உப பாண்டவம் [Uba pandavam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உப பாண்டவம் [Uba pandavam]

None

4.09/5 · 200+ ratings

இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே.

மகாபாரதம் இந்தியாவின் நினைவுத்திரட்டு, பலநூற்றாண்டு கால மனிதர்களின் நினைவும் ச…

Reviews

user_10942

★ 3/5
Could have been better. Very heavy, confusing and long sentences with no depth of characterisation.

user_10941

..

user_10940

it's good art of written

user_10939

★ 5/5
a good read.

user_10938

★ 5/5
Excellent Book of S.RamaKrishnan.

user_10937

★ 3/5
Different view of Mahabaratha

user_10936

★ 5/5
நேர்த்தியான புனைவு. எஸ்.ரா அவர்களின் மொழி நடை வெகு நேர்த்தியாக இருக்கிறது. போர் பற்றிய மற்ற மஹாபாரத கதாபாத்திரங்கள் பற்றிய உண்மைகள், என மிக விறுவிறுப்பான புத்தகம். அக்ரோணி பற்றிய விளக்கங்கள், எப்படி நதியோடு செல்கின்ற வரலாறு என்று, மிக முக்கியமான புத்தகம். வாசிப்பின் களிப்பில் கட்டுண்டேன்.

user_10935

★ 3/5
After a long time, i have retouched the mahabharatha story. its some what new way of story telling especially this epic. Some new topics and new areas explored. Good.

user_10934

★ 4/5
மகாபாரதத்தை பற்றிய ஒரு வரைபட கண்ணோட்டத்தை இந்நாவல் தருகிறது. மிக எளிமையாக அனைவரும் வாசிக்கும் வண்ணம் இருக்கிறது. அதுமட்டும் இன்றி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் இயல்புமும் ஆங்காங்ககே தனித்தனியாக பின்பற்றும்வகையில் விவரிக்கப்பட்டுள்ளது. தமிழில் மகாபாரதத்தை வாசிக்க சிறந்த முதல் நூல்/நாவல் எனலாம்.

user_10933

★ 5/5
நான் படித்து பிரமித்துப் போன நாவல் உப பாண்டவம். மகா பாரதம் 15000 பக்கங்கள் கொண்ட பெரும் இதிகாசம். 400 பக்கங்கள் கொண்ட புனைகதைகள் ஆக மாற்றி தந்தது அபூர்வம்.இந்த நாவலை போன்று எந்த நாவலையும் பார்த்து பிரமித்த தில்லை. எஸ்ராவின் நாவல்களில் சிறந்தது.

user_10932

★ 5/5
I literally cried after finished this book. It gave me some valuable insights about how to live your present, how to treat others etc.. but after reading this i am now afraid to continue Venmurasu because it may hurt me more and i may cry more than ever. Someone please give me a motivation to continue Venmurasu

user_10931

உப பாண்டவம் -எஸ்.இராமகிருஷ்ணன் ஊரடங்கின் கடந்த சனி ஞாயிறைக் கௌரவர்களோடு கழிக்க முடிவுசெய்தேன். நூலின் பெயரில் பாண்டவம் என்றிருக்க "கௌரவர்களோடு" என்று நான் கூறுவது ஏன் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். இதில் ஒரு உண்மை ஒளிந்துள்ளது. பாண்டவர்களும் கௌரவர்களே. குழப்பமாக உள்ளதா? சரி அதைத் தனிப்பதிவில் காண்போம். இப்போது உப பாண்டவம் என்னும் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் முதல் புதினத்தைப் பற்றிக் காண்போம். இது இவர் எழுதிய முதல் புதினம், ஆனால் எனக்கு இது இவரின் இரண்டாவது புதினம். இவ்வாண்டில் நான் முதலில் படித்த நூல், இவர் எழுதிய "ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை". ஆனால் முதலில் வாங்கப்பட்டது என்னவோ உப பாண்டவம் தான். 2019ஆம் ஆண்டில் நடந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கப்பட்டு, இப்பொழுதாவது என்னைப் படி என்று ஒரு வழியாக என் கை விரல்களைப் பற்றிக் கொண்டது நூல். என் மனமோ நூலில் உள்ள எழுத்துக்களில் ஏறி என்னை இழுத்துக்கொண்டு காலத்தைக் கடந்து பறந்து சென்றது. பாரறிந்த பழங்கதையாம் மகாபாரதத்தை மையமாகக் கொண்டே இந்நூல் அமைந்துள்ளது. பாரதம் முழுமையாக எவராலும் படிக்கப் படாத நீண்ட நூல். எனினும் முழுவதையும் படித்தது போல் பலரும் எண்ணும் நூல். யாரும் அறியாத கதையை எழுதுவது வேறு; யாவரும் அறிந்த கதையை சலிப்பின்றி மீண்டும் படிக்கத்தூண்டும் வகையில் எழுதுவது வேறு; யாவருக்கும் தெரிந்த கதையின், அறியப்பட்ட பகுதிகளின் ஊடே விரவிக் கிடக்கும் அறியப்படாத பகுதிகளை எழுதுவது வேறு; ஆனால் இம்மூன்றையும் விட வேறுபட்டது, அக்கதையின் அறிந்த பகுதிகளின் அறியப்படாத கோணத்தையும், புலப்படாத பின்புலத்தையும், வெளிப்படாத விளைவுகளையும், கவனிக்கப்படாத கதை மாந்தர்களின் கண்டுகொள்ளமல் விடப்பட்ட முடிவகளையும் எழுதுவது. அதையே ஆசிரியர் இந்நூலில் செய்துள்ளார். பாரதக் கதையில் மட்டுமல்ல, தான் எடுத்தாளும் உவமைகளிலும் நாம் வாழ்வில் கவனிக்கத் தவறிய பலவற்றைக் கூறி, படித்த வரியை மீண்டும் ஒரு முறை படிக்க வைத்து மனத்தில் பதிய வைக்கிற���ர் ஆசிரியர். கீழ்க்காணும் வரிகளை ஒவ்வொன்றாக படித்துக் கடக்காமல், ஒரு வரியில் நின்று, அதை மனத்தில் உருவம் கொள்ளச் செய்து, ஒரு நொடி உணர்ந்தபின், அடுத்த வரிக்கு முன்னேறிச் செல்க. யாம் பெற்ற இன்பம் யாவரையும் சேரட்டும். இந்நூலில் என்னைக் கவர்ந்த வரிகளும் உவமைகளும்(பக்க எண்களுடன்): 1. மூவரும் ஓடத் துவங்கிய நேரத்தில் மழை எங்களைத் துரத்திப் பற்றி நனைத்தது(11) 2. நான் இருப்பும் இன்மையும் ஒரே நேரத்தில் காண விரும்புகிறேன்(33) 3. சாத்தியமற்ற சாத்தியங்கள்(34), வனமற்ற வனம்(147), வடிவமற்ற வடிவங்கள்(95) 4. கனவில் இருந்து பறிக்கப்பட்ட ஒரு மலரைக் கையில் வைத்திருப்பது போல(46) 5. கனவிற்குள் பிரவேசித்துத் திரும்பி வரும் அற்புதச் சாவி(46) 6. நினைவுடன் பிறப்பதைப் போல துரதிர்ஷ்டம் எதுவும் இருக்கிறதா(49) 7. தாமரையின் இதழ் அடுக்கினுள் அது தானே மலராத வரை எது உட்புக முடியும்(52) 8. இறப்பு இப்போதுதான் பிறக்கிறது. ஒரு பிறப்பு இறப்பிலிருந்து துவங்குகிறது(53) 9. தன் பிறப்பைத் தானே காணச் செல்லும் மனிதனைப் போல(71) 10. உள்ளங்கையில் நின்று விரல்கள் யாவையும் பார்ப்பது போல 11. புதிய நகரங்களுக்கு மனிதர்களை வரச் செய்துவிடுவதுபோல பறவைகளை வரச்செய்வது இயல்பானதில்லை(107) 12. தலைமாற்றி வைக்கப்பட்ட மணற்குடுவை(137) 13. ஞாபகங்களை அழிப்பதைப் போன்ற துயரம் வேறேது?(142) 14. ஒரு பூவின் இதழ்கள் சொருகி அடுக்கப்பட்ட வரிசைபோல எந்த அறையையும் கட்ட முடியாது, ஓசையையும் காட்சியையும் பிரித்துவிட முடியாது, ஒன்றுபோல வடிவம் கொண்ட போதும் ஒரு மரத்தின் இரண்டு இலைகள் கூட ஒன்றுபோல இருப்பதில்லை(146) 15. தண்ணீரைப் போல எதையும் தன்னுள் அனுமதித்து அழித்துவிட வேண்டியது தான்(146) 16. நீ என் நிழலா? என்னை ஏன் பிந்தொடர்கிறாய்? நான் ஒரு தூரதேசவாசி இந்த மழையைவிட தூரதேசமா? (153) 17. மழை ஒர் உரையாடல். அது ஒரே நேரத்தில் யாவரோடும் பேசுகிறது. நம்மைப் பொல சிலரைப் பிடிக்கும் பிடிக்காது என விலக்குவதில்லை. (153) 18. பாதங்கள் மணலில் கடந்து சென்ற போதும் அதில் சுவடுகள் எதுவும் பதிவாகவே இல்லை(217) 19. கனவுகள் எவர் அனுமதிக்கும் காத்திருப்பதில்லை(276) 20. உன் கால்கள் கூட நீ செல்லும் திசையை அறியக் கூடாது(281) 21. கிருஷ்ணன்: அர்ச்சுனா, நான் ஒரே நேரத்தில் பால்யத்திலும் வாலிபத்திலும், மத்யத்திலும் முதிமையிலும் வாழ்கிறேன் 22. யுத்தம் சிலரின் அந்தரங்க ஆசைகளின் வெளிவடிவம்(354) இப்படியாய் நாளும் இருநூறு பக்கங்களை இளைப்பாறாமல் நடந்து இடைவெளியின்றி கடந்து இனிதாய்க் கழிந்தன இரண்டு நாட்கள்!!! நன்றி!

