குழந்தைகள் நிறைந்த வீடு [Kuzhanthaigal Nirantha Veedu]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குழந்தைகள் நிறைந்த வீடு [Kuzhanthaigal Nirantha Veedu]

None

4.3/5 · 67 ratings

காவியச் சூரியோதயங்களும், அண்ட கோள நட்சத்திரப் போர்களும், துரும்பின் மீதும், அரும்பின் மீதும் சுமத்தப்படும் குறியீட்டுத் தூண்களும், கருங்கல் சிற்பத்தின் மீது பூசப்பட்ட சுண்ணாம்புக் கற்பனையும், ஒட்டுப் பொட்டாய் உவமைகளும், தட்டுத் தட்டாய் மூன்று வரிகளிலும் உருவகங்களும் இல்லாமல் இயல்பாக அமைந்திருப்பதே, நா.முத்துக்குமாரின் ஹைக்கூக்களை மலைவாசஸ்தல சுகத்துக்கும், நலமான சுவாசத்துக்கும் உட்படுத்துகிறது.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_19215

★ 4/5
நா. முத்துக்குமாரை ஓர் பாடல் ஆசிரியராக பல தருணங்களில் என்னுடைய மனவலிகளுக்கு மருந்தாக இருந்திருக்கிறார். ஆனால் இவரின் எந்த ஒரு எழுத்தையும் வாசித்ததில்லை, பாடல் ஆசிரியர் என்றாலே கவிதைதான் என்ற எண்ணம் மனதில் தோன்றியதில் இவரின் கவிதை தொகுப்பு ஏதாவது ஒன்றை வாசிக்கலாம் என்று இருந்த நிலையில் இந்த புத்தகம் என்னுடைய கையில் அகப்பட்டது. இதில் இருக்கும் கவிதைகளின் வடிவம் 'ஹைக்கூ' என்பதை இத்தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையை வாசிக்கும் போது தான் அறிய நேர்ந்தது. கவிதையில் அப்படி ஒரு வகை வடிவம் இருக்கிறது என்பதை அப்போது தான் அறிந்தேன். அந்த ஹைக்கூ என்பது எப்படிப்பட்ட வடிவம் எதனால் இப்படி அழைக்கப்படுகிறது என்றும் அதனின் வரலாறும் அந்த வடிவத்தை பற்றிய புரிதலும் அந்த முன்னுரையை வாசித்தபோது ஓரளவு அறியமுடிந்தது. திருக்குறளுக்கு எப்படி இரண்டு அடிகளோ அதேபோல் ஹைக்கூவின் வடிவம் மூன்றே வரியில் உருவாகும் கவிதைகள். அது எப்படி என்று ஆச்சரியத்தோடு தான் வாசிக்க தொடங்கினேன். கவிதையில் உள்ள முதல் இரண்டு வரிகளை வாசிக்கும் போது உருவாகும் படிமம் மூன்றாம் வரியை வாசிக்கும் போது முற்றிலுமாக வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்கிறது. அப்போது தரும் உணர்வெழுச்சிகள் அருமையாக இருந்தது. இந்நூலை வாசிக்கும் போது, நான் இருந்த மனநிலையில் இருந்து என்னை மீட்டெடுக்க பேருதவியாக இருந்தது, இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வதை போல் என்னை வெளிச்சத்தை நோக்கி பயணிக்க வைத்தது. இதில் பேசப்பட்டுள்ள கவிதைகள் எல்லாம் நம்முடைய அன்றாட வாழ்வியலில் நம்மை சுற்றி இருக்கும் நிகழ்வுகளும் பொருட்களும் சம்பவங்களும் மனிதர்களும் இப்படி நம்மை சுற்றியுள்ளவைதான். வாசிப்பின்பத்திற்காகவே இந்நூலை வாசிக்கலாம். இவரின் மற்ற சில படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்ற உணர்வு எழுந்தது.

user_19214

★ 5/5
ecstasy

user_19213

★ 5/5
This book is always close to my heart

user_19212

★ 5/5
இந்த ஹைக்கூ தொகுப்பு ஞாபகங்களின் ஒரு தொகுப்பு என்றே சொல்லவேணும். பல ஹைக்கூக்கள் நம்மை வியக்க வைக்கின்றன; சிந்திக்க வைக்கின்றன, இந்த ஹைக்கூக்களை குழந்தைகளாக பாவித்து இந்த புத்தகத்தை குழந்தைகள் நிறைந்த வீடென்று பெயர் வைத்திருக்கிறார் போலும்.

user_19211

★ 5/5
Best Haiku kavithaigal, based on our daily life. Very sarcastic and beautiful vision towards life. His perspective towards life is very simple and he definitely adores little things in life, which he expressed in his poetry. More close to 7 to 8 words, he makes us think for about 5 minutes about that after reading.

