Quotes from யதி

சன்னியாசம் என்பது இறுதிவரை முயற்சியும் பயிற்சியும் மட்டுமே.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
சித்தர்கள் தமது மரணத்தைக் காரண காரியங்களுடன் மட்டுமே தீர்மானிக்கிறார்கள். இருந்தது போதும் என்பதல்ல; இல்லாமல் இருப்பதன் அவசியம் உணரப்படும்போது மட்டுமே அவர்கள் மறைகிறார்கள்.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
முட்டாள்கள் நிறைந்த உலகத்தில் நான் வாழ விதிக்கப்பட்டிருப்பது என் துரதிருஷ்டம். அதற்காக நான் முட்டாளாகிவிட முடியாது. என் சுதந்தரம் என்பது முட்டாள்த்தனத்தை அனுமதிக்காதது. அபத்தங்களுக்கு அங்கு இடமில்லை. அற்பத்தனங்களுக்கு இடமில்லை.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
சராசரி மனிதர்களிடம் ஆத்மாவைக் குறித்துப் பேசுவது வீண்
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
வாழ்நாளில் மதத்தையோ கடவுளையோ மருந்துக்கும் தொட்டுப் பாராமல் உன்னால் மக்களுக்கு நாலு நல்ல விஷயங்களைச் சொல்ல முடியுமானால் உன்னைக்காட்டிலும் உயர்ந்த ஜீவன் வேறில்லை.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
சராசரிகளால் நுழையவே முடியாத ஒரு பேருலகின் வாசல் கதவு வரை சென்று தட்டாமல் திரும்பிவிட்ட பரிதாபம் அவனது ஒவ்வொரு சொல்லிலும் தொனித்தது.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
பணத்தைத் தொடாமல் ஒரு மணி நேரம் இருப்பதும் ஒரு வித தியானம்தான்
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
வாழ்வுக்கு ஒரு தாளகதி உண்டு. அதில்தான் அனைத்தும் இயங்கியாக வேண்டும். காலம் பெரிதென்றாலும் ஒவ்வொரு நாள் வாழ்வின் மூலமாகத்தான் அதனைக் கடக்க வேண்டும்.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
பாவனைகள் சக்தி மிக்கவை. மின்சாரம் நிகர்த்த வீரியம் கொண்டவை. ஆனால், சரியான இடத்தில், சரியான அளவில் கையாளத் தெரிந்திருப்பது அவசியம். மேதைமை என்பது அதில் அடங்கிய சங்கதி.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'
குற்ற உணர்வற்று இருப்பதே துறவு. ஒரு குழந்தையிடம் அதனைக் காணலாம். கடவுளிடமும் அது உண்டு
பா. ராகவன் (Pa. Raghavan) — 'யதி'