Reviews for நீர் வழிப்படூஉம்

29 reviews total

user_11657

★ 5/5 Feb 02, 2026

இந்த நாவலை ஒரு திரைப்படமாக எடுக்கும் திறன் கொண்டது என்பது என் கருத்து. காட்சிகளும் கதாபாத்திரங்களும் அந்த அளவிற்கு உயிர்ப்போடு இருக்கின்றன.

user_11656

★ 5/5 Feb 02, 2026

அன்பையும் கருணையையும் பற்றிய கதை! மனதைத் தொடும் படைப்பு.

user_11655

★ 5/5 Feb 02, 2026

என்ன கதை! என்ன கதைசொல்லல்! ஒவ்வொரு கதாபாத்திரமும் பிடித்திருந்தது — குறிப்பாக காருமாமா.

user_11654

★ 4/5 Feb 02, 2026

வெள்ளைக்கோவில், தாராபுரம் வட்டார நாவிதர்களின் வாழ்வியல் பயணம் தான் இந்த நீர் வழிப்படூஉம்.

user_11653

★ 5/5 Feb 02, 2026

ஏன் பிடிச்சிருக்கு என்று சொல்லவே முடியாது. உண்மையிலேயே நல்ல புத்தகம். கதை சோகமாக ஆரம்பித்தாலும் மனது ஏனோ நிறைவாக உணர்கிறது. இறுதிச் சடங்கில் நடக்கும் ஒன்று — ஒருவேளை அது மரணத்தை நினைவுபடுத்துவதால் இருக்கலாம்.

user_11652

★ 5/5 Feb 02, 2026

இந்த புத்தகத்தை படிக்கும் போது இரண்டு மனநிலை உருவானது — ஒன்று குற்ற உணர்வு, மற்றொன்று அவமானம்.

குற்ற உணர்வு: முன்னோர்கள் செய்த நற்செயல்களில் சில தீய செயல்களை நினைத்து.

அவமானம்: நானும் ஏதோ ஒரு மூளையின் மூலையில் சில தொழிலை குறைவாக நினைத்து, அவர்களைப் பற்றி அறிய முயற்படாமலே 27 வருடம் காலம் தாழ்த்தியதை நினைத்து.

இந்த புத்தகத்தை முடிக்கும்போது என் மனதில் உருவான தனிப்பட்ட கருத்து இது.

user_11651

★ 3/5 Feb 02, 2026

பல இடங்களில் நீண்ட சொற்தொடர்கள், அதுவும் வட்டார வழக்கிலிருப்பது படிப்பதற்கு ஆயாசம் தந்தாலும், அப்பட்டமான வறுமையையும் வறட்சியையும் சாதாரண மனிதர்களின் வாழ்வியலையும் ஆசிரியர் அழகாக கண் முன் கொண்டு வருகிறார்.

நாவல் முடிவு ஏமாற்றமாக இருந்தது!

user_11650

★ 5/5 Feb 02, 2026

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் இந்தப் புதினத்தின் மீது ஆவல் கொண்டு படிக்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் கதைமாந்தர்கள் பேசிக்கொள்ளும் வசன உச்சரிப்பை உள்வாங்கிக்கொள்ள கடினமாகவே இருந்தது. ஆயினும், கதை செல்லச் செல்ல, அந்த வசன நடையே என்னை கதைமாந்தன் ஒருவனாக மாற்றி அக்கதையினுள் வாழச் செய்தது.

குடிநாவிதனான காருமாமாவைப் பற்றிய கதை. காருமாமாவின் மருமகன் கண்ணோட்டத்திலிருந்து சொல்லப்படும் கதை. ஈரோட்டை ஒட்டி உள்ள பகுதிகளின் சமூகக் கட்டமைப்பை எடுத்துறைக்கிறது. குடிநாவிதர்களின் உழைப்பைச் சார்ந்து வாழும் பண்ணையர்கள்; சாயப் பட்டறை தொழிலாளர்கள் படும் வேதனைகள் — கதையில் ஆழமாக பேசப்படுகின்றன.

புதினத்தின் பல அத்தியாயங்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன; சில சிதறடித்து விடுகின்றன. மொத்தத்தில் ஒரு சிறந்த கதை. அனைவரும் படிக்க வேண்டிய கதை.

user_11649

★ 3/5 Feb 02, 2026

சாகித்ய அகாடமி விருதுக்குப் பிறகு தான் இந்த ஆசிரியரையும் புத்தகத்தையும் பற்றி அறிந்தேன். ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதியை மையமாகக் கொண்ட கதை, காரு மாமாவின் இறுதிச் சடங்கில் ஆரம்பித்து ஆசிரியரின் நினைவுகள் வழியாக நகர்கிறது.

மொத்தம் 33 அத்தியாயங்கள், பெரும்பாலானவை சோகமானவை.

user_11648

★ 5/5 Feb 02, 2026

இந்த நாவலின் கதைசொல்லலில் பல்வேறு கதாபாத்திரங்கள் மிகவும் நெருக்கமாக உணரக்கூடியவை. நம்மில் ஒவ்வொருவரும் இது போன்ற மனிதர்களை சந்தித்திருக்கிறோம்.

மிக முக்கியமான படிப்பினை என்னவென்றால் — மனிதர்கள் ஏற்ற இறக்கங்களை அனுபவிக்கிறார்கள், அன்பையும் வெறுப்பையும் உணர்கிறார்கள், ஆனால் இறுதியில் எல்லாமே மனிதநேயத்தில் வந்து முடிகிறது. சண்டைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வாழ்க்கையில் மிக முக்கியமானது மனிதர்களை அவர்களாகவே அன்போடு ஏற்றுக்கொள்வது தான்.