தமிழாற்றுப்படை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழாற்றுப்படை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.32/5 · 73 ratings

ஆற்றுப்படை என்பதற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் தரும் விளக்கம்: ஆற்றுப்படுத்துதல் என்றால் அதனை நோக்கிச் செலுத்துதல் என்கிறார் . தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால் இக்கட்டுரைத் தொகுப்புக்கு தமிழாற்றுப்படை என பெயர் வைத்திருக்கிறார். வரலாறு படைக்கப்போகும் தமிழாற்றுப்படை, தமிழுக்கான கொடை, தமிழறிஞர்களுக்கான வணக்கம், தமி…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_15931

★ 1/5
Not sure why Vairamuthu took 4 years to write this... Not worth the money / time

user_15930

★ 5/5
சங்க காலம் முதல் தற்காலம் வரை தமிழ் ஆராய்ந்து , வாழ்ந்து மறைந்த பல இலக்கியவாதிகளின் இலக்கியத் தேனை , இனிய கவிதைத் தமிழில் சுவைக்கத் தந்து , எங்களை தமிழ் ஆற்றுப் படுத்திய கவிஞர் வைரமுத்து அவர்கள் வாழ்க வாழ்க

user_15929

★ 4/5
Of the best I read after Thanet deasam from Vairamutha depth overwhelming each and every scholars of tamil works especially mesmerising Elango , Thirumular, Jayankondar, Periyar, Caldwell, Jeyakanthan much touched finally it gives a good feel

user_15928

★ 4/5
நாம் மறந்து கடந்து போன பல புலவர்களின் கதாசிரியரின் கவிஞர்களின் பெருமையும் அவர்கள் தம் தமிழுக்கு செய்த தொண்டுகளையும் தமிழின் பெருமை மற்றும் அதன் கவியழகையும் அழகே தன் கட்டுரை வழியே அழகாய் எடுத்துரைக்கிறார் கவிஞர் வைரமுத்து. பிடித்த வரி பிடித்த புலவர் என்று ஒன்றல்ல இரண்டல்ல குறிப்பிட இப்படைப்பில்.

user_15927

★ 5/5
வைரமுத்துவின் உன்னதமான படைப்பு. தமிழ் மொழிக்கு தொண்டு செய்தவர்களின் தொகுப்பு இப்புத்தகம். இதை எழுதியத்தின் மூலமே இவரையும் அப்பட்டியலில் சேர்க்கலாம். தமிழ்மொழி வரலாற்றை அறியும் ஆவலுள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். பெரியார் அண்ணா கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத்தவரை இதில் சேர்த்துள்ளது சிலருக்கு தவறென படலாம். அனால் வரலாறு அறிந்தவர்கள், அரசியல் தாண்டி இவர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்கை அறிந்தவர்கள் இவர்களை சேர்த்தது தான் சரி என்று அடித்துச் சொல்வார்கள். இது எவ்வித அரசியல் சார்பும் இல்லாத நேர்மையான படைப்பு.

user_15926

★ 4/5
As usual splendid writing from vairamuthu... Enjoyed his views about different personalities ....

user_15925

★ 4/5
தமிழாற்றுப்படை இளைஞர்களுக்கு உகந்த புத்தகம்தானா என தெரியவில்லை. முதல் பாதி புரிவதற்க்கு தமிழ் இலக்கியம் நிறைய படித்திருக்க வேண்டும், பின் பாதி எளிதாக இருக்கிறது. இருந்தும் எல்லா ஆளுமைகளுக்கும் ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும். கட்டுரைகளின் நீளமும் சோதிக்கவில்லை.

user_15924

★ 4/5
இந்த புத்தகம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர்களை கால வரிசையில் வரிசைப்படுத்தி அவர்களின் வாழ்வினை விவரிக்கிறது. என்ன தான் அணைத்து பெயர்களும் பரிச்சயமாக இருந்தாலும், அவர்களை பற்றிய சிறு சிறு நிகழ்வுகள் நமக்கு முழுதும் புதுமையே. தொல்காப்பியரில் ஆரம்பிக்கும் புத்தகம் கவிக்கோ அப்துல் ரஹ்மானில் முடிகிறது. ஆனால் முழுதும் தமிழ் பற்றி மட்டும் பேசுகிறதா என்பது கேள்விக்குறியே. ஆரம்பித்தில் தமிழ் மொழி பற்றி மட்டுமே பேசி செல்லும் ஆசிரியர் கொஞ்சம் கொஞ்சமாக திராவிடத்தின் மீதும் அரசியலின் மீதும் தன் மொழி நடையினை மாற்றுகிறார். அதற்கான காரணமாக, தமிழ் மொழியின் மீதும் தமிழ் மக்களின் மீதும் ஏற்பட்ட அடக்குமுறைகளை, மொழியினை ஊர் ஆயுதமாக மாற்றி அவ்வடக்குமுறைகளை உடைத்தெறிந்த அனைவருக்கும் ஆசிரியர் அளிக்கும் மரியாதையெனவே கொள்ள வேண்டும்.

