மூன்றாம் பிறை - வாழ்வனுபவங்கள்
Moondram Pirai - Vaazhvanubavangal
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
மூன்றாம் பிறை - வாழ்வனுபவங்கள்
Moondram Pirai - Vaazhvanubavangal
- பக்கங்கள்
- 128
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- வம்சி
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- First Edition
- ISBN-13
- 9789380545370
- ASIN
- B09NMC28QY
மம்முட்டி என்கிற ரசனைக் கலைஞனின் வாழ்வியல் அனுபவங்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். மம்மூட்டி என்கிற பெயர் பிடிக்காமல், எகிப்து நடிகர் ஓமர் ஷெரீஃபின் பெயரை வைத்துக்கொண்டு அலைந்தது, வக்கீலாக வாழ்ந்தது, முதல் தர நடிகர் ஆனது வரை வாழ்வில் சந்தித்த மனிதம், அன்பு, நேரம், நட்பு, பாடம் என எல்லாவற்றையும் பாசிட்டிவ் கோணத்தில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் மம்முட்டி.
விவாகரத்து வழக்கில் அன்பான கணவனுக்கு எதிராகச…
user_11746
★ 3/5மம்முட்டி தன்னையும் மலையாளிகளையும் நேர்மையாக ஒரு பார்வை பார்க்கிறார். மலையாளிகளின் பொதுவான குணாதிசயங்களையும் வழக்கங்களையும் தன் வாழ்வனுபவங்களை உதாரணமாக வைத்துக் காட்டியிருக்கிறார்.
நல்ல தலைப்புகளும் சிறந்த விஷயங்களும் படிக்கத் தூண்டுகின்றன. ஆனால் எழுத்துநடை சில இடங்களில் உயிர்ப்பில்லாமல், சலிப்பூட்டுவதாக இருக்கிறது.
user_11745
★ 3/5"ஏதோ ஒரு மகனுடைய நினைவில்தான் நான் இப்போது பொருந்தியிருக்கிறேன்" என்று புரிந்தது போன்ற நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்தது.
படப்பிடிப்பில் அடிக்கும் காட்சியில் நிஜமாகவே அடிபட்டதாக நினைத்து ஓடி வந்த வயதான பாட்டி, மறுநாள் சுட்ட முந்திரிப் பருப்பை பொட்டலமாகக் கொண்டு வந்து கொடுத்தது — "சாப்பிடுவது நானாக இருந்தாலும் ருசியை உணர்வது அவளாக இருந்தது என்பது முகத்திலே தெரிந்தது" என்ற வரி மனதைத் தொடுகிறது.
user_11744
★ 5/5நடிகராக மட்டுமே தெரிந்திருந்த மம்முட்டி இலக்கிய நுண்மையுடன் தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நம்முடன் பகிர்கிறார். இந்நிகழ்வுகள் யாவும் எளிய மனிதர்களைப் பற்றியவை. ஒவ்வொன்றிலிருந்தும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறது.
பலனேதும் எதிர்பாராது பெரும் உதவி செய்தவரைப் பற்றி எழுதும்போது — "தங்கச் சுரங்கத்தையே தன் முன் வைத்தாலும் அதிலிருந்து தேவையான தங்கத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும் மனம் தங்கத்தைவிட மகத்தானது" — இது மிகவும் கவர்ந்தது.
"வாழ்க்கை தர மறுக்கும் எல்லாவற்றையும் வாழ்ந்து வாழ்க்கையிடம் இருந்து பெற்றுக்கொள்வேன்" என்ற கவிதை வரி ஆழமானது.
தன் கர்வத்தை விமர்சிப்பது, முதியவருக்கு உதவியது, நெகிழ வைத்த மனிதர்கள் — எல்லாவற்றையும் சுவைபட பகிர்கிறார் மம்முட்டி. நிறைந்த மனத்துடன் உணர்கிறேன் இதைப் படித்து முடிக்கையில்.
user_11743
★ 5/5மம்முட்டியின் வாழ்க்கை, தொழில், மனிதர்கள் பற்றிய நேர்மையான வெளிப்படுத்தல்கள். சிறு கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்திருப்பதால் விரைவாகப் படிக்க முடிகிறது. மொழிபெயர்ப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்றாலும், புத்தகம் சுருக்கமாகவும் இனிமையாகவும் இருக்கிறது.
user_11742
★ 5/5தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் மம்முட்டி (முகமது குட்டி) அவர்களின் அனுபவங்கள் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவை. நல்ல வாசிப்பு அனுபவம்.
Shelves
More like this
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…
துணையெழுத்து
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…
Karukku
In 1992 when a Dalit woman left the convent and wrote her autobiography, the Tamil publishing industry found her language unacceptable. So Bama Fa…
வட்டியும் முதலும்
பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…
வேடிக்கைப் பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …
கழிவறை இருக்கை
சமூகத்தில் மறைக்கப்பட்ட மற்றும் பேசத் தயங்கும் அந்தரங்க விஷயங்களை மிகவும் துணிச்சலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அணுகுகிறது இந்த நூல். மனித உறவுகளின் சிக்கல்கள், பாலியல் உணர்…
வாசிப்பது எப்படி?
வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதால் சமூகத்தின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை ஓர் ஆழமான தேசியப் பிரச்சனையாக இந்நூல் அணுகுகிறது. வெறும் அறிவுரைகளாகவோ அல்லது வ…
தேசாந்திரி
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
நேர் நேர் தேமா
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் கோபிநாத், 21 முன்னணி பிரபலங்களிடம் நேரில் சென்று எடுத்த நேர்காணல்களின் தொகுப்பு. சாலமன் பாப்பையா, பத்மா சுப்ரமணியம், எம்.என்.நம்பியார், க…
அறியப்படாத தமிழகம்
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்…
மறக்கவே நினைக்கிறேன்
வாழ்க்கையில் எதிர்கொண்ட கசப்பான மற்றும் இனிப்பான சம்பவங்களை எந்தவித ஒளிவுமறைவுமின்றி நேர்மையுடன் பதிவு செய்யும் ஒரு சுயசரிதை தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. ஒரு மனிதனின்…