சிறந்த தமிழ் இலக்கிய படைப்புகள்

149 books · Updated March 27, 2026

தமிழ் இலக்கிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளின் தொகுப்பு. கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் உள்ளிட்ட தலைசிறந்த எழுத்தாளர்களின் புகழ்பெற்ற நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய விரிவான பட்டியல். புதிதாகத் தமிழ் இலக்கியம் படிக்க விரும்புவோருக்கும், ஏற்கனவே படித்தவர்கள் மீண்டும் ரசிக்கவும் ஏற்ற தேர்வு.

Share:
மதினிமார்கள் கதை #121

மதினிமார்கள் கதை

கோணங்கி

கோணங்கியின் முதல் கட்டக் கதைகளில் தென்படும் சூழலின் வெறுமையும் சில பாத்திர வார்ப்புகளில் அறிய நேர்கிற தன்னிரக்கமும் மிக முக்கியமானது.தமிழ்க் கதை சொல்லல் மரபில் கோணங்கியின் கழுதையாவாரிகள்,மாயாண்டிக் கொத்தனின் ரஸமட்டம்,ஆதி விருட்சம்,கொல்லனின் ஆறு பெண்மக்கள்,அப்பாவின் குகையில் இருக்கிறேன்,சலூன் நாற்காலியில் சுழன்றபடி,நான்கு பக்கமும் மரணவாசல்,நீலநிறக் குதிரைகள் போன்ற கதைகள் ஏற்படுத்துகிற மன உணர்வுகள் தனித்துவமிக்கவை.கழுதையாவாரிகள் கதையில் ராசப்பன் …

வெயிலோடு போய்

ச. தமிழ்ச்செல்வன்

இரவுகள் உடையும்

பா. செயப்பிரகாசம்

கடவு #124

கடவு

திலீப் குமார்

குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்து வரும் ஒரு சிறந்த படைப்பாளியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு இது. 1977 முதல் 1987 வரையிலான காலகட்டத்தில் கணையாழி, காலச்சுவடு மற்றும் இந்தியா டுடே போன்ற புகழ்பெற்ற இதழ்களில் வெளியான இக்கதைகள், எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக நெருக்கமாகவும் …
பிறகு #126

பிறகு

பூமணி

சுதந்திரத்திற்குப் பிறகான தென் தமிழகத்தின் கரிசல் கிராமம் மணலூத்துக்கு, வேலை தேடி வரும் செருப்புத் தொழிலாளி அழகிரி, காவக்காரர் கந்தையாவின் அரவணைப்பில் சக்கிலியக் குடியில் வேர்விடுகிறான். இளம் வயதிலேயே மனைவி காளியை இழந்து, கைக்குழந்தை முத்துமாரியைத் தனியாக வளர்க்க முடியாமல், ஆவடையை மறுமணம் செய்கிறான். ஆவடை முத்துமாரியைச் சொந்தக் குழந்தையாகப் பொத்திப் பொத்தி வளர்க்கிறாள். முத்துமாரியின் …
நாய்கள் #127

நாய்கள்

நகுலன்

ஒரு மனிதனை நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாக கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவக்குறியீடாக அமைத்துக்கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம். நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவங்கள் இவைகள்தான் …
நித்யகன்னி #128

நித்யகன்னி

எம். வி. வெங்கட்ராம்

நித்ய கன்னி அன்றாடம் நாம் காண்கிற காதற் கதையோ, கற்புக் கதையோ, கற்பு கேட்ட கதையோ அல்ல. மனிதன் உயர்வை நோக்கி நடத்தும் இயற்கைப் போராட்டங்களைச் சில விசித்திரப் பாத்திரங்களின் மூலம் இந்நூல் சித்தரிக்கிறது. காலம் காலமாகப் பெண்மையின் எதிர்க்க முடியாத ஆட்சியை அடக்கி வைக்க ஆண் பலவித அணிவகுப்புகளை மாற்றி மாற்றி அமைத்து வருகிறான். …
இடைவெளி அதிகமில்லை #129

இடைவெளி அதிகமில்லை

ரமணிசந்திரன்

நிச்சயதார்த்தத்துக்கு கூட தலையைக் காட்டாத மாப்பிள்ளையை எப்படி மணந்துக் கொள்வது என்பதே சுமாலினியின் தலையாய பிரச்சினை.ஏன்? மோதிரத்துக்கு அளவெல்லாம் வாங்கி கொண்டு போன சம்பத்குமார் ஏன் இப்படி செய்தான் என்று அவள் குழம்பிக் கொண்டிருந்த போதே இன்னொரு பெண்ணோடு காட்சியளித்து அவன் அவளுடையக் குழப்பத்தை தீர்த்து வைத்தான். உடனே தாத்தாவிடம் சென்று விஷயத்தை சொல்லி திருமணப் …

வாசவேஸ்வரம்

கிருத்திகா

பசித்த மானிடம் #131

பசித்த மானிடம்

கரிச்சான் குஞ்சு

தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான 'பசித்த மானிடம்' காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத இந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியைக் கையாண்ட முதல் …

தலைமுறைகள்

நீல பத்மநாபன்