user_10930

★ 5/5
உபபாண்டவம் - மகாபாரத்தின் நவீன புனைவு. ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துக்களின் மூலம் இந்திய நிலவியலை மற்றும் பாரத கதாபாத்திரங்களை புதிய பரிமாணத்தில் காண முடிந்தது.

user_10929

★ 5/5
அற்புதமான வர்னனை! மகாபாரதம்‍‍ ‍‍‍‍‍ஒரு சிறப்பு பாற்வை

user_10928

★ 4/5
பல ஆண்டுகளாகத் தேடியலைந்த புத்தகம். நண்பன் மூலமாக 2016 சென்னை புத்தகக் கண்காட்சியில் எஸ்.ரா அவர்களின் கையெழுத்தோடு வாங்கப்பட்டு, நாடு கடந்து கடல் கடந்து கைக்குக் கிட்டியது. கிடைத்துப் பல மாதங்களாகியும் படிக்கும் மனநிலை ஏற்படவில்லை. நடுவில் ஆரம்பித்து முப்பது பக்கங்களுடன் நின்று விட்ட வாசிப்பை கடந்த இரு நாட்களில் முடித்து விட்டேன். எஸ். ரா வின் எழுத்து நடையும், காட்சி விவரணைகளும் மிகவும் வசீகரிக்கின்றன. பாரதக் கதை ஒரு தூர தேச பயணியின் மூலம் விரிவடைகின்றது. முன் பின்னாக கதை மாந்தர்கள் அறிமுகமாகின்றனர். ஆரம்பத்தில் பெயர்கள் கொஞ்சம் குழப்பத்தைக் கொடுத்தாலும் கதையின் போக்கில் அது தெளிவடைந்தது. பாரதத்தையும் அதன் உப கதைகளையும் அவற்றிற்கான காரணிகளையும் வாசிக்க வாசிக்க மலைப்பு ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. ஒரே கதைதான் ஒவ்வொருவரின் புரிதலில் வேறுவேறு கதைகளாக மாறிவிடுகின்றது. இந்த வருடத் தொடக்கத்தில்தான் ஆனந்த் நீலகண்டனின் "அஜயா" வாசித்திருந்தேன். இந்த இரு புத்தகங்களும் பல இடங்களில் ஒன்று பட்டு நிற்பதாகவே படுகின்றது.

user_10927

★ 5/5
My first read about the epic Mahabharata...'Why Mahabharata?' The answer of this question lies in a another such one, 'why God?'. People in this world in front of God seeks the things they need such as wealth, fame, power, goodness, peace, salvation and so on...And the God too fulfill the aspirations of his/her/its believers. The great epic "The Mahabharata" does the same magic to the readers and re-writers of the legend which contains all core values of human beings bravery, love, friendship, evilness, goodness, fantasy and so on...It is a talisman of cultural, philosophical and political ideals of Indian subcontinent. "Shri Ved Vyasa" is the light who illuminates this mystical world, the travelers of that world conceive and understand the world with their own eyes and perception. Its not the story of stranger but their own... "S.Ramakrishnan" is one such traveler who narrates his experience his journey in that world through "Uba Pandavam".In this he explored the new language,the new dimensions and the new prespectives to the charecters(especially least concentrated ones in main plot).The internal worlds of Dhirtarashtra,Bhishma,Vidhura,Shakuni,Gandhari, Draupathi, Kunthi and their external implications of their internal worlds is central context of this masterpiece.In that sense "Uba pandavam" is the journey to be experienced rather than hearing as sermons on it...After all "All Roads Leads To Hastinapur" only... My humble respects to Shri Krishna Dwaipayana Vyasa 'Vyasaya Vishnu Roopaya, Vyasa Roopaya Vishnave, Namove Bhrama Nithaye, Vashistaya Namo Namaha'... And finally here are some magical moments of that journey... * “இது நாள் வரை நகரையும் பாண்டவர்களையும் பற்றிப் பீடித்திருந்த ஆசைதான் நாய் உருவம் கொண்டு அவர்கள் மின் வந்திருக்கிறது என்பதைக் கண்டான். சதா விழிப்புற்றபடி அலைந்து கொண்டிருக்கும் வேட்கையென்னும் அந்த நாய் உருவினைக் கண்டபடியிருந்த அவனும் பிறகு தன் கண்களை மூடிக் கொண்டு விட்டான்.” * “கிருஷ்ணை யாருமற்ற தன் அறையில் அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கு தன் புத்திரர்களை விடவும், கணவர்களை விடவும், பிரியத்திற்கு உரியவனாக கிருஷ்ணன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. திரௌபதி உறவின் வரம்புகளுக்குள் கிருஷ்ணனை வைத்துக்கொள்ளவில்லை. அவன் கிருஷ்ணன். அதுவே போதுமானதாய் இருந்தது.” * “நான் திகைப்புற்று கண் திறந்தபோது படகு நதியில் போய்க் கொண்டிருந்தது. அஸ்தினாபுரத்திற்கு என்னை கூட்டிச்செல்ல ஏற்றி கொண்ட மனிதன் துடுப்பிட்டவாறே இருந்தான். அவன் இப்பொழுது வாலிபனை போல தோற்றம் கொண்டிருந்தான். எனக்கு தடுமாற்றமாய் இருந்தது. "நீ கிருஷ்ண துவைபான வியாஸனா?" ஆம் என்று தலையசைத்தான். அப்பொழுது தான் கவனித்தேன். படகை நதி கரைக்கு செலுத்தாமல் நதியின் திசையில் செலுத்திக்கொண்டிருக்கிறான் என. நாங்கள் நதிவழியில் வெகு தூரம் வந்துவிட்டோம். எதுவும் திட்டமாக அறிந்துக்கொள்ள முடியவில்லை. அவனிடம் நான் கேட்டேன், "நாம் எங்கே செல்கிறோம்?" "துவக்கத்திற்கு". இதன் துவக்கத்திற்கு என்றோ, அது எங்கிருக்கிறது என்றோ, அவன் சொல்லவோ நான் கேட்கவோ இல்லை. நதி செல்லும் திசையிலேயே படகு சென்றுக்கொண்டிருந்தது.”

user_10926

★ 3/5
மகாபாரதமும் இராமாயணமும் நினைவு தெரிந்த வயதில் இருந்தே பகுதிகளாவோ முழுமையாகவோ படித்துக்கொண்டே வந்திருக்கிறேன். மகாபாரதம் சுவையாக இருந்த அளவிற்கு என்னால் இராமாயணத்தில் ஒன்ற முடிவதில்லை, ரசிப்பதும் இல்லை. மாறாக, ஒவ்வொரு வயதிலும் இந்த இதிகாசங்களை படிக்கும் போது ஒரு புதுவித கண்ணோட்டத்தை அடையாமல் இல்லை.உப பாண்டவம் என்பது நிச்சயம் மஹாபாரத்தை தெரிந்த ஒருவர் மட்டுமே படித்து சுவைக்க கூடிய ஒரு நூல். ஏனெனில், இங்கே நிகழ்வுகள் காலவரிசையில் செல்லவும் இல்லை, தொடர்ச்சியான முழுமையான மகாபாரதத்தை நீங்கள் வெறும் 400 பக்கங்களிலும் எதிர்பார்க்கவும் முடியாது. நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடப்பதுடன் சில கதாபாத்திரங்களுக்கு முன்னைய அறிமுகமும் தேவைப்படும்.ஒரு பயணியின் கண்ணோடத்தில், ஆங்காங்கே நடைபெற்ற / கேள்விப்பட்ட செவிவழி கதைகளை, அதுவும் பெரும்பாலான மகாபாரதங்களில் (மகாபாரதம் என வெவ்வேறு நபர்களால் தொகுத்து வழங்கப்பட்ட Versions) முக்கியத்துவம் தரப்படாத பகுதிகள், அல்லது நபர்களை பற்றி தொகுத்து வழங்கப்பட்டிருப்பதே இந்த நூல். (எஸ்.ராமகிருஷ்ணன் பயணக்கட்டுரைகளுக்கு பெயர் போன ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது).அதேவேளை, நாங்கள் அறிந்த கதாபாத்திரங்கள், சந்தர்ப்பங்களை பற்றிய புதிய கண்ணோட்டத்தையும் இதில் அறிய முடியும். நிற்க, இப்போது இருப்பது போன்ற "நாகரிக்கப்படுத்தப்பட்ட" அல்லது "மாற்றியமைக்கப்பட" இதிகாசத்தின் பகுதியாக இது இருக்காது. சில பகுதிகள் அக்காலத்து வழக்கத்தையும் / கட்டுப்பாடுகளையும் சொல்லாமல் இல்லை. உதாரணமாக, போரில் சமதகுதி உடையவர்கள் போட்டியிடுதல் என்பதை வர்ண பேத அடிப்படையில் காட்டி இருப்பார் ஆசிரியர். அதே போல், இப்போது கல்வி மறுக்கப்பட்டது போல ஆயுதம் ஏந்தி போராடுவது ஒரு சாராருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மேலும், பீஷ்மர் எனும் சகல அதிகாரமும் பொருந்திய பிதாமகர் ஒருவரே தனக்கு பிடிக்காத சில காரியங்களை அரசாட்சி/ சமூகம் என்பதற்காக நிறைவேற்றுவார். இப்படி நிறைய விடயங்கள் எனக்கு விளங்கியபடி அர்த்தப்படுத்தி கொண்டேன்.சில விடயங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், சில விடயங்கள் புதிதாக இருந்தன. உதாரணமாக, விதுரரின் முடிவு. மேலும் முக்கிய கதாபாத்திரங்களின் மனஓட்டத்தை ஒரு புதிய பார்வையிலும் வழங்கி நின்றது.மகாபாரதத்தின் கதை ஓரளவு தெரிந்திருந்தால் நிச்சயம் இந்த புத்தகம் படிக்கலாம்.

