கன்னி மாடம் [Kanni Maadam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கன்னி மாடம் [Kanni Maadam]

None

Author: Sandilyan
4.05/5 · 500+ ratings

இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை, தப்பியோடும் அந்த இருவரையும் காரிருளில் கடுமையாகவே பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களை நோக்கித் திடீரென கொள்ளிவாய்ப் பிசாசைப்போல் வாயைத் திறந்து அக்கினி ஜ்வாலையையும் கக்கத் தொடங்கியது. அபராஜிதனோடு திரும்பி நோக்கிய காரி, தீ ஜ்வால…

Reviews

user_7688

★ 5/5
Gripping

user_7687

★ 5/5
Short one Book story. Brilliantly framed. It's about a Pandian seanthipathy how he with help of cholas saved his kingdom.

user_7686

★ 4/5
Abharajithan and kuzhali characterization is superb. Kaarivazhavan and adigalar became my favourite. Always sandilyan books are superb.

user_7685

★ 3/5
last 200 - 250 pages are really page turner. but Initially it's little bit boring

user_7684

★ 4/5
ஒரு சிறு நிகழ்வை வைத்து ஒரு பெரும் கதையை எழுதுவதில் சாண்டில்யன் வல்லவர் . இந்த கதையிலும் அதை தான் செய்து உள்ளார். ஆனால் வழக்கமான சாண்டில்யன் கதைகளில் இருக்கும் அந்த அதீத விறுவிறுப்பு சற்றே குறைகிறது. இந்த கதை விறு விறுப்பாக தான் உள்ளது ஆனால் அது சாண்டில்யனின் தரத்தோடு பார்க்கையில் சற்று குறைவு தான் .

user_7683

★ 5/5
Again another awesome Again another awesome novel by சாண்டில்யன் Sir that's as thrilling as கடல் புறா, ராஜமுத்திரை & யவன ராணி. Although this is a single novel, I couldn't put the book down until I finished reading.

user_7682

★ 5/5
கன்னிமாடம் நாவல் அருமை. சிங்களத்துப்பைங்கிளி கதாபாத்திரம் சூப்பர். அறிவு மற்றும் அழகு படைத்தவர். சூப்பர்

user_7681

★ 5/5
It's my first Sandilyan book and my mom kept on recommending me this classic. Author teleports us to the 12th century Tamil Nadu and it's political landscape. Very descriptive in each chapter and equal importance is given to all major characters which makes sense when everything is brought together at the end. Slightly disappointed at the ending as I had expected something else. Nevertheless a great read.

user_7680

★ 4/5
Fantastic novel

user_7679

★ 5/5
Good book

user_7678

★ 5/5
A classic It's a beautiful book.. I used to read these in my childhood... Now reading them again... Chandilyan and Kalki are indeed the greatest historical fictions writers

user_7677

நான் படித்த முதல் தமிழ் சரித்திர நாவல்.💓💓💓💓💓

user_7676

★ 4/5
There are some flaws here and there still good to read once.

user_7675

★ 5/5
Good one !!

user_7674

★ 4/5
this is my first historic novel..nice work

user_7673

★ 3/5
cheran people fights and war technichs super but single way story..

user_7672

★ 4/5
சாண்டில்யன் அவர்களின் ஒரு அற்புதமான புதினம். போர்த்தந்திரம், காதல், இராஜதந்திரம், கூர்மையான அறிவுத்திறன் ஆகியவற்றை மிகவும் அழகாக ஒருங்கே இணைத்து இந்த நாவலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். விறுவிறுப்பான திருப்பங்கள் குறைவாக இருப்பதை கண்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு இப்படிப்பட்ட கதையைப் படிப்பதற்க்கு மகிழ்ச்சியாக இருந்தது!

user_7671

★ 4/5
of all the sandilyan books I read, I liked this one the most. unlike yavana rani which is a 2 part book which i first read and loved, this is a single part book. but the beauty of this novel is the sheer reality. politics, blood and betrayal. and yes there is love. a hero who would do anything for his love and a girl who could give anything for him. Just once I hate cholas.

