சந்திரபாபு : கண்ணீரும் புன்னகையும்: Chandrababu

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சந்திரபாபு : கண்ணீரும் புன்னகையும்: Chandrababu

None

Author: Mugil
4.21/5 · 100+ ratings

கண்ணீரும் புன்னகையும்

என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க? அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதலி தெர…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_15249

★ 5/5
Author has done a good job on collecting information from different sources and structured it very well.

user_15248

★ 5/5
Well written Read to understand one of the best actors. You'll be happy and sad the same time. Possibly you'll miss him.

user_15247

★ 4/5
எதற்காகவும், யாருக்காகவும் தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த ஒரு கலைஞனின் வாழ்வில் அவனைத் தொடர்ந்த சோதனைகளும், துயரங்களும் எளிமையான மொழியில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நேர்மையான கலைஞனை எப்படித் தேவை தீர்ந்ததும் வீசி எரியப்பட்டுவிடுகிற எச்சில் இலையைப் போல, திரையுலகம் அவரை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எரிந்துவிட்டது என்பதற்குச் சான்றான நிகழ்வுகள் அதன் பக்கங்களில் விரிகின்றன. கோடிக்கணக்கான ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்கும், அவர்களது வாழ்வின் போக்கை நிர்ணயம் செய்யும் வல்லமை கொண்ட கதாநாயகர்களின் முகப்பூச்சுக்குப் பின்னே மறைந்திருக்கும் கோரமுகங்கள், அவர்கள் கடைவாயில் வழியும் ரத்தம் காணப்படுமாறு உரித்துக் காட்டப்பட்டுள்ளன. காமிரா முன் தவிர வேறெங்கும் நடிக்கத் தெரியாத, பிறருக்குத் தொந்தரவில்லாமல் தன் இச்சைப்படி வாழ நினைக்கும் ஒரு நேர்மையான மனிதனைச் சமூகம் எவ்வாறு புறந்தள்ளி விடுகிறது என்பதற்கு பாபுவின் வாழ்க்கை ஒரு உதாரணம்.மிகுந்த வறுமையில்தான் துவங்கியிருக்கிறது அவரது வாழ்க்கை. கொலைப் பட்டினியிலும் தன் தனித்துவ��்தை இழக்காத மனிதர் அவர். தான் நடித்த காலத்தில் கதாநாயகனுக்கு ஈடாக ஊதியம் பெற்ற ஒரே நகைச்சுவை நடிகர் அவர். திரைத்துறையில் குறுகிய காலத்��ில் புகழின் உச்சியை அடைந்த போதிலும் அவரது சொந்த வாழ்க்கையில் துரோகங்களும், ஏமாற்றங்களும், சோகங்களுமே சூழ்ந்துகொண்டிருந்தன. சந்திரபாபு மது அருந்துகிற அழகை இந்தப் புத்தகத்தில் வர்ணித்திருப்பதைப் படித்தாலே நமக்கும் ஆசை வந்துவிடும். சுத்தமாகக் குளித்து முடித்துவிட்டு, தூய்மையான பூப்போட்ட லுங்கி அணிந்துகொண்டு, வெள்ளை முழுக்கை சட்டையை அணிந்து பட்டன்களைத் திறந்துவிட்டபடி கைகளைச் சுருட்டிவிட்டுக்கொண்டு, ஒரு கையில் சிகரெட்டும், இன்னொரு கையில் மதுகோப்பையையும் வைத்துக் கொண்டு, சோஃபாவில் சம்மணமிட்டு அமர்ந்தபடி நிதானமாக அனுபவித்து மது அருந்துவாராம். பின்னாளில் போதைக்கு அடிமையாகிவிட்ட நடிகை சாவித்திரியும், எழுத்தாளர் ஜெயகாந்தனும் இவருக்கு ‘தண்ணி பார்ட்னர்’களாக இருந்திருக்கிறார்கள். (சந்திரபாபுவுடனான தனது நட்பு பற்றி ஓர் இலக்கியவாதியின் சினிமா அனுபவங்களில் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார்). எல்லாரையும் மிஸ்டர் போட்டு அழைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது சந்திரபாபுவுக்கு. மிஸ்டர் எம்.ஜி.ஆர், மிஸ்டர் சிவாஜி என்றுதான் கூப்பிடுவாராம். மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசுவதோ, செய்துவிடுவதோ சந்திரபாபுவின் பண்புகளில் ஒன்று. ஒருமுறை அவரது கலைநிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்நாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் ரசிக்கும் திறமையைக் கண்டு, துள்ளிக் குதித்து அவர் மடியிலமர்ந்து அவர் தாடையைப் பிடித்துக் கொஞ்சி ‘ரசிகன்டா நீ!’ என்று பாராட்டினாராம்.

