Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நீர்வழிப் படூஉம்
Neervazhi Paduum
- பக்கங்கள்
- 224
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Thannaram Publication
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789395560047
- ASIN
- B0CPY4TLDS
இந்நாவல் கொங்கு வட்டாரத்தின் நொய்யல் நதிக்கரையில் வாழும் குடிநாசுவர் எனப்படும் எளிய சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் வீழ்ச்சியையும், அவனுடன் சமூகம் கொள்ளும் உள்ளார்ந்த உறவையும் விரிவாகச் சித்தரிக்கிறது. குற்றம், மன்னிப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளல் ஆகிய உணர்வுகளை முதன்மையாகக் கொண்டு நகரும் இக்கதை, வறுமையும் அலைக்கழிப்பும் தொடர்ந்து விரட்டும் மனிதர்களின் எளிய வாழ்வை எதார்த்தமாக…
Appears in following lists
Genres
Quotes
மாமாவை வதைத்துக்கொண்டிருந்த காக்காய் வலிப்பு நோய் அப்போது அடிக்கடி வரத்தொடங்கியிருந்தது. அநேகமாக வாரத்திற்கொருமுறை. பெரியம்மா தந்துவிட்டுப் போயிருந்த இரும்பாலான தொரப்புக்குச்சியொன்றை எப்போதும் தன் தலைமாட்டில் வைத்துக்கொண்டிருந்தார் மாமா, எனினும் வலிப்பு வரும்போது அவரால் அதைத் தேடியெடுக்க முடியாமல் போய்விடுகிறது. அதுபோன்ற தருணங்களில் நினைவின் இழைகள் முற்றாக அறுந்துபோய்விடுகின்றன. கை, கால்கள் வெட்டியிழுப்பதையோ, வாயிலிருந்து கோழை வடிவதையோ வீறிட்டுக் கத்துவதையோ பார்ப்பதற்கு அநேகமாக யாரும் இருப்பதில்லை.
பேச்சுவார்த்தையற்றவராக எதிரே இருந்த முத்தையன்வலசுப் பெரியப்பா அப்போது வீட்டிலிருந்தால் அந்தச் சத்தத்தைக் கேட்டு வந்து விடுவார், அந்தச் சாவிக்கொத்தைத் தேடியெடுத்து உள்ளங்கையில் திணித்து மடக்கிப் பிடித்துக்கொள்வார், சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிப்பார், குடிக்கவும் தருவார். சிதறி வழிந்திருந்த கோழையைத் துடைத்து கால்களை நீட்டி மல்லார்ந்து படுக்க வைத்துத் தலையணையொன்றை முட்டுக்கொடுத்து பற்றியிருந்த அந்தத் தொரப்புக்குச்சியை விடுவித்துப் பழையபடி அவரது தலைமாட்டில் பத்திரப்படுத்திவிட்டுப் போய் விடுவார். வெகுநாட்கள் வரை மாமா அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. வலிப்பின் தாக்கம் நீங்கி நினைவு மீளும்போது தனக்கு வலிப்பு வந்ததை நினைவுகூர முற்படுவார் மாமா, உள்ளங்கையை விரித்து சாவிக்கொத்து இருக்கிறதா எனத் தேடுவார், அது வைத்தது வைத்த இடத்தில் அப்படியே கிடக்கும், கன்னங்களில் கோழையின் ஈரம் தென்படாது, மாமா குழம்பிப்போவார், உண்மையிலேயே வலிப்பு வந்ததா இல்லை அப்படிக் கற்பனை செய்துகொண்டோமா என யோசிக்க முற்படுவார்.