user_10925

★ 4/5
"உப பாண்டவம்" - எஸ். ராமகிருஷ்ணன் *************************************** மகாபாரத பாண்டவ கதையில் பேசப்படாத மாந்தர்களைப் பற்றி நவபுனைவாக 'உபபாண்டவம்' என்ற பெயரில் திரு. எஸ் ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். மாபாரதம் பொருட்டு படித்து தெரிந்துகொண்டது மட்டுமல்லாது, முழு பாரதத்தையும் எவரும் படித்திலர், அப்படி படிக்க வேண்டுமென்றாரல் மூலமொழியில் 14000 பக்கம் வாசிக்க வேண்னும் என குறிப்பிடுகிறார். மேலறிந்து கொள்ள, வடநாட்டிற்கு பயணம் செய்து, பின் கர்நாடக மாநிலத்து பெரியவர் ஒருவர் மூலம் மாபாரதத்தின் கதைகளை மூலமொழி மொழிபெயர்ப்பின் அறிந்து கொண்ட எஸ்.ரா, இந்நாவலை முதல்நபர் பார்வையில் எழுதியிருக்கிறார். அதாவது தானும் அஸ்தினாபுரம், இந்திரப்பிரஸ்தம், துவாரகை, இமயம் என மகாபாரத மாந்தர்களை பார்த்தபடி செல்வதாக எழுத பட்டிருக்கிறது. @@@@@@@ *சூல் ===== அத்தினாபுரத்தை நோக்கிய பயணத்தில் சூதர்கள் இருவரை சந்திப்பதிலிருந்து மூவருக்குள்ளாக தொடங்குகிறது கதையாடல். சூதர்களின் படி நாடு நகரங்கள் அவர்களின் வாய்மொழி வர்ணனைகளே. அப்படி ஒரு நாடோ நகரமோ இருந்ததில்லை என கூறுகின்றனர். அவர்களது கதையாடலில், பின்வரும் சில கதை மாந்தர்கள் எப்படி சூல் கொண்டு பிறந்தார்கள் என்பதை சொல்கிறது. மச்சகந்தி் /பரிமளகந்தி என்றழைக்கப்பட்டு சத்யவதியாகி, சாந்தனு மன்னனுக்கு மகன்களை பிரசவிக்கிறாள். அவளுக்கு பிறந்த மகன்கள் அரசவாரிசு தராமல் இறந்துபோனதால், தனது முந்தைய வாழ்வில் தனக்கு பிறந்த வியாசர் மூலம், தனது விதவை மருமக்களுக்கு பிள்ளைகளை பெறுகிறாள். 'அம்பிகா' மூலம் திருதராஷ்டிரன்; 'அம்பாலிகா' மூலம் பாண்டு; பணிப்பெண் 'சுபா' மூலம் விதுரன். *பால்ய விருட்சம் ============= கர்ணன்/பாண்டவர்கள் - ப்ரீதா என்பவள் துர்வாசர் மூலம் வாக்குருவங்கள் பெறும் வரம்பெற்றாள். அதனை சூரியனிடம் பயன்படுத்தி, கர்ணனை பெறுகிறாள். பிறகு அவள் கன்னிமை பெற்று பழையதை மறந்து வலுவல்லாத பாண்டுவை மணக்கிறாள், குந்தியாக. அதே வாக்குவருவ வரத்தின் மூலம் மும்முறை குழந்தையை பெறுகிறாள். பிறகு பாண்டுவின் இன்னொரு மனைவி மாத்ரிக்கு வாக்கு சொல்லிகொடுத்து, இரட்டையரை பெறுகிறாள் கௌரவர்கள் - காந்தாரியெனும் கனி, கஜகர்ப்பம் இருவருஷம் கொள்ளும் என்றுரைத்து, பின் வெடித்துச் சிதறிய விதைவிருட்சங்களாக கௌரவர்களை பெறுகிறாள் சிகண்டி - பார்ப்பவர் ஆணோ பெண்ணோ, அவரவர் கண்ணுக்கு ஏற்ப அவ்வினமாகவே தோன்றும், பூர்வ ஜென். ஞாபகங்களோடு பிறந்தவர் அபிமன்யு - கர்ப்பவாசத்தில் காதுகளே முதலில் திறக்கின்றன. வசுதேவனின் பத்மவியூகத்தை உள்ளிருக்கும்பொதே அறிந்துவிடுகிறான் பீஷ்மர் - சாந்துனு-கங்கைக்கு பிறந்தவர்; கங்கை புத்திரர்; பகடையாட்டத்தில் பாண்டுவிடம் திருதிராஷ்ட்ரன் தப்பாட்டம் ஆடியதை நடுவனான விதுரன் அறிவித்தல். யுயுத்சு - திருதராஸ்ட்ரனுக்கும் சூத பணிப்பெண்ணுக்கும் பிறந்த மகன் ராதேயா எனும் கர்ணண், அதிரதன் எனும் தேரோட்டியின் மகனாக வளர்கிறான் அஸ்வத்தாமன் - பிறப்பால் பிராமணனானாலும், அஸ்திரப் பிரயோகங்களில் க்ஷத்ரயரான குலகுரு துரோணரின் மகன் கடோத்கஜன் - பீமன்-வன அரக்கி மகன் *உதிரவாசிகள் ============ புரு - அஸ்தினாபுரத்து அரசன் யயாதி'யின் கடைசி மகன். தந்தையின் வேட்கைக்காக இளமையை தானமளித்தவர். பீஷ்மர் - தன தந்தை சாந்தனுவிற்காக செம்படவ பெண் கேட்டு செல்கிறார். அவளின் வாரிசுகளே முடிசூட வேண்டும் எனும் வாக்கின் அடிப்படையில், அவளை தன தந்தைக்கு மனம் முடிக்கிறார். மாத்ரி - யுதிஷ்டிரன் தனது தந்தை பாண்டு, மாத்ரியுடன் கூடி இறந்ததை காண்கிறான். அவள் பாண்டுவின் சிதையுடன் எரிந்து போவதை சலனமற்று பார்த்து செல்கிறான். *நகரங்களின் உரையாடல் =================== அஸ்தினாபுரம் , இந்திரப்பிரஸ்தம், விராடதேசம், பாஞ்சாலம், துவாரகை எனும் நாடுகளின் உரையாடல்கள் நிகழ்வதாக புனையப்பட்டிருக்கிறது *இரு உடலாளர்கள் ============= சிகண்டி - துருபத நாட்டின் அரசன் துருபதனின் மகன்(ள்) அம்பா என்றும் அழைக்கப்படுகிறாள். பீஷ்மர் தனது சகோதரர்களுக்காக அஸ்தினாபுரத்துக்கு அம்பா'வை கடத்துகிறார். சால்வனின் மீது கொண்ட அம்பாவின் பிரியம் அறிந்து விடுவிக்கப்படுகிறாள். இருந்தும் அவமானப்படுத்தப்பட்டு அஸ்தினாபுரத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டதால், பீஷ்மரிடம் வன்மம் கொள்கிறாள், அம்பா எனும் சிகண்டி. அர்ஜுனன் - பிருக்கன்னளை'யாக விராடதேசம் போகிறான். துரியோதனன் - மேற்பகுதி வஜ்ஜிரமாகவும் கீழ்ப்பகுதி மலரை போன்றதுமான இரு உடல் அமைப்பு கொண்டவன் . *மாயசபா ======= 'மயன்' எனும் சிற்பியால் அமைக்கப்பட்ட 'மாயசபா' எனும் மணிமண்டபம் பாண்டவர்களுக்காக அமைக்கப்பட்டது. அது பிறிதொரு நாளில் அழிவிற்கு உட்படும் என்பதை அறிந்தே இருந்தான் மயன். *விடுபட்ட குரல்கள் ============= வேடுவ தாயும் அவளது மகன்களும்; கட்டை விரலிழந்த அஸ்வத்தமனும்; குரல் அறுபட்ட நாயும்; அழிதொழிக்கப்பட்ட நாகர்களும் மகாபாரதத்தில் விடுபட்ட குரல்களாக அறியப்படுகிறது *கதா ஸ்த்ரீகள் ========== சத்தியவதி(மச்ச/பரிமளகந்தி) - சாந்தனு மன்னனின் மனைவி மாத்ரி - மத்ர தேச இளவரசி, பீஷ்மரால் பாண்டுவிற்கு திருமணம் செய்யப்பட்டு இரட்டையர்களை பெற்றவள்(நகுலன்/சகாதேவன்). அவர்களை குந்தியிடம் ஒப்படைத்து, தன்னுடன் கூடியபோது இறந்த கணவன் பாண்டுவுடன் உடன்கட்டை ஏறியவள் காந்தாரி - தன் பிள்ளைகளை பலியிட்டவர்களையே ஆசிர்வதிக்கும் சூழலில் தள்ளப்பட்டவள். காரணம் கிருஷ்ணன். கௌரவ மக்கள் போனபின் பாண்டவர்களிடம் அவமானப்பட்டு வாழவிரும்பாதவள். பாஞ்சாலி - பாஞ்சால தேசத்தவள். அவளுக்கான முடிவை அவளே தேர்த்தெடுக்கமுடியாத, தீயில் பிறந்த திரௌபதை. தன் பிள்ளைகளை கொன்ற அஸவத்தாமனுக்கு சாவிற்கும் மேலான தண்டனையை தந்தவள். துச்சலை - கௌரவர்களின் தங்கை. குரு வம்சத்தின் ஒரே பெண் வாரிசு. தண் தாய் காந்தாரியின் சாடையை கொண்டவள்.