He is a good writer.. I like to read his novels when i read his novels i feel relax and happpy
From child's view
Previous decade ideology.How long the woman being alone from 20 to 70 years? Partnership is different from the physical needs.forget today it is 1970's life and how did small child think about the step father.
Vilimbu nilai manidhargalai patriya novel idhu. metukudi mattrum nadutharavarga makal indha novelyai purindhukolvadhu sattrum kadinamaga irukka kudum. Jayakandhanu sollvadhu pol "idathukku thagundar pol nam gunadisyagal marupaduginradhu.
ovovru kadhapathiram athanai iyalbaga irundhadhu.....avaravar paravaikku avaragal seiyum karyangal nyayamagave padukiradhu.
Thondar durai chittiya matri nalvazhi paduthiyadhu pol......avar chittiyin thayi seyalai puriyavaithirukalam.
Mudivu satre nerudalaga irundhadhu....Kadhaiyil mattum dhan Happily ever after ending ya parkamudigiradhu.
Simple and great story
The final pages are very emotional. What a writer this man is. He just narrated the characters as it is.
Must read
Amazing impactful writing. Story, characters everything feel very real. Writer just shown us the real world and harsh realities of our mind
In the depiction of the lives and emotions ot the under previleged and the delineation of their latent nobility Jayakanthan has no equal. Some passages are sheer poetry.
Liked it.. Simple, yet powerful theme conveyed, but might find it difficult in current years..
தாய்-மகன் உறவின் பயணமே இப்புத்தகம். தனிமனிதனுக்கென ஆசையிருப்பின் தாயானவளுக்கென உணர்வுகள் மட்டும் மறுப்பதேன்?
என்னை ஈர்த்த வரிகள் இப்பத்தகத்திலிருந்து
“தன்னைத் தானே வெறுக்க ஆரம்பிச்சுட்டா அந்த மனசு அப்பறம் யாரையுமே நேசிக்க முடியாமலே அழுகிப் போயிடும்”
தங்கம் மீதும் தவறில்லை, சிட்டி மீதும் இல்லை, மாணிக்கம் மீதும் இல்லை. ஆனால் சில கேள்விகள்,ஏன் சிட்டி தன் தாய் மீது எவ்வுளவு வஞ்சதுடன் இருக்க வேண்டும்? ஒரு வேளை அவன் வெறும் 12 வயது என்ற நாலையா? அவ்வுளவு நாள் தாயை தேடாடு இருந்த சிட்டி, கடைசியில் தாயை நினைத்து அழுவது, ஒரு வேளை, தொண்டர் சொன்னது போல், அவன் தன் தவறை புரிந்து கொண்டனோ? மாணிக்கம், தங்கம் கடந்தகாலம் தெரிந்தும், ஏன் அப்படியே விட்டு 8ஆம் மாதத்தில் சென்றான்?என்பது போன்ற நிறைய கேள்விகள் எழுந்தது, இந்த நூலை முடிக்கும்போது.இவ்வாறு குழப்பங்களோடு முடிவு பெற்றது, எனக்கு மாற்று கருத்தே.ஆனால் கதை ஆக படிகும் போது, கதை மாந்தர்கள் போக்கிற்கு ஒன்றி விறுவிறுப்பாக மற்றும் பெரிய தாக்கத்துடன் முடிந்தது ஒற்றுகொள்ள வேண்டியது.
Thi.Ja is great in coming up with story where you could not say right or wrong on any person. Where Thi.Ja scores with his characters is by explaining not only the incidents but also the mind voice and thoughts of the character. The moment you get to listen to mind voice, one tend to fall for the person and the reason the person gives, thus making it complicated to come to a decision.
This has been the strength of thi.ja and here too it exemplifies. The story is very simple, characters are ordinary but the final effect that the book brings is very unique. One can understand people, human, thoughts, behavior and distinct feelings of individual. Very different and difficult to come up with one such book. If you are a person who likes to understand people and feelings, the book will be a very good read. Go for it you will enjoy.
First time, I cried after reading a book.....
A very good and realistic story looking into the slums. jeyakanthan has captured human feelings and emotions very well
The way Jayakanthan (author) potrayed the characters was deep. Simple and Powerful!!
Beautiful story with Chennai slum as background.
Individual is more important than institutions like family or society is the theme. An emotional drama between the individual n the institutions set among the slum of Madras! Plot and theme are excellent yet I found the execution drought and superficial. The preaching tone of the Thondar character is irritating at times.
Read it if you are a JK fan!
A suitable title to this book. I began to predict the endings to this story as it progressed, but there was an another unexpected end awaited for me. When I thought the former seemed superficial while the latter more practical. A well written book with deep understanding of the society.
ஜேகே அவர்களின் எழுத்துகள் மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியவை.
இக்கதை மாந்தர்களான தங்கம், மாணிக்கம், சிட்டி, அன்னம்மா, கன்னியப்பன், தொண்���ர்துரை க்கண்ணு என அனைவரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
படித்து முடித்த பின்னர் மனம் பாரமாகி விட்டது.
A touching tale of a mother-son relation set in the slums of Madras.Not exactly happy with the fate of Manickam,though.