user_15923

★ 4/5
தமிழாற்றுப்படை - Vairamuthu தழிழுக்கு வார்த்த பல பேர்களுள் சில பேர்களின் அறிய சாதனைகளை அறிந்து வைக்க எழுதப்பட்ட நூல் இது. வைரமுத்து ஆராய்ந்து தொகுத்து எடுத்து வந்திருக்கிறார். தமிழ் தான் திராவிடத்தின் மூல மொழி என்று ஆய்வறிஞர்கள் சொல்கிறார்கள். ஆதி மக்கள் பேசி வந்த மொழி தான் திராவிடக் குடும்ப மொழி என்கிறார்கள். கி.மு’வில் இயற்றப்பட்ட ரோமானிய நாடகமொன்றில் கன்னட மொழிச் சொற்கள் வருகிறதாம். தமிழில் இருந்து கிளைத்த கன்னடமே கிமு’வில் வருமளவுக்கு தொன்மை என்றால் தமிழுக்கு நினைத்துப் பாருங்கள். * ஆங்கிலத்தின் எழுத்துரு கிபி 7ஆம் நூற்றாண்டில் அறியப்பெறுகிறது. * ஜெர்மானிய மொழியின் எழுத்து வடிவம் கிபி 8’ஆம் நூற்றாண்டில் எட்டப்பட்டது. * பிரெஞ்ச் மொழியின் முதல் எழுத்து வடிவம் கிபி 9’ஆம் நூற்றாண்டை ஒட்டியதாகும். ஆனால், தமிழ் மொழியின் ஆதி இலக்கணமான தொல்காப்பியம் கிமு 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றால் எவ்வளவு விண்ணளவு வியப்பு தருகிறது. தொல்காப்பியரில் இருந்து கவிக்கோ அப்துல் ரகுமான் வரை தமிழை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திய சிலரின் பதிவு இந்நூல். வடமொழிச் சொல்லை உருவி வீசியதிற்கு மறைமலையடிகளின் பங்கு அதிகம். தொல்காப்பியர் தமிழின் இலக்கணத்தை கட்டமைத்தவர். சுருங்கிய சொற்றொடரில் கவி எழுதியவர் அவ்வையார். எந்த காலத்திலும் Out Of Trend ஆகாத கவி தரித்தவர் திருவள்ளுவர். சிலைவழிப்பாட்டை விட்டு ஒளி வழிப்பாட்டை முன் நிறுத்தி கவியில் ஒளிந்தவர் வள்ளலார். சமஸ்கிருதத்தில் இருந்து வரவில்லை தமிழ், இது திராவிட மூலமொழி என்று நிரூபித்தவர் கால்வெல். உடம்பின் இரகசியத்தை கட்டவழித்தவர் சித்தர் திருமூலர். Surrealism(மீமெய்) என்பதை தமிழ் கவிதைக்குள் நேர்த்தியாய் புகுத்தியவர் கவிக்கோ அப்துல் ரகுமான். ஹிந்தி திணிப்பை விரட்டிய பங்கு அண்ணாவும், கலைஞரையும் சாரும். அடித்தட்டு மக்களின் வலியை பாட்டு செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாணச் சுந்தரம், சிறுகதையை அடுத்து நகர்த்தியவர் ஜெயகாந்தன். இன்னும் பிற இந்த ஒரு நூலுக்குள் அடங்கி இருக்கிறது. தமிழின், தமிழ் சார்ந்தவர்களின் அறிமுகம் வேண்டுமென்றால் இந்த நூல் சரியானது. அதற்கு இவன் சாட்சியானது. . #vairamuthu.

