Select a cover image
Searching for images...
Saving cover image...
மறக்கவே நினைக்கிறேன்
Marakkavae Ninaikkiraen
- பக்கங்கள்
- 328
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Vikatan Publishers
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-10
- 8184765630
- ASIN
- B0DM11CD1V
வாழ்க்கையில் எதிர்கொண்ட கசப்பான மற்றும் இனிப்பான சம்பவங்களை எந்தவித ஒளிவுமறைவுமின்றி நேர்மையுடன் பதிவு செய்யும் ஒரு சுயசரிதை தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. ஒரு மனிதனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை வெறும் நிகழ்வுகளாகப் பார்க்காமல், அவற்றை ஆழ்ந்த அனுபவங்களாக மாற்றும் கலை இதில் கையாளப்பட்டுள்ளது. ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த எழுத்துக்கள், ஒரு சாமான…
user_6837
★ 5/5எப்படி, எங்கே ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் எழுதியது என்ற பிம்பத்தோடு தான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் வாழ்ந்து பார்க்காத, அனுபவித்திராத நெல்லை மண்ணின் வாசனையை எனக்குள் கடத்திவிட்டார்.
"பறவைகளின் கடிதம்" கட்டுரையைப் படித்து முடிக்கும்போது எதற்காக அழுதேன் எனத் தெரியவில்லை. பறவைகளை நேசித்த ஸ்டீபன் சுந்தரம் வாத்தியாரை நினைத்தா? அல்லது இறந்து போன பறவைகளை நினைத்தா? சரியாகத் தெரியவில்லை.
அதுபோலவே வேகவைத்த நெற்பானைக்குள் மடிந்துபோன ராஜி பூனை மனதை நீண்ட நேரம் பிராண்டியது. சம்படி ஆட்டக்காரனாக இருந்து அப்பா சந்தித்த அவமானம், கார்த்திகாவாக மாறிய நண்பனின் மரணம், மதிப்பெண் குறைந்ததற்காகத் தற்கொலை செய்துகொண்ட நண்பன், சாதியை வைத்து அவமானப்படுத்தி அனுப்புவது — ஒவ்வொரு பக்கமும் தரம்.
ஒரு மனிதனுக்கு இத்தனை அனுபவங்களா என வியப்பு மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. பரியேறும் பெருமாளின் காட்சிகளை அவர் உருவாக்கவில்லை — வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறார் என்பது புரிகிறது. இப்படியொரு அட்டகாசமான எழுத்தாளரைச் சினிமா விழுங்கிவிடுமோ என்ற கவலையும், அடுத்தடுத்த படைப்புகள் எப்படி இருக்கப் போகின்றனவோ என்ற எதிர்பார்ப்பும் ஒரு சேர எழுகிறது.
user_6836
★ 5/5கல்லூரிப் படிக்கும் காலத்தில் ஆனந்த விகடனில் வந்த மாரி செல்வராஜின் தொடரை வாசிக்கத் தொடங்கிய பசுமையான நினைவுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. ஒரு ரயில் பயணத்தில் விகடனை வாங்கிப் படிக்கத் தொடங்கி, எளிய மக்களோடு உரையாடத் தொடங்கிய நாட்களில் மாரியைப் பற்றி நினைத்திருக்கிறேன் — "யாரடா இந்த ஆள், இப்படி எழுதுகிறானே!"
சமூகத்தில் ஏராளமான தனித்துவமிக்க மனிதர்கள், உள்ளங்கள் வாழத்தான் செய்கின்றன — அவர்களைக் காணாமல் நகர்வதுதான் நமது துர்பாக்கியம். ஒரு திருநங்கையின் மாசற்ற அன்பினால், பிராணிகளை நேசிக்கும் ஆசிரியரால், ராஜி எனும் பூனையை நேசிக்கும் மென்மையான உள்ளத்தால், ஜோ எனும் பேரன்புமிக்கவளால் — இந்த உலகம் ஓர் அரவணைப்பைப் பெறுகிறது. அந்த அரவணைப்பின் கதகதப்பில் இருந்துதான் மாரி எனும் பூக்கள் மலரத் துவங்குகின்றன.
மாரி = மழை. இன்னும் ஆயிரம் துளிகளைச் சிந்த வேண்டிய பழங்குடிக் கிராமத்திலிருந்து ஒரு வாசகன் எழுதுகிறேன்.
user_6835
★ 4/5இந்தப் புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்டவை நிறைய. ஐந்தாவதாகப் பிறக்கும் பிள்ளை ஆணாக இருந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்ற மூடநம்பிக்கைகளைக் கடந்து வந்தவர் மாரி செல்வராஜ்.
