Reviews for பசித்த மானிடம் [Pasittha Maanidam]

30 reviews total

user_10177

★ 4/5 Feb 02, 2026

பசித்த மானிடம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவல். இது போன்ற கதைக்களனை இதுவரை கண்டதில்லை. கரிச்சான் குஞ்சுவின் எழுத்துக்கள் எளிமையாகவும் ஆழமாகவும் இருக்கிறது. கதையின் மாந்தர்கள் அனைவரும் மனிதத்தின் ஆதார பசியின் பிடியில் தம்மை இழந்துவிடுகிறார்கள். காமம், அதிகாரம், வேட்கை இவற்றின் மேல் மனிதன் கொண்டுள்ள வெறியையே இந்நாவல் பேசுகிறது. நவீன தமிழ் இலக்கியத்தை படிக்க விரும்பும் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.

user_10176

★ 3/5 Feb 02, 2026

இந்த நாவலிலிருந்து படித்ததை ஜீரணிக்க எனக்கு நிறைய நேரம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். இரண்டு முக்கிய நாயகர்கள் — கணேசன் மற்றும் கிட்டா. அவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது அவர்களின் பசி — காமப் பசி, செல்வப் பசி, மரியாதைப் பசி, பெண் பசி. அவர்கள் விரும்பியதெல்லாம் கிடைத்தது, சில சமயம் அதற்கு மேலும் கிடைத்தது. நாம் எப்போதும் விரும்பியதெல்லாம் கிடைத்தபின், அவர்களில் ஒருவர் வாழ்க்கையைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை உணர்ந்துகொள்கிறார். இந்தப் புத்தகம் பிடித்திருந்தது, கணேசனின் கடைசிக் காலத்தில் அவருக்கு இருந்த வயதில் மீண்டும் ஒருமுறை படிக்க விரும்புகிறேன்.

user_10175

★ 3/5 Feb 02, 2026

புத்தகத்தின் பின் அட்டையில் சொல்லியிருப்பதைப் போல் மனிதனுக்கு காமம், பொருள், அதிகாரம் மேலுள்ள பசிதான் கதை. இதில் காமம் என்பது வெறும் ஆண்-பெண் உறவு மட்டுமல்லாமல் தற்பாலீர்ப்பு, முறைகேடான உறவுகள் என்று பலவற்றைப் பேசுகிறது. நிறைய இடங்களில் வெறும் வம்பளக்கும் கதைபோல் தோற்றமுண்டு. மற்றபடி எந்த இலக்கியப் பூச்சுகளும் இல்லை. பிராமண வழக்கு மொழியின் மேல் ஒவ்வாமை உண்டென்றாலும் இரண்டே அமர்வில் முழு புத்தகமும் வாசிக்குமளவுக்கு சுவாரசியமாகவும் இருந்தது.

user_10174

★ 4/5 Feb 02, 2026

கவனம் சிதறிய மனதுடன் இந்தப் புத்தகத்தைத் தொடங்கினேன் — ஆனால் இதில் உள்ள வார்த்தைகளின் ஆழத்தையும் உணர்வுகளையும் என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்தேன். மனிதனின் உடலும் மனமும் கொண்டிருக்கும் ஆசைகளை ஆசிரியர் எவ்வளவு எளிமையாக விவரித்தாலும் அது போதாது. இரண்டு நாயகர்கள் — ஒருவன் (கணேசன்) தொழுநோயால் அவதிப்படுகிறான், ஒருகாலத்தில் அனைவரின் கண்மணியாக இருந்தவன் இப்போது தீண்டத்தகாதவனாகப் பார்க்கப்படுகிறான். மற்றவன் (கிட்டா) கணேசனிடம் உள்ள அனைத்தையும் ரகசியமாக ஆசைப்படுகிறான். காலம் சுழல்கிறது, எல்லாம் தலைகீழாக மாறுகிறது. இறுதியில் வாழ்க்கையில் என்ன அடைய வேண்டும்? "இப்போதைக்கு சிறிது உண்டு உறங்க வேண்டும், பின்னர் அந்தப் பெரிய உறக்கத்தை எதிர்பார்க்க வேண்டும்."

இந்திய எழுத்தாளர்களின் கற்பனையில் மூழ்கி, படித்ததைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு படைப்பை விரும்புபவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நாவல்.

user_10173

★ 3/5 Feb 02, 2026

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று ஒரு பழமொழி உண்டு. இங்கு பசி என்றால் வயிற்றுப்பசி. தன் பசியை தீர்க்க முடியாத மனிதன் தன்னிடமுள்ள மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, காமம் ஆகியவற்றை இழந்துவிடுவான் என்பது இந்த பழமொழியின் பொருள். உற்று நோக்கினால் மேலே கூறப்பட்ட பத்தில் ஒவ்வொன்றும் ஒரு விதமான பசி.

