Quotes from அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

குடும்பத்தைக் கோவில் ஆக்கிக்கொள்ள முடியாதவர்கள் துயரங்களைக் கொட்டி அழுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட இடங்களே, கோயில்கள். மனத்தைக் குளிப்பாட்டி மகேஸ்வரனைக் காணச் சக்தியற்ற உள்ளங்கள், உடலைக் குளிப்பாட்டி உமாபதியைக் காண ஏற்படுத்தப்பட்டவையே பொதுக் குளங்கள். அடக்க ஒடுக்கத்தோடு ஆயிரக்கணக்கானவர்களைச் சந்திப்பதால், மனோதத்துவப்படி அந்த அடக்கம் பிறர்க்கும் வரும் என்பதைக் காட்டுவதற்காகவே, தேர்த்திருவிழாக்கள். தனிமையில் ஒருமுகப்படுத்த முடியாத மனது, சந்நிதானத்தில் ஒருமுகப்படுத்தப்படுகிறது. சிந்தனைக் குழப்பங்களில் ஆழ்ந்துவிடாமலிருக்கத் தேங்காய் உடைப்பதிலும், தீபாராதனை காட்டுவதிலும் சிந்தனை திருப்பி விடப்படுகிறது. குறைந்த பட்சம், மனிதனை மனிதனாக வைப்பதற்கே இந்துமதம் பெருமுயற்சி எடுத்தது.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
பகையிலே தாறுமாறாக வந்து விழும் வார்த்தைகள், பிறகு நட்பு வரும்போது குறுக்குச் சுவராகித் தடைக்கல்லாகி விடும்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
புலன்களை அடக்கி, ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால், பகை உணர்ச்சி அழியும்; பகைவன் பணிவான்; உள்ளம் ஒரு முகப்படும்; உடல்நிலை ஒரே சீராக இருக்கும்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்’ என்றான் வள்ளுவன்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
பிற உயிர்களின் அழுகை ஒலி, எப்போது உன் ஆன்மாவுக்குள் இருந்து நீ அழுவது போலவே கேட்கிறதோ, அப்போது தான் நீ பக்குவம் பெற்ற ஞானி ஆகிவிட்டாய் என்று அர்த்தம்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
நாற்பது வரையிலே ஒலி எழும்பும் வீணைகள், நாற்பதுக்கு மேலேதான் எதிரொலியைக் கேட்கத் தொடங்குகின்றன
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
ஒரு கட்டம் வரையில் இனிப்பை ருசி பார்த்த பிறகு அதுவே கசப்பாகி விடுகிறது. கசப்பை உணரத் தொடங்கும்போது, வாழ்க்கை வெறுப்பாகி விடுகிறது. வெறுப்பே வளர்ந்து வளர்ந்து, இதயம் நெருப்பாகி விடுகிறது. இந்த வளர்ச்சிக்கு ஆசைதான் காரணமாகி விடுகிறது.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
துன்பங்களிலெல்லாம் குறைந்தபட்சத் துன்பம் நமக்கு வந்ததுதான்’ என்று கருதினால், எந்தத் துன்பமும் துன்பமாக இருக்காது.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
ஜன்னலின் அளவைப் பொறுத்தே காற்று வருகிறது. ஜன்னல்கள் இல்லாத வீடு சுகாதாரத்தைக் கெடுக்கிறது. அதுபோல், சூழ்நிலைகளைப் பொறுத்துத் துன்பம் வருகிறது; அந்தச் சூழ்நிலைகளை நீக்கிக்கொள்ளும் பொறுப்பு மனிதனுக்குத்தான் இருக்கிறது.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'