ராஜ திலகம் [Raja Thilagam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ராஜ திலகம் [Raja Thilagam]

None

Author: Sandilyan
4.18/5 · 400+ ratings

ம ணல் மேட்டுக்கருகே வந்ததும், எட்டவே சில விநாடிகள் நின்று தன்னை உற்று நோக்கிய பல்லவ இளவல் மீண்டும் ராஜநடை போட்டு மெல்ல மெல்லத் தன்னை நெருங்க முற்பட்டதைக் கண்ட மைவிழிச் செல்வி, விவரிக்க இயலாத வேதனைக்கும் சங்கடத்துக்கும் சினத்துக்கும் உட்பட்டாளாதலால், அவள் கண்கள் கனலைக் கக்கியதன்றி அவள் அழகிய உதடுகளும், “நில்லுங்கள் அப்படியே” என்று சுடு சொற்களை உதிர்த்தன. கால்களுக்குத் திடீரென்று யாரோ விலங்குகளைப் …

Reviews

user_8722

★ 5/5
Slow and steady.....vikramaadhthiyan is most fav....

user_8721

★ 5/5
I liked this book more than any other Sandilyan's books !! ..Good read !!

user_8720

Good reads novels can not be opened

user_8719

★ 5/5
Story about Rajasimha Pallava

user_8718

good

user_8717

★ 5/5
Thanks for sandilyan for the awesome novel.

user_8716

★ 5/5
enemy wins the hero............book wins me

user_8715

★ 5/5
Good

user_8714

★ 5/5
சாண்டில்யனின் மற்ற வரலாற்று நூல்களை ஒப்பிட்டு பார்த்தால் கதை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் கதை கொண்டுபோகும் விதத்தில் படிப்பவர்களை தன் கதையோடு கொண்டு செல்வார். அதேபோல இந்த நூலும் படிப்பவர்களை தன் தமிழினாளும் தன் வர்ணனைனாளும் படிப்பவர்களை ஈர்த்துக் கொண்டார்

user_8713

★ 4/5
திரு சாண்டில்யன் அவர்கள் தனக்கே உரிய நடையில் பல்லவ ராஜசிம்மனை மையமாகவைத்து வரைந்த சரித்திர புதினம். இரண்டாவது முறை படிக்கின்றேன்; வீரம், காதல், தியாகம், பெருந்தன்மை போன்றவற்றை சரியான விகிதத்தில் கலந்து தரப்பட்டிருக்கும் மிக அருமையான படைப்பு.

user_8712

★ 5/5
Explain how pallavas recapture kanchi from chalukyas... Once again sandilyan proves who he is... He beautifully narrated the story with his speculation...👏👌💪🙏. After read this story I wanted to see kanchi kailasanathar temple and arangan temple in mamallapuram.😍😍😍

user_8711

★ 5/5
One of the best historical fiction novels

user_8710

★ 2/5
Book contains more details about the breasts and hips of the female characters and how the prince was always turned on by both his lovers, than it had details on Pallava Chalukya war, the life and times of 700 AD or even information about ancient Tamil Nadu. After a while it just becomes boring and repetitive. The prince finds himself with either or both of his lovers and starts fondling their hips and looking at their breasts. Then he stops himself and the story progresses a little bit. And the cycle repeats.

user_8709

★ 3/5
ஜெகசிற்பியனின் மகரயாழ் மங்கை இரண்டாம் நரசிம்மவர்மன்னை(ராஜசிம்மன்) ஒரு விதத்தில் அலசுகிறது. இந்நாவல் இன்னொரு விதத்தில் அலசுகிறது.

user_8708

★ 5/5
Excellent plot. This story happens when Narasimha pallavan destroyed vatapi pulikesi. Pulikesi son vikramathiya 1 want to take revenge and want to expand his kingdom till uraiyur and very smartly captured kanchipuram and current ruler just left the kanchipuram, with help of his son Rajasimha pallavan how he gained back his kingdom by defeating Vikramatidhya 1.

user_8707

★ 5/5
Sandilyan - one of the kings of tamil historical fiction - has written this amazing novel. The attention to details with historical facts is amazing. This novel is about the events that happened in the life of Narashima Pallavan II called Rajasimhan, the grandson of Mamallan Narashimavarma Pallavan I. He built the Kailasanathar temple at Kanchi. The events that unfold are amazing along with the characterization.