user_15246

★ 5/5
What a sad story, remembering thr thirukural Iru veru ulagthu thiru veru theliyaladu veru, just like day and night are separated in this worldz, wealthy ppl are deprived of knowledge and knowledgable ppl are doesnt poses wealth and even sadder in the cursed melancholy life :(

user_15245

★ 4/5
10 Sep 2016 - 11 Sep 2016 சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலை பாக்க சிரிப்பு வருது மேடை ஏறி பேசும் போது ஆறு போல பேச்சு கீழ இறங்கி போகும் போது சொன்னதெல்லாம் போச்சு நல்ல கணக்க மாத்தி கள்ள கணக்க ஏத்து நல்ல நேரம் பாத்து நண்பனையே மாத்து The rise and fall of a inarguable LEGEND!

user_15244

★ 4/5
ஒரு ஈடு இணையற்ற கலைஞனின் வாழ்க்கை பயணம் - The great artist Chandrababu - who is multi-talented in all forms of art - be it music, dance, acting, his articulation in English.. Coming from a fisherman background, who underwent so many struggles to become an great actor of his times. The support he could not get from.his parents, he came out of his family, life was full of unexplainable hurt, betrayals and misunderstandings. His marital life ended even before it started ( that was hot topic those days). His drinking habits messed him up from that episode of marriage which did not end until his death. His straightforwardness was his biggest enemy. At one time,.there were so many producers who circled him for his talent but during his later days no one even bothered to know about his whereabouts except for a few.. His clash with " Makkal thilakam MGR" become a controversy( mgr did not attend his funeral,.not even a condolence speech).. He died at an early age of 46 because of his excessive drinking causing jaundice.. Such a heartfelt listening and experience to know about the life of great artist Chandrababu.. His songs with so much philosophy and meaning are such a motivation.. Stories of great artists have a huge part of sadness, this was not an exception, but he passed on so much of happiness to people lives through his songs and acting..

user_15243

★ 4/5
ஒரு செலிபிரிட்டி என்றாலே எப்போதும் ஒரு பொய் பிம்பத்துக்குள் தன்னை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத சட்டம். அப்போதைய எம்.ஜி.ஆரில் துவங்கி இப்போது சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை அனைவருக்கும் இது பொருந்தும். அவர்கள் நிஜ முகம் எதுவாக இருந்தாலும் சமூகத்தின் முன்பு அவர்கள் ஒரு முகத்தை உருவாக்கி வைத்திருப்பர். ஆனால் சமூகம் பற்றிய கவலை இல்லாமல் தன் மனம் விரும்பியப்படி வாழ்ந்த, தனக்கென ஒரு போலி முகத்தை உருவாக்காத பிரபலங்கள் சிலர் உள்ளனர். அந்த சிலரில் சந்திரபாபுவும் ஒருவர். மனசில பட்டத சொல்லிடுவேன் சார், மூஞ்சுக்கு நேரா பேசிடுவேன், எனக்கு உள்ள ஒன்னு வச்சிக்கிட்டு வெளிய ஒன்னு பேச தெரியாது இந்த மாதிரியான வசனங்களை பலரும் பெருமையுடன் கூறுவதை கேட்டிருப்போம். இந்த மாதிரியான விஷயங்களை பெருமையாக கூறிக்கொள்ளலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை நாம் கடைப்பிடித்தால் வாழ்க்கை எவ்வளவு கடினமாகிவிடும் என்பதற்கு சந்திரபாபு ஒரு உதாரணமாக இருக்கிறார். சினிமாவில் வந்த காலம் முதலே மனதில் பட்டதை அப்படியே பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் கூட அப்படியே இருந்துள்ளார். வளர்ந்து வரும் காலங்களில் எம்.ஜி.ஆர் படமே சந்திரபாபுவால்தான் ஓடுகிறது என்கிற பேச்சுக்கள் வர துவங்கியது, மேலும் சந்திரபாபுவும் ஒரு பத்திரிக்கையில் எழுதும்போது எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் எழுதுகிறார். எம்.ஜி.ஆர் மட்டுமின்றி சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனிடம் கூட இவருக்கு மன கசப்பு ஏற்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு நடிகர்களும் அவர்கள் பற்றிய ஒரு பிம்பத்தை சமூகத்தில் கட்டமைத்து வைத்திருக்கும்போது அவர்களை பற்றிய பல உண்மைகளை பொதுவெளியில் பேசி விடுகிறார் சந்திரபாபு. எம்.ஜி.ஆருடன் ஆன மன கசப்பால் எம்.ஜி.ஆர் கொடுக்கும் ஒரு அடி சந்திரபாபு வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. இவற்றையெல்லாம் விரிவாக புத்தகம் பேசுகிறது. எழுத்தாளர் முகில் நமக்கு சோர்வு ஏற்படுத்தாத வகையில் மிகவும் விறுவிறுப்பாக புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக வாழ்க்கை வரலாறு, கட்டுரை தொகுப்புகள் என்றாலே பேசஞ்சர் ட்ரெயின் போல மெதுவாகதான் போகும், ஆனால் மருதன், பா.ராகவன், முகில் போன்ற சில எழுத்தாளர்கள் அதை கமர்ஷியல் படம் போல வேகமெடுத்து கொண்டு போவதால் இந்த புத்தகங்களை படிப்பதில் பெரிதாக சிரமம் இருப்பதில்லை. சந்திரபாபுவையும், சினிமா அரசியலையும் புரிந்துக்கொள்ள உங்களுக்கு ஒரு புத்தகம் வேண்டும் எனில் அது இந்த புத்தகமாகதான் இருக்கும். முடிவில் கதை உணர்த்தும் நீதி என்னவெனில் இந்த சமூகத்தில் நாம் நமது இஷ்டத்துக்கு மகிழ்வான ஒரு வாழ்க்கையை வாழ நினைத்தால் அதற்கு முதலில் இந்த சமூகத்தில் அதிக அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனிதராக நாம் இருக்க கூடாது. தனக்கென தனி பாணியை கொண்டு, இந்திய சினிமாவிலேயே தனி இடம் பிடித்த ஒரு மகா கலைஞனின் துயரமான வாழ்க்கை கதைதான் இந்த நூல்.