கௌரவர்களின் செல்லதங்கையானவள் அஸ்தினாபுரத்தை விட்டே போகிறாள், தன் வம்சத்தையாவது பாண்டவர்கள் விட்டுவைப்பார்கள் என. பானுமதி - துரியோதனின் மனைவி. தனது மகன் லட்சுமணனை அபிமன்யுவின் வில்லுக்கு பறிகொடுத்தவள். கதா புருஷர்கள்: ------------ ஏகலைவன் - அஸ்திர சாஸ்திரங்களில் சொல்லாதவற்றை வண்டுகள்,பறவைகள்,வேட்டை மிருகங்களின் வேட்டை மூலம் அஸ்திர பயிற்சியை பெற்றவன் உலூகன்- சகுனியின் மகன் லக்ஷ்மணன்- துரியோதனன் மகன் அபிமன்யு-அர்ச்சுனன் மகன் நகுலன் - சகுனியை கொன்றவன் சஞ்சயன் - திருதராஷ்டரனி்ன் அரண்மனை சூதன் எனும் யோகி. முன்கூட்டியே குருஷேத்திர போர் முடிவினை அறிந்தவன். சாம்பவன் - கிருஷ்ணனின் மகன், பேரழகன். பெண்களின் பார்வை அவனையே நோக்கியபடியால், தன் தகப்பனின் சாபத்தின் மூலம், தொழுநோய் பெற்றவன். விகர்ணன் - துரியோதனின் இளவல்களில் ஒருவன். தர்மத்தின் வழி நிற்பவன். அரச வாழ்வை வெறுத்து, சூத விதுரன் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் பால் அன்பு கொண்டவன். ஜரா - கிருஷ்ணனின் ஒன்று விட்ட, வர்ண கலப்பில் பிறந்த சகோதரன். அதனால் ஏற்பட்��� அவமானங்களினால் பகைமை கொண்டு கிருஷ்ணனை அவன் பாதத்தில் அம்பெய்தி கொன்றவன் . *உபபாண்டவர்களை தேடி =================== உபபாண்டவர்கள் - திரௌபதிக்கும், பாண்டவர்களுடனான ஒவ்வொருவருக்கும் பிறந்த மகன்கள், பிரதிவிந்தன் , சுதசோமன் , சுருதகீர்த்தி, ஸ்தானிகன், சுருதி சர்மா. பிள்ளைகள் பெற்ற பின், தமது கணவர்களுடனான வாழ்வை வெறுத்து, தமது மகன்களை தாய்மாமன் கிருஷ்ணனின் வீட்டில் வளர்க்கிறாள். தாய் தந்தையின் அன்பு முழுதும் பெறாது, இளமை பருவம் கண்ட அந்த உபபாண்டவர்கள், குருஷேத்ர போரின் கடைசியில் அஸ்வத்தாமனால் கொல்லப்படுகின்றனர். *வெண்பசு வேண்டியவன் ================== தனது யாகத்துக்கு, 100 வெண்பசுக்களை யாசகமாக வேண்டி அலைபவன், சூதாட்டத்தின் மூலம் யுதிஷ்ட்ரனிடம் 21 பசுக்களை பெறுகிறான். பின்பு துரியோதனனையும் வெல்கிறான். ஆனால் சகுனியிடம் தோற்கிறான். சகுனி, "யார் யாரிடமிருந்து சூதின்மூலம் பசுக்களை வென்றாய்?" என வினவுகிறான். யுதிஷ்ட்ரனிடம் என பதில் வந்ததும், யாசிகனிடம் வென்றதை அவனிடமே திருப்பி அளித்து அனுப்பி வைக்கிறான். சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்களை வெல்ல, அங்கே சூழ்ச்சியை தொடங்குகிறான் சகுனி! *யுத்த துவக்கம்; *யுத்த பட்சிகள் ==================== குருஷேத்ர போரில்.... பாண்டவர்களின் சேனாதிபதிகளாக, துருபதன், விராடன், திருஷ்டத்யும்னன், சிகண்டி, சாத்யகி, திருஷ்டகேது, மகதராசன், சகாதேவன் என்போரும், கௌரவர் படையில் கிருபர், துரோணர், சல்லியன், ஜயரதன், சுதட்சிணன், கிருதவர்மா, அசுவத்தாமா, கர்ணன், பூரிசிரவா, சகுனி, பாகுவிகள் என்போரும் அணிகளாக போர் புரிந்துள்ளனர் . லட்சுமணன்- துரியோதனின் மகன். அர்ச்சுனனின் மகனான அபிமன்யுவால் கொல்லப்பட்டவன். சகுனி தன் மகனை இழந்த துக்கத்தில் இனி சூது ஆடுதில்லை என பகடையை விட்டொழித்தான். துரோணரின் மரணம் , 'அஸ்வத்தாமா இறந்துவிட்டது' எனும் ஒரே சொல்லில் முடிந்தது. அஸ்வத்தாமா என்ற தனது மகனின் பெயரில் உள்ள யானை இறந்துபட்டதை முழுதும் அறியாது முடிந்தார். கடோத்கஜன் - பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்தவன், கர்ணனால் கொல்லப்பட்டவன். கர்ணனும் புத்திர சோகத்தில் மூழ்கினான், தனது இரு மகன்களை போரில் இழந்ததின் மூலம். *சரதல்பம் ======== பீஷ்மரின் மரணம், அம்பா(சிகண்டி) எனபவளால் நிகழ்கிறது. தன் மரண நேரத்தை முடிவு செய்யும் வரம் பெற்றமையால், தட்சணாயணம்(சூரியன் தெற்கில் உள்ள காலம்) காலம் முடியும் வரை அம்பு படுக்கையில்(சரதல்பம்) பொறுத்திருந்து, உத்ராயண காலத்தில்(சூரியன் வடக்கில் உள்ள காலம்) உயிர் துறந்தார். அதாவது அவருடைய வாழ்வு சூரியனுடன் இணைக்க பட்டதாக கூறப்படுகிறது. *நீருக்குள் ஒளிந்தவன் =============== போரின் நடுவே காட்டில் பதுங்கிய துரியோதனனை பீமனிடம் வேடுவர்கள் இருவர் காட்டி கொடுக்கிறார்கள். கிருஷ்ணனின் சூழ்ச்சியால், மேல் உடல்பகுதியில் பலமுள்ளவனும், கீழ் உடல்பகுதியில் பூவை போன்ற மேன்மையுடைவனான் துரியோதனன் வீழ்த்தப்படுகிறான். மறுநாள் வேடுவர்களை தண்ணீர்மடு உள்வாங்கி அழிக்கிறது. அஸ்த்வதாமனிடம் தனது உதிரத்தை தந்து அவனை தளகர்த்தாவாக்குகிறான் துரியோதனன். அதே கோபத்தில் சென்றவன் உபபாண்டவர்களை(பாண்டவர்களின் மகன்கள்) கொல்கிறான். *வெறுமையின் சித்திரம் ================== 100 மகன்களை இழந்த திருதராஷ்டிரனை அஸ்தினாபுரத்தைவிட்டு நீங்க சொல்கிறாள் கௌரவர்களின் தங்கை துச்சலை. மறுக்கிறான் தந்தை. அதே வேளையில், சூத பெண்ணுடன் சேர்ந்து பிறந்த யுயுத்சுவும், தந்தை திருதராஷ்டனை தன்னுடன் அழைக்கிறான். அதற்கும் மறுதலிப்பே பதில். கணவனை இழந்த மருமக்களையும் அவர்களின் குழந்தைகளையும் அவரவர் நாட்டுக்கே அனுப்பி வைத்தாள் காந்தாரி. குந்தியின் அழைப்பை யுதிஷ்டிரன் மூலம் மறுக்கிறாள் கர்ணனின் மனைவியை, தாம் சூதனின் மனைவியாகவே இருந்துவிடுகிறேன் என்று. வரமறுத்ததை குந்தியிடம் தெரிவிக்கும் யுதிஷ்டிரன், "ரகசியங்களை நீங்கள் ஒளித்து வைத்ததன் அவமதிப்பை நாங்கள் தொடர வேண்டியிருக்கிறது. இனி உங்கள் எவரிடமும் ரகசியம் தங்காது" என சொல்லி செல்கிறான். *சப்திக்கும் நீரூற்று ============= சார்வாகன் - அரியணையேற வரும் யுதிஷ்டிரனை, ரத்தக்கறை படிந்த நீ ஆட்சி செய்யக்கூடாதென்கிறான் சார்வாகன் எனும் பண்டிதன். கிருஷ்ணனின் சூழ்ச்சியால், அஸ்தினாபுர மக்களால் உயிருடன் எரியூட்ட படுகிறான். *முது பர்வம்; *நினைவில் வாழ்பவர்கள் ============================= பீமனுக்கும் திருதிரஷ்டானுக்கும் பகைமை அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது . ஒரு கார்த்திகை பௌர்ணமியில், மூப்பேறிய திருதிராஷ்ட்ரன், காந்தாரி, குந்தி, விதுரன், சஞ்சயன் மற்றும் சில குதிரைகளும் வேதியர்களும் என, அஸ்தினாபுரத்தை விடுத்து கானகம் செல்கிறார்கள். ஒவ்வொருவராக இயற்கையுடன் கலக்கிறார்கள் . விதுரன் பிரிந்தபின் அஸ்தினாபுர ஆட்சி வாசம் யுதிஷ்டிரனுக்கு கூடவில்லை. வயது மூப்பும் கொண்டபின், அறுவராக இமய மலை நோக்கி பயணப்பட்டான் யுதிஷ்டிரன். ஏழாவதாக ஒரு நாயும் அவர்களுடன் பயணப் பட்டது. பனிமலையில் ஒவ்வொருவராக வீழ்ந்தபின், கடைசியில் யுதிஷ்டிரன் நாயுடன் தனியே செல்கிறான்., அவனும் வீழந்தபின் நாய் மட்டுமே சஞ்சயனுடன் ஒடுங்கிவிடுவதாக முடிகிறது பாரதம். @@@@@@@ நமது சிந்தையிலும், ஆழ்மனத்திலும் உள்ளிறங்கி நமக்குள் இருக்கும் நியாய தர்ம தராசை வெளிக்கொணரும் விதமான எழுத்துக்கள். அதை மகாபாரத கதையில் வருபவர்களின் மூலமாக நம்மை ஆழம் பார்ப்பாதாகவே இருக்கிறது. இதில் சொல்லப்படும் பல கவனிக்கப்படாத கதைகள், நிச்சயம் நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. "மகாபாரதத்தில் வரும் பல கிளை கதைகள் , நிச்சயம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது", என்பதனை எங்கயோ படித்ததாக நினைவு..எண்ணி பார்த்தால் நிச்சயம் அப்படிதான் இருக்கிறது. இப்புத்தகத்தை திரைப்படங்களை போல வகைப்படுத்த வேண்டுமென்றால் Pyshco-Tragedy Drama(18+விஷயங்களும் அடக்கம் ) எனலாம். பொறுமையாக நேரமெடுத்து படிக்க வேண்டிய புத்தகம். எஸ்.ரா அவர்களின் முதல் புதினம் என நம்பமுடியாத அளவிற்கு ஆழ்ந்துணர்ந்து எழுதப்படாதாகவே தெரிகிறது.