user_8706

★ 4/5
The first 200 pages are not so much interesting. I really doubted how come this is getting 4 stars. My initial rating is only 3 that too for his tamil fabulous tamil writing. Author might have reduced adult content little bit. It decreases the fastness of the story. I have to admit that though the first 200 pages are not good as I expected, I could finish quickly. After 200 the story got a steady flow. While crossing 600 pages, keeping in mind the twist and turns of the story, i raised the rating to 3.5 and the wonderful finale has increased its rating itself to 4. Totally it is worth to read.

user_8705

★ 4/5
சாண்டில்யன் பெண்களை அதிகமாக வர்ணிப்பார் என்று நண்பன் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இதுவரை படித்த நாவல்களில் இருந்த வர்ணிப்புக்கே வாயைப் பிளந்தவன். ராஜதிலகம் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு முன்னால் வந்து நிற்கிறது. இது முழுக்க முழுக்க புராணக் காதல் காவியம். நம் கண்ணை மயக்கும் இரு மங்கையரின் அழகுக் கடலில் மிதக்க நேரிடும். இவற்றுக்கு இடையில் சிறிது ராஜதந்திரமும் போரும் கலந்து கூறப்பட்டுள்ளது.

user_8704

★ 5/5
புதினத்தின் பெயர் "ராஜதிலகம்" எழுதியவர் "சாண்டில்யன்" கதாபாத்திரங்கள்... ராஜசிம்ம பல்லவன், பரமேசுவரவர்மன், ஆச்சார்ய தண்டி, ஸ்ரீராமபுண்யவல்லபர், விக்கிரமாதித்தன், பூவிக்கிரமன், ரங்கபதாகாதேவி, மைவிழிச்செல்வி, யாங்சின், பலபத்ரவர்மன், இந்திரவர்மன், ரணதீரன், வீரபாகு, விநயாதித்தன், விஜயாதித்தன். கதை இடம் பெறும் வரலாற்று பகுதிகள்: மாமல்லபுரம், காஞ்சி, விளிந்தை,தழைக்காடு, உறையூர், பெருவளநல்லூர். இது ஒரு வரலாற்று புதினம். கதை : இப்புதினத்தின் கதை ராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாவது நரசிம்மவர்மனின் தந்தையான பரமேசுவரவர்மன் காலத்தில் துவங்குகிறது. பல்லவ சக்ரவர்த்தியான பரமேசுவரவர்மன் சாளுக்கிய வேந்தனாகிய விக்கிரமாதித்தன் படையெடுப்பின் காரணமாக, காஞ்சியில் இருக்கும் சிற்பங்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக சாளுக்கிய மன்னனுடன் நேரடியாக போர்புரியாமல் காஞ்சியை விட்டு அகலுகிறான். சாளுக்கிய விக்கிரமாதித்தன் காஞ்சியையும் பல்லவ தேசத்தையும் ஆக்கிரமித்தது மட்டுமின்றி சாளுக்கிய அரசை தெற்கே உறையூர் வரை விஸ்தரிக்க எண்ணுகிறான். பல்லவ இளவலும், பரமேசுவரவர்மன் மகனுமாகிய ராஜசிம்ம பல்லவன் சிறந்த சிற்பியும், ஓவியனுமாவான். அவனது கனவு காஞ்சியில் கைலாசநாதர் ஆலயத்தையும், மாமல்ல புரத்தில் அரங்கனுக்கு ஒரு கோவிலையும், கட்டி தனது சிற்பத்திறமையையும் இவ்விரு கோவில்களிலும் திறம்பட விளங்கச்செய்து வரலாற்றில் இடம் பிடிப்பதேயாகும். ஆனால் பல்லவ பேரரசு சாளுக்கியரால் ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டு வெகுண்டு பல்லவ பேரரசை சாளுக்கியரின் பிடியிலிருந்து விடுவித்து பின் கோவில் கட்டுவது என்று உறுதி பூணுகிறான் ராஜசிம்மன். தனது குருநாதரும், காஞ்சிக்கடிகையின் ஆசிரியருமான ஆச்சாரிய தண்டியின் உதவியுடனும், தனது நெடுநாள் காதலியும், பல்லவ ஒற்றர் தலைவன் இந்திரவர்மன் மகளுமான மைவிழிச்செல்வியின் உதவியுடனும் மாமல்லபுரத்தில் இருந்து, காஞ்சிக்கடிகைக்கு வந்து அங்கிருந்து தன் தந்தை ரகசியமாக படை திரட்டிக்கொண்டிருக்கும் இடத்துக்கு செல்ல திட்டமிடுகிறான் ராஜசிம்மன்.