எழுதுக

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எழுதுக

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.6/5 · 25 ratings

"எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள் உசாவுகிறர்கள். இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் இயல்புகள் குறித்தும் எழுத்தாளனாக வாழ்வதைப்பற்றியும் குழப்பம் கொண்டிருக்கிறார்கள். எழுத்து ஓர் இலட்சியவாதம், எந்த இலட்சியவாதமும் அதற்குரிய ஐயங்களும் தயக்கங்களும் கொண்டத…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_15823

★ 5/5
Though this book is very small and can be read in just a few days (like I have done), it is a book that you can go back to as many times as possible because JMo answers some of the questions from readers in a very insightful way as an experienced writer and a human, with a lot of depth. The questions are touching many aspects - literary writing, challenges that the early writers face, writer's speaking aspects, Art and rational mind, celebrating writers, major literatures, ambitious argument and more. The way JMo answers, every word, sentences in the answers provide great clarity for both writers and readers. It is a must-read for those who want to derive more inspiration towards both reading and writing.

user_15822

★ 5/5
எழுத்தாளர் ஆக வேண்டும் என விரும்புவர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் ❤️

user_15821

★ 5/5
ஒரு மனிதன் தான் அவதானித்ததை இந்த உலகுக்கு எழுத்து மூலம் கடத்திக்கொண்டிருக்கும் பணியை செய்யும் பொழுது, இந்த எழுத்துக்களின் ஊடே உள்ள ரகசியங்களை தன்னுள் அடக்கி வைப்பதுண்டு. காரணம் நிலைகொள்ளாமை என்னும் அந்த அச்சம், எழுதுவதில் இருக்கும் அந்த வித்தையை மற்றவர்களும் அறிந்தால் மற்றவர்களும் அவர்களுக்கு ஈடாக வரும் பொருட்டு தான் இத்தனை நாள் மற்றவர்களை விட ஒரு படி மேல் என்ற அந்த மிதப்பு நிலைக்காது. ஆனால் அடுத்த தலைமுறையினர் அவர்களில் உள்ள வாசகர்களையும் எழுத்தாளர்களையும் கண்டடைவது தமிழ் இலக்கிய சூழலுக்கு இன்றியமையாதது என்ற ஒரு அறிதல் ஜெயமோகன் அவர்களை வாசகரிடம் உரையாடல் ஊடாக வாசித்தல் மற்றும் எழுதுதல் குறித்த தெளிவான தீர்க்கமான கருத்துக்களை பகிரச் செய்திருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அளித்த பதில்கள் ஒரு வாசகரையும் எழுத்தாளரையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். எனக்கு சற்றும் ஒவ்வாத கதை உலகத்தில், நான் கேட்டிராத மொழிநடையில் உள்ள செவ்வியல் இலக்கிய படைப்புகளான ஒரு புளிய மரத்தின் கதை, கொற்றவை, புயலிலே ஒரு தோணி என்ற புத்தகங்கள் பாதியிலியே கிடப்பதை நினைவு கூர்கிறேன். என்னை போன்ற வாசகர்களுக்கும் இந்த எழுதுக என்ற புத்தகத்தில் ஒரு செய்தியை கொடுத்திருக்கிறார். விடுபட்ட இந்த புத்தகங்களின் வாசிப்பை தொடரலாம் என்ற எண்ணம் மலர்கிறது. எது இலக்கியம்?, உலகியல் வாழ்வில் காலூன்றி