வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

None

4.4/5 · 53 ratings

இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இலக்கிய வாசகன் எதிர்கொள்ளும் தடைகள் என்ன, இலக்கியக் கருத்துக்களைச் சொல்வது எப்படி என்பதுபோன்ற பல வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் கட்டுரைகள் இவை. உலக இலக்கியக் களத்தில் சென்ற இருநூறாண்டுகளில் நிறைய விவாதிக்கப்பட்ட அடிப்படைகள் இவை…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_15811

★ 5/5
வணிக வாசிப்பாளர்களுக்கு இந்த புத்தகம் பயனில்லை.இந்த புத்தகம் முதல் படி இலக்கிய வாசகர்களுக்கும், இலக்கியம் படிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும். Tolstoy, Dostoevsky போன்ற பல உலக இலக்கிய ஆளுமைகள் படிப்பதற்கு சில வாசிப்பு வழிகள் இருக்கிறது. அதை எப்பிடி அணுகுவது என்று மிக தெளிவாக எழுதி இருப்பார். இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

user_15810

★ 4/5
தமிழ் இலக்கியம் சார்ந்த ஆசிரியரின் கட்டுரைகள் மற்றும் வாசகர்கள் உடனான கேள்வி பதில்களின் தொகுப்பு. நவீன கவிதைகள் ஏன் பலருக்கு புரிவதில்லை, அதற்கான காரணங்கள் என்ன மற்றும் அவற்றை அணுகும் முறைகள். பொது வாசகர்கள் மற்றும் இலக்கிய வாசகர்களின் வாசிக்கும் பாங்கு, குணாதிசயங்கள் மற்றும் விமர்சன முறைகள். ஒரு எழுத்தாளர் மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதன் முக்கியத்துவம். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பாலகுமாரன், புதுமைப்பித்தன், மகாகவி பாரதியார் மற்றும் பல எழுத்தாளர்களைப் பற்றிய விவரிப்பு. இலக்கிய படைப்புகள் மற்றும் இலக்கியம் அல்லாத படைப்புகளைப் பிரித்தறியும் உத்திகள், இலக்கியப் படைப்புகளின் கூறுகள் மற்றும் வாசகர் ஆழ்ந்து அறிய வேண்டிய நுண் கருத்துகள். ருஷ்ய இலக்கியங்களை வாசிக்கும் போது ஏற்படும் தடைகள் மற்றும் அதைக் கடந்து வரும் வழிகள். இலக்கிய அபிப்ராயம் சொல்லும் முறைகள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் ஏற்படும் பூசல்களைப் பற்றிய விவரிப்பு. இவற்றைப் பற்றி இந்தப் புத்தகத்தில் தெரிந்துகொள்ளலாம். ஒரு வாசகராக நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. அதே சமயம் நான் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும். என்னை தீவிரமாக யோசிக்க வைத்த புத்தகம் இது. பல படிமங்களாக இருக்கும் ஆசிரியரின் பதில்கள் ஆழ்ந்த சிந்தனைக்குள்ளாக்குகிறது. சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்தப் புத்தகத்தை நான் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். இலக்கிய வாசிப்பைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு அருமையான புத்தகம்.

