல்வெளியில் அறுவடைக் காலத்தில் விழிப்புடன் காக்கும் அம்மன், கண்மாய்க் கரையில் தூங்காமல் நிற்கும் ஐயனார் — இவர்கள் யார்? ஒரு பெர…
அறியப்படாத தமிழ்மொழி
அறியப்படாத தமிழ்! மறுக்கப்பட்ட தமிழ்! மறைக்கப்பட்ட தமிழ்! இன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்! அதென்ன, ‘மறைக்கப்பட்ட’ தமிழ்? யார் மறைத்தார்கள் நம் மொழியை? நம் மரபில்/பண்ப…
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…
வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்)
வைகை நதி நாகரிகம்! ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்…
வந்தார்கள் வென்றார்கள்
இந்திய வரலாற்றின் ஒரு முக்கியப் பகுதியை, குறிப்பாக முகலாயர்களின் வருகையையும் அவர்களின் எழுச்சியையும் விறுவிறுப்பான கதையோடு விவரிக்கும் ஒரு காலப்படைப்பு இது. வரலாற்றை…
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
தேசாந்திரி
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
மனிதனுக்குள் ஒரு மிருகம்
இந்த நூல் மனித மனதின் இருண்ட பக்கங்களையும், நாகரிக சமூகத்திற்குள் ஒளிந்திருக்கும் வன்முறை உணர்வுகளையும் ஆழமாக ஆராய்கிறது. ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த இக்கட்டுர…