-இந்தப் பாரததேசத்தின் எதிர்காலமே எச்சில் துண்டு சிகரட் பொறுக்கித் திரிவதுபோல் அவர் இதயத்தில் உருவகமாயிற்று.
ஒரு தேசத்தின் லட்சணத்தை அளக்கவேண்டுமானால் அந்த தேசத்தின் பெண்களின் நிலையைப் பார்க்கவேண்டும். இந்த தேசத்தின் தாய்மார்களின் நிலை இதுவானால் இந்த தேசத்தின் எதிர்காலத்தின் நிலை எவ்வாறு இருக்கும்?
“எல்லாக் காரியத்துக்கும் ஒரு காரணம் உண்டு. நீ செய்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்யறத்துக்குமுன்னே, ஏனிந்தக் காரியத்தை செய்யறோம்னு யோசிச்சுப் பாரு. காரணமிருந்தா, அது சரியான காரணமா இருந்தா, நீ செய்யற காரியத்தை உலகமே எதிர்த்தாலும் சரி, செஞ்சு முடிச்சுட வேண்டியதுதான். சரியான காரணம் தப்பான காரணம்னு எப்படி முடிவு பண்றதுன்னு யோசிக்கிறியா?... அது ஒண்ணும் கஷ்டமில்லே அந்தக் காரணத்தெப் பகிரங்கமா நீ ஒத்துக்க முடியும்னா அதுசரியான காரணம் தான்.
இந்த உலகம் உன்னை மதிக்கலே உன்னை மதிக்காத உலகத்தெ நீயும் மதிக்கலே அதுக்கு மரியாதை குடுக்க நீ தயாராயில்லே…
இன்னக்கிக்காத்தாலே வரை நீ பொறுக்கனத்துக் காரணமோ பொறுப்போ நீ இல்லே இந்த உலகம்! இனிமே பொறுக்கனியானா நீயும் பொறுப்பு.
“யாருகிட்டே சண்டை போட்டாலும் தாய்கிட்டே சண்டை போடக் கூடாதப்பா; தாய்கிட்டேயே சண்டை போட்டாலும் ஒருத்தன் தன் கிட்டேயே சண்டை போட்டுக்கக் கூடாது… ஆமா! அது ரொம்பத் தப்ப தன்னைத் தானே வெறுக்க ஆரம்பிச்சுட்டா அந்த மனசு அப்பறம் யாரையுமே நேசிக்க முடியாமலே அழுகிப் போயிடும்.
உயிர் என்பது ஜடமன்று. ஜடம் உடைந்தால் ஒரு முழுமை இரண்டு மூளிகளாக மட்டும்தான் மாறும். உயிரின் முழுமை மாறுதல் கொண்டால் ஒன்றிலிருந்து பல மூளிகள் அல்ல-பல முழுமைகளே செழிக்கும்.
#179
Book 20 of 2023- உன்னைப் போல் ஒருவன்
Author- ஜெயகாந்தன்
“இந்த ஆசைதான், இந்த சுகம்தான் அனுபவித்தபின் எவ்வளவு அற்பமாய் எவ்வளவு இழிந்ததாய் இருக்கிறது.”
ஜெயகாந்தனின் பிறந்த தினத்தையொட்டி நேற்று இதை படிக்க நேர்ந்தது.நேற்றே இதைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்து தான் படிக்கவே தொடங்கினேன்.படித்தப் பின் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாகவே இந்த தாமதம்! தாக்கத்தை ஏற்படுத்தாத ஜெயகாந்தன் புத்தகம் தான் ஏது?!
“தங்கம்” என்கிற முப்பது வயது பெண் சித்தாள்,அவளது 12 வயது மகன் “சிட்டி”-இவர்களைப் பற்றிய கதை தான் இது.16 வயதிலே கள்ளத் தொடர்பால் தங்கம் கர்ப்பமாகிறாள்-அந்த குழந்தை தான் “சிட்டி”.அன்னம்மா ஆயாவின் உதவியோடு குழந்தையை வளர்க்கிறாள்.”துரைக்கண்ணு” என்கிற மாமனிதனை சிட்டி ஒரு நாள் சந்திக்க நேர்கிறது.அதன் பின் தான் சி்ட்டி ஒரு பொறுப்புள்ள சிறுவனாக மாறுகிறான்.தன் தாயை வேலைக்கு அனுப்பாது பார்த்துக் கொள்ள வேண்டும் என 12 வயதிலே அத்தனை பொறுப்போடு காலையில் வேலை,மாலையில் படிப்பு என சிறந்த மகனாக திகழ்கிறான்.அப்போது,தங்கத்திற்கு ஒரு காதல் ஏற்பட்டு,அந்த காதலின் பரிசாக அவள் மீண்டும் கருவுற்றிருக்கிறாள்.அவனோடு சேர்ந்து இந்த வாழ்க்கையைத் தொடங்க அவள் விரும்புகையில்,சிட்டிக்கு அதில் உடன்பாடு இல்லாததால் தாயை உதறிவிட்டு வீட்டை விட்டும் வெளியேறுகிறான்.
அத்தனை ஆண்டுகள் சிட்டிக்காகவே வாழ்ந்த தங்கம் தனக்கென ஒரு துணையை தேர்ந்தெடுத