ஏழாவது தொகுப்பு மிகவும் முக்கியமானது — சமூகத்தின் சாதிய இறுக்கம் குறித்த ஆழமான பார்வையைத் தருகிறது. ரசூல் போன்ற கதாபாத்திரங்கள் சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
இன்று 1200க்கு 605 மதிப்பெண் வாங்குபவன் ஒரு நாள் உலகின் தலைசிறந்த திரைப்பட இயக்குனராக ஆக முடியும். மதிப்பெண்ணை விட தினமும் வாழ்க்கையில் எதையாவது கற்றுக்கொண்டு சாதிக்கும் வரை சாகாமல் இருப்பதே சாதிக்க வழி.
ஒவ்வொரு அத்தியாயமும் வாழ்க்கையின் ஒரு பாடத்தைச் சொல்கிறது.
user_6834
★ 4/5திருநெல்வேலி விளிம்புநிலை மக்களிடையே வளர்ந்த ஒரு சிறுவனின் உண்மையான, கலை நயமிக்க கதை சொல்லல். தனது பால்யகால நிகழ்வுகளை மிகவும் நேர்மையாகப் பகிர்ந்திருக்கிறார்.
user_6833
★ 5/5தீரா கதைகள், முடிவில்லா பயணம், தாகம் தீர அனுபவம். நம் வாழ்க்கையில் பால்ய பருவத்தில் சில கசப்பான நினைவுகள் இருக்கும் — அதை நினைவு கூறும் ஒரு நொடி உடல் சிலிர்க்கும், பிறகு நாம் அதைக் கடந்து செல்வோம்.
ஆனால் மாரி செல்வராஜ் அதை நினைவு கூர்ந்து அழகியலோடு, அரசியலோடு, இயற்கையோடு இணைந்து நமக்கும் அவர் வாழ்க்கை அனுபவத்தை ஓர் அனுபவமாக மாற்றுகிறார். பல கதாபாத்திரங்கள் நெகிழச் செய்தன. சில பகுதிகளைப் படித்து முடித்தவுடன் புத்தகத்தை மூடி வைத்து ஓர் ஆழ்ந்த அமைதிக்குள் செல்வேன்.
நான் படித்த புத்தகங்களில் நீண்ட நாள் எடுத்துக்கொண்டு படித்த புத்தகம் இதுதான் — அவர் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் அதற்கு மிகப்பெரிய காரணம். முடிந்தவரை இதை வாங்கிப் படியுங்கள் — இப்புத்தகம் மிகப்பெரிய அனுபவம்.
Shelves
More like this
கருக்கு
தமிழ்நாட்டின் ஒரு சிறு கிராமத்தில் பறையர் சமூகத்தில் பிறந்த ஒரு சிறுமி, தன் குழந்தைப் பருவத்திலேயே சாதியின் கொடுமையை நேரில் உணர்கிறாள். ஒரு பெரியவர் உயர்சாதிக்காரனுக்க…
என் சரித்திரம்
என் சரித்திரம் - உ. வே. சாமிநாதய்யர் En Sarithiram by U. V. Swaminatha Iyer pages - 810 உ.வே.சா எழுதிய என் சரித்திரம் உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத…
வேடிக்கைப் பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
துணையெழுத்து
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…
செங்கிஸ்கான்
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.சுமார் எண்ணூறு வருடங்களு…
ஜிப்ஸி
“உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகி…
போர் உலா
செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இருபதாண்டு இளைஞன், ஆடம்பர வாழ்வை விட்டுவிட்டு தன் மண்ணைக் காக்கப் போர்க்களத்திற்கு வருகிறான். 1990களில் தமிழீழத்தின் செழிப்பான களஞ்சியமான மான்க…
நான் வித்யா
சரவணன் என்ற பெயரில் ஆண் உடலில் பிறந்த ஒரு பெண், தன் உண்மையான அடையாளத்தை நிலைநாட்ட நடத்தும் தீவிரமான போராட்டமே இந்நூலின் மையம். கல்வியில் சிறந்து மொழியியலில் முதுகலைப் ப…
மூன்றாம் பிறை - வாழ்வனுபவங்கள்
மம்முட்டி என்கிற ரசனைக் கலைஞனின் வாழ்வியல் அனுபவங்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். மம்மூட்டி என்கிற பெயர் பிடிக்காமல், எகிப்து நடிகர் ஓமர் ஷெரீஃபின் பெயரை வைத்துக்கொண்டு அலைந்…