ரயிலேறிய கிராமம் [Rayileriya Gramam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ரயிலேறிய கிராமம் [Rayileriya Gramam]

None

4.0/5 · 22 ratings

உலகப்புகழ்பெற்ற முப்பது அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. வாசிப்பில் விருப்பமான புத்தகங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் எழுதிய இக்கட்டுரைகள் தமிழ் வாசகனுக்கு உலக இலக்கியத்தின் வாசலைத் திறந்து விடுகின்றன

Reviews

user_14960

A casual read, a good selection of rare books, especially Rayileriya gramam kavithai ketta nari ariaha padatha theevu tholaihkatchi pinnal shakespeare Paraviahkal Keeingge Vanathirudan Exclusive collections and I continuously read his book, there is a only flaw in his writing was too much of reference when he emphasis any point. May be he might think that his idea was not his perception but universal otherwise he is one of the best stroyteller..

user_14959

★ 4/5
உலகப் புகழ்பெற்ற 30 அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு தான் ரயிலேறிய கிராமம் என்னும் இந்நூல். புத்தகத்தின் பெயரை பார்த்தவுடன் ஒரு ஆர்வத்தில் வாங்கிய நூல்தான் இது படித்த பின்பு தான் தெரிகிறது Heather wood ன் Third class ticket என்னும் நூலை பற்றிய அறிமுக கட்டுரைதான் ரயில் ஏறிய கிராமம் என்னும் நூல். அதுவே புத்தகத்தின் தலைப்பாக அமைந்துள்ளது. 1969 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள ரயில்வே துறையின் உயர் அலுவலகம் ஒன்றிற்கு வந்த ஸ்ரீமதி சென் என்ற வயதான பெண் தான் இன்னும் இரண்டு மாதங்கள் நோயிலிருந்து இறந்துபோக இருப்பதாகவும் அதற்குள் தன்னுடைய கிராமத்தை சேர்ந்த மக்கள் உலக அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக தனது சொத்து முழுவதையும் செலவு செய்து அவர்களை ஒட்டுமொத இந்தியாவையும் ஒரு முறை‌‌ சுற்றி பார்த்து வர செய்ய விரும்புவதாக கூறினார் . அதன்படியே அந்த கிராமவாசிகள் 40 பேர் முதன்முதலாக கிராமத்தை விட்டு வெளியேறி இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்க்க செல்கிறார்கள் அதைப்பற்றிய கதைதான் ரயில் ஏறிய கிராமம் என்னும் இந்த நூல். இதுபோல பல சுவாரசியமான வாழ்வில் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்களை பற்றிய அறிமுகத்தை எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு கட்டுரையாக தொகுத்து இந்நூலில் வழங்கியுள்ளார். நூலாசிரியர் எஸ் ராமகிருஷ்ணனை பற்றி பேச வேண்டும் என்றால் அவரின் இரண்டு புத்தகங்களை தான் நான் வாசித்து உள்ளேன் ஆனால் youtube ல் உள்ள அவரது பல சொற்பொழிவுகளை நான் கேட்டுள்ளேன் . அவரது எழுத்து வடிவமும் சரி அவர் உபயோகிக்கும் வார்த்தைகளும் சரி‌ அவர் வாழ்வை பார்க்கும் ஒரு கோணமும் பார்வையும் வாழ்வின் மீதும் மனிதர்கள் மீதும் ஒரு ஆசையும் நம்பிக்கையும் உருவாக்கி ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும். அவரது சொற்பொழிவை கேட்ட பலருக்கு தெரியும் அவர் இந்தியா முழுவதும் பயணித்துள்ளார் .‌..தான்‌ பார்த்த காட்சிகளையும் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் அழகாக பார்வையாளர்களுக்கு விவரிப்பார்... அவர் அடிக்கடி சொல்லும் ஒன்று இந்தியாவினை முழுமையாக காண்பதற்கு ஒருவனுக்கு அவனது வாழ்நாள் போதாது இந்தியாவில் வாழ்பவர்கள் ஒருமுறையாவது அத்தனை முக்கிய நதிகளையும் கண்டு விட வேண்டும் நதி வழி தான் நகரங்களும் இருக்கின்றன ஆகவே நதிகளையும் நகரங்களையும் நினைத்தே பயணம் மேற்கொள்ளலாம். இந்த புத்தகத்தில் கூறியுள்ள நூல்களைப் பற்றிய அறிமுகத்தை படிக்கும் பொழுதே அந்த நூல்களை வாசித்து விட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும் .நான் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவை பார்த்து தான் பல நூல்களை தேடி தேடி வாசித்துள்ளேன் அவர் கூறும் அத்தனை நூல்களையும் குறித்துக்கொண்டு அதை வாங்கி நான் வாசித்து அவர் பெற்ற அதே அனுபவத்தை நானும் பெற்றுள்ளேன். குறிப்பாக இலக்கற்ற பயணி என்னும் நூலில் அவள் நயாகரா நதியை முதன்முதலில் நேரில் பார்த்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதியிருப்பார் நான் இதுவரை என் வாழ்வில் நயாகராவை பார்த்ததில்லை ஆனால் அந்த புத்தகத்தை நான் படிக்கும் போது அந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் சாரல் என் மீது படுவது போன்ற உணர்வு என் மீது கிடைத்தது அதுதானே ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் வெற்றி..தனக்கு கிட்டிய அனுபவத்தை தனது வாசகர்களுக்கும் கிடைக்கபெற எழுதுவது. அதனாலேயே எஸ். ராமகிருஷ்ணன் என்ற பெயரிட்ட நூலை பார்த்தாலே கண்மூடி கொண்டு வாங்கிக் கொண்டு வந்து விடுவேன் அது போல வாங்கியதுதான் இந்த நூலும். ரயிலேறிய கிராமம் - எஸ்.ராமகிருஷ்ணன் பதிப்பகம் : தேசாந்திரி பக்கங்கள் : 152