user_10924

★ 4/5
மஹாபாரதத்தின் சுருக்கம் ஒரு வழிபோக்கனூடே விவரிக்கும் இந்த நூல் கதாநாயக வில்லன் பாத்திரங்களை அழித்தொழித்து அதற்குரிய இயல்பினூடேயும் பாண்டவர்களின் வாழ்வியல் முறைகளையும் தர்ம அதர்மங்களை மஹாபாரத்தின் வழி சொல்லாமல் இயல்பாய் வெளிப்படுத்தி இருப்பது சிறப்பு. ஒரு வனம் அழியும் போது ஏற்படும் சலனங்களை பாண்டவர்களின் மாய நகரினூடே எடுத்துச் சொல்லப்படுகிறது. இதன் கதை பெண்களின் சக்தி மூலமாகவே கொண்டு செல்லப்படுகிறது. தொடக்கம் குழப்பத்தில் தொடங்கினாலும் விறு விறுப்பான நிலை ஆசிரியரின் எழுத்தினூடே விரிந்து செல்வதோடு வெவ்வேறு நிகழ்வுகள் முற்றுப்பெறாமல் ஒருமித்தே பயனித்து ஒரு புள்ளியில் முற்று பெறுவதும். படித்த முடி���்த பொழுது மனதில் கனமும் வெறுமையும் ஏற்பட வைக்கும் இந்த நாவலை அவசியம் படிக்கலாம்...