user_15809

★ 4/5
புத்தகங்களை வாசிப்பவர்கள், கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஒரு சில இடங்களில் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தது இருந்தும் இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையின் வாயிலாக பல தெளிவுகள் பெறக்கூடும். புத்தகங்களை வாசிப்பதனால் நமக்கு எழும் சில சந்தேகங்களும் தடைகளும் குழப்பங்களுக்கு எல்லாம் இந்நூலை வாசிக்கும் ஒவ்வொரு கட்டுரையின் வாயிலாக ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்கப்படும். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பெரும்பாலானவை வாசகனிடத்தில் இருந்து வந்த கேள்விகளின் பதில்களாகத் தான் விளக்கியிருப்பார். இதில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள் நம்முடைய மனதிலும் தோன்றி என்றைக்கோ மறைந்திருக்க கூடும் அதை இப்போது இதிலுள்ள கட்டுரைகளின் வாசிப்பில் தெளிவடையக்கூடும், அப்படித்தான் என்னுள் இருந்த குழப்பங்களும் தெளிவு கிடைத்தது. உதாரணமாக ஒரு படைப்பை நாம் வாசித்து முடித்து, நாம் அப்படைப்பு வேறு ஒரு படைப்பின் சாயலில் தான் இருக்கிறது (அந்த படத்தை மாதிரி தான் இந்த படமும் இருக்கிறது) என்று கூறுவது இயல்பு. அப்படி ஒரு இலக்கிய படைப்பை விமர்சனத்திற்கு பொத்தாம் பொதுவாக கூறுவதை விட இவ்விரு படைப்பிற்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிதல் தான் ஒரு தேர்ந்த வாசகனின் நோக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இங்கு நான் சரியாக விளக்கி உள்ளேனா என்று தெரியவில்லை ஆனால் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது தெளிவடைவீர்கள். பொதுவாக எழும் கேள்விகளான எது இலக்கியம், மற்றவருக்கு புரிவது எனக்கே என் புரிவதில்லை, எழுத்தானுக்கு வாசிப்பு தேவையா, ரஷ்ய இலக்கத்தை வாசிக்கும் போது இருக்கும் சிக்கல், ஒரே எழுத்தாளரை வாசித்தல், பொருள் மயக்கம், இலக்கியத்தில் ஏன் விவாதங்கள் நடக்கிறது என பல்வேறு கேள்விகளுக்குள்ளான கட்டுரை இந்நூலில் உள்ளது. இதில் உள்ள பெரும்பான்மை கட்டுரைகள் அவருடைய இணையதளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை தான். ஓரிரு கட்டுரைகள் இந்நூலிற்கு என்று தனியாக எழுதியிருந்தார் போலும். கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம். தேடி வாசியுங்கள்.

user_15808

★ 4/5
இலக்கியம் சார்ந்த நண்பர்கள் வட்டம் இல்லாத அந்தரங்கமான வாசிப்பினை கொண்டவன் என்பதால் வாசிப்பு தொடர்பான பல கேள்விகள் எனக்குள் தேங்கியிருந்தது. அவற்றில் சிலவற்றை களைவதற்கும் சிலவற்றை பகுப்பாய்வு செய்வதற்கும் இந்நூல் உதவியது. இருபத்தொரு கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை கேள்விகளுக்கு அப்பாற்பட்டு ஏற்கக்கூடியவையே.

user_15807

★ 3/5
Its mostly about how to read, what to read, its mostly about what is literature and how literature can be read.
Shelves
ஜெயமோகன் book Jeyamohan

More like this


ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும்…

4.4/5 · 53 ratings
Check Price

காடு [Kaadu]

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…

4.4/5 · 53 ratings
Check Price

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…

4.4/5 · 53 ratings
Check Price

எழுதும் கலை [Ezhudhum Kalai]

நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுது…

4.4/5 · 53 ratings
Check Price

ஆனையில்லா! [Aanaiyillaa!]

இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்…

4.4/5 · 53 ratings
Check Price

ஏழாம் உலகம்

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.4/5 · 53 ratings
Check Price

குறும்படைப்பு: அறம் - சிறுகதை [Aram]

வாசலில் நின்றிருந்தவர் ‘‘உள்ள வாங்கோ… இருக்கார்” என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘‘வணக்கம்” என்றபடி செருப்பைக் கழற்றினேன். அவர் செருப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ‘‘வெ…

4.4/5 · 53 ratings
Check Price

வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்

மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம்.…

4.4/5 · 53 ratings
Check Price

எழுதுக

"எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அ…

4.4/5 · 53 ratings
Check Price

அறம்-2

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.4/5 · 53 ratings
Check Price

தன்மீட்சி

இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…

4.4/5 · 53 ratings
Check Price

குகை [Gugai]

மன்னராட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட பலநூறு சுரங்கவழிகள் நம் கால்களுக்கு அடியில் இன்றும் புதைந்துள்ளன. அவை தூர்ந்துவிட்டிருக்கலாம். அல்லது ரகசிய அறைகளாக அங்கே இருந்துகொண்டும் இர…

4.4/5 · 53 ratings
Check Price