நிற்பதன் அவசியம், தொடர்புத்திறனின் இன்றைய போக்கு என அனைத்து பதில்களும் அசாத்தியமான முறையில் பகுப்பாய்வுத் தன்மையோடு ஆழச் சென்று உதாரணங்களோடு விளக்கியிருப்பதனால் இந்த புத்தகத்திலுள்ள உள்ளடக்கத்தின் அறிவுக்கனம் புத்தகத்தின் ஸ்தூல கனத்தை விட அதிகமாக உள்ளது. இதைச் சுமையாக இல்லாமல் மிக இலகுவாக நம்மில் செலுத்திருப்பதே இந்த படைப்பின் வெற்றி லோகி - சில நினைவுகளும் சில மதிப்பீடுகளும் என்ற இவரின் புத்தகத்திலும் இந்த பகுப்பாய்வுத் தன்மையை நான் உணர்ந்தித்திருக்கிறேன் . உதாரணத்திற்கு மலையாள திரைக்கதைகளில் இரண்டு விதமான கதைகள் இருப்பதை நிறுவியிருப்பார் , எம் டி வாசுதேவன் நாயர் அவர்களின் கதைகளில் சிக்கல்களை தன் புத்திசாலித்தனத்தால் அவிழ்த்து மீண்டு வரும் கதாநாயகன் மற்றும் லோகி போன்ற எழுத்தாளர்களின் கதைகளில் உள்ள மீள முடியாத சிக்கல்களில் அகப்பட்டு வாழவைத் தொலைக்கும் கதாநாயகன் . இப்படி பல தருணங்களில் என்னை அசர வைத்த படைப்பு லோகி என்ற அந்த புத்தகம் . அந்த படைப்புக்கு சற்றும் குறையாத படைப்பாக இந்த எழுதுக என்னும் இந்த கடித இலக்கியத்தை பார்க்கிறேன். கடைசியில் வரும் தீவிரவாதம் பற்றியான கட்டுரை இளைஞர்களை நல்வழிப்படுத்தவதற்காகவே தன் முனைப்போடு தர்க்க அடிப்படையில் உளமாற சொல்லிருப்பது கச்சிதம். ஓர் இலக்கிய படைப்பில் ஒரு uncommon wisdom, அரிய மெய்மை வெளிப்பட்டாகவேண்டும் என்ற ஜெயமோகனின் கூற்றிற்கேற்ப இந்த படைப்பிலும் இதை காணமுடிகிறது. இதில் வியப்பு என்ன என்றால் இந்த அறிய மெய்மையை சுழல்நிலையில் நிலை கொள்ளச் செய்து அந்த அரிய மெய்மையையின் தேவையை வலியுறுத்தி அதன் ஊடாக அரிய மெய்ம்மையே இன்னொரு அடுக்காக மருவுருவம் பெறச் செய்திருப்பது தான். இவை அனைத்தையும் எளிமையாக எல்லோரும் வாசிக்கும் வண்ணம் நிகழ்த்தி இருக்கிறார். இந்த குறைவான பக்கங்கள் கொண்ட ஒரு அறிவு களஞ்சியத்தை எல்லோரும் பருக வேண்டும். எழுதுக என்னும் நூலை ஜெயமோகன் அவர்களின் 60ஆம் அகவையை முன்னிட்டு விலையில்லா பிரசுரமாக பெற்ற 500 இளைஞர்களில் நானும் ஒருவன் என்பதனால் இதனை எனது பாக்கியமாகவே கருதுகிறேன். தன்னலம் இல்லாமல் இந்த அறிய செயல்பாட்டை செய்த தன்னறம் நூல்வெளிக்கு எனது நன்றி கலந்த பாராட்டுகள்.

user_15820

★ 3/5
The veteran writer distills decades of wisdom into this short book that serves as a guide for aspiring writers. The format of this book is that of a conversation between Jeyamohan and youngsters who seek his advice on how to write. Some of the striking portions are where the author ridicules unquestioned allegiance to an ideology/movement, illuminates as to how unlearning is as important as learning and clearly explains as to how writing is , first and foremost, an expression of one's own personality. As Sundara Ramasamy has written elsewhere, "Ezhudhu, adhuve adhan ragasiyam" (Can be poorly translated as "Write and you shall unlock the mysteries about it").