user_14958

★ 3/5
எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் உலகப்புகழ் பெற்ற 30 அரிய நூல்கள் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் சில நூல்கள்\நாவல்கள்: Third Class Ticket by Heath Wood, வாரிச்சூடினும் பார்பவரில்லை, White Man Falling by Mike Stock, Small is Beautiful, ஒரு வாழ்க்கையின் துகள்கள், The Diary of Anne Frank, Grandfather, When Elephant Weeps by Jeffery Mussaief, Basho and The Fox, The Inheritance of Loss, The Little Prince, Mirrors. Stories of almost everyone, Sophie's World, What I Talk About When I Talk About Running, Kafka on the shore, தேவமலர், The Wind Up Bird Chronicles, & The Birds of Shakespeare
Shelves
book S. Ramakrishnan

More like this


ஆதலினால் [Aadhalinaal]

சில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து …

4.0/5 · 22 ratings

தேசாந்திரி [Desanthiri]

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

4.0/5 · 22 ratings

இடக்கை [Idakkkai ]

With new possibilities in storytelling. The Final Solitude exposes the injustice that prevailed during Emperor Aurangazeb's rule in a fictional sm…

4.0/5 · 22 ratings

தாவரங்களின் உரையாடல்

எஸ்.ராமகிருஷ்ணனின் புகழ்பெற்ற சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பே எஸ்.ராமகிருஷ்ணனை இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டியது. பல்வேறு விருதுகளை வென்றுள்ள இந்த தொகுப்பில் மேஜிகல்…

4.0/5 · 22 ratings

நெடுங்குருதி [Nedum Kuruthi]

வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு. தலைமுறைகளாக இக் கனவை கடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாதைகளும் ஏக்கங்களும் நிலை கொள்ள முட…

4.0/5 · 22 ratings

சித்திரங்களின் விசித்திரங்கள்

நவீன ஓவியம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், சினிமாவிற்கும் ஓவியத்திற்குமான தொடர்பைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகின்றவர்களுக்கும், ஓவியத்தின் பின் உள்ள கதைகளை…

4.0/5 · 22 ratings

கதா விலாசம் [Katha Vilasam]

எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள்! ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியப…

4.0/5 · 22 ratings

துணையெழுத்து [Thunai Ezhuthu]

தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்…

4.0/5 · 22 ratings

எனதருமை டால்ஸ்டாய் [Enadharumai Tolstoy]

டால்ஸ்டாயில் துவங்கி தாகூர் வரையிலான இலக்கிய ஆளுமைகளின் மேன்மைகளை அவர்களது படைப்பு மற்றும் வாழ்வியல் நிகழ்வுகளோடு பதிவு செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் எனதருமை டால்…

4.0/5 · 22 ratings

உறுபசி [Urupasi]

நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்க…

4.0/5 · 22 ratings

இலக்கற்ற பயணி [Ilakkatra Payani]

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியாவின் குறுக்கும்நெடுக்குமாகப் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். உலகத்தை அறிந்துகொள்வதற்கான தேடுதலே எனது பயணத்திற்க்கான தூண்டுதல். ஒவ்வொரு …

4.0/5 · 22 ratings

நிமித்தம்

நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து…

4.0/5 · 22 ratings