குறத்தி முடுக்கு [Kurathi Mudukku]
Share:

குறத்தி முடுக்கு [Kurathi Mudukku]

Check Price on Amazon
4.22/5 · 200+ ratings

குறத்தி முடுக்கு [Kurathi Mudukku]

4.22/5 · 200+ ratings
வடிவம்
Paperback
பதிப்பகம்
Kalachuvadu Publications
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DN1VKM1B

‘குறத்தி முடுக்கு’ ஓர் இடமல்ல, ரத்தமும் நிணமும் சீழும் ஓயாமல் கசியும் ஆறாத ரணம். தான் உயிர்தப்ப, பல்லி துறந்த வால். பிறகு அதே பல்லியின் தினவுக்கு வடிகாலான அவலம். மும்பையின் காமாட்டிபுரா, கொல்கொத்தாவின் சோனாகாச்சி போல, தமிழ்நாட்டுத் திருநெல்வேலியில் ஜி. நாகராஜன் கற்பனையாய் உருவாக்கிய விலைப்பெண்டிர் தெரு. ‘குறத்தி முடுக்’கின் பிரவாகத்தில் அமிழ்ந்து மூச்சுத்திணறும் பெண்கள் ஒருபுறம்; சந்தர்ப்பவசத்தால…

Interested in this book? Check Price on Amazon

user_7584

★ 3/5

"மனிதன் தான் ஆசைப்படும் வாழ்க்கை ஒன்று. ஆனால் கிடைக்கும் வாழ்க்கை ஒன்று." இது சாதாரண மனிதனுக்கும் நடக்கும். பெரும் பாதிப்போடு, பல கதைகளோடு சமூகத்தால், ஆசையால் ஒரு அவலநிலைக்குத் தள்ளப்படும் விலைமாதர்களுக்கு ஆசையென்பதே பலமுறை தோற்கடிக்கப்பட்ட பல கனவுகள் தான் போலும்.

செண்பகம், தேவயானை, தங்கம் என பலரும் இருளில் கண்டுகொள்ளப்பட்டும் "அவர்கள் அப்படித்தான், அவர்களுக்கு அப்படித்தான்" என்று போய்விடுகிறார்கள்.

"மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டம் மாறும்போது, வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டமே மாறுகிறது."

user_7583

★ 4/5

ஜி. நாகராஜன் அவர்களின் முதல் சிறுநாவல் குறத்தி முடுக்கு. குறத்தி முடுக்கு என்பது கற்பனையில் உருவாக்கிய விலைமாதர்கள் தெரு.

முற்றிலும் மாறுபட்ட தனித்தன்மையான எழுத்தாளர் ஜி. நாகராஜன் என்பது ஒரு சில பத்திகள் படிக்கும் போதே நமக்குப் புரிந்து விடுகிறது.

வேசிகளை பாவப்பட்ட ஜென்மங்களாகவோ அல்லது புனிதர்களாகவோ மற்ற எழுத்தாளர்கள் தங்கள் புனைவில் வரையறுக்கும்போது, ஜி. நாகராஜன் விலைமாதர்களின் வேதனைகளையும், மாறுபட்ட அனுபவங்களையும் நேர்மையாகச் சொல்லியிருக்கிறார்.

user_7582

★ 5/5

இந்தச் சிறுகதை காதல், காமம், திருமணம் ஆகியவற்றைப் பற்றிய என் புரிதலையே கேள்விக்குள்ளாக்கியது. எளிய வார்த்தைகளில் ஆழமான தத்துவத்தை விதைக்கிறார் ஜி. நாகராஜன்.

user_7581

★ 5/5

குறத்தி முடுக்கு மிகவும் யதார்த்தமாக எழுதப்பட்ட நாவல். தற்போது பாலியல் தொழிலாளர்கள் பற்றிய அறிவு திரைப்படம் வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நமக்கு சிறிதளவு கிடைத்துள்ளது. ஆனால் நாவல் எழுதப்பட்ட காலமாகிய 1963ல் எவ்வகையான தெளிவு மக்களிடையே இருந்திருக்கும் என்பது கேள்விக்குறியே!

பாலியல் தொழிலாளர்களின் வாழ்வியலை கதை களமாக எடுத்துக்கொண்டது நாகராஜனின் தனித்துவம். பல உண்மைகளையும் நிகழ்வுகளையும் யதார்த்தமான எழுத்தின் மூலம் பதிவு செய்து அவர்களின் வாழ்வியலை அறியச் செய்கிறார். இன்னும் ஆழமாக சில நிகழ்வுகளை பதிவு செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

மரகதம், தங்கம், செண்பகம், தேவயானை ஆகிய கதாபாத்திரங்களின் வாயிலாக நம்மை அவர்களின் உலகுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டிவிட்டார்.

user_7580

★ 5/5

குறத்தி முடுக்கு எளிமையான, உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுக்காகவும், நல்ல மொழிநடைக்காகவும் அவசியம் வாசிக்கப் படவேண்டியது.

Shelves
Novels நாவல் ஜி. நாகராஜன் Fiction book G. Nagarajan புனைகதை

More like this


நாளை மற்றுமொரு நாளே

விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலை எவ்விதப் பூச்சும் இன்றி அப்படியே பிரதிபலிக்கும் தமிழ் நாவல்களில் இது மிக முக்கியமானது. ஒரு சாமானிய மனிதனின் ஒரு நாள் வாழ்க்கையை மைய…

3.91/5 · 300+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.7/5 · 10K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 3K+ ratings
Check Price

கடல் புறா 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.16/5 · 2K+ ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-1

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

4.31/5 · 2K+ ratings
Check Price

கள்ளிக்காட்டு இதிகாசம்

தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…

4.15/5 · 2K+ ratings
Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.14/5 · 2K+ ratings
Check Price

அறம்

மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…

4.42/5 · 2K+ ratings
Check Price

கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

4.09/5 · 2K+ ratings
Check Price