user_10923

★ 4/5
எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ள நாவல் உப பாண்டவம். இது மகாபாரத கதையல்ல , எனினும் மகாபாரதக் கதையில் வரும் பெரிதும் அறியப்படாத நபர்கள் , சம்பவங்கள் பற்றி 18 தலைப்புகளில் எழுதப்பட்டவை. இதை படிப்பதற்கு முன்பு சிறிதளவேணும் , மகாபாரதம் பற்றி தெரிந்திருத்தல் அவசியம். பீடிகை : கதையாசிரியர் துரியோதனன் படுகளம் காணக் காஞ்சிபுரம் செல்கிறார். துரியோதனன் படுகளம் என்பது வட மாவட்டங்களில் நடக்கும் ஒரு வைபவம் , இதில் பீமன் துரியோதனனை கொல்லும் காட்சி இடம்பெறும் , இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் , அந்த மண்ணை எடுத்து விளை நிலங்களில் தூவுவர். செல்லும் வழியில் ஒரு குடுகுடுப்பைக்காரனை சந்திக்கிறார், அவன் யாரும் இல்லா நீர்நிலையில் அஸ்வத்தாமா இருப்பதாக கூறிச் செல்கின்றான். பின் பயணி ஒரு நதியை கடந்து , அஸ்தினாபுரம் செல்கிறார் , அங்கு மகாபாரதக் கதையை விளக்கும் இரு சூதர்களைச் சந்திக்கிறார் , அதில் ஒருவர் பார்வையற்றவர் , மற்றவர் செவித்திறனற்றவர். 1. சூல் சூல் என்றால் கர்பம் தரித்தல் , இதில் மகாபாரத கதையில் வரும் பல்வேறு சூல் கதைகள் இடம்பெற்றுள்ளன. மகர சூல் சூதர்கள் மச்சகந்தி என்னும் சத்யவதி பிறந்த கதையை கூறுகின்றனர். வகவன் என்னும் அரசன் நீரில் குளிக்கும்போது , மீன் ஒன்று கர்பம் தரித்து அதில் பிறந்தவள் மச்சகந்தி. பின்னாளில் பராசகர் என்னும் முனிவர் அவரை சத்யவதியாக மாற்றுகிறார். பராசகர் மற்றும் சத்யாவதிக்கு பிறந்தவர் வியாசர் .சாந்தனு மற்றும் சத்யாவதிக்கு பிறந்தவர்கள் சித்ரகந்தன் , விசித்திரவிரியன் . ஜாலவதி கௌத்தமரின் மகன் சரத்வான் , இவர் தவம் புரியும்போது , தவத்தை கலைக்க , இந்திரன் ஜாலவதியை அனுப்பிகிறான். தவம் களைந்து , வீரியம் வெளிப்பட்டு , அதனால் நாணல் ஒன்று கர்பம் தரித்து , அதன் மூலம் பிறந்தவர்கள் கிருபன் ,கிருபை . சாந்தனு அவர்களை அரண்மனையில் வளர்க்கிறன் , பின்னாளில் சரத்வான் அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கிறார் , பின்பு கிருபை துரோணரை மணக்கிறாள். அவர்களுக்கு பிறந்தவன் அஸ்வத்தாமன். துரோணர் இவர் துரோணம் என்னும் மரக்கலத்தில் ரிஷியின் வீரியம் செலுத்தப்பட்டு வளர்ந்தவர். நியோக சூல் சத்யாவதி தன் இரு பிள்ளைகளும் நலிவுற்று இருப்பதால் தன் முதல் மகனான வியாசரை அழைக்கிறாள். வியாசர் , அம்பா , அம்பாலிகா மற்றும் பணிப்பெண் இவர்களுக்கு முறையே பிறந்தவர்கள் பாண்டு , திருதிராஷ்ட்ரன் மற்றும் விதுரன். உறவின் பொது அம்பாலிகா கண் மூடியதால் திருதிராஷ்ட்ரன் அந்தகனாகிறான். சிகண்டி முற்பிறவி அம்பிகா சிகண்டியாக துருபத தேசத்தில் பிறக்கிறாள். ஆண் , பெண் இரு உடலாளர். கர்ணன் குந்திக்கும் சூரியனுக்கும் பிறந்தவன் . பஞ்ச பாண்டவர்கள் பாண்டு சொன்னமந்திரத்தை குந்தி , மாத்ரி இருவரும் சொல்வதன் மூலம் பிறந்தவர்கள் கௌரவர்கள் காந்தாரி கஜக்கர்பம் தரித்து நூறு கலசங்களில் வளர்ந்தவர்கள். 2. பால்ய விருட்சம் இது மகாபாரத கதை மாந்தர்களின் குழந்தை பருவத்தை சொல்வது. பீஷ்மன் தனக்கு முன்பிறந்த ஏழு குழந்தைகளும் இறந்துவிட தனிமையில் வளர்கிறான் பீஷ்மன் . திருதராஷ்டிரன் : யாரும் துணையின்றி தனிமையில் பால்யத்தை கழிக்கிறான் ஓசைகளின் துணையோடு. பாண்டவர்கள் துரோணரின் ஆஸ்ரமத்தில் வில்வித்தை கற்றுக்கொள்கின்றனர். அப்போது துரோணர் அனைவரையும் தண்ணீர் எடுத்து வரச்சொல்கிறார். அஸ்வத்தாமனுக்கு தனிமையில் மந்திரம் கற்று தர வாயகன்ற பாத்திரத்தை தருகிறார் , எனினும் அர்ஜுனனும் உடன் வந்து கற்கிறான். யுயுத்சு திருதிராஷ்டிரனுக்கும் வைசிய பெண்ணுக்கும் பிறந்தவன் , 102வது கௌரவர். கடோத்கஜன் பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்தவன் , இடும்பி பீமனை காண அஸ்தினாபுரம் வருகிறாள் எனினும் குந்தி ,இடும்பி பீமனை சந்திக்க மறுத்து விடுகிறாள். 3. உதிரவாசிகள் இதில் பிள்ளைகள் தன் தாய் , தந்தைகளின் ஆசைக்கும் , உறவுக்கும் உதவி செய்வது பற்றி வருகின்றது. யயாதி இவன் அஸ்தினாபுரத்து பண்டைக்கால அரசன் , இவன் மனைவிகள் தேவயானி மற்றும் சர்மிஷ்டை . தேவயானி யயாதி இவர்களுக்கு பிறந்தவர்கள் யது , இவன் வழிவந்தவர்கள் யது வம்சத்தினர் மற்றும் துர்வசு ,இவன் வழி வந்தவர்கள் துர்வம்சத்தினர் . சர்மிஷ்டை மற்றும் யயாதிக்கு பிறந்தவர்கள் புரு , துருயு மற்றும் அனு . புரு : இவன் தன் தந்தை யயாதிக்காக தன் இளமையை விட்டுவிட்டு முதுமை அடைகிறான். யுதிஷ்டிரன் பாண்டு யாருடன் உறவு கொண்டாலும் உடல் வெளிரி இறந்து விடுவான் , இருந்தும் யுதிஷ்டிரன் பாண்டு , மாத்ரி இணைவதை பொறுத்து கொள்கிறான் , இதில் பாண்டு இறந்து மாத்ரி உடன்கட்டை எரிகிறாள். பரத்வாஜர் பிரகஸ்பதி தன் அண்ணன் மனைவி மம்தாவுடன் கள்ள உறவில் இருக்கிறான் , அப்போது அவள் வயிற்றில் வளரும் சிசு அதனை அறிந்து கொள்கின்றது , அசரீரி மூலமாக தடுக்கும்போது , பிரகஸ்பதி சாபம் விடுகிறான் , இதனால் அந்த குழந்தை உடம்பில் காயங்களுடன் பிறக்கின்றது , அதுவே பரத்வாஜர் , இவரே துரோணர் பிறக்கக் காரணமாயிருப்பவர். 4. நகர���்களின் உரையாடல் இதில் மகாபாரத கதையில் வரும் நகரங்களை பற்றியது. அஸ்தினாபுரம் : பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் தலைநகரம் , மீரட் அருகில் உள்ளது. இந்திரப்பிரஸ்தம் : காண்டவவனம் என்னும் ஊரை இந்திரப்ரஸ்தமாக மாற்றி பாண்டவர்கள் ஆண்டனர். விராடதேசம் : இங்கே தான் பாண்டவர்கள் தங்களின் 13-ஆம் ஆண்டின் வனவாசத்தை கழித்தனர். பாஞ்சாலம் : பாஞ்சாலி என்னும் திரௌபதியின் நாடு துவாரகை : கிருஷ்ணனின் நாடு. 5 . இரு உடலாளர்கள் பிறப்பின் காரணத்திலும் , சூழ்நிலையின் காரணமாகவும் இரு உடலளர்களாக வாழ்பவர்களை பற்றியது. சிகண்டி : பிறப்பில் பெண் பிறகு ஆணாக மாறி பீஷ்மரை கொள்கிறாள். பாஞ்சால நாட்டு மன்னனின் மகன் , பாஞ்சாலியின் சகோதரன். பஞ்ச பாண்டவர்கள் விராட தேசத்தில் கடைசி ஆண்டு உருமாறி வாழ்கின்றனர், இதில் யுதிஷ்டிரன் : பகடை உருட்டுபவன் பீமன் : மடப்பள்ளி பாரிசாரகர் நகுலன் , சகாதேவன் : பசு , குதிரை மேய்ப்பவர்கள். பாஞ்சாலி : ஒப்பனை செய்பவள். அர்ச்சுனன்: பிருக்கன்னளை என்னும் பெண்ணாக மாறி , உத்ரா என்னும் இளவரசியுடன் பணி புரிகிறான். துரியோதனன் : காந்தாரியின் கண்களில் தேக்கி வைத்த சக்தி பட்டு மேல் உடல் வலிமையாகவும் , கீழ் உடல் மென்மையாகவும் மாறுகிறான். 6. மாயசபை பாண்டவர்கள் காந்தர்வவனம் என்னும் காட்டை அழித்து இந்திரப்பிரஸ்த்தை உருவாக்குகிறார்கள். அந்த காடு அழிக்கப்பட்டபோது பல உயிர்கள் இறக்கின்றன.அதில் தப்பித்த மயன் பாண்டவர்களை பழிவாங்க மாய மண்டபம் ஒன்றை கட்டி தருகின்றான் . அந்த மண்டபம் பார்ப்பவரை அவமானம் கொள்ளச் செய்யும் . அதில் துரியோதனனும் வீழ்கிறான். 7. விடுபட்ட குரல்கள் ஒரு குயவன் குந்தி காமம் தன் பிள்ளைகளை பிரித்து விடக்கூடாது என தெரிந்தே தான் பாஞ்சாலியை பகிர்ந்துகொள்ளுங்கள் என குறியாதாக கூறுகின்றான். பாண்டவர்கள் ஒரு வனத்தில் தங்குகிறார்கள் , அப்போது அவர்கள் இருந்த மாளிகைக்கு துரியோதனன் தீ வைக்கிறான் , பாண்டவர்கள் அதில் தப்பித்து அவர்களை போலவே ஐந்து பிள்ளைகள் கொண்ட வேடுவ பெண் இறந்து போகிறாள். ஏகலைவன் ஒரு நாய் குரைப்பதை நிறுத்த அம்பு எய்துகிறான் , அதனால் வனவாசி ஒருவன் அவனுக்கு சாபம் அளிக்கிறான் , பின்னர்தான் ஏகலைவன் தன் கட்டைவிரலை இழக்கிறான். பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்த்தை காக்க , அருகிலுள்ள வனத்தை எரிகின்றனர் , அதில் நாகர்கள் அழிந்து போகின்றனர். 8. கதா ஸ்த்ரீகள் இது மகாபாரதத்தில் உள்ள பெண்களை பற்றியது சத்யாவதி : மச்சகந்தியாக பிறந்தவள் , பீஷ்மர் தான் இவளை முதலில் விரும்பினார் , பின் தந்தைக்காக அதை வெளிப்படுத்தவில்லை.மாத்ரி மதுர நாட்டை சேர்ந்தவள் , பாண்டுவுடன் உடன்கட்டை ஏரியவள் , பிள்ளைகள் , நகுலன் , சகாதேவன் . காந்தாரி : தருதராஷ்டிரனின் மனைவி , போரில் கௌரவர்கள் இறந்துவிட இருவரும் தற்கொலை செய்துகொள்கின்றனர். பாஞ்சாலி : ஐவருக்கும் மனைவி ஆகிகிறாள் , இவள்தான் அஸ்வத்தாமாவை சாவாநிலைக்கு தள்ளினாள். துச்சலை : கௌரவர்களின் சகோதரி , குரு வம்சத்தின் ஒரே பெண் வாரிசு. பானுமதி : துரியோதனின் மனைவி , இவளின் மகன் லட்சுமணன் சகுனி : காந்தாரியின் சகோதரன் , அந்தகர்களான தன் மாப்பிளை , சகோதரிக்காக அஸ்தினாபுரத்தில் தங்குகிறான் . சஞ்சயன் : திருதிராஸ்ட்ரானுக்கு மகாபாரத போரை சொன்னவன். சாம்பன் : கிருஷ்ணனின் மகன் , சாபத்தால் தொழுநோய் பெற்றான். விகர்ணன் : கௌரவர்களிள் ஒருவன் சத்ரிய கலையில் நாட்டமில்லாமல் அறிவு செயல்களில் ஈடுபாடு கொண்டவன். ஜரா : கிருஷ்ணனின் ஒன்றுவிட்ட சகோதரன் , இறுதியில் இவன்தான் பாதத்தில் அம்பெய்தி கிருஷ்ணனை கொள்கின்றான். 9. உபபாண்டவர்கள் தேடி பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்கு பிறந்தவர்கள் உப பாண்டவர்கள் என அழைக்கப்பட்டனர். யுதிஷ்டிரன் : பிரதிவிந்தன் பீமன் : சுதசோமன் அர்ச்சுனன் : சுருத கீர்த்தி நகுலன் : ஸ்தானிகன் சகாதேவன் : சுருத சர்மா இவர்கள் பாண்டவர்கள் சாயலில்லாமல் திரௌபதியின் சாயலில் இருந்தனர். வில்வித்தை மட்டும் அறிந்தவர்கள் , போர் முடிந்த பிறகு , இவர்கள் தூங்கி கொண்டிருக்கும் போது , இவர்களை அஸ்வத்தாமா கொள்கிறான். அஸ்வத்தாமாவை கொன்றால் பிரம்மகத்தி தோஷம் வருமென அவனை சாகாமல் இருக்க செய்கின்றனர் பாண்டவர்கள். அர்ச்சுனன் சுபத்திரா இருவருக்கும் பிறந்தவன் அபிமன்யு , அபிமன்யுவின் மகன் பரிக்ஷத் 10. வெண்பசு வேண்டியவன் அஸ்தினாபுரத்துக்கு நூறு பசுக்கள் வேண்டி ஒருவன் வருகின்றான் , அவன் அதை யுதிஷ்டிரனிடமும் , துரியோதனனிடமும் சூதில் வெல்கிறான் , எனினும் சகுனியிடம் தோற்று அனைத்தையும் இழக்கிறான். சூதின் மூலம் பாண்டவர்களை அழிக்கலாம் என்ற யோசனை இதன் மூலம் தோன்ற , அவனுக்கு அதை பரிசாக அளிக்கிறான் சகுனி . இதுவே பாண்டவர்களுக்கும் , கௌரவர்களுக்கும் சூதாட்டம் தொடங்க காரணமாக அமைந்தது. 11. யுத்த துவக்கம் இதில் மகாபாரத யுத்த துவக்கம் அதற்கான ஏற்பாடுகள் , படை தளபதிகள் நியமித்தல் பற்றி வருகின்றது. விதுரன் போர் செய்ய மறுத்து விடுகின்றான் , பீஷமர், துரோணர் , அஸ்வத்தாமா ஆகியோர் கௌரவர்களின் பக்கம் போர் செய்கின்றனர். 12. யுத்த பட்சிகள் யுத்த காட்சிகள், யுத்த நிகழ்வுகள் , அதற்கான தயாரிப்புகள் பற்றி. 13. சரதல்பம் சரதல்பம் என்பது அம்புப்படுக்கை , சிகண்டியின் அம்பு பட்டு பீஷ்மர் அதில் விழுகிறார் . பீஷ்மர் தான் நினைத்த நேரத்தில் உயிரை விட முடியும் என்பதால் , பலருடன் கேள்வியாடல்கள் இருகின்றன. 14. நீருக்குள் ஒளிந்தவன் நீருக்குள் ஒளிந்தவன் துரியோதனன் , இரு வேடுவர்கள் அவனை பாண்டவர்களிடம் காட்டி கொடுக்கின்றனர். பின் பீமன் அவனை கொல்கின்றான். 15. வெறுமையின் சித்திரம் அனைத்தையும் இழந்த திருதிராஷ்டனும் , காந்தாரியும் நினைவுகளின் வழி நாட்களை கடத்துகின்றனர். முதுமையும் , புத்ரசோகமும் அவர்களை வாட்டுகிறது. 16. சப்திக்கும் நீருற்று யுதிஷ்டிரனிடம் சார்வாகன் என்னும் பண்டிதன் தர்க்க ரீதியாக கேள்வி கேட்கிறான். அவனை ஊர் மக்கள் கொன்றுவிடுகின்றனர் , அவன் நினைவாக ஒரு நீரூற்றை அமைக்கிறான் யுதிஷ்டிரன். 17. முதுபர்வம் திருதிராஷ்ட்ரனும் , காந்தாரியும் வனத்தில் சென்று சிறுது காலம் வாழ்ந்து பின் கானக தீயில் உயிரை மாய்த்து கொள்கின்றனர். 18. நினைவில் வாழ்பவர்கள் விதுரன் திகம்பரனாக மாறி காட்டில் அலைகிறான். திருதிராஷ்டனை பார்க்க அவன் தந்தை வியாசர் வருகின்றார். யுதிஷ்டிரன் அஸ்வமேத யாகம் நடத்துகிறான் , இதில் அஸ்வமேதயாகம் பற்றி குறிப்புகள் உள்ளன , பெரிதும் ஆபாசமாக உள்ளதால் விளக்கி எழுதவில்லை. கிருஷ்ணன் துர்வாச முனிவரிடம் சாபம் பெறுகின்றான். உடலில் பாயாசத்துடன் ஊரை சுற்றி வரவேண்டுமென்று , அப்போது அவன் பாதத்தில் அது சரியாக படாததால் , கிருஷ்ணனை பாதத்தில் மட்டுமே கொல்ல முடியும் என்றாகிறது , பின்னர் ஜரா கிருஷ்ணனை அம்பெய்யதி கொல்கிறான். பாண்டவர்கள் அனைத்தையும் துறந்து பனிமலைக்கு செல்கின்றனர் , உடன் ஒரு நாய் மட்டும் செல்கின்றது. அனைவரும் வழியில் விழுந்து விட இறுதியில் யுதிஷ்டிரனை பனி கொள்கின்றது. நிறைவு!