அப்போதுதான் படிக்கட்டுகளின் வழியே வேகமாக அடியெடுத்து வைத்து நடந்து தன்னைக் கடந்து போய்க்கொண்டிருந்த மகள் ஈஸ்வரியைப் பார்த்தார். 'ஈசு' எனப் பெருங்குரலெடுத்து அவர் அழைத்ததைக் கேட்டவள் கண்கள் விரிய அவரைப் பார்த்துச் சிரித்திருக்கிறாள், ஒரே வீச்சில் அவளை நெருங்கினார் மாமா, கைகளைப் பற்றிக்கொண்டார், 'ஈசு ஈசு கடசீல அந்த முருகன் உன்ன எம்பட கண்ணுக்குக் காட்டீட்டே, அவெ கண்கண்ட தெய்வம்ங்கறது. செரியாப் போச்சு பாத்தயா?' என அவளை வாரியணைக்க முற்பட்டார். அவள் கூச்சலிட்டாள், மிகப் பதற்றமடைந்தவளாக அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள். அவளது கூச்சலைக் கேட்டு ஓடிவந்த பக்தர்களில் சிலர் மாமாவிடமிருந்து அவளை விடுவிக்க முயன்றிருக்கிறார்கள், யாரோ ஒரு முதியவர், "தாயோலி, கோயல்ல வந்து என்ன காரியம்டா பண்ணிக்கிட்டிருக்கறே நீ?" எனக் கேட்டுக்கொண்டே மாமாவை அடித்திருக்கிறார், பார்த்த மற்ற சிலர் ஆத்திரத்துடன் மாமாவை நெருங்கியிருக்கிறார்கள்.
நல்வாய்ப்பாக அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது, சரிந்து கீழே விழுந்து கை,கால்கள் வெட்டியிழுத்ததைப் பார்த்தவர்கள் அவரை அங்கேயே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள், மாமா கத்தியிருக்கிறார், வாயிலிருந்து கோழை வழிந்திருக்கிறது, முற்றிலும் கைவிடப் பட்டவராக அங்கே கிடந்து துடித்துக்கொண்டிருந்த மாமாவை அவரால் ஈஸ்வரி என அழைக்கப்பட்ட பெண் பார்த்தாளாம், ஓடிப்போய் அருகிலிருந்த பெட்டிக்கடை ஒன்றிலிருந்து சாவிக்கொத்து ஒன்றை எடுத்து வந்து மாமாவின் உள்ளங்கைகளுக்குள் திணித்து அழுத்திப் பிடித்துக்கொண்டாளாம், யாரோ கொண்டு வந்து நீட்டிய தண்ணீரை முகத்தில் விசிறியடித்து, இரண்டு மடக்குக் குடிக்கக் கொடுத்தாளாம், துடிப்படங்கியதும் அவரை அதே உபய மண்டபத்தில் கால்களை நீட்டி மலர்த்திப் படுக்க வைத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து போய் விட்டாளாம். அப்போது நடந்தவற்றையும் தன் சாயல்கொண்ட அந்த முகத்தையும் நினைவின் கயிறு அறுந்து விழுந்திருந்த அந்தநேரத்திலும் அவரால் துல்லியமாகக் காண முடிந்திருந்ததாம்.
சாகும்வரை அது ஈஸ்வரிதான் எனச் சொல்லிக்கொண்டிருந்தார் காருமாமா.
சில மாதங்களுக்கு முன்புதான் சவுந்திரா பெரியம்மா வயிற்றிலிருந்த பூசணிக்காய் அளவுள்ளகட்டியை அகற்றிக்கொண்டு வந்து புண்ஆறாத நிலையில் முடங்கிக் கிடந்தாள். அது புற்றுநோய்க் கட்டியாக இருக்கக் கூடும் என அவளுக்குச் சிகிச்சையளித்த அம்பளிக்கை மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பியிருந்ததால் சாவை எதிர்நோக்கிக்காத்திருப்பவளாகத் தன்னைக் கற்பனை செய்துகொண்டிருந்தாள். முத்தையன்வலசுப் பெரியப்பாவும் பதின் வயதுகளிலிருந்த அவளது இரண்டு மகன்களும் அவர்களது பண்ணையக்காரர்களும் எங்கள் பெரியம்மாவும் காருமாமாவும் ராசம்மா அத்தையும் மற்ற உறவினர்களும் உடையாம்பாளையத்துவாசிகளும் அவ்வாறே கற்பனை செய்து கொண்டிருந்தனர். அம்பளிக்கை மருத்துவர்கள் அவளது வயிற்றைக் கிழித்த அந்தக் கணத்திலேயே சிதறிப்போனார் முத்தையன்வலசுப் பெரியப்பா. மருத்துவமனை வளாகத்தில் அங்கிருந்த செங்கொன்றை மரங்களின் மருந்துக்கழிவுகள் இறைந்துகிடந்த நிழல்களில் சித்தப்பிரமை கொண்டவரைப் போல் நடமாடிக் கொண்டிருந்தார் முத்தையன்வலசுப் பெரியப்பா. ஏறத்தாழ ஒருமாதம்வரை மருத்துவமனைப் படுக்கையிலிருந்த சவுந்திரம் பெரியம்மாவை எங்கள் பெரியம்மாவும் ராசம்மா அத்தையும் சுந்தராடிவலசுப் பெரியம்மாவும்தான் அவ்வப்போது வந்து ஒருவர்மாற்றி ஒருவராகத் துணையிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். காயம் கொஞ்சம் ஆறியபிறகு அம்பிளிகையிலிருந்து தாராபுரத்துக்கும் தாராபுரத்திலிருந்து மூலனூருக்கும் பேருந்துகளின் வழியாக அழைத்து வந்ததும் அங்கிருந்து தன் பண்ணையக்காரரொருவரின் இரட்டை மாட்டு வண்டியில் ராசம்மா அத்தையின் துணையுடன் அவளை உடையாம்பாளையம் அழைத்து வந்திருந்தார் காருமாமா.
அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே வயிற்று வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சவுந்திரம் பெரியம்மா அதைப் பொருட்படுத்தாமல் குடிவேலைகளை மேற்கொண்டு வந்தாள். நான்கைந்து மாதங்களில் வயிறு திரண்டு பெரிதாகத் தொடங்கியதும் அவள் தான் மூன்றாவதாக ஒரு குழந்தைக்குத் தாயாகப் போவதாக நினைத்தாள். அதுபற்றிச் சொன்னதும் முத்தையன்வலசுப் பெரியப்பா சந்தோஷத்தில் மூழ்கினார். உற்றார் உறவினர்களை அழைத்து விருந்து விஷேசம் எனக் கொண்டாட்டங்களில் திளைத்தார். வயிறு இயல்பைவிடப் பெரிதாகத் தென்பட்டதைப் பார்த்த எங்கள் பெரியம்மா அவளைப் பரிசோதித்து அவள் கருவுற்றிருப்பதாகத் தனக்குத் தோன்றவில்லையெனச் சொன்ன பிறகு பெரியப்பா கொண்டாட்டங்களைக் கைவிட்டார்.
Shelves
More like this
அறம்
அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…
ஒரு புளியமரத்தின் கதை
நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…
வெக்கை
வறண்ட நிலப் பரப்பையும் ஏற்றத்தாழ்வு நிறைந்த கிராமிய சமூக அமைப்பையும் பின்னணியாகக் கொண்ட இந்நாவல், நிலத்திற்காக நடக்கும் பழிவாங்குதலின் விளைவுகளை பதினைந்து வயதுச் சிறுவன் …
ஏழாம் உலகம்
சமூகத்தின் மிக அடித்தளத்தில், நாகரிகம் என்னும் மாயத்திரைக்குக் கீழே வாழும் விளிம்புநிலை மனிதர்களின் இருண்ட உலகத்தை நுட்பமாகச் சித்தரிக்கும் நாவல் இது. உடல் ஊனமுற்ற பிச்சைக்க…
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
ஜெயகாந்தன் எழுதிய ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற நாவல், கல்யாணி என்ற நாடக நடிகைக்கும், ரங்கா என்ற முற்போக்கு சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளருக்கும் இடையிலான காதலையும்,…
ரூஹ்
அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …
இடக்கை
மாபெரும் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் மரணப் படுக்கையில் கிடக்கிறார். அவரது இறுதி மூச்சு நின்றவுடன், அரியணைக்கான போட்டி தொடங்குகிறது. அவரது அந்தரங்க மெய்காப்பாளரான திருந…
சாயாவனம்
சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளி…
ஒரு கடலோர கிராமத்தின் கதை
தேங்காய்ப்பட்டினம் என்ற கடலோர இஸ்லாமிய கிராமத்தில் வடக்கு வீட்டு அகமதுக்கண்ணு முதலாளி ஊரையே தன் அதிகாரத்துக்குக் கட்டுப்படுத்தி ஆட்சி செய்கிறான். மதத்தின் பெயரால் தங்கள்மார்கள்…
கள்ளிக்காட்டு இதிகாசம்
தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…
சஞ்சாரம்
சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல்…
சூல்
சூல் "தூர்வை', "கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன். ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய "தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு…