Reviews for அ'னா ஆவன்னா
15 reviews total
user_11942
★ 4/5 Feb 02, 2026"அணுசக்தி விஞ்ஞானியாவேன் என்ற நான், அனா ஆவன்னா எழுதிக் கொண்டிருக்கிறேன்" — நா. முத்துக்குமார்.
அணிலாடும் முன்றில் இவர் எழுத்தில் வாசித்த முதல் புத்தகம். அதிலேயே அவரின் பாடல் வரிகளை ரசித்த நான் அவரின் எழுத்தின் மீதும் காதல் வயப்பட்டு ரசிகையானேன்.
இந்தப் புத்தகத்தைக் கடந்த வருடம் வாசித்து மீள்வாசிப்பும் செய்தேன். ஒரு புத்தகத்தை ஒரு முறைக்கு மேல் வாசிக்கும்போதுதான் முதல் தடவை கவனிக்கத் தவறிய பலவற்றை ரசிப்போம்.
கவிதை பிடிக்குமா? வாசியுங்கள். இலகு தமிழில் ஒரு மணித்தியாலத்துக்குள் வாசித்து முடிக்கக்கூடிய புத்தகம். ஆனால் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப எடுத்து வாசித்து ரசிக்கக்கூடிய புத்தகம்.
user_11941
★ 4/5 Feb 02, 2026சில கவிதைகள் மனதுக்குள் இனிமையாகத் தங்கிவிடுகின்றன. இந்தத் தொகுப்பில் அப்படிப்பட்ட கவிதைகள் பல உள்ளன — படித்து முடித்த பிறகும் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் வரிகள்.
user_11940
★ 5/5 Feb 02, 2026ஹைக்கூ கவிதைகளின் சிறந்த வடிவம் இந்தத் தொகுப்பு. குறைந்த வார்த்தைகளில் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் கொண்ட கவிதைகள்.
user_11939
★ 5/5 Feb 02, 2026இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது மீண்டும் சிறுவனாக மாறிவிட்ட உணர்வு. குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனத்தையும் அன்றைய நாட்களின் எளிமையையும் நினைவூட்டும் அழகான தொகுப்பு.
user_11938
Feb 02, 2026நாஸ்டால்ஜிக் நினைவுகளைத் தூண்டும் கவிதைத் தொகுப்பு. கண்டிப்பாகப் படியுங்கள்!
user_11937
★ 5/5 Feb 02, 2026நல்ல புத்தகங்கள் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தரும். இந்தக் கவிதைத் தொகுப்பும் அப்படி வாசகர்களுக்கு அர்த்தமுள்ள பாடங்களை எளிமையான வரிகளில் கற்றுத்தரும் சிறந்த புத்தகங்களில் ஒன்று.
user_11936
★ 5/5 Feb 02, 2026மனதைத் துளைத்த வரிகள் — "அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் நிலா இருக்கிறது, சோறு இருக்கிறது, ஊட்டுவதற்குத் தாயில்லை." வலியை இத்தனை எளிமையாகச் சொல்ல முடியும் என்பதை நிரூபிக்கும் கவிதை.
user_11933
★ 5/5 Feb 02, 2026நா. முத்துக்குமார் என்ற பூக்கடையில் பெற்ற 42 பூக்களும் 103 பக்க இதழும் கொண்ட பூங்கொத்து இந்தப் புத்தகம்.
குழந்தைகளிடம் இனிப் பேசுகையில் கடவுளிடம் பேசுகிறேன் என்ற இவர் கருத்தை நினைவுகூர்வேன் கண்ணாடி பார்க்கையிலும். யானைகட்டிப் போரடித்த காலம் போய் நெற்கதிர்களில் லாரி ஏறப் பரப்பிவைக்கும் காலத்தின் மாற்றம் ஏற்றமா இறக்கமா?
ஆசை காட்டி ஏமாற்றாமல் "என் சம்பளம் ஆயிரம்தான், அதுக்குள்ள வாழலாம் வா" என்று வெளிப்படையாகக் கூறும் குறுந்தொகை எனும் படைப்பு நறும்பூந்தொகையாய் மணக்கிறது.
கற்பனைக் குதிரைக்குக் கண்ணால் கண்ட காட்சிகளைக் கடிவாளமாக்கிச் சொற்சாலையில் செலுத்துகிறார் நா.மு. பிறர் புறக்கண்ணால் கண்டு அகக்கண்ணால் காணாதவற்றைக் கண்டு சொல்வதே படைப்பு எனினும், அதை வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பதுபோல் தடையின்றிப் புகுத்துவது இவர்போல் யாருக்கு வாய்க்கும்.
இப்பூங்கொத்தில் உள்ள பெரும்பாலான பூக்கள் வலியோடு மணக்கின்றன. துயருற்றவன் குடிக்கும் மது போன்றன இவர் படைப்பில் பல — துயரிலிருந்து மீண்டு வர விரும்பினும் அத்துயரில் மூழ்கி மூழ்கி எழுந்தமிழும் குடிகாரன் போலானேன். ஆனால் குடியைக் கெடுக்கும் குடியன்று இது. காலம் கடந்து வாழும் கலைஞன் நா.மு. பற்றி நாளெல்லாம் நயந்தாலும் நாள் போதாது.
user_11932
★ 4/5 Feb 02, 2026அன்றாட வாழ்வில் சந்திக்கும் நபர்கள் முதல் கடவுள் வரை வந்து போகின்றார்கள் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில். ஆங்காங்கே இழையோடும் மெல்லிய நகையுணர்வையும் அங்கதச் சுவையையும் விட என்னை அதிகம் கவர்ந்தது கவிதைகளின் எளிமையும் அவற்றின் இயல்பான தன்மையும்தான்.
user_11931
★ 4/5 Feb 02, 2026"கண்ணதாசன் காலம்போல் இல்லை இப்ப பாட்டுன்னு அண்ணாத்த எங்களைச் சொல்றீங்க, தென்னைமர வேருக்குப் பக்கம் வளர்கிற சின்னஞ்செடி நாளைக்கு மேலே வரும்" — ஒப்புதல் வாக்குமூலம்
"உணவின் ருசி உணவில் இல்லை. புறக்கணிப்பின் கசப்பிலும் குற்றவுணர்ச்சியின் காரத்திலும் அது ஒளிந்திருக்கிறது" — முனியாண்டி விலாஸ்
"மாநகரத்துத் தட்டில் விழும் ஒவ்வோர் அரிசியிலும் ஒளிந்திருக்கின்றன லாரிச் சக்கரத்தின் தடயங்கள்" — வயலும் வாழ்வும்
"குற்றவுணர்ச்சியின் படிக்கட்டில் கால் வைக்காமல் புத்தகம் திருடுவது பெரிய கலை. மாற்றான் அலமாரிப் புத்தகத்திற்கு மணம் அதிகம்" — புத்தகயா