user_7670

★ 5/5
Kanni Maadam is a historical novel set during 1167-1168 A.D. and focuses on the power struggle between Veera Pandiyan and Kulasekhara Pandiyan. Veera Pandiyan is ruling Madurai with the help of a Lankan commander who won it for him from Kulasekhara Pandiyan. Kulasekhara reaches out to Cholas under Rajadhiraja 2 for help, who are themselves keen to drive out the Lankans. Meanwhile, several Pandiyan commanders in Madurai plot against Veera Pandiyan as they dislike his spineless rule and the dominance of the Lankan commander and his niece. The opposite factions are both trying to get help from the Melaimangalam chief whose land is in the middle of Pandya territory. Veera Pandiyan and Vikrama Pandiyan (son of Kulasekhara) both try to marry the princess of the Melaimangalam chief to get his support. Aparajita, the Pandya commander who is admired by the people for his bravery and war skills plays spoilsport and foils their plans. Does he drive out the Lankans and save the princess forms the crux of the story. Unlike other Sandilyan novels, the love angle is mild here and the story moves at break neck speed. We are always in the thick of action with very less deviations. Definitely a good read.

user_7669

★ 4/5
உட்கட்சிப் பூசலைப் போல் பராக்கிரம, குலசேகர பாண்டியர்களுக்குள் சச்சரவு வந்த சமயத்தில் எதிரக்கட்சிக்காரன் ஆட்சியைப் பிடிப்பது போல் நண்பனாக இலங்காபுரன் வந்து மக்களை கொடுமை செய்ததையும், அதைத் தட்டிக் கேட்க வேண்டிய வீரபாண்டியன் காமச் சிலையான மாதவியை ரசித்துக் கிடந்த காலத்தில் சோழன் இலங்காபுரனை விரட்டிய நிகழ்வில், கருவிழியாக இருந்து அந்த நிகழ்வுக்கு வெற்றி தேடித் தந்த அபராஜிதனைப் பற்றியும், அவனின் மையல்கள் சுற்றிய கார்க்குழலியை காமுக வீரபாண்டியனிடமிருந்தும், வஞ்சக விக்ரம பாண்டியனிடமிருந்தும் காத்ததையும் அற்புதமுமாக எழுத்தாக்கியிருக்கிறார் சாண்டில்யன்.

user_7668

★ 5/5
சாண்டில்யன் வர்ணனைகள் உச்சஸ்தாதி! காதல் காட்சிகள் நிரம்பிய 37,38 ஆம் அத்தியாயங்களை ஒரு நாள் காலையில் படிக்க நேர்ந்தது. அன்று முழுக்க வேலை ஓடவில்லை! அது ஒருபுறமிருக்கட்டும்! தமிழ் முன்னோர்களின் போர்த்திறம், போர் தந்திரம், இவை இரண்டையும் கண்டு வியந்தேன். ஒரு அத்தியாயத்தில் 'மார்க்கீயன் ஒரு சிறு குதிரைப்படையை சீராக, குதிரையின் குளம்படிகள் ஒருமித்த சப்தம் எழுப்பியவாறு நடத்திச்சென்றான்' என்பதைப் படிக்கையில் இப்பொழுதைய 'மிலிட்டரி' முறைகளிலுள்ள 'மார்ச் பாஸ்ட்(March Past)' என்பதில் தமிழர்கள் எத்தகைய முன்னோடி என்பதை அறிந்து பிரமித்துப்போனேன்! மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திய இப்புத்தகம், என்னை மேலும் மேலும் சரித்திர நாவல்கள் படிக்கத் தூண்டுகிறது!