user_15242

★ 4/5
ஒருவரின் வாழ்க்கையை பற்றியது என்பதால் எதை வைத்து rating கொடுப்பது என்று தெரியவில்லை. இதில் சந்திரபாபு அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் 75% , அவரை பற்றி செய்தித்தாள், பேட்டிகள் 25% இருக்கிறது. திரையில் வீரர்களாக இருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் வாழ்விலும் தைரியமாக பேசிய இவர் பரவாயில்லை. ஆனால் மற்ற செயல்கள் இவருக்கு கொஞ்சம் தலைக்கனம் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. ஒரு நடிகராக MGR இவருக்கு ஏற்படுத்திய இழப்பு, நட்சத்திர கிரிக்கெட் அந்த காலத்தில் இருந்திருக்கிறது என்று தகவல்கள் எனக்கு புதிது. - இந்தி பேசும் நீங்கள் தமிழ் நாட்டுக்கு வந்தால் உங்களைத் தமிழில் பாடச் சொன்னால் எப்படி இருக்கும்? ARR யை மடையர்கள் இந்தி பாடல்கள் பாடச் சொல்லி வெளியேறிய நிகழ்வு தான் ஞாபகம் வந்தது. - சார்பட்டா பரம்பரை (ரௌடிகள்?) பற்றி தவறான புரிந்தால் இருந்திருக்கிறது?
Shelves
Mugil book Audiobook Biography

More like this


இட்லியாக இருங்கள்

திறமை இருந்தும் வெற்றிக் கனியை எட்ட முடியாமல் தவிப்பவர்களுக்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நேர்காணல்களில் சிறப்பாகச் செயல்பட்டும் வேலை கிடைக்காதது ஏன், உழைப்பிற்கேற்ற…

4.21/5 · 100+ ratings
Check Price

நைலான் கயிறு [Nylon Kayiru]

நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோ…

4.21/5 · 100+ ratings
Check Price

உடையார்

Udaiyar (History of Cholas - Part 4)

4.21/5 · 100+ ratings
Check Price

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

4.21/5 · 100+ ratings
Check Price

Karukku

Author: Bama Translator: Lakshmi Holmström

In 1992 when a Dalit woman left the convent and wrote her autobiography, the Tamil publishing industry found her language unacceptable. So Bama Fa…

4.21/5 · 100+ ratings
Check Price

கடல் புறா 2 [Kadal Pura]

இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்ப…

4.21/5 · 100+ ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

4.21/5 · 100+ ratings
Check Price

அறம்-2

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.21/5 · 100+ ratings
Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.21/5 · 100+ ratings
Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.21/5 · 100+ ratings
Check Price

மூன்றாம் உலகப் போர்

சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…

4.21/5 · 100+ ratings
Check Price

சிவகாமியின் சபதம், பாகம் 3: பிக்ஷுவின் காதல்

Author: Kalki

The Moving Finger writes; and, having writ, Moves on: nor all thy Piety nor Wit Shall lure it back to cancel half a Line, Nor all thy Tears wash o…

4.21/5 · 100+ ratings
Check Price