ஆச்சார்ய தண்டியின் மாளிகையில் கங்க மன்னன் பூவிக்கிரமன் மகளான ரங்கபதாகாதேவியை சந்தித்து காதல்வயப்படுகிறான். இந்நிலையில் சாளுக்கிய மன்னனது போர் அமைதி மந்திரியான ஸ்ரீராமபுண்ணியவல்லபரின் தந்திரத்தால் ராஜசிம்மனால்,சரியான சமயத்தில் தன் தந்தை பரமேசுவரவர்மனிடம் சென்று சேரமுடியாமல் போகிறது. பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் சரியான திட்டமிடல், வழிநடத்துதல் இல்லாமையால் "விளிந்தை" என்ற இடத்தில் சாளுக்கிய மன்னனின் நண்பனும், கங்க மன்னனுமாகிய பூவிக்கிரமனிடம் முறியடிக்கப்பட்டு படுகாயமடைகிறான். அதுமட்டுமின்றி தன் குலச்சொத்தான உக்ரோதயம் என்ற மாணிக்கத்தையும் கங்க மன்னனிடம் பறி கொடுக்கிறான். சாளுக்கிய மந்திரி ஸ்ரீராமபுண்ணியரின் தடைகளை கடந்தும், சாளுக்கிய மன்னனும், மாபெரும் வீரனுமாகிய விக்கிரமாதித்தன் கருணையாலும், ராஜசிம்மன் , படுகாயமடைந்த தன் தந்தையைசேர்ந்து, சீன தேசத்தவனும், தன் நண்பனுமாகிய யாங்சிங் உதவியுடன் தன் தந்தையை காப்பாற்றுகிறான். பின் விளிந்தையிலிருந்து கங்க தேசம் சென்று கங்க மன்னன் பூவிக்கிரமனிடம் அவனது மகளான ரங்கபதாகாதேவியை மணந்து பட்டத்துராணியாக்க வாக்கு கொடுத்து, கங்க மன்னனை சாளுக்கியர்களுக்கு உதவாமல் நடுநிலை வகிக்க வேண்டி சம்மதமும் பெற்று, தன் தந்தை, தன் நண்பன் சீனன் ஆகியோர் உதவியுடன் படை திரட்டி ,சாளுக்கிய நாட்டின் மீது யாரும்எதிர்பாரா தருணத்தில போர் தொடுத்து, விக்கிரமாதித்தன் மகன் விநயாதித்தனையும், பேரன் விஜயாதித்தனையும் துங்கபத்திரை அருகே முறியடிக்கிறான் ராஜசிம்ம பல்லவன். இந்நிலையில் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் சாளுக்கிய சாம்ராஜ்யத்தை உறையூர் வரை விஸ்தரிக்க எண்ணி, தன் போர் அமைதி மந்திரியான ஸ்ரீராமபுண்யவல்லபர் தடுத்தும் கேளாமல் பெரும் படையுடன் உறையூர் நோக்கி செல்கிறான். சாளுக்கிய மன்னது நோக்கத்தை அறிந்த ராஜசிம்ம பல்லவன் பாண்டிய இளவரசன் ரணதீரன் கோச்சடையானுடன் சாளுக்கியர்களுக்கு பல்லவர்களுக்கு எதிரான போரில் எவ்வித உதவியும் செய்யயக்கூடாது என்று கோரிக்கை வைத்து ரணதீரனின் சம்மதத்தையும் பெறுகிறான். பின்னர் அங்கிருந்து விளிந்தை நகரை அடைந்து பரமேசுவரவர்மனும், இளவல் ராஜசிம்மனும் பெரும்படையுடன் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக படை நடத்தி உறையூருக்கு அருகே பெருவளநல்லூர் என்ற இடத்தில் சாளுக்கிய விக்கிரமாதித்தனை சந்தித்து நேருக்கு நேர் போர் புரிந்து விக்கிரமாதித்தனை முறியடித்து, அவன் பெரு வீரன் என்பதாலும், அவனால் காஞ்சி கோவில்களுகோ, மாமல்லபுரம் சிற்பங்களுக்கோ எவ்வித ஆபத்தும் நேராததாலும், ராஜசிம்மனை சிறை செய்ய பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் விக்கிரமாதித்தன் போரில் சந்தித்துதான் வெற்றியடயவேண்டும் என்ற பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதாலும், ராஜசிம்ம பல்லவன் அவனை மன்னித்து சாளுக்கிய நாட்டுக்கு அஅனுப்புகிறான். பல்லவநாடு சாளுக்கியர் பிடியில் இருந்து விடுதலை அடைகிறது. ராஜசிம்ம பல்லவன், தன் இரு மனைவியர் மைவிழிச்செல்வி