user_7667

★ 5/5
கன்னிமாடம், முதற்கூற்றிலிருந்து இறுதி வரையில் என்னை முழுவதுமாகப் பிணைத்திருந்தது. ஈர்த்த கதாபாத்திரங்களான, அபராஜிதன்- பாண்டிய சேனாதிபதி கார்குழலி - மழவரையர் மகள் அடிகளார் - குழலியின் குரு மாதவி - இலங்கை சேனாதிபதியின் மருமகள் இவர்களின் ஒவ்வொரு முடிவில்தான் கதை நகர்ந்தது. வரலாற்றை ஒற்றிய புதினமாக இருந்தாலும் மிக வேகமாக விருவிருப்பை ஊட்டிக்கொண்டே சென்றது. வர்ணனைகளுக்காகவே படிக்கலாம் எத்தனைமுறையேனும். சாண்டில்யனின் எழுத்துஜாலம் ஓரிரு அத்தியாயங்களில் நெஞ்சை பிடித்துக்கொண்டு படிக்கும் அளவில் பல பல உணர்வுகளைக் கலந்தாற்போல் இருந்திற்று. "அல்லிப் பூம்பொழிலும் அன்னப் பேடையும்" --- Review and rating given are not based on any evaluative measures, yet only my brief take on what I had absorbed from the book.

