Quotes from சிலுவைராஜ் சரித்திரம்
ஒரேயொரு சிகரெட்டை அணச்சு அணச்சு ரெண்டு மூணு தடவை பிடிப்பது வழக்கம்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
தன்னை ஆசையாப் பெத்துப் பாலூட்டி தாலாட்டி வளத்து மருந்து மாயம் பாத்த அந்தச் சிறுக்கிமவாதான் இப்ப இப்பிடிப் பேசுறா! பேசு பேசு இது ஒந்நேரம். தல மூத்த மகனப் பாத்துப் பேசு. தாயும் தகப்பனும் சேந்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகச் சிலுவை சந்தேகப்பட்டான். ஆள் ஒழிஞ்சா சரின்னு ஒரு முடிவுக்கு வந்திருப்பாங்களோ? இவங்களுக்கு முன்னால தல நிமுந்து சகல சௌபாக்கியங்களோடும் வாழணும்ங்கிற வெறி சிலுவைய ஆட்டிவச்சது.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
எப்பிடியும் பொழைக்கலாம்னு குருட்டுத்தனமாக தைரியம் வந்தது. இனிமெ தற்கொலை பத்தியெல்லாம் நெனைக்கக் கூடாது. சாவு வரும்போது வரட்டும்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அடைக்கலமாக வந்தவனுக்கும், அடைக்கலங் குடுத்தவருக்கும் இடையில் நெருங்கி சீரான தாக்குப் பிடிக்கக்கூடிய நட்பு ஒன்று ஏற்படச் சாத்தியமுண்டா? ரெண்டு பேருக்குமே வாய்த்த அந்தச் சந்தர்ப்ப விசேசம் ரொம்ப நூதனமாக இருந்ததால் உறவைத் தடுமாற்றமில்லாமக் கொண்டு போகச் சாத்தியப்படலையோ? சுயேச்சையாக இருக்கிற ரெண்டு பேருக்கிடையிலதான் நட்பு பலப்படும். இல்லாட்டி கஸ்டந்தான்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
தூரத்தில் நாயுங் கையுமா ஜீவரத்தினத்தப் பாத்ததுமே, 'தி மேன் வித் எ டாக்'ன்னு குருசாமி டெய்லர் தமது எஸ்எஸ்எல்சி இங்கிலீஷ் ஞானத்தை எடுத்துவிடுவார். அந்த நாயைப் பாத்தா சிலுவைக்கி, ஆண்டன் செக்காவ் எழுதிய 'பச்சோந்தி' கதைதான் ஞாபகத்துக்கு வரும்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
சார்லஸ் சொன்ன மாதிரி ஈவினிங் காலேஜ்ல ஒரு வேல கெடைச்சு சின்னதா ஒரு புதிய வாழ்க்கைய அமைச்சுக்கிட்டு வாழலாம். தானுண்டு தன் படிப்புண்டு என்று அடங்கிவிடலாம். ஒரு தீவுல வாழ்ற மாதிரி, அந்த ராபின்சன் குருஸோ மாதிரி வாழ்ந்திட்டுப் போகலாம். சிலுவைன்னு ஒருத்தன் இந்த உலகத்தில பிறந்தான் செத்தான்ங்கிற விசயம் மூணாம் மனுசர்களுக்குத் தெரியாமலே போகட்டும். இந்த மாதிரி நெனச்சுப் பாக்கிறது சிலுவைக்கு ரொம்பப் பிடிக்கும். அதுல அவனுக்கொரு சுகம்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
மானமா ஒதுங்குவதற்கு வேலையில்லாத ஒரு பட்டதாரி இளைஞனுக்கு அவம் பிறந்தவீட்டத் தவிர வேற போக்கிடம் கெடையாது. அந்த இடத்திலிருந்து அவன் போனாப் போதும்னு தகப்பனும் தாயும் ஒரே முடிவோட இருந்தா அவங் கதி என்னாகும்? அதவிட அவனக் கொன்னு போட்டிருக்கலாம்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அடிக்கிறது தகப்பன் உரிமை, வாங்கிக்கிறது மகன் கடமைன்னு நெனச்சுக்கிட்டிருந்த அவருக்குச் சிலுவை முட்டியது அதிர்ச்சியாக இருந்திருக்கும். அந்த அதிர்ச்சியால் வந்த ஆத்திரத்தில் என்ன செய்கிறோம்னு அவருக்குத் தெரியல. இல்லாட்டி அப்பிடியே குனிஞ்சு சிலுவையோட கொட்டைய பிடிச்சு நசுக்கத் துணிவாரா? இதெல்லாம் மிலிட்டரி டெக்னிக்கா இருக்கும். சிலுவை விருட்டென்று பின்வாங்கி அவர் அடிவயித்துல ஓங்கி ஒரு எத்துவிடும்போது தேவராஸ் மாமா ஓடிவந்து விலக்கிவிட்டார்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
திரும்பத் திரும்ப அதே யாபகந்தான். அந்தச் சம்பவத்தை விரட்டியடிச்சாலும் வளத்த நாய் மாதிரி வந்துகிட்டேயிருந்தது.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
ரவி தண்ணி போட்டாம்னா தாஸ்தாவ்ஸ்கி பற்றித்தான் பேசுவான்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'