Quotes from யதி
மனிதனைத் தவிர உலகில் வேறெந்த உயிரினமும் சட்டங்களின் சட்டையை அணிவதில்லை.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
வெளிய உள்ளதுல காத்துதான் எல்லாம். உள்ளார இருக்கறதுல நெனப்புதான் எல்லாம். இந்த காத்து - நெனப்பு ரெண்டும் வசமாயிட்டா அவன் யோகி.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
எல்லா அதிர்ச்சிகளும் ஒரு நாளில் நடந்து முடிந்துவிடுகின்றன. ஆனால் அவற்றின் வீரியமும் தாக்கமும் வாழ்நாள் முழுதும் தொடரும்
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
விழிப்பு நிலை கற்பிக்காத பலவற்றை உறக்கம் சொல்லித்தரும்.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
இருட்டு ஒரு சௌகரியம். நிறையப் புதிர்களை அப்போதுதான் அவிழ்க்க முடியும்
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
அதனதன் அறிவு விரிவு கொள்வதற்கேற்ப அர்த்தங்களை உற்பத்தி செய்துகொள்வதில் இருக்கிறது.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
தெரிந்ததைக் கடந்துதான் தெரியாதது நோக்கிச் செல்ல வேண்டும். கண்ணைக் கட்டிக்கொண்டு காற்றில் கத்தி வீசியபடியே நடக்கிற அனுபவம். எழுத்து மட்டுமா, வாழ்வும் அதுவேயல்லவா?
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'