Reviews for அ'னா ஆவன்னா

15 reviews total

user_11930

★ 3/5 Feb 02, 2026

42 கவிதைகள் கொண்ட இந்தக் கவிதைத் தொகுப்பில் புதுமைப்பித்தனின் சாயலைப் பார்ப்பதை என்னால் தவிர்க்க இயலவில்லை. சில வரிகளைப் படித்தபோது "இது புதுமைப்பித்தன் சாயல்" என்று புத்தகத்தில் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

புத்தகத்தின் பெரும்பான்மையான கவிதைகள் பெண்களின் வாழ்க்கை நிலையைக் கண்டு மனம் நொந்து விரக்தியில் வந்து விழுந்த வார்த்தைகளாக இருந்தன. இவையே இன்னும் சற்றுக் காட்டமான நக்கலுடன் இருந்திருந்தால்… அது தான் புதுமைப்பித்தன்!

user_11929

★ 5/5 Feb 02, 2026

நா. முத்துக்குமார் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது "ஆனந்த யாழை" பாடல்தான். அழகு தமிழும் எதார்த்தமும் கொட்டிக்கிடக்கும் அவர் பாடல்கள் இதமான மயிலிறகின் வருடல்.

இந்தக் கவிதைத் தொகுப்பு அவர் பாடல்கள் போலவே யதார்த்தமும் தமிழ் அழகும் கொண்டு மிளிர்கிறது.

"உங்கள் பால்ய வயது ஞாபகத்தில் இளமையான அப்பாவின் முகம் எவராலும் திருட முடியாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது."

"நீ பார்த்த கண்ணாடிகளில் உன் பிம்பங்கள் உயிர்வாழ்கின்றன."

"குழந்தைகளுடன் பேசுகையில் பிரபஞ்சத்தில் நம் இருப்பு ஒரு புள்ளியெனச் சுருங்கிவிடுகிறது."

இத்தனை அருமையான படைப்பாளியை இத்தனை சீக்கிரம் காலம் அழைத்துக்கொண்டதே என்று மனம் வருந்த, காலத்தைத் தாண்டி வாழப்போகும் அவர் படைப்புகளும் பாடல்களும் ஒரு சின்ன ஆறுதல்.

user_11928

★ 5/5 Feb 02, 2026

மண்ணை விட்டுப் பிரிந்தாலும் நம் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ள கவிஞரின் மற்றொரு மகத்தான படைப்பு.

தான் பிறந்து வளர்ந்த கிராமம், அங்குள்ள மக்கள், தன் நண்பர்கள் என அனைத்து தலைப்புகளிலும் எழுதியுள்ளார். அனைத்துக் கவிதைகளும் மிகவும் பிடித்திருந்தன.

"வாத்துகள் ரெக்கைகள் இருந்தும் அதிக நேரம் பறப்பதில்லை. பிறந்த வீடு, புகுந்த வீடு எனப் பெண்களைப் போலவே தண்ணீருக்கும் தரைக்கும் அலைபாய்வதே வாத்துகளின் வாழ்க்கை."

புத்தகயா — புத்தக வாசிப்பு மற்றும் நூலகத்தின் அவசியத்தைக் கூறும் கவிதை. "ஒரு புத்தகத்தைத் திறக்கிறபோது ஒரு உலகம் திறந்து கொள்கிறது. ஒரு புத்தகம் எரிகிறபோது ஒரு அனுபவம் எரிகிறது."

என்றும் எங்கள் நினைவில் நீங்கள் இருப்பீர்கள். புத்தகங்களைப் படிப்போம், பயன் பெறுவோம்.

user_11927

★ 5/5 Feb 02, 2026

நாம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் செயல்களை, பழகும் மனிதர்களை, பார்க்கும் இடங்கள் பற்றி கவிதை வடிவில் கேலி செய்துள்ளார், கேள்வி கேட்டுள்ளார். பல முறை படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகங்களைச் சரியாக விமர்சிப்பது கரையான்கள் மட்டுமே — சில புத்தகங்களைக் கரைத்துக் குடிக்கின்றன, சில புத்தகங்களைக் கடித்துக் குதறுகின்றன.

இங்கு பெரும்பாலும் கல்யாணத்தை மட்டுமல்ல, கல்யாணத்தில் கலந்து கொள்வதைக்கூட நகைகள்தான் தீர்மானிக்கின்றன.

user_11926

★ 5/5 Feb 02, 2026

புத்தகங்களைத் திறக்கும்போது ஒரு தனி அமைதி கிடைக்கிறது. நா. முத்துக்குமாரின் இந்தக் கவிதைத் தொகுப்பு அந்த அமைதியை மனதில் நிலைக்க வைக்கிறது.