user_10922

★ 5/5
பாரதத்தில் சஞ்சயன் பக்கம் சாராதவன். சஞ்சயன் ஒரு போர் சாட்சி. சஞ்சயனை போல ஒரு வழிப்போக்கனாய் நாமிருந்து மாயநகரான அத்தினபுரியின் நிகழ்வுகள் அனைத்தையும் நிழலை போல காண நேரிட்டால் ? ஒரு வழிப்போக்கன், அவனுடைய மன பிரதிபலிப்பு - இதை தாண்டிய எந்த ஆதரவையும் யாருக்கும் நீடிக்கவில்லை எஸ்.ரா. ஒரு பெரும் வெற்றியை தாண்டி, இந்த வெற்றியெல்லாம் மாய பிம்பம் என்னும் கோரமான வெறுமையின் முகத்தை எளிமையாக காட்டியுள்ளார் எஸ்.ரா. ------------------------------------------------ ------------------------------------------------ மாய நகரான அத்தினபுரியை காணும் ஆவலுக்கு தூபம் போடுகிறது உபபாண்டவம். _/\_
Quotes

“நான் திகைப்புற்று கண் திறந்தபோது படகு நதியில் போய்க் கொண்டிருந்தது. அஸ்தினாபுரத்திற்கு என்னை கூட்டிச்செல்ல ஏற்றி கொண்ட மனிதன் துடுப்பிட்டவாறே இருந்தான். அவன் இப்பொழுது வாலிபனை போல தோற்றம் கொண்டிருந்தான். எனக்கு தடுமாற்றமாய் இருந்தது.

"நீ கிருஷ்ண துவைபான வியாஸனா?"

ஆம் என்று தலையசைத்தான். அப்பொழுது தான் கவனித்தேன். படகை நதி கரைக்கு செலுத்தாமல் நதியின் திசையில் செலுத்திக்கொண்டிருக்கிறான் என. நாங்கள் நதிவழியில் வெகு தூரம் வந்துவிட்டோம். எதுவும் திட்டமாக அறிந்துக்கொள்ள முடியவில்லை. அவனிடம் நான் கேட்டேன்,

"நாம் எங்கே செல்கிறோம்?"

"துவக்கத்திற்கு".

இதன் துவக்கத்திற்கு என்றோ, அது எங்கிருக்கிறது என்றோ, அவன் சொல்லவோ நான் கேட்கவோ இல்லை. நதி செல்லும் திசையிலேயே படகு சென்றுக்கொண்டிருந்தது.”

“இது நாள் வரை நகரையும் பாண்டவர்களையும் பற்றிப் பீடித்திருந்த ஆசைதான் நாய் உருவம் கொண்டு அவர்கள் மின் வந்திருக்கிறது என்பதைக் கண்டான். சதா விழிப்புற்றபடி அலைந்து கொண்டிருக்கும் வேட்கையென்னும் அந்த நாய் உருவினைக் கண்டபடியிருந்த அவனும் பிறகு தன் கண்களை மூடிக் கொண்டு விட்டான்.”

More Quotes...
Shelves
book S. Ramakrishnan

More like this


நூலக மனிதர்கள்

நூலகத்திற்கும் எனக்குமான உறவு மிக நீண்டது. பள்ளிவயதில் நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். எனது கிராம நூலகம் துவங்கி உலகின் மிகப்பெரிய நூலகங்கள் வரை நூற்றுக்கணக்கான நூலகங்…

4.09/5 · 200+ ratings

ஆதலினால் [Aadhalinaal]

சில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து …

4.09/5 · 200+ ratings

சஞ்சாரம் [Sancharam]

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல்…

4.09/5 · 200+ ratings

இந்திய வானம்

பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும்…

4.09/5 · 200+ ratings

எனதருமை டால்ஸ்டாய் [Enadharumai Tolstoy]

டால்ஸ்டாயில் துவங்கி தாகூர் வரையிலான இலக்கிய ஆளுமைகளின் மேன்மைகளை அவர்களது படைப்பு மற்றும் வாழ்வியல் நிகழ்வுகளோடு பதிவு செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் எனதருமை டால்…

4.09/5 · 200+ ratings

துணையெழுத்து [Thunai Ezhuthu]

தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்…

4.09/5 · 200+ ratings

ரயிலேறிய கிராமம் [Rayileriya Gramam]

உலகப்புகழ்பெற்ற முப்பது அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. வாசிப்பில் விருப்பமான புத்தகங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் எழுதி…

4.09/5 · 200+ ratings

உணவு யுத்தம் [Unavu Yuththam]

‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் …

4.09/5 · 200+ ratings

ரயில் நிலையங்களின் தோழமை

காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. பயணியின் கண்கள் உலகின் உன்னதங்…

4.09/5 · 200+ ratings

இடக்கை [Idakkkai ]

With new possibilities in storytelling. The Final Solitude exposes the injustice that prevailed during Emperor Aurangazeb's rule in a fictional sm…

4.09/5 · 200+ ratings

சித்திரங்களின் விசித்திரங்கள்

நவீன ஓவியம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், சினிமாவிற்கும் ஓவியத்திற்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகின்றவர்களுக்கும், ஓவியத்தின் பின் உள்ள கதைகளை…

4.09/5 · 200+ ratings