Select a cover image
Searching for images...
Saving cover image...
காடு
Kaadu
- பக்கங்கள்
- 474
- வடிவம்
- Hardcover
- பதிப்பகம்
- தமிழினி
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- First Edition
- ASIN
- 9390958725
அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு, மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிமான வண்…
user_6041
★ 5/5காடு - ஓர் இலக்கிய அனுபவம்! ஜெயமோகனின் இந்த நாவல் வெறும் புத்தகமல்ல, காட்டின் ஆன்மாவை நேரடியாக உணரவைக்கும் ஒரு தனித்துவமான படைப்பு.
user_6040
★ 5/5முதல் சில பக்கங்களைப் படிக்கும்போது சலிப்பாக இருக்கும் என நினைத்தேன்... ஆனால் நான் தவறாக நினைத்தேன். நீண்ட காலம் நினைவில் நிற்கும் புத்தகம் இது. நகரவாசிகளான நம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத ஓர் அனுபவம். காடும், நீலியும், குட்டப்பனும் கிரிக்கு கிடைத்த வரம்.
user_6039
★ 4/5ஒரு கிளாசிக் நாவல். கிரி, குட்டப்பன், நீலி ஆகியோரின் கதைப்போக்கு அருமை.
கிரியும் நீலியும் முதல் முறை சந்திக்கும் காட்சி, கிரி முதல் முறை காட்டை ஆராயும் அனுபவம், கடைசியாக காட்டுக்குச் செல்லும் தருணம் - இவை மறக்க முடியாத காட்சிகள். காதலும் காமமும் வெவ்வேறு பாதையில் பயணிக்கின்றன என்பதை முடிவில் உணர்த்துகிறது.
user_6038
★ 4/5நீலியை ஒரு மனுஷியாக என்னால் பார்க்க முடியவில்லை. நீலியையும் காடாகவே பார்க்கிறேன். நீலியின் மீது கிரி கொண்ட காதல் காட்டின் மீது ஏற்பட்டதன் இன்னொரு வெளிப்பாடாகவே பார்க்கிறேன். நீலியையும் காட்டையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
இறுதியில் மனித உணர்ச்சிகளின் புரிந்துகொள்ள முடியாத தன்மையை புதிர்போல சொல்லி முடித்தது மிகவும் சிறப்பாக இருந்தது.
user_6037
★ 5/5காடு - ஆன்மாவைக் கிழிக்கும் ஒரு நாவல். உள்ளத்தைப் பிடித்து மறைந்துபோன மனிதத்தை கடத்திச் செல்லும் ஒரு சக்தி.
ஜெயமோகன் காட்டைப் பற்றி எழுதவில்லை, காடே நம் முன் வந்து நிற்கிறது. அதன் நிசப்தம், அதன் கொடுமை, அதன் சுத்தமான அன்பு என எதையும் அலங்கரித்து மிகைப்படுத்தாமல், நம் உள்ளத்தில் அச்சமூட்டும் அழகாய் பதிகிறது.
பாத்திரங்கள் பேசுவதில்லை, அவற்றின் காயங்கள் தான் கதையைச் சொல்கின்றன. இந்த நாவல் காட்டைப் பற்றி அல்ல, காடாகிவிட்ட மனித இதயத்தைப் பற்றி.
படித்துவிட்டால், சில புத்தகங்கள் மறந்து விடும். ஆனால் சில, ஒரு நிழலாய் ஒரு வாழ்நாளே தங்கும். நீலி, வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருப்பாள்!
Genres
Shelves
More like this
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
ஏழாம் உலகம்
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…
சோற்றுக்கணக்கு
அறுபதுகளின் திருவனந்தபுரம். சாலை பஜாரில் கெத்தேல் சாஹிப் என்ற மனிதர் ஒரு சாப்பாட்டுக் கடை நடத்துகிறார். அங்கே கோழிக்குழம்பும் மீன்கறியும் நிறைந்த உணவு பரிமாறப்படும், ஆனா…
இரவு
இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒர…
வெள்ளையானை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…
முதற்கனல்
மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…
ரப்பர்
ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவ…
விசும்பு
‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
யவன ராணி
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
பிரிவோம் சந்திப்போம்
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…