மற்றும் பட்டமகிஷி ரங்கபதாகா தேவி ராஜதிலகமிட, தன் தந்தை பரமேசுவரவர்மன், தன் குருநாதர் ஆச்சார்ய தண்டி ஆகியோர் ஆசிகளுடனும் வாழ்த்துக ளுடனும். காஞ்சியில் கைலாசநாதர் கோவிலை கட்டி முடிக்கிறான். என் பார்வையில்... இந்த புதினம் திடமான சரித்திர ஆதாரம் மற்றும் கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டுஎழுத்தப்பட்டுள்ளது. சரித்திர ஆதாரங்கள், அடிக்குறிப்புகள் ஆங்காங்கு தரப்பட்டுள்ளது இப்புதினத்திற்கு தனிச்சிறப்பு தருகிறது. அந்த கால போர் முறைகள் மிக அருமையாக விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல்லவ இளவரசன்ராஜசிம்மன், சாளுக்கிய மன்னனை பெருவளநலூர் என்ற இடத்தில் சந்திக்கும் போது அமைக்கும் "விருச்சிக தாண்டவம்" என்ற "தேள்" போன்று படைகளை நிறுத்தி அமைக்கும் வியூகம் அபாரம். பல்லவர்காலத்தில் காஞ்சியில் அமைந்திருந்த கடிகை, (பல்கலைக்கழகம்) அதில் பயிற்றுவிக்கப்பட்ட வேதபாடங்கள், தமிழ்மறைகள், பாரதம் முழுவதிலும் இருநது அங்கு வந்து,தங்கி கற்ற மாணவர்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் போன்றவை, இப்புதினத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆச்சார்ய தண்டி பாத்திரம்மூலம் அழகாக விளக்கப்பட்டுள்ளன. உண்மைக்கதாபாத்திரங்களுடன் (பரமேசுவரவர்மன், ராஜசிம்ம பல்லவன், விக்கிரமாதித்தன், ரங்கபாதகாதேவி, பூவிக்கிரமன்) கற்பனை கதாபாத்திரங்களும் சரியான தருணங்களில் சேர்க்கப்பட்ட விதம் புதினத்திற்கு மேலும் சுவை கூட்டுகிறது. சாண்டில்யனுக்கே உரித்தான காதல், பெண்கள் குறித்த அவரது வர்ணணை, குறிப்பாக மைவிழி செல்வியுடனும், ரங்காபாதகா தேவியுடனும், ராஜசிம்மன் தனியே சந்திக்கும் தருணங்களில் அவர்களது மார்பகங்கள் மற்றும் பின்னெழிலை விவரிக்கும் முறை அளவுக்கு மீறி படிப்பவர்களை சற்றே நெளிய வைக்கிறது. ஆனாலும் காதல்காட்சிகள் கதையின் ஓட்டத்தை பாதிக்காமல் சுவையாயும், ரசனையோடும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்புதினத்தில் இன்னொரு சறுக்கலான பாத்��ிரம், சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்யன் பாத்திரம். இந்தப்புதினத்தில் இவர் "அநியாயத்திற்கு நல்லவர்" என்ற ரகத்தில் சேர்க்கப்படவேண்டியவர். "பல்லவ இளவல் ராஜசிம்மனை, போரில் நேருக்கு நேர் சந்தித்து யுத்த தர்மப்படிதான் வெல்வேன் " என்று பெருந்தன்மையாக சொன்னாலும், அதற்காக அடிப்படையான ராஜதந்திரம் கூடவா இல்லாமலிருப்பான் ராஜ்ய விஸ்தரிப்பு கனவில் இருக்கும் ஒரு பேரரசன்? ராஜசிம்மனை தனது போர் மந்திரி சிறைப்பிடிக்க போடும் திட்டங்களை விக்கிரமாதித்தனே உடைத்து காப்பாற்றுகிறான். பாண்டியர்கள், சாளுக்கியருக்கு போரில் உதவக்கூடாது என்ற பல்லவ இளவலின் உடன்படிக்கையை தானே பாண்டிய இளவலை உறையூருக்கு வரவழைத்து நிறைவேற்றுகிறான். இப்படி பெருந்தன்மையின் சிகரமாக திகழ்ந்து கடைசியில் பல்லவ இளவலிடமே தோற்றுப்போகிறான் என்பது, நம்பும்படியாக இல்லை. இந்த புதினத்தை படித்து முடித்ததும் 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு சரித்திரதையும், அதன் ஒப்பற்ற மன்னர்களையும் விட்டுப்பிரிகிற ஏக்கமும், வருத்தமும் படிக்கும் நேயர்களை வந்தடைவதை கண்டிப்பாக தவிர்க்கமுடியாது. ராஜதிலகம்-- கம்பீரம்.
Shelves
Historical Fiction Fiction Sandilyan book