இரு வேறு இடங்களில் வயிற்றுப் பசியுடன் ஆரம்பிக்கும் இருவருடைய வாழ்க்கை ஒரு இடத்தில் சந்தித்து, காலப்போக்கில் அவர்களின் பசி வேறு ஒன்றாக மாறி, காலத்தின் கட்டாயத்தினால் மீண்டும் வேறு ஒரு திசையில் பயணித்து, சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தால் அவர்களின் பசியின் நிலையும் வாழ்க்கையின் புரிதலும் எப்படி இருக்கும் என்பதுதான் பசித்த மானிடம்.

எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாமல் அப்பட்டமாக கரிச்சான் குஞ்சு இந்த நாவலை எழுதியுள்ளார். இதை அவர் எழுதிய காலக்கட்டத்தின் சமூக கட்டமைப்பை எண்ணும்போது, இப்படிப்பட்ட ஒரு நாவலை எழுத அவருக்கு எல்லையற்ற தைரியம் இருந்திருக்க வேண்டும்.

user_10172

★ 5/5 Feb 02, 2026

எல்லாம் இருந்தும் ஒரு பிச்சைக்காரனைக் கிட்ட, எதுவும் இன்றி எல்லாம் பெற்ற கணேசன். இந்த நாவலைக் கேட்கத் தொடங்கும்போது, முதல் அதிர்ச்சி கணேசனின் தொழுநோய் பற்றியது — வாசிக்காத, கேட்காத புதிய உரையாடல்.

ஒரு கசப்பான ஆரம்பம் என்றாலும், நல்ல மனிதர்களால் சூழ்ந்திருந்த காரணத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை, இனிமையான பால்ய காலம். எல்லாம் இருந்தும் கெட்ட சகவாசத்தினால் தடம் புரளும் வாழ்க்கை — தன் கீழ்மைக்கு தானே காரணம் அன்றி வேறு யாரும் இல்லை என்ற உண்மை புரிதல் உண்மையாகவே கணேசனை மீண்டும் ஞானியாக ஆக்குகிறது.

இதன் நேர் எதிர் திசையில் கிட்டாவின் வாழ்க்கை — அழகில்லை, ஆதரவும் இல்லை, படிப்பில்லை, ஆனாலும் தன் விடா முயற்சியால் வளர்கிறான். வாழ்க்கை படிக்கட்டில் ஏறும்போது, கூடவே தீய குணங்களும் ஒட்டிக்கொள்கிறது. பணம், பதவி, அந்தஸ்து தனக்கு தாபியை பண்ணுகிற அதிகாரத்தை கொடுத்துவிடுகிறது என்று நம்பும் அளவிற்கு வளர்கிறான்.

இவ்விருவரின் வாழ்க்கையில் வரும் உன்னதக் கதாபாத்திரங்களான மச்சி, அம்மு, பாலாம்பாள், வாத்தியார், கோதை, வனமாலி, அமானி மாமி — அனைவரும் மறக்க முடியாதவர்கள்.

அறிவை வைத்து எல்லாம் அறிந்துகொள், கடைசியில் அறிந்ததை வைத்து அறிவைக் கொள் — இதுதான் இந்நாவலின் சாரம்.

user_10171

★ 5/5 Feb 02, 2026

கரிச்சான் குஞ்சுவின் "பசித்த மானிடம்" இருபதுகளின் துவக்கத்தில் படித்தபோது பிடித்திருந்தது என்பது ஆச்சரியமானதல்ல. இந்த நாவல் அடிப்படை மனித உணர்வுகளை வெளிப்படையாகவும் நேரடியாகவும் முன்வைத்தது. மனிதர்கள் எதற்காக போராடுகிறார்கள், என்னவெல்லாம் அவர்களை இயக்குகிறது, வெற்றி பெற்றபின் அவர்களுக்கு என்ன நடக்கிறது — இத்தகைய அடிப்படையான கேள்விகளுக்கான பதில்கள் இந்த நாவலில் வெளிப்படையாக வழங்கப்பட்டிருக்கின்றன.

கரிச்சான் குஞ்சுவின் எழுத்து நடை நேரடியானது, அலங்காரம் குறைந்தது. அவர் மனித இயல்புகளை மறைப்பில்லாமல் வெளிப்படுத்துகிறார். இருபது வயதில் இருக்கும் ஒருவருக்கு இத்தகைய வெளிப்படைத்தன்மை கவர்ச்சியாக இருக்கும். வாழ்க்கையைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒரு இளம் மனதுக்கு, சிக்கலான உளவியல் பகுப்பாய்வுகளை விட இத்தகைய நேரடியான அணுகுமுறை மிகவும் ஏற்புடையதாக இருக்கும்.

கதாபாத்திரங்கள் தங்கள் விருப்பங்களை அடைய போராடுகிறார்கள், வெற்றி பெறுகிறார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் வாழ்க்கையைப் பற்றிய ஒரு முக்கியமான உண்மையை உணர்ந்துகொள்கிறார். போராட்டம், வெற்றி, பின்னர் சுய உணர்வு — இருபது வயதில் இருக்கும் ஒருவருக்கு வாழ்க்கையின் முழு பாதையையும் காட்டுவது போல் தோன்றும்.

இன்றைய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, எளிமையான, நேரடியான, மனித இயல்புகளைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புத்தகங்கள்தான் நம்மை முதலில் கவர்கின்றன. அவையே எழுத்தின் மீதான ஆர்வத்தையும் வாசிப்பின் மீதான பிரியத்தையும் ஏற்படுத்துகின்றன. "பசித்த மானிடம்" அத்தகைய அடிப்படை வாசிப்பு அனுபவங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது.

user_10170

★ 3/5 Feb 02, 2026

உணர்வுகள் மனிதனுக்கு இயல்பானவையே. அதிலும் பசி, தூக்கம், ஏக்கம், காமம் போன்றவை மனிதர்கள் அனைவருக்கும் இயல்பான ஒன்றாகவே இருக்கிறது. அதில் காமத்தினை மட்டும் எடுத்துக்கொண்டு பெண்களை அதற்கு அடிமைகளாக நடத்தும் போக்கு இந்நாவல் முழுமையும் வெளிப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களையே மையமிட்டு எடுக்கப்பட்டாலும், பெண் என்ற பொது நிலையிலிருந்து நோக்கும்போது இது எவ்வளவு அபத்தமானது என்பது நோக்கத்தக்கது.

முறையற்ற உறவுமுறைகளும் அதன்மூலம் பெறப்படும் நோயும், அது முற்றி அலையும்போது கூட சேவைக்காக வரும் பெண்களைக் கூட காமத்தின் பார்வையில் நோக்கும் மனிதனை இந்நாவல் படைக்கிறது. முறையற்ற பல உறவுகள், கணவனை மீறிய உறவுகொள்ளும் பெண்களும், மற்றொருவரின் கணவன் எனத் தெரிந்தும் கொள்ளும் உறவும் பெரிதும் அபத்தமாகவே வெளிப்படுகிறது. வீட்டில் நுழையும் ஆண் யாரெனத் தெரியாமலேயே அவனுடன் கொள்ளும் உறவும், அவனையே உயிராக நினைத்து வாழ்வதும் இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கையும், அதற்காக அலைந்து திரியும் பெரிய மனிதர்களையும் பதிவுசெய்துள்ளது. அதன் தாக்கம் வயதில் குறைந்த சிறுவனின் படிப்பைப் பாதியில் விட்டுவிடச் செய்யும் அளவிற்குச் செல்வது வேதனைக்குரியது.

உறவுமுறை கூட பார்க்காமல் காமத்தைக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மனிதசமூகம் மாறிவிட்டதை — அண்ணியுடன் உறவு, மனைவியின் அக்காவுடன் உறவு என அபத்தத்தின் உச்சமாக அமைகிறது. பெண் என்பவள் வெறும் காமத்திற்கு மட்டுமே என்பதுபோல் உருவகித்துக் காட்டுகிறது நாவல். உடல்முழுதும் தொழுநோயால் அவதிப்படும் நேரத்தில்கூட கண்தெரியாத பிச்சைக்காரியுடன் கொள்ளும் உறவு என விரிகிறது. அனைத்து இடங்களிலுமே பெண்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைக்கத் தெரியாதவர்கள் என்றே காட்டப்படுகிறது. உணர்வுகளை அடக்கத் தெரியாமல் சுற்றித்திரியும் தொழுநோயாளி இறுதியில் அனைத்து ஆசைகளையும் கடந்து ஞானியாக மாறுகிறான் என்பது மானிடத்தின் அபத்தம்.

user_10169

★ 3/5 Feb 02, 2026

கனமான இலக்கியம். அருமையான படைப்பு. மூன்று நட்சத்திரங்கள் கொடுப்பதற்குக் காரணம் நாவலின் பலவீனம் அல்ல — இதில் சாரம் நிறைந்திருக்கிறது. ஆனால் ஆசிரியரின் தத்துவ விளக்கங்களில் பல இடங்களில் கருத்து வேறுபாடு இருந்தது, சில விஷயங்களில் காலாவதியான பார்வைகள் இருந்தன, மேலும் நாவலில் வரும் சாதிய அம்சங்கள் குமட்டலை ஏற்படுத்தின.

user_10168

★ 4/5 Feb 02, 2026

அடங்காத பசியும், தீராத தாகமும் மனிதர்களை எங்கே இழுத்து செல்கின்றன? மண், பெண், பொன் என அனைத்தும் அடைந்த பின்னரும், தொடர்ந்து நிறைவைத் தேடும் எஞ்சிய வாழ்க்கைப் பயணம் இது. பொருள் தேடித் தேடி பொருளற்றுப் போகும் வாழ்வின் பொருள் தேடும் நாவல். நன்று!