சிறந்த தமிழ் இலக்கிய படைப்புகள்

149 books · Updated March 27, 2026

தமிழ் இலக்கிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளின் தொகுப்பு. கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் உள்ளிட்ட தலைசிறந்த எழுத்தாளர்களின் புகழ்பெற்ற நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய விரிவான பட்டியல். புதிதாகத் தமிழ் இலக்கியம் படிக்க விரும்புவோருக்கும், ஏற்கனவே படித்தவர்கள் மீண்டும் ரசிக்கவும் ஏற்ற தேர்வு.

Share:
சமணமும் தமிழும் #109

சமணமும் தமிழும்

மயிலை சீனி வேங்கடசாமி

சமணமும் தமிழும்’ என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொண்டன. ஆனால், ஊழ் இதனை இதுகாறும் வெளிவராமல் செய்துவிட்டது!. பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1940 ஆம் ஆண்டிலேயே சமணமும் தமிழும் என்னும் இந்நூலை …
சுஜாதாவின் சிறுகதைகள் #111

சுஜாதாவின் சிறுகதைகள்

சுஜாதா

சுஜாதாவின் சிறுகதைகள் - கதைகளின் தொகுப்பு.
ஆதவன் சிறுகதைகள் முழுத் தொகுப்பு #112

ஆதவன் சிறுகதைகள் முழுத் தொகுப்பு

ஆதவன்

தமிழின் மிக முக்கியமான சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவரான ஆதவனின் அனைத்துச் சிறுகதைகளும் அடங்கிய முழுத் தொகுப்பு இது. சந்தேகமில்லாமல் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்து அவருடையது. தனி மனிதனின் பிரச்னைகளை, தேடல்களை, மனக்கொந்தளிப்புகளை, அற்ப ஆசைகளை, அவை தீராதபோது எழும் ஆதங்கத்தை, குமுறலை - ஆதவனைப்போல் நேர்த்தியாகப் பதிவு செய்தவர்கள் தமிழில் குறைவு. *** …
100 சிறந்த சிறுகதைகள் #113

100 சிறந்த சிறுகதைகள்

எஸ். ராமகிருஷ்ணன்

ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன என்பது எனது எண்ணம் இந்த நூறு சிறுகதைகள் …
சுந்தர ராமசாமி சிறுகதைகள் #114

சுந்தர ராமசாமி சிறுகதைகள்

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஒர் இனிய அணுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன. செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவு கொள்ளும் சுகத்தை அளிக்கும் போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் …
வண்ணநிலவன் கதைகள் #115

வண்ணநிலவன் கதைகள்

வண்ணநிலவன்

எளிமையின் அப்பிராணித் தோற்றத்தோடு, பற்றிப் படர்ந்து ஆழமாய் ஊடுருவி, நம்மைப் பாடாய்ப் படுத்திவிடுபவை வண்ணநிலவனின் எழுத்துக்கள். தமிழ்ச் சமூகம், அதுவரை எழுத்தின் வழியே அறிந்திராத சில பிரதேசங்களின்மீது வெளிச்சம் காட்டி, நம் பார்வைக்குத் தந்த கதைக் கலைஞன் அவர். நல்லவனும் கெட்டவனுமாய், ப்ரியமும் சிநேகிதமுமாய், வெம்மையும் வெறுமையுமாய், குரோதமும் வெறியுமாய், நவநவமாய் அவர் உலவவிட்ட பாத்திரங்களின் …
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் #117

தி. ஜானகிராமன் குறுநாவல்கள்

தி. ஜானகிராமன்

நல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வளமாக கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராயி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப்பட்டு தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக்கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். …
சிறகுகள் முறியும் #119

சிறகுகள் முறியும்

அம்பை

'சிறகுகள் முறியும்' தொகுப்பின் கதைகளோடு, மற்ற கதைத் தொகுப்புகளில் வராத இரு கதைகளையும் இணைத்த மறுபதிப்பு. ஒரு களத்தில் நிற்காமல் பல களங்களில் நடைபெறும் கதைகள் இவை. 1967 இல் சென்னையில் தொடங்கி 1976 இல் தில்லியில் முடியும் காலகட்டத்தை உள்ளடக்கிய கற்பனைப் பதிவுகள். இந்த காலகட்டத்திற்குரிய கேள்விகள், பதில்கள், ஐயங்கள், உறவுச்சிக்கள், சமரசங்கள், பிரச்சினைகள், …