user_15819

★ 3/5
#எழுதுக இந்த வருடத்தின் முதல் வாசிப்பு. இளம் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுடன் ஜெமோ கடிதங்கள் மூலம் நிகழ்த்திய ஆத்மார்த்தமான உரையாடல்களின் தொகுப்பு. வாசிப்பதில் தொடங்கி வழிபாடு வரை ஒவ்வொரு பதிலிலும் அவ்வளவு தீர்க்கம் அவ்வளவு ஞானச்செருக்கு.14 கடிதங்களின் வழி தன் அக்கறையால் அக்கறையின்மையை சுண்டிக் கொண்டே வரும் ஜெமோ ஒரு கட்டுரையில் வாழைப்பழத்துக்குள்ளே பலாக்காயை சொருகுகிறார் வழக்கம் போல. எழுதுவதின் சோம்பலை உளவியல் ரீதியாக அணுகும் இடம் சோம்பலின் தண்டவாளத்தில் ரயிலாக ஓடுகிறது. பதில்களில் உள்ள ஆழ்ந்த புலமையையும் உண்மையான அக்கறையையும் கருத்தில் கொண்டு சில கேள்விகளில் உள்ள அடிமைத்தனத்தை பொறுத்துக் கொள்ளலாம். நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல் "எழுதுக".

user_15818

★ 5/5
எழுத்து மற்றும் வாசிப்பு சார்ந்த என் தேடலும், தாகமும் நீண்டவை. கடந்த ஒரு வருடமாகவே வாசிப்பதையும், எழுதுவதையும் குறைத்துவிட்டு - நிகராக நிறுத்துவிட்டு முறையாக வாசிப்பது எப்படி, முறையாக எழுதுவது எப்படி என்பதையே தேடி திருந்து கொண்டிருக்கிறேன். அத்தேடலின் ஒரு பகுதியகாவே எழுதுக வாங்கினேன். எழுத்தாளர் ஜெயமோகன், அவரது இணையப் பக்கத்திற்கு அவரது வாசகர்களிடமிருந்து வந்த எழுத்து மற்றும் வாசிப்பு சார்ந்த கேள்விகளுக்கு அளித்த கட்டுரை பதில்களின் தொகுப்பு தான் இப்புத்தகம். இப்புத்தகம் எனது முந்தைய தேடல்களைப் போலவே முடிவொன்றைக் கொடுத்து, தேடல் ஒன்றையும் தந்திருக்கிறது. என் தேடல்கள் நீண்டது என்பதைக் காட்டிலும் எல்லையற்றது என்பதே சரியாகும் போல. பாலைவனத்தில் நீர் தேடி அலைவதாகவே என் தேடல் கொண்டு திரிந்து கொண்டிருந்தேன். இந்தப் புத்தகம், நான் அலைவது பாலைவனத்தில் அல்ல கடற்கரையில் என்பதைக் கொஞ்சம் காட்டிக் கொடுத்திருக்கிறது. நன்றி ஜெமோ!
Shelves
Jeyamohan ஜெயமோகன் book

More like this


தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]

இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை…

4.6/5 · 25 ratings
Check Price

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…

4.6/5 · 25 ratings
Check Price

கன்னியாகுமரி

இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டால் விஷத்தைய…

4.6/5 · 25 ratings
Check Price

யானை டாக்டர்

பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…

4.6/5 · 25 ratings
Check Price

இன்றைய காந்தி

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பா…

4.6/5 · 25 ratings
Check Price

குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]

கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டு…

4.6/5 · 25 ratings
Check Price

இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் [India Gnanam: Thedalgal, Purithalgal]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். இந்திய சிந்தனை மμபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்தவிவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ்…

4.6/5 · 25 ratings
Check Price

வெண்கடல்

உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கு…

4.6/5 · 25 ratings
Check Price

குமரித்துறைவி

1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆ…

4.6/5 · 25 ratings
Check Price

படையல் [Padaiyal]

இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாம…

4.6/5 · 25 ratings
Check Price

பனி மனிதன்

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு ப…

4.6/5 · 25 ratings
Check Price