user_19210

★ 3/5
போன மாதம்(May 2025)நா.முத்துக்குமார் அவர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ஜப்பானிய கவிதைகளின் தொகுப்பை வாசித்த எனக்கு,இந்த மாதம்(June 2025)மலையாளத்திற்கு கவிஞர் டாக்டர் ரகுராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள,நா.முத்துக்குமாரின் கவிதை தொகுப்பான,”குழந்தைகள் நிறைந்த வீடு”வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது.இக்கவிதை தொகுப்பு மதுரை தியாகராசர் கல்லூரியின் முதுகலை தமிழ் இலக்கிய மாணவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்பது புத்தகத்தின் இறுதியில் அமைந்துள்ள ஆசிரியரின் உரையில் கண்ட விஷயம்😱 Read more…

user_19209

★ 3/5
புத்தகம் : குழந்தைகள் நிறைந்த வீடு எழுத்தாளர்: நா. முத்துக்குமார் பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள் : 78 🔆 கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் கவிதை தொகுப்பு வரிசையில் - குழந்தைகள் நிறைந்த வீடு அவரின் ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு. 🔆 " கடற்கரையில் ஊற்று தோண்டியதும் கையில் கிடைத்தது பிளாஸ்டிக் பை" கடலின் இயற்கை அழகை ரசிக்க வேண்டும் என்றாலும் கூட குப்பைகளுக்கு மத்தியில் தான் ரசிக்க வேண்டும். 🔆 " சாமியின் முகத்தில் சந்தனக் காப்பு பல்லக்கு தூக்கிகளின் சாராயநெடி" " தெய்வம் வந்து ஆடும் பெண்ணின் விலகிய முந்தானையை யாரோ திருத்துகிறார்கள்" குடிமகன்கள் எல்லாம் பக்கமும் தான் இருக்கிறார்கள். புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி வாசிப்பை நேசிப்போம்

user_19208

★ 5/5
புத்தகம் : குழந்தைகள் நிறைந்த வீடு ஆசிரியர் : நா. முத்துக்குமார் பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள் : 80 ஹக்கூக்கள் நிறைந்த புத்தகம் இந்த குழந்தைகள் நிறைந்த வீடு. நா. முவின் மற்றுமொரு யதார்த்தமான கவிதைப்புத்தகம்.மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பது போல் மூன்று வரிகளில் ரசிக்க, சிந்திக்க, சிலிர்க்க வைக்கிறார். "ரொம்ப நாளுக்குப் பிறகு காக்கை எச்சமிட்டதால் சூரியனைப் பார்த்தேன்." அவசர வாழ்க்கையில் ரசிக்க மறந்த இயற்கையை பார்க்க வைக்கிறார் கவிதையாக. "கடற்கரையில் ஊற்று தோண்டியதும் கையில் கிடைத்தது பிளாஸ்டிக் பை" என்பது இன்றைய சமூக அவலம். "காற்று பறித்துப் போட்டது தரையெல்லாம் நட்சத்திரங்கள் வேப்பம் பூக்கள்." என்று வரிகளில் இயற்கையின் மணம் "காலியான தைல புட்டி நிரம்பியிருக்கிறது வாசனையால்." யதார்த்தமான கவனிப்பு. " பரட்டைத் தலையுடன் இலந்தை மரம் முடிவெட்டுகின்றன ஆடுகள்" கிராமத்து வாசம். "கடலுக்குள் தொடங்கி குடலுக்குள் முடித்தது வாழ்க்கையை மீன்." மீனின் வாழ்க்கைக் கதை. இப்படி பல அழகான கவிதைகள். நா. முவின் ரசனையை, சுற்றத்தை கூர்ந்து கவனித்து அதிலிருந்து பிறந்து பக்கங்களை நிரப்பியிருக்கின்றது.

user_19207

★ 5/5
எனக்கு ஹக்கூ கவிதைகளை அறிமுகம் செய்தார் நா.முத்துக்குமார்.
Genres
Shelves
Poetry book

More like this


பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன் எங்கள் ஊர் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும் சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்…

4.3/5 · 67 ratings
Check Price

The Interior Landscape: Love Poems from a Classical Tamil Anthology

In translating these poems from the ancient Dravidian into English, the celebrated poet and translator A. K. Ramanujan (who died in 1993) has rend…

4.3/5 · 67 ratings
Check Price

The Cilappatikaram: The Tale of an Anklet

‘Men and women of Maturai of the four temples! I curse this city. Its king erred in killing the man I loved’ One of the world's masterpiece…

4.3/5 · 67 ratings
Check Price

Songs Of A Coward: Poems Of Exile

A king decrees that all humans be skinned alive. A man runs from words that hound him like a pack of wolves. A legion of white snakes sweeps acros…

4.3/5 · 67 ratings
Check Price

நா. முத்துக்குமார் கவிதைகள்

பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…

4.3/5 · 67 ratings
Check Price

ஆத்மாநாம் படைப்புகள்

பிரம்மராஜன் தொகுத்த இத்தொகுப்பில் ஆத்மாநாம் கவிதைகள், கட்டுரைகள் அடங்கியுள்ளன. நண்பரது பரிந்துரைத்து வாசித்தேன். மிகப்பிடித்தது. எனவே புத்தகக் கண்காட்சியின் முதல் கொள்முதலே …

4.3/5 · 67 ratings
Check Price

Thamizhukku Niram Undu

Beautiful collection of Tamil poems from Vairamuthu. Some of the movie songs from Amarkalam, Poovellam un vasam are taken from this collection. Go…

4.3/5 · 67 ratings
Check Price

Tamil Love Poetry: The Five Hundred Short Poems of the Ainkurunuru

Translator: Martha Ann Selby

Dating from the early decades of the third century C.E., the Ainkurunuru is believed to be the world's earliest anthology of classical Tamil love …

4.3/5 · 67 ratings
Check Price