ஜப்பான்: ஒரு கீற்றோவியம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஜப்பான்: ஒரு கீற்றோவியம்

None

4.24/5 · 21 ratings

ஐரோப்பா, அமெரிக்கா போலவே ஜப்பானும் விரிவாக எழுதப்பட்ட நிலம். நான் இளைஞனாக இருந்தபோதே தி.ஜானகிராமனின் ஜப்பானியப் பயணக்கட்டுரையான ‘உதயசூரியனின் நாட்டில்’ என்னும் பயணக்கட்டுரையை படித்திருக்கிறேன். அதற்கு அப்பாலும் ஜப்பானைப்பற்றி என்ன சொல்லமுடியும் என்றே தோன்றியது. ஆனால் ஒவ்வொருவரின் அனுபவங்களும் வேறுவேறு. இதில் நம் பார்வைக்குச் சிக்குவதில் ‘கடவுள் அமைத்த’ ஓர் ஒழுங்கு அல்லது தற்செயல் உள்ளது. அது காட்…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_19118

★ 4/5
ஜப்பானின் மீதான ஒரு‌ தீரா மோகத்திற்க்கு, மேற்க்கொண்டு தீனி போட்டது போல் இருந்தது இந்த "ஜப்பான் ஒரு கீற்றோவியம்". ஷிண்டோவையும் பௌத்தத்தையும் பற்றிய என் மேலோட்டமான அறிவுக்கு ஆழ்ந்த சில ஆச்சரிய விளக்கங்களை அளித்திருக்கிறார் ஜெ.மோ.. சீனாவின் கலாச்சார தாக்கம், உலகப் போரின் நீட்சியும் மீட்சியும், சுய ஒழுங்கும் சுத்தமும், சாமுராய் முதல் அனிமே வரை ஊடுருவிய வன்முறை மீதான காதல் என பல தகவல்கள் தருவிக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் இலக்கிய வரலாறும், பண்பாட்டு கலையும் தேய்ந்து போய் அமெரிக்கா மற்றும் மேல்நாட்டு கலாச்சாரம் மேலோங்கி இருப்பது, அந்த நாட்டுக்கு நேரடி தொடர்பே இல்லாத என்னையே ஏதோ ஒரு வகையில் கவலை கொள்ள செய்கிறது‌. மிஞ்சிய ஜப்பானை ஜப்பானாக இருக்கும் போதே ஒரு முறை சென்று பார்த்து விட வேண்டும். பயணக் குறிப்புக்களை விரும்பி படிப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

user_19117

★ 4/5
ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்தை ஒரு சாகசக் குறிப்பாய் மட்டும் தராமல், அந்நாட்டின் ஆழமான சிந்தனைக் களஞ்சியமாக இந்நூலை வழங்கியிருக்கிறார் ஜெயமோகன். ஏழு நாட்களே நீடித்த இந்தப் பயணம், பல ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வுக்கான பலனை அளிக்கிறது என்றால் அது மிகையல்ல. பொதுவாக, நாம் ஓர் அயல்நாட்டுக்குச் செல்லும்போது, காட்சிகளைச் சுற்றிப் பார்ப்போம், புகைப்படங்கள் எடுப்போம், உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வோம். ஆனால், ஜெயமோகனின் அணுகுமுறை முற்றிலும் வேறானது. அவர் ஒவ்வொரு இடத்தையும் அதன் வரலாறு, அரசியல், புவியியல் அமைப்பு ஆகிய பின்னணிகளோடு இணைத்துப் பார்க்கிறார். அவர் கண்ட சிறு பகுதியைக் கொண்டே ஜப்பானின் முழுச் சித்திரத்தையும் ஒரு கீற்றோவியமாக வரைந்து காட்டுகிறார். ஒரு நாட்டின் நிலவியல் அமைப்பு எவ்வாறு அதன் ஆட்சியையும், அரசின் புரிதல் எவ்வாறு அதன் குடிமக்களின் பழக்கவழக்கங்களையும் வடிவமைக்கிறது என்பதை அவர் விளக்கும் பாங்கு வியப்பிற்குரியது. இவ்வளவு ஆழ்ந்த சிந்தனையை ஒரு குறுகிய பயணத்தில் ஒருவரால் நிகழ்த்த முடிவது என்பது உண்மையிலேயே ஆச்சரியத்தைத் தருகிறது. ஜப்பானைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நுண்ணிய கவனிப்பு மற்றும் சிந்தனைத் திறன் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டி. இது வெறும் பயண நூல் அல்ல; ஜப்பானின் ஆன்மாவைப் பதிவு செய்த ஓர் அரிய ஆவணம்.

