Quotes from அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10

வாழ்க்கையில் நீ எந்தச் சாலையில் போனாலும் சரி, எதிர்ப்படும் மகிழ்ச்சியிலோ, துன்பத்திலோ நீ இறைவனின் எதிரொலியைக் கேட்கிறாய். அந்த எதிரொலியில் இந்து மதத்தின் சாரத்தைக் காண்கிறாய்!
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
நீ எதை விரும்புகிறாயோ அதை ஒரு கட்டத்தில் வெறுக்கவும், எதை வெறுக்கிறாயோ அதை ஒரு கட்டத்தில் விரும்பவும் வைப்பதே இறைவனுடைய லீலை!” என்றேன் நான். “ஒன்றை விரும்பும் போதே, ஒரு நாள் வெறுக்க வேண்டி இருக்கும் என்று எண்ணி கொண்டு விட்டால், விருப்பு வெறுப்புகள்
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
பிற உயிர்களின் அழுகை ஒலி, எப்போது உன் ஆன்மாவுக்குள் இருந்து நீ அழுவது போலவே கேட்கிறதோ, அப்போது தான் நீ பக்குவம் பெற்ற ஞானி ஆகிவிட்டாய் என்று அர்த்தம்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
ஆண்மையினைச் சோதித்த அனுபவமே ஞானம்
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டுவிட்டதென்று கருதுங்கள். வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள்ளுங்கள். புதுப்புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்திற்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள். ‘நம்மால் ஆவது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, ‘நமக்கு வந்தது துன்பமில்லை’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
துன்பங்களிலெல்லாம் குறைந்தபட்சத் துன்பம் நமக்கு வந்ததுதான்’ என்று கருதினால், எந்தத் துன்பமும் துன்பமாக இருக்காது.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
நாற்பது வரையிலே ஒலி எழும்பும் வீணைகள், நாற்பதுக்கு மேலேதான் எதிரொலியைக் கேட்கத் தொடங்குகின்றன
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்’ என்றான் வள்ளுவன்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'
பகையிலே தாறுமாறாக வந்து விழும் வார்த்தைகள், பிறகு நட்பு வரும்போது குறுக்குச் சுவராகித் தடைக்கல்லாகி விடும்.
கண்ணதாசன் (Kannadasan) — 'அர்த்தமுள்ள இந்து மதம், பாகங்கள் 1-10'