தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்
Deivangal, Peigal, Devargal
Select a cover image
Searching for images...
Saving cover image...
தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்
Deivangal, Peigal, Devargal
- வடிவம்
- Kindle Edition
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DTX47SNP
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. நாம் அனைவருக்கும் குலதெய்வங்கள் உண்டு. கிராமியதெய்வங்கள், காவல்தேவதைகள் என நாம் நாட்டார்தெய்வங்களால் சூழப்பட்டு வாழ்கி…
user_12655
★ 4/5இந்நூல் நம் நாட்டார் மரபின் கதைகள் வழியாக நம் மரபை ஆழமாக அறிமுகப்படுத்துகிறது. இந்து மதம் மூன்று அடுக்கு அமைப்பு கொண்டது — அடித்தளத்தில் நாட்டார் தெய்வங்கள், அதன் மேல் சிவன்-விஷ்ணு போன்ற பெரும் தெய்வங்கள், மூன்றாம் தளம் பிரம்மம் என்னும் தத்துவ உருவகம். இவை ஒன்றோடு ஒன்று ஆழப் பிணைந்துள்ளன என்பதை இக்கட்டுரைகள் காட்டுகின்றன.
கட்டுரைகள் பெரும்பாலும் தென்குமரி நிலம் சார்ந்த தொன்மங்களிலிருந்து தொடங்கி, குறியீட்டு அர்த்தம், அழகியல், அறம், தெய்வம் உருவான ஆழ்மனநிலை என்று பல திசைகளில் பயணிக்கின்றன. செண்பக யட்சி போன்ற பெண் தெய்வங்கள் உருவாகும் விதம் — அநீதி இழைக்கப்பட்டு இறந்தவர்கள் சமூகத்தின் குற்றவுணர்வால் தெய்வங்களாக உருவகப்படுத்தப்படுவது — மிகக் கவனிக்கத்தக்கது.
முதல் கட்டுரையில் வரும் வாசுகியின் கதை, பேச்சிப்பாறை அணை கட்டும்போது இறந்தவர்களை நினைவுகூரும் இடம், மார்த்தாண்ட வர்மாவும் உம்மிணி குட்டியும் கதை, முத்துபட்டன் காதலுக்காக அனைத்தையும் துறக்கும் இடம் — இவை அனைத்தும் கவித்துவ அழகு கொண்டவை. நாட்டார் கதைகளிலிருந்து தத்துவம் நோக்கிய தாவல், குறிப்பாக ஜேஷ்டையின் கதையிலிருந்து யோகத்தின் ஆழங்களுக்குள் செல்வது இந்நூலின் தனிச்சிறப்பு.
user_12654
★ 5/5ஆங்கில ஆண்டின் தொடக்க நாளே மிகச் சிறப்பாக அமைந்தது — புத்தாண்டின் முதல் நாளிலேயே இப்புத்தகத்தை முழுதுமாய் வாசித்து முடித்தேன்.
நாட்டார் தெய்வங்கள் உருவான கருத்தாக்கங்களை ஜெயமோகன் தன் பாணியில் அருமையாக முன்வைத்திருக்கிறார். நாட்டார் தெய்வங்கள் என்றாலே முன்னோர்கள் என்ற கோட்பாட்டில் இருந்த எனக்கு, சிறு தெய்வத் தோன்றல்களின் ஒவ்வொரு கதையும் பெரும் பிரமிப்பை அளித்தது. தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான குமரியின் சிறு தெய்வங்கள் முழுதுமாய் இக்கதைகளில் நிறைந்திருக்கின்றன.
கேரளாவின் பாலக்காட்டில் பிறந்த எனக்கு, இப்புத்தகம் என் பிறந்த கிராமத்தின் நாட்டார் தெய்வங்களை — முனி, கருங்குட்டி, பகவதி, சாஸ்தா, அம்மன்கள், மணிநாகம் — கண்முன்னே கொண்டுவந்தது. குலசாமிகளும் காவல் தெய்வங்களும் நமது வேர்கள்; இவற்றிலிருந்தே நமது பண்பாடுகளும் கோட்பாடுகளும் கிளைபரப்பிக் கொண்டிருக்கின்றன. ஜெயமோகன் வழியாக நாட்டார் தெய்வங்களின் கதைகள் பெரும் சுவாரஸ்யப் பயணமாக இருக்கும்.
user_12653
★ 4/5பெரும்பாலும் நாஞ்சில் நாட்டு நாட்டார் தெய்வங்கள் பற்றிய கதைக் கட்டுரைகள். ஜெயமோகனின் ஆங்காங்கே வரும் விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கையில், நாட்டார் தெய்வங்களின் மரபியலுக்காகவும் கதைகளுக்காகவும் நிச்சயம் வாசிக்கலாம்.
user_12652
★ 4/5தாத்தா பாட்டியுடன் வளர்ந்ததால் நாட்டுப்புறக் கதைகளும் தொன்மங்களும் எனக்குப் பரிச்சயமானவை. கோயில்களுக்குச் சென்றதும், புராணங்களைப் படித்ததும் இந்த ஆர்வத்தை வளர்த்தன. அந்த ஆர்வத்துடனேயே ஜெயமோகனின் இத்தொகுப்பை வாசிக்கத் தொடங்கினேன்.
தமிழ்நாட்டின் தென்பகுதி, குறிப்பாக கேரள எல்லையோரப் பகுதிகளின் நாட்டார் தெய்வங்கள், தேவதைகள், அமானுஷ்ய சக்திகள் பற்றிய கதைகளை ஜெயமோகன் தன் ஆராய்ச்சியையும் சிறுவயது நினைவுகளையும் கலந்து அழகாக எழுதியிருக்கிறார்.
ஆசிரியரின் சில கருத்துக்களுடன் கருத்தியல் முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் இது ஒரு சுவாரஸ்யமான தொன்மக் கதைகளின் தொகுப்பு. நிகழ்வுகளை மீட்டெடுக்கும் முயற்சியும், அவற்றை நியாயப்படுத்தும் அணுகுமுறையும் பாராட்டத்தக்கவை.
user_12651
★ 5/5ஜெயமோகனின் அபாரமான படைப்புகளில் இந்த புத்தகத்தையும் சொல்ல வேண்டும். கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்டத்தைச் சார்ந்த நாட்டார் தெய்வங்களின் கதைகளின் தொகுப்பே இது.
தெய்வங்களில் வலிமையானவை, வலிமையற்றவை, தேவதைகள், பேய்கள் என்று பல பரிமாணங்கள் கொண்ட கதைகள் ஒவ்வொன்றும் அற்புதம். தெய்வங்களுக்கும் இந்தியாவின் தொன்ம மரபுகளுக்கும் என்ன உறவு, அவை எப்படி உருவாயின, அவற்றின் உணர்வுநிலைகள் என்ன என்று ஆழமாக அலசுகிறது.
Shelves
More like this
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…
காடு
அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…
ஏழாம் உலகம்
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…
விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…
சோற்றுக்கணக்கு
அறுபதுகளின் திருவனந்தபுரம். சாலை பஜாரில் கெத்தேல் சாஹிப் என்ற மனிதர் ஒரு சாப்பாட்டுக் கடை நடத்துகிறார். அங்கே கோழிக்குழம்பும் மீன்கறியும் நிறைந்த உணவு பரிமாறப்படும், ஆனா…
இரவு
இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒர…
வெள்ளையானை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…
முதற்கனல்
மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…
ரப்பர்
ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவ…
உலோகம்
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுட…
வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்
மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம்.…