எழுதும் கலை [Ezhudhum Kalai]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எழுதும் கலை [Ezhudhum Kalai]

None

4.47/5 · 38 ratings

நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது. இலக்கிய ஆக்கங்களில் ஈடுபடுபவர்களுக்கு இலக்கியத்தில் எது இதுவரை சாதிக்கப்பட்டிருக்கிறது என இது காட்டுகிறது. அதை அடைவதற்கான சவாலை அறிமுகம் செய்கிறது என்று சொல்லலாம். எழுத ஆரம்பிக்கிறவர்களுக்கு மட்டுமல்ல…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_13889

★ 5/5
எழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு கதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய வடிவங்களின் அடிப்படைகளை அறிமுகம் செய்துவைக்கிறது இந்நூல். ஒரு வாசகனாகவும் இதன் மூலம் அடிப்படை இலக்கணங்களை தெரிந்துக்கொண்டு ஒரு இலக்கியப்பிரதியிடமிருந்து எவற்றை எதிர்ப்பார்க்கலாம் என தெரிந்துக்கொள்ளமுடியும்.தமிழ்ச்சூழலில் எந்த கலைவடிவத்தை எடுத்து உடைத்து அதற்கான தர்கங்களை வரையறை செய்தாலும், ”அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. கலை எதற்குள்ளும் அடங்காது” என்று சொல்கிறவர்கள் ஏராளம். இக்கண்ணோட்டம் அக்கலை வடிவத்தை முன்னோக்கி செல்ல அனுமதிக்காது. மேற்கத்திய நாடுகளில் இசை, திரைக்கதை, புகைப்படம் என அனைத்து கலைவடிவத்திற்கும் வரையறைகள் உள்ளன. புதிதாக அத்துறைக்கு வர ஆசைப்படும் ஆர்வலர்களுக்கு இவ்வரையறைகள் பெரும் உதவியாக இருக்கும்.சிட் ஃபீல்ட், ப்ளேக் ஸ்னைடர், ஜான் ட்ரூபி போன்ற அறிஞர்கள் திரைக்கதையின் கோட்பாட்டை உடைத்து வரையறை செய்தவற்றை படித்ததால் மட்டுமே திரைக்கதையின் மேல் ஆர்வமும் கவனமும் குவிந்து இன்று அது என் தொழிலாக மாறியுள்ளது.அதுபோல, இலக்கியத்தின் அடிப்படைகளை ஒருவர் சொல்லித்தராவிட்டால் அக்கலை வடிவத்தை அணுகும் முறை தெரியாமலேயே போய்விடும். இக்காரணத்தால் இன்று பலர் சினிமாவின் மூலம் மட்டுமே கதைகளை கேட்டு பழகி, ஒரு நாவலையோ சிறுகதையையோ படித்தால் - போர் அடிக்கிறது - என்று சொல்லத்தொடங்கிவிட்டனர். அவர்களை பொருத்தவரை திரைக்கதை வடிவத்தில் ஒரு கதை பொருந்தாவிட்டால், பக்கத்திற்கு பக்கம் திருப்பங்களை கொண்டிராவிட்டால் அக்கதை சலிப்பு தட்டிவிடும்.ஒரு காலத்தில் எனக்கும் இச்சிக்கல் இருந்தது. அதன் பின்னர், ‘நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்’ என்கிற ஜெயமோகனின் நூலினை பாதி வாசித்தப்பின்பு ஒரு தெளிவு கிடைத்தது. முன்னெப்போதையும் விட வாசித்தலின் மேல் ஆர்வம் பெருக்கெடுத்தது. பெரும் நாவல்களை வாசிக்க தூண்டியது.இந்நூல், ‘நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்’ நூலின் ஒரு குட்டி என்று சொல்லலாம். இந்நூலிலிருந்து கற்றுக்கொண்டவை:1. சிறுகதை சமையல் குறிப்புசிறுகதை என்பது சிறிய கதை என்று அர்த்தமாகாது. வாசகனை உள்ளூர இழுத்து பங்கெடுக்க செய்து, இறுதியில் எதிர்பாரா திருப்பத்துடன் ஒரு கதையை முடிப்பதே சிறுகதை. அத்திருப்பம் வாசகன் மனதில் இன்னொரு தொடக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.சிறுகதையின் மூலம் நீதி சொல்லக்கூடாது. அந்நீதி வாசகனுக்கு உணர்த்தப்பட வேண்டும். சிறுகதையின் முக்கியமான பங்கு வாசக பங்களிப்பு. அதனால் விவரிப்புகளும் மனவோட்டங்களும் சீராக வாசகனை அவ்விடத்திற்கே அழைத்துச்செல்லும்படி அமையவேண்டும். இது சிறுகதை எழுத்தையும் தாண்டி ஒரு கதையை நரேட் செய்யும்போதும் பயன்படுத்த வேண்டிய ஒரு யுக்தி.கதை சொல்லல் என்பது, ‘தகவல்களை ஒப்பிப்பது அல்ல. அனுபவத்தை கேட்பவருக்கு அளிப்பது’2. நாவல் ஒரு சமையல் குறிப்புஒரு முழுவாழ்க்கை சித்திரத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கவேண்டும். மையக்கதாபாத்திரம் என்று ஒன்று தேவையில்லை. அப்படி ஒரு பாத்திரம் இருந்தாலும், பிற கதாபாத்திரங்கள் முக்கியம். அவையனைத்தும் வெவ்வேறு தர்க்கங்களும் செயல்பட வேண்டும். அவர்களின் தத்துவங்களும் செயல்களும் ஒன்றோடொன்று முரண்படும்போது நாடகீய தருணங்கள் அமையும்.எழுதுவதே கலை. திரைக்கதையைப்போல அடுத்தடுத்த சம்வங்கள் அனைத்தையும் திட்டம்போட்டு நாவல் எழுதுவது உகந்ததல்ல. ஒரு தொடக்கம். ஒரு மையக்கரு. Designing Principle. ஆகியவற்றை மனதில் வைத்து எழுதிப்பார்த்து தான் நாவலை கண்டடைய வேண்டும். இதனால் ஒரு நாவலை முடிக்க பலவருடங்கள் ஆகலாம். என்பதுகளுக்கு முன்னர் வரை நாவல்கள் ஒரே நீரோட்டத்தில் உருண்டு திரண்டு பெருத்துக்கிடக்கும். டால்ஸ்டாயின் நாவல்கள் ஒரு உதாரணம். அதன் பின்னர் வந்த நவீன நாவல்கள் இன்னும் செறிவுடன் எழுதப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டால் அதன் அனைத்து பக்கங்களும் அதில் பதிவுசெய்யப்பட வேண்டியது அவசியம். எழுத்தாளனின் ஆழ்மன கேள்விகளுக்கு விடைதேடலே இந்நாவல்கள்.உதாரணம். ஒரு நாவல் 18ம் நூற்றாண்டு காலணிய காலம் என்கிற கதைக்களத்தை எடுத்துக்கொண்டால்: அச்சூழலின் மன்னர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், தாசிகள், படித்தவர்கள், ஏழைகள் - என அனைத்து தரப்பினரையும் உட்கொண்டு அந்நாவல் எழுதப்பட வேண்டும். பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் ஒரு சிறந்த உதாரணம்.இது போன்ற நாவல்கள் நமக்கு வாழ்க்கையை பற்றிய பருந்துப்பார்வையை அளிக்கிறது. புதிய புரிதல்களை உருவாக்குகிறது. நாவல் நமக்கு பாடம் புகுட்டாது. அந்நாவலை வாசித்து பெற்ற அனுபவங்களை சீராய்ந்து நாம் நமக்கான பாடங்களை உருவாக்கிக்கொள்கிறோம்.3. கட்டுரை ஒரு சமையல் குறிப்புகட்டுரை, ஆராய்ச்சிக்கட்டுரை என இரு வெவ்வேறு வடிவங்கள் உள்ளன. குழப்பிக்கொள்ள கூடாது. ஒரு கட்டுரை ஏற்கனவே வகுக்கப்பட்ட விழுமியங்களை மீண்டும் அடிக்கோடிட்டு சொல்லும். ஆராய்ச்சிக்கட்டுரை இதுவரை வரையறுக்கப்பட்ட கருத்துகளின் மேல்நின்று புதிய கருத்தை நிறுவும்.கட்டுரை ஒரே ஒரு சீர்கருத்தை மையமாக வைத்து எழுதப்பட வேண்டும். அதற்கு சம்மந்தம் இல்லாத எதையும் உள்ளே வைத்திருக்க கூடாது. ஒரு கருத்துக்கு ஒரு உதாரணம் போதுமானது. பிற உதாரணங்களை வாசகர்கள் யூகித்திக்கொள்வார்கள். இதன் பின்னர் எழுதுதல் பற்றிய சந்தேகங்களை வாசகர் கடிதங்கள் மூலம் ஜெயமோகன் பதிலளிக்கிறார். இதுவரை எழுததல் பற்றிய புத்தங்களில் ஜெயமோகனை தவிர சீராக எழுதியவர் எவருமில்லையென்றே தோன்றுகிறது. சிறந்த புத்தகம்.
Shelves
ஜெயமோகன் book Jeyamohan