user_19116

★ 4/5
Direct pass to japan✨️✨️bliss full... 15th part la.. Family ah pathi solliruparu... Do read carefully ❤

user_19115

★ 5/5
புத்தகம் : ஜப்பான் ஒரு கீற்றோவியம் எழுத்தாளர் : ஜெயமோகன் பதிப்பகம் : கிழக்குப் பதிப்பகம் பக்கங்கள் : 151 நூலங்காடி : Flipkart 🔆“யானை டாக்டர் “ புத்தகத்தின் மூலமாக எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துகள் எனக்கு அறிமுகமாயின . அதன் பின்னர் அவரின் “ அறம் “ படித்தேன். இன்னமும் அந்த தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை . “ஜப்பான் – ஒரு கீற்றோவியம் , அவரது வரிகளில் வந்த பயணக் கட்டுரைகளின் தொகுப்பு . 🔆ஜப்பான் தலைநகர் டோக்கியோ என்பது நமக்கு தெரியும். அங்குள்ள மக்கள் எவ்வளவு ஒழுக்கமானவர்கள் என்பது கட்டுரைகள் மற்றும் திரைப்படங்களின் வாயிலாக நாம் அறிந்ததே. 🔆டோக்கியோ நகருக்கு முன்னோடியாக இருந்தது மூன்று நகரங்கள் கியோட்டோ , நாரா மற்றும் காமகுரா. இந்நகரங்களில் உள்ள ஜென் ஆலயங்களையும் புத்த ஆலயங்களையும் கண்ட அனுபவத்தைக் கூறியிருக்கிறார் . 🔆இந்த ஆலயங்களில் உள்ள தோட்டங்கள் மட்டும் இல்லாது , பொதுவாகவே ஜப்பான் மக்களுக்கு செடிகள் மற்றும் தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம் . இதையே ஒரு தியானமாக அவர்கள் செய்வதுண்டு . 🔆ஜப்பான் என்றவுடன் நினைவுக்கு வரும் மற்றொரு விடயம் - ஹிரோஷிமா நாகசாகி தாக்குதல் . அந்த மக்கள் , அந்த பெரும் தாக்குதலை எதிர்க்கொண்டு எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தனர் என்பதைக் குறித்து பல திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வெளியாகியுள்ளன. 🔆ஜப்பானின் தேநீர் விருந்து என்பது ஒரு பிரார்த்தனை சடங்கும் கூட . நான் நேரடியாக ஜப்பானை எப்போ காண்பேன் என்று தெரியவில்லை . அவரின் எழுத்துகளின் உதவியால் மனக்கண்ணால் பார்த்து விட்டேன் . 🔆பயணம் சார்ந்த நூல்களை படிக்க விரும்புவோர் , வாசிக்க வேண்டிய புத்தகம் . புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி Subasreenee Muthupandi Happy reading

user_19114

★ 4/5
ஜெ வின் பயணக்குறிப்புகள் அனைத்துமே பெரும் தகவல் புதையல்கள். என்னதான் wiki பார்த்து தெரிந்துகொண்டாலும்வெப்படி ஒரு நிலத்தை அணுகுவது, எப்படி தயார்படுத்திக்கொள்வது, என்னென்ன விசயங்கள் அதில் முக்கியம் என்று ஒரு பெரும் சித்திரத்தை அளிப்பவை. இவரின் கதைகளைப்போலவே இவரின் பயணக்கட்டுரைகளும் வாசகனக்கு வெற்று படிப்பைத்தாண்டி ஒரு நிறைவை அளிக்கும். ஐரோப்பாவைப்பற்றி எழுதாமல் விட்டது பெரும் குறைதான்.
Shelves
Jeyamohan ஜெயமோகன் book

More like this


வெள்ளையானை

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அ…

4.24/5 · 21 ratings
Check Price

வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இ…

4.24/5 · 21 ratings
Check Price

வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்

மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம்.…

4.24/5 · 21 ratings
Check Price

தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]

இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை…

4.24/5 · 21 ratings
Check Price

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்…

4.24/5 · 21 ratings
Check Price

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…

4.24/5 · 21 ratings
Check Price

வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்

மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…

4.24/5 · 21 ratings
Check Price

குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]

கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டு…

4.24/5 · 21 ratings
Check Price

புறப்பாடு

அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது. சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்ப…

4.24/5 · 21 ratings
Check Price

குகை [Gugai]

மன்னராட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட பலநூறு சுரங்கவழிகள் நம் கால்களுக்கு அடியில் இன்றும் புதைந்துள்ளன. அவை தூர்ந்துவிட்டிருக்கலாம். அல்லது ரகசிய அறைகளாக அங்கே இருந்துகொண்டும் இர…

4.24/5 · 21 ratings
Check Price

ரப்பர்

ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவ…

4.24/5 · 21 ratings
Check Price

ஊமைச்செந்நாய்

ஊமைச்செந்நாய் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். உயிர்மை பதிப்பக வெளியீடாக 2008ல் வெளிவந்தது. யதார்த்தக்கதைகள், செய்திவடிவக் கதைகள், மிகையதார்த்தக் கதைகள் ஆகி…

4.24/5 · 21 ratings
Check Price