Quotes from யதி
ஆண், பெண், நபும்சகம் என்பது போலத் தாய் என்பவள் ஒரு பிறப்பு.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
ஞானமடைந்தவனின் முதல் அடையாளம் அவன் வெளிப்படையாக இருப்பான் என்பது.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
தோல்வியின் ருசி முதல் முதலில் தட்டுப்பட்டபோது புத்தி உடனே உணவில்தான் சென்று ஒளிந்துகொள்ளச் சொன்னது.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
உணவு நுழையாத உடலுக்குள் நோய்களும் நுழையாது
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
ஒரு துப்பாக்கி இருந்தால் மட்டும்தான் வாழமுடியும் என்றிருந்தால் இயற்கை நம்மைப் படைக்கும்போதே ஒரு துப்பாக்கியுடன் படைத்திருக்கும். இடையில் வந்து சேரும் எதுவும் நிரந்தரமல்ல
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
உலக சரித்திரத்தில் எந்த ஒரு துறவியும் தன் உறக்கத்தில் வரும் கனவுகளை உண்மையாக எடுத்துச் சொன்னதாக நான் அறிந்ததில்லை.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
ஒழுக்கம் என்பதே அடுத்தவர் அபிப்பிராயம்தானே? அதற்கொரு பெயர் கொடுத்தால் தெய்வமாகிவிடுகிறது. எனக்கு அடுத்தவர் அபிப்பிராயம் முக்கியமாக இல்லை என்பதால் தெய்வமும் என்னிடத்தில் முக்கியத்துவம் இழந்துவிடுகிறது.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
பிழைப்பது அல்லது வாழ்வது என்பது வேறு. வாழ்வுக்கு அப்பால் உள்ளவற்றின் அடிப்படைகளை அறிவது வேறு. சன்னியாசம் அதற்கான அடிப்படை சௌகரியம். அதை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்த நினைப்பதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் தொடக்கப்புள்ளி
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
உணர்ந்தவனுக்கு உருவம் அநாவசியம். உணரும் வரை எல்லாமே அவசியம்
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
சுதந்தரம், அதன் முதல் விதியே அடுத்தவனை நினைக்காதிருப்பதும் அவன் சொற்படி வாழாதிருப்பதும்தான்.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'