user_7666

★ 5/5
ஆசிரியர். சாண்டில்யன் கதாபாத்திரங்கள் அபராஜிதன், கார்குழலி,.மாதவி,இலங்காபுரன், வீரபாண்டியன், விக்ரம பாண்டியன், சிவானந்த அடிகளார், மழவராயன், காரி, கருணாகர தேவன், ஜகத்விசயன், பல்லவராயன். கதை நடைபெறும் வரலாற்று பகுதிகள்: மதுரை, கன்னி மாடம், மேலைமங்கலம் மற்றும் கூடல் நாவலின் தன்மை : வரலாற்று புதினம். கதை: பாண்டியர்களின் தாயாதிச்சண்டை நடைபெற்ற காலமான 12 ம் நூற்றாண்டில் நிகழும் கதை இது. மதுரையை பராக்கிர பாண்டியனும், நெல்லையை குலசேகர பாண்டியனும் இரண்டு பட்டுக்கிடக்கின்ற பாண்டிய நாட்டை ஆண்டு வருகின்றார்கள். தயாதிச்சண்டை மற்றும் மனஸ்தாபம் காரணமாக குலசேகர பாண்டியன், மதுரை மீது படையெடுக்கிறான். பராக்கிரம பாண்டியன் படை உதவி வேண்டி இலங்கை அரசன் பராக்கிர பாகுவிடம் கேட்க அவன் தண்ட நாயகனான இலங்காபுரனை அனுப்புகிறான். இலங்காபுரன் மதுரை வருவதற்குள் குலசேகர பாண்டியன் மதுரையை கைப்பபற்றி பராக்கிரம பாண்டியனையும் அவன் மனைவியையும் கொன்று விடுகிறான். பராக்கிரம பாண்டியனின் மகன் வீரபாண்டியன் குலசேகரனிடமிருந்து தப்பி மலைநாட்டில் தஞ்சமடைகிறான்.பெரும் படையுடன் மதுரை வரும் இலங்காபுரன் குலசேகரனை விரட்டி பராக்கிரமனின் மகன் வீரபாண்டியனை பாண்டிய மன்னனாக்குகிறான். வீரபாண்டியனை ஒரு கைப்பொம்மை போலாக்கி பாண்டிய நாட்டை சிங்களத்தின் ஒரு பகுதியாக்க இலாங்காபுரன் திட்டமிடுகிறான். வீரபாண்டியனை மதுவுக்கும், தன்மருமகளும் பேரழகியுமான மாதவியுடன் பழகவிட்டு பாண்டிய நாட்டை மறைமுகமாக சிங்கள ஆட்சிக்கு உட்படுத்துகிறான். பாண்டிநாடு இலங்காபுரனின் மறைமுக சிங்கள ஆட்சியில் படாதபாடு படுகிறது. தமிழர்கள் அடிமைகளாக இலங்கையிலுள்ள புத்த விகாரைகளுக்கு அனுப்பப்பபடுகிறார்கள். வயல்கள் எரித்து அழிக்கப்படுகின்றன. பாண்டியர்களின் தங்கத்தைக் கொண்டு இலங்கை காசுகள் தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுகிறது. பாண்டிய சேனாதிபதியும், வீரனுமாகிய அபராஜிதன் இதையெல்லாம் கண்டு உள்ளம் கொதிக்கிறான். சிங்களகளின் கைப்பொம்மையாய் மது,மாது ஆகிய இரண்டிலும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் வீரபாண்டியனுக்கு எதிராக சதி செய்து தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான். பாண்டிய நாடு இலங்கையிடம் அடிமைப்பட்டிருக்கும் நிலைகண்டு சோழர்களும் கொதித்து எழுகிறார்கள். தங்களிடம் ஆதரவு கேட்டு நிற்கும், விரட்டப்பட்ட இன்னொருபாண்டிய மன்னனாகிய குலசேகரனுக்கு உதவி செய்து பாண்டியநாட்டை சோழ நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க அந்நாட்டின் படைத்தலைவர்கள் எண்ணுகிறார்கள். இந்நிலையில் பாண்டிய நாட்டு எல்லையில் இருக்கும், மழவராயன் என்னும் சிற்றரசனின் ஆட்சிக்குட்பட்ட மேலைமங்கல சிற்றரசும், அதற்குட்பட்ட கன்னிமாட கோட்டையும், மழவராயன் மகளும் பேர ழகியுமான கார்குழலியும், இந்த அரசியல் சூழ்நிலையில் சிக்குகிரார்கள். வீரபாண்டியன் கார்குழலியை மணந்து மழவராயனின் உதவி பெற்று, இருவரும் இணைந்து படையெடுத்து இலங்காபுரனை கொல்வது. அல்லது குலசேகர பாண்டியனின் மகனான விக்கிரம பாண்டியனுக்கு கார்குழலியை மணமுடித்து சோழர்களின் உதவியுடன் இலங்காபுரனை விரட்டுவது, போன்ற யோசனைகள் பாண்டிய நாட்டின் எதிர்கால நலனை கருதி மழவராயன் முன் வைக்கப்படுகின்றன. இதில் மழவராயன் வீரபாண்டியனுக்கு மகள் கார்குழலியை மணம் செய்ய எண்ணுகிறான். ஆனால் கார்குழலியின் மனமோ பாண்டிய சேனாதிபதியான அபராஜிதனையே நாடுகிறது. அவனை உயிருக்குயிராக விரும்புகிறாள் கார்குழலி. அவளை சிறிய வயதிலிருந்து வளர்த்த சிவானந்த அடிளாரும் உணர்ந்து கொள்கிறார். அபராஜிதனும் கார்குழலியின் காதலை நன்கு உணர்ந்து, அவளை பலவந்தமாக மணமுடிக்க கன்னிமாடத்திற்கு பெரும் படையுடன் வரும் பாண்டிய மன்னன் வீரபாண்டினிடமிருந்தும், தந்திரமாக அடைய முயலும் விக்கிரம பாண்டியனிடமிருந்தும் கார்குழலியை காப்பாற்றுகி ன்றான். பின் அபராஜிதன் பாண்டிய நாட்டுக்குள்ளே புரட்சிப்படை தோற்றுவித்து சோழர்கள் உதவியுடன் இலங்காபுரனையும், பெரும்படையுடன் கூடல் நகருக்கு வரும் இன்னொரு இலங்கை சேனாதிபதி ஜகத்விஜயனையும் கொன்று அவர்கள் தலைகளை கழுகுக்கு இரையாக்குகிறான். பின்னர் கார்குழலியை மணந்து கொண்டு கன்னிமாடத்தில் புரட்சிப்படையுடன் பாண்டியநாடு மீண்டும் இலங்கையிடம் அடிமையாகதபடி கன்னிமாடத்தை ஒரு சிறந்த காவற்கோட்டையாக்குகி றான். என் கருத்து.. அருமையான புதினம். தனக்கே உரித்தான பாணியிலும், கதை சொல்லும் விதத்திலும் வாசகர்களை 12 ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்றிருக்கிறார் சாண்டில்யன் என்றால் மிகையாகாது. புதினத்தின் விறுவிறுப்பான பகுதி என்றால் கன்னி மாடக் கோட்டையில் இடம் பெரும் சம்பவங்களை சொல்லலாம். அபராஜிதன்-கார்குழலி சந்திப்பு, கோட்டையிலுள்ள ரகசிய வழிகளை அபராஜிதன் கண்டுபிடிப்பது, கன்னிமாடத்தை முற்றுகை இட்ட வீரபாண்டியனையும் அவனது வீரர்களையும் தந்திரம் வீரம் இணைந்து அபராஜிதன் விரட்டி அடிப்பது போன்ற சம்பவங்கள், ஏற்கனவே விறு விறுப்பான நாவலுக்கு மேலும் விறு விறுப்பு ஊட்டுகிறது. வீரபாண்டியன்,மழவராயன்,சோழ பல்லவராயர்கள், போன்ற உண்மைக்கதாபாத்திரங்களுடன், அபராஜிதன், கார்குழலி, மாதவி போன்ற கற்பனை பாத்திரங்களை சரியானபடி உலவவிட்டு விருந்து படைக்கிறார் சாண்டில்யன். கன்னி மாடம்---அமோகம்

