Quotes from யதி

சிறகை அசைக்காமல் நடு வானில் மிதக்கும் ஒரு கழுகினைப் போல அவர்கள் பேசும் சொற்களின் ஒலி இங்குமங்கும் நகராமல் இருவர் உதடுகளுக்கு இடையிலேயே மிதந்துகொண்டிருக்கும்
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
தவமென்பது வாழ்வது. வாழ்வென்பது நிறைகுறைகளின் சரி விகிதக் கலவை. நிறைகள் சார்ந்த அகங்காரமும் குறைகள் சார்ந்த குற்ற உணர்வும் தவிர்க்க முடியாதவை. இதில் எதைத் தவிர்க்க நினைத்தாலும் தோற்கத்தான் வேண்டும்.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
பறவைகள் நடப்பதற்கு ஹட யோகம் பயில்வதில்லை. ஒரு முழு வாழ்நாளைப் பரீட்சைகளில் தொலைப்பதில்லை
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
மனிதனல்லாத அனைத்துப் பிறப்புகளும் ஒன்றுக்கு மேற்பட்ட ஏதோ ஒரு சாமர்த்தியம் இருக்கும் என்று தோன்றியது.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
பூரணத்துவத்துக்காக அலைவது வீண். இந்த உலகில் எதுவும் பூரணமடைந்ததல்ல. எச்சங்களில் இருந்து கற்றுக்கொள்வதே நமக்கு விதித்தது
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
ஜபம் ஒரு சுய இன்பம். வெறும் சக்தி விரயம்.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
சன்யாசம் ஒரு தருமம் என்றால் பாசம் ஒரு தருமம். உயர்வென்ன தாழ்வென்ன.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
குற்ற உணர்வற்று இருப்பதே துறவு.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
நகரும் எதுவும் நதியே. துர்நாற்றம் நீரின் பிழையல்ல.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
உண்மையில் பசியென்பது வயிற்றில் அல்ல; நினைவில் பிறப்பது
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'