Quotes from அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10
இவ்வளவுதான் வாழ்க்கை என்று, ஒரு பட்டியலைப் போட்டு யாரும் முடித்துவிட முடியாது. யார் எவ்வளவு பெரிய பட்டியல் போட்டாலும் அவர்கள் விட்டுவிட்டதை இன்னொருவர் சுட்டிக்காட்ட முடியும்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
மனத்தின் ஊசலாட்டத்தைப்பற்றி அவரும் கவலை கொள்கிறார். பயப்படக்கூடிய விஷயங்களிலே, சில சமயங்களில் இந்த மனம் துணிந்து நிற்கிறது. துணியவேண்டிய நேரத்தில் பயந்து ஒடுங்குகிறது. காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது. நடந்துபோன காலங்களுக்காக அழுகிறது. நடக்கப்போகும் எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறது. அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கிறது. அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும்போது சக்தியற்றுப் போய்விடுகிறது. பசுமையைக் கண்டு மயங்குகிறது. வறட்சியைக் கண்டு குமுறுகிறது. உறவினருக்காகக் கலங்குகிறது. ஒரு கட்டத்தில் மரத்துப்போய் விடுகிறது. ஆசைகளை வளர்த்துக் கொள்கிறது. ஆசாபாசங்களில் அலைமோதுகிறது. விரக்தியடைந்த நிலையில், தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொள்ளும் வலிமையைத் தன் கைகளுக்குக் கொடுத்துவிடுகிறது. கொலை, திருட்டு, பொய், இரக்கம், கருணை, பாசம் எல்லாவற்றுக்கும் மனமே காரணம். மனத்தின் இயக்கமே மனித இயக்கம். எதிலும் துணிந்து நிற்கக்கூடிய சக்தி எப்போது இந்த மனத்துக்கு வரும்? ‘எல்லாம் மாயையே’ என்ற இந்து தத்துவத்தை நம்பினால் வரும்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
கடலிலே புகுந்து நீரை எடுத்து, ஊழி முதல்வன் உருவம் போல் உடம்பு கருத்து மேகமாகி, அந்தப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, சங்குபோல் முழங்கி, வில்லிலிருந்து பொழிந்த அம்பு மழைபோல் மழை பெய்யக் கோருகிறார் நாச்சியார்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
உண்டு, உண்டு’ என்று ஓடி, பிறகு ‘இல்லை, இல்லை’ என்று ஏமாந்து, ‘எங்கே எங்கே’ என்று தேடி, ‘இதோ, இங்கே இங்கே’ என்று கண் மயங்கி, வெட்ட வெளிப் பொட்டலிலே விட்டெறிந்த பந்தினைப்போல், ‘ஆடி ஓடி அமர்ந்தேன் பராபரமே!’ என்று அமர்ந்து விடுகிறார்கள்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
மாறும்வரை பொறுத்திரு’ என்பதே இந்து மதத்தின் உபதேசம். மனப்பக்குவம் இல்லாதவன், நினைத்தபடி எல்லாம் நடக்கிறான். வழியில் கிடைக்கும் அனுபவங்கள், அவனுக்கு அந்தப் பக்குவத்தை உண்டாக்கிவிடுகின்றன. ‘வெறுப்பை வளர்ப்பவனும் என்றோ ஒரு நாள் பக்குவம் பெறுவான்; அதுவரை அவனை நாம் சகிப்போம்’ என்பதே இந்து மதத்தின் சாரம்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
தண்டனையைக் கடவுளின் பொறுப்பில் விட்டுவிடுவதால், நடைமுறைகளைத் தாங்கிக் கொள்கிற சக்தி இயற்கையாகவே வந்துவிடுகிறது.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
உடலில் பட்ட காயம் மறைந்துவிடும்; உள்ளத்தில் பட்டால் மறையாது. ஆகவே, பிறரை நீ புண்படுத்தாதே” என்கிறது இந்து மதம்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
ஒருவன் வந்த வழியைப் பார்த்துத்தான், கந்தன் வரப்போகும் வழியைத் திறந்து விடுகிறான்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
ஆனால், நீ செய்யும் நன்மை தீமைகள், அதே அளவில் அதே நிலையில், உன் ஆயுட்காலத்திலேயே உன்னிடம் திரும்பிவிடுகின்றன.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
துன்பத்தைச் சோதனை என்று ஏற்றுக்கொண்டுவிட்டால், உனக்கேன் வேதனை வரப்போகிறது?
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'