user_7665

★ 5/5
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தமிழ் சரித்திர நாவல்.. ஆரம்பிக்கும் இருந்த எதிர்பார்ப்பை சிறிதும் ஏமாற்றாமல், கையிலெடுத்தபோதெல்லாம் இறங்காமல் தொடர ஆணையிட்ட புத்தகம் :) சிங்களரிடம் அடிமைப்பட்டிருந்தபோது தமிழகத்தின் நிலை ஏப்படி இருந்தது என்பதை தெள்ளத்தெளிவாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறது இந்த புதினம். பெண்ணாசை-அதன் விளைவுகள், ராஜதந்திரம், போர்தந்திரம், நாட்டுபற்று, பேச்சுத்திறன், காதல், தனிமனித முடிவுகளின் விளைவுகள் போன்றவற்றை பண்டைய தமிழரின் வாழ்வியலுடன் இணைத்து கூறியுள்ளது இந்த கதை. சாண்டில்யணின் மற்றுமொரு மறக்கமுடியாத புதினம் :) :)
Shelves
Historical Fiction Historical Fiction Sandilyan Novels book

More like this


கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.05/5 · 500+ ratings

அவனி சுந்தரி [Avani Sundari]

Author: Sandilyan

சு மார் ஆறடி உயரமும் மூன்றடி அகலமும் உள்ள பெரிய சரீரத்துடனும், அதிலிருந்த கடுமையான கன்னக் கதுப்புகளுடனும், அந்த கதுப்புக்கள் வரை ஏறி வளைந்திருந்த அடர்ந்த கரிய மீசையுட…

4.05/5 · 500+ ratings

நிலமங்கை [Nilamangai]

Author: Sandilyan

காயல் பட்டணத்தின் அரச வீதியை அடுத்த மூன்றாவது வீதி விலைமகளிர் வீதியாதலால் அங்கு எல்லா வீடுகளிலும் கேளிக்கையும் கூத்தும் நடப்பது இயற்கையாயிருந்தாலும், அன்று மட்டும் அத்தக…

4.05/5 · 500+ ratings

என் இனிய இயந்திரா [En Iniya Iyandhira]

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.05/5 · 500+ ratings

நீலவல்லி [Neelavalli]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

4.05/5 · 500+ ratings

விலை ராணி [Vilai Rani]

Author: Sandilyan

எதிர்பாராத விதமாக எதிரே வழியை மறித்து நின்று, தான் விலைக்கு வாங்கிய வடிவழகியை ‘இவள் விற்பனைக்கு இல்லை' என்று கூறியதல்லாமல், 'கழுகு புறாவைக் கொத்திக்கொண்டு போக முடி…

4.05/5 · 500+ ratings

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

4.05/5 · 500+ ratings

யவன ராணி [Yavana Rani] - 2

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

4.05/5 · 500+ ratings

மலை வாசல் [Malai Vasal]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

4.05/5 · 500+ ratings

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.05/5 · 500+ ratings

மாதவியின் மனம் [Madaviyin Manam]

Author: Sandilyan

மாதவியின்மனம் Tamil New Novels

4.05/5 · 500+ ratings