சஞ்சாரம்
Share:

சஞ்சாரம்

Sancharam

Check Price on Amazon
4.16/5 · 300+ ratings

சஞ்சாரம்

Sancharam

4.16/5 · 300+ ratings
பக்கங்கள்
376
வடிவம்
Hardcover
பதிப்பகம்
தேசாந்திரி பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789381975701
ASIN
B07BDKKKTG

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல் நாதஸ்வக் கலைஞர்களுடைய கதையைச் சொல்லுவதால் சஞ்சாரம் என்ற பெயர் பொருந்துகிறது. அதேபோல் இந்த நாவலை எழுத அந்தக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேசவும், இசை சம்பந்தமாக, அவர்களின் வாழ்க்கை சம்பந்தமாகவும் பல விவரங்களை சேகரிக்கவும், ஆய்வ…

Interested in this book? Check Price on Amazon
Quotes

வேம்பின் காற்று எங்கிருந்தோ மழையைக் கொண்டுவந்தது. வேம்புதான் அவர்களைக் காப்பாற்றியது. வேப்பங்காற்றின் சிலுசிலுப்பால் மழை கரிசல் பூமியில் இறங்கியது. அந்த நன்றியை மறக்காமல் தானோ என்னவோ வேம்பில்லாத கரிசல் கிராமங்களேயில்லை. ஊருக்கு நூறு மரங்களுக்கும் மேலிருந்தன. வேம்புதான் கரிசலின் அடையாளம். வேம்பில்லாத ஊர்களே இல்லை. வெக்கையில் அம்மை உடல் கொப்பளிக்கும் போது வேம்புதான் மருந்தாகிறது. வேம்பைத் தாய் என்று கருதினார்கள். வேம்பின் கொழுந்தைப் பிடுங்கி வாயிலிட்டு அதன் கசப்பை ருசித்து வளர்ந்தவர்கள் என்பதாலே வாழ்வின் கஷ்டங்களை, கசப்பான அனுபவங்களை அவர்கள் இயல்பாகவே ஏற்றுக் கொண்டார்கள்.

சிலசமயம் நாதஸ்வரம் இசைத்துக் கொண்டிருக்கும்போது அவனுக்கு ஈரவேஷ்டி காற்றில் உலர்வதுபோல மனது மெல்ல எடையற்றுப்போவதை உணர்ந்திருக்கிறான். சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று தரைமண் எடுப்பதுபோல மூச்சுத் திணறச்செய்வதாக இருக்கும். சில நேரம் உடல் எங்கும் கண்கள் முளைத்துவிட்டது போலவும் தோன்றும். வாசிப்பில் ஆழ்ந்துவிட்டால் உடலே இல்லாமல் போய்விடுகிறது என்பதை பக்கிரி நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த உணர்ச்சியை அடையும்போது ஏற்படும் ஆனந்தம் அளவில்லாதது. தன்னிடம் இருந்து வெளிப்படுவது வெறும் நாதமில்லை, அது ஒரு மணம், பூவிலிருந்து மணம் கசிவது போல மனிதர்களுக்குள்ளும் மணமிருக்கவே செய்கிறது, அதை மலரச் செய்வது, வாசனையைக் கமழவிடுவதுதான் இசையா? ஒரு நாள் மோகனம் வாசித்துக் கொண்டிருக்கும்போது சட்டென மனதில் இறந்துபோன அம்மாவின் முகம் தோன்றி மறைவதை உணர்ந்தான். இவ்வளவு சந்தோசமான ராகத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் மனம் ஏன் என்றோ இறந்துபோய்விட்ட அம்மாவின் மீதான துயரத்தைப் பீறிடச் செய்கிறது. மனம் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதற்குத் துயரம் தேவையானது தானா. அவனுக்குப் புரியவில்லை. ஆனால் துக்கம் பாரம் ஏறுவதாகயிருந்தது. அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் மோகனத்தில் சஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தான். தனது துக்கம் இசையின் வழியே கரைந்து கேட்பவர்களின் மனதை ஈரமாக்கியதை உணரந்தபடியே அவன் மோகனம் வாசித்து முடித்தான்.

More Quotes...
Shelves
Tamil Literature தமிழ் இலக்கியம் சாதி ஒடுக்குமுறை சமூக நாவல் நாதஸ்வரம் வரலாற்றுப் புனைகதை நாவல் Historical Fiction சாகித்ய அகாடமி விருது Social Novel நாட்டுப்புற கலை கரிசல் காடு Novel

More like this


உறுபசி

நவீன வாழ்க்கை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் விழும் கசப்பின் நிழலைப் பேசும் நாவல் இது. சம்பத் என்ற இளைஞனின் மரணத்திலிருந்து தொடங்கும் கதை, அவனை நேரடியாக …

3.85/5 · 400+ ratings

யாமம்

எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையி…

3.96/5 · 200+ ratings

உறுபசி

நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு…

யாமம்

சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்க…

ஒரு புளியமரத்தின் கதை

நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…

4.05/5 · 1K+ ratings

குருதிப்புனல்

Novel on social themes. மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழு…

3.94/5 · 500+ ratings

இடக்கை

மாபெரும் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் மரணப் படுக்கையில் கிடக்கிறார். அவரது இறுதி மூச்சு நின்றவுடன், அரியணைக்கான போட்டி தொடங்குகிறது. அவரது அந்தரங்க மெய்காப்பாளரான திருந…

4.14/5 · 200+ ratings

சூல்

சூல் "தூர்வை', "கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன். ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய "தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு…

4.06/5 · 100+ ratings

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், மாமன்னர் அருண்மொழிவர்மரின் வாழ்வியலையும் சோழ நாட்டின் அரசியல் நகர்வுகளையும் கண்முன்னே …

4.72/5 · 3K+ ratings

யவன ராணி, பாகம் 1

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.17/5 · 1K+ ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

சங்க இலக்கியப் பாடல்களில் பயின்றுவரும் வரலாற்று நுண்குறிப்புகளைக் கொண்டு பறம்பு நாட்டின் அரசனான வேள்பாரியின் கதையும், அவனது இயற்கை சார்ந்த வாழ்வியலும் இந்த நாவலில் விரிவாக…

4.63/5 · 1K+ ratings