More like this


இன்றைய காந்தி

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பா…

4.47/5 · 38 ratings
Check Price

யானை டாக்டர்

பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…

4.47/5 · 38 ratings
Check Price

வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இ…

4.47/5 · 38 ratings
Check Price

பேய் கதைகளும் தேவதை கதைகளும் [Pei Kathaigalum Devathai Kathaigalum]

உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது ப…

4.47/5 · 38 ratings
Check Price

குறுப்படைப்பு: யட்சி - சிறுகதை [Yatchi]

அருகே ஒரு பெருந்தழல் சட்டென்று எண்ணெய் பட்டு எழுந்தாடி அணைந்ததுபோல அம்மா முகத்தில் ஓர் உக்கிரம் படிந்து மறைந்தது. நான் அவளை அப்போது மிக அஞ்சினேன். அவள்மீது ஒண்டிக்-கொண்டு …

4.47/5 · 38 ratings
Check Price

ரப்பர்

ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவ…

4.47/5 · 38 ratings
Check Price

சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து

கிறித்தவ மதத்தின் ஆன்மீகத்தையும் அரசியலையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக வி…

4.47/5 · 38 ratings
Check Price

வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்

வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையம…

4.47/5 · 38 ratings
Check Price

சங்கச் சித்திரங்கள் [Sanga Chithirangal]

சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி ய…

4.47/5 · 38 ratings
Check Price

வெண்கடல்

உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கு…

4.47/5 · 38 ratings
Check Price

உலோகம்

உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுட…

4.47/5 · 38 ratings
Check Price

விசும்பு

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

4.47/5 · 38 ratings
Check Price