More like this


வெக்கை

Author: Poomani

சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக மு…

4.18/5 · 400+ ratings

கன்னி மாடம் [Kanni Maadam]

Author: Sandilyan

இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை,…

4.18/5 · 400+ ratings

அறம் [Aram]

Author: Jeyamohan

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.18/5 · 400+ ratings

ஜல தீபம் 3 [Jala Deepam]

Author: Sandilyan

க வர்னர் ஏஸ்லாபியிடம் நடந்த அந்த அரை மணிப்பேட்டி முழுவதும் உணர்ச்சிகளைப் பெரிதும் அடக்கிக் கொண்டும் தனது சித்தத்தில் ஓடும் எண்ணங்களைச் சிறிதும் காட்டாமலும் வெகு சாமர்த்தியத்துட…

4.18/5 · 400+ ratings

Thottiyude Makan | തോട്ടിയുടെ മകന്‍

ഇശുക്കുമുത്തുവിന്റെ മകൻ ചുടലമുത്തു. ചുടലമുത്തുവിന്റെ മകൻ മോഹനൻ. സ്വന്തം പാട്ടയും മമ്മട്ടിയും ചുടലമുത്തുവിന് കൊടുത്ത് ഒരു നല്ല തോട്ടിയായിത്തീരാൻ ആശീർവദിച്ചശേഷം ഇശുക്കു…

4.18/5 · 400+ ratings

பல்லவ பீடம் [Pallava Peedam]

Author: Sandilyan

பசுக்கூட்டத்தினிடையே அரவம் கேட்டதுமே உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்றுவிட்ட பப்பகுமாரன், அந்த கூட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்த ஆஜானுபாகுவான பெரிய மறவனையும் கண்…

4.18/5 · 400+ ratings

ராஜ்யஸ்ரீ [Rajyashree]

Author: Sandilyan

தனக்குப் பின்னால் நின்ற யாரோ ஒரு புருஷன் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி சொன்னதும் பெரும் திகிலுக்கு உள்ளான ராஜ்யஸ்ரீ உடனே திரும்பிப் பார்த்தாளில்லை. தானேசுவர அரண்மனைப் பெர…

4.18/5 · 400+ ratings

கோபல்ல கிராமம்

பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெ…

4.18/5 · 400+ ratings

யவன ராணி [Yavana Rani] - 1

Yavana Rani (Tamil:யவன ராணி) is a Tamil language historical novel written by Sandilyan. Its title translates to "Greek Queen" in English. The stor…

4.18/5 · 400+ ratings

Thanneer Desam

Author: Vairamuthu

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

4.18/5 · 400+ ratings

பல்லவ திலகம் [Pallava Thilagam]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

4.18/5 · 400+ ratings

மோகினித் தீவு-1

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இரண்டு அற்புதமான குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. கற்பனை வளமும் விறுவிறுப்பும் நிறைந்த 'மோகினித் தீவு' மற்றும் வரலாற்று…

4.18/5 · 400+ ratings