user_15922

★ 5/5
இவ்வுலகில் மனிதன் தோன்றிய நாளில் இருந்து இன்று வரை நம் கண்முன்னால் பல மொழிகள் முதுமையுற்று மாய்கின்றன, அந்நியக் கிருமிகள் புகுந்து சில மொழிகள் அழிகின்றன, ஆனால் மூவாயிரம் ஆண்டுகளாக தனித்து நின்று பல மொழி திணிப்பையும் எதிர்த்து இன்று வரை உயிரோடு கலந்து இருக்கும் ஒரே மொழி தமிழ்... ஆற்றுப்படுத்துதல் என்றால் அதனை நோக்கிச் செலுத்துதல் என்று பொருள் . தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் புத்தகம் இது. தொல்காப்பியர் சங்க காலத்தில் சீர்திருத்தி வடிவமைத்து கொடுத்த தமிழ் என்னும் ஆயுதத்தை ஒவ்வொரு முறையும் நெருப்பில் இட்டு அக்காலத்திற்கு ஏற்றவாறு வடிவத்தை மாற்றிய பலர் பற்றிய புத்தகம். இதில் இருக்கும் ஒவ்வொருவரும் தமிழை ஒவ்வொரு காலத்திற்கு தூக்கி நிறுத்தியவர்கள். தமிழ் பழைய மொழி அதை ஏன் இன்னும் தூக்கி பிடிக்கவேண்டும் என்று கேட்பவர்களுக்கு ..

user_15921

★ 4/5
தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கபிலர், ஔவையார், கம்பர், அப்பர், ஆண்டாள், செயங்கொண்டார், திருமூலர், caldwell, வள்ளலார், உ.வே.சா., மறைமலையடிகள், பாரதியார், பெரியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், அண்ணா, மற்றும் கருணாநிதி என சங்ககாலம் முதற்தொட்டு இக்காலம் வரை தமிழுக்கு அருந்தொண்டு செய்த மகத்தான மனிதர்களைப் பற்றிய புத்தகம். பாரதியைப் பற்றி வைரமுத்து அவர்கள் தன் கம்பீரக்குரலில் புகழுரைத்து முடித்த பிறகு என் கண்கள் கலங்கியிருந்தன. பாவேந்தர் பாரதிதாசன், உ.வே.சா, புதுமைப்பித்தன் ஆகியோரின் அத்தியாயங்களும் மனதை உருக்கி விடுவதாகவே அமைந்திருக்கிறது.
Tags
2019 வெளியீடுகள்
Shelves
book வைரமுத்து Vairamuthu

More like this


கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

4.32/5 · 73 ratings
Check Price

Vaanam Thottu Vidum Thooramthaan

????? ?????????; ?????????? ?????????????? ??? ????????? ?????????. ????????? ???????????! ?????? ???????????! ???????????? ?????? ???????????????…

4.32/5 · 73 ratings
Check Price

வைரமுத்து கவிதைகள்

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…

4.32/5 · 73 ratings
Check Price

சிகரங்களை நோக்கி

மகிழ்ச்சி : மனிதன் தான் விரும்புகிறவரைக்கும் மரணத்தைத் தள்ளிப்போடும் மந்திரத்தையும் நீ கண்டுபிடித்து விடுவாய்ம. அற்புதம் : ஒலிவேக வாகனம் உற்பத்தி செய்வாய். அபாரம் : ஒன்றை மட்…

4.32/5 · 73 ratings
Check Price

மௌனத்தின் சப்தங்கள்

இவையொன்றும் வேதங்களின் விசாரணைகளோ உபநிடதங்களின் உள்ளீடுகளோ அல்ல; உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் புத்திசாலித்தனமான புலம்பல்கள் என்க. இந்தக் கட்டுரைகள் எனது சமகாலத் திரைய…

4.32/5 · 73 ratings
Check Price

கவிராஜன் கதை

புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டா…

4.32/5 · 73 ratings
Check Price

வைகறை மேகங்கள்

இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…

4.32/5 · 73 ratings
Check Price

என் பழைய பனை ஓலைகள்

காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …

4.32/5 · 73 ratings
Check Price

இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்[Intha Kulatthil Kal Erinthavargal]

வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமைய, ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைர…

4.32/5 · 73 ratings
Check Price

பாற்கடல்

வாழ்வியல், அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், அறிவியல், நாட்டாரியல், உலகில், என்ற பல பரிமாணங்களோடு இயங்குகிறது இந்தப் பாற்கடல், பகுத்தறிவும், முற்போக்கும் மண் நேசமும் மனி…

4.32/5 · 73 ratings
Check Price

சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்

இந்த நூலின் நோக்கம், வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதுதான். இத…

4.32/5 · 73 ratings
Check Price