Quotes from அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறான் என்று பொருள். எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்துவிட்டான் என்று பொருள்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
நாத்திகவாதம் என்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பதையும், உள் மனத்தின் உண்மையான உணர்ச்சி அல்ல என்பதையும் உணர்ந்தேன்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
நான் எப்படி ஆத்திகனானேன்? கடவுளையும், புராணங்களையும் கேலி செய்வதற்காகக் கந்தபுராணம், பெரியபுராணம், கம்பனின் ராமகாதை, திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, அதை உள்ளிட்ட நாலாயிர திவ்யப் பிரபந்தம், வில்லிபாரதம் அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன். அறிஞர் அண்ணா அவர்கள், கம்பனை விமர்சித்து, ‘கம்பரசம்’ எழுதியதற்குப் பின் அதன் எதிரொலியாகவே எனக்கு இந்த ஆசை தோன்றிற்று.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
நான் நாத்திகனாக இருந்தது, இரண்டு மூன்று ஆண்டுகளே! அதுவும், நாத்திகத்திற்கு ஒரு போலித்தனமான மரியாதை கிடைக்கத் தொடங்கிய இடைக்காலத்திலேயே
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
நம் வாழ்க்கையில் நடைபெறுகிற ஒவ்வொரு நிகழ்ச்சியும், இறைவனுடைய ஏட்டினிலே உடனுக்குடன் பதியப்படுகிறது.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
பகையில் நிதானம் வந்தால், நட்பு சந்நிதானமாகி விடும். அந்தச் சந்நிதானத்தில் பகைவன் பக்தனாவான்; நீ தெய்வமாவாய்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க முடியாத வயது இளம் வயது. ஆனால், சிந்தித்தே தீரவேண்டிய வயதும் அதுதான்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும் பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமற் போய்விடுகின்றன. அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான். ஆசையை மூன்றுவிதமாகப் பிரிக்கிறது இந்து மதம். மண்ணாசை! பொன்னாசை! பெண்ணாசை! மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது. பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது. பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது. இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான், பற்றற்ற வாழ்க்கையை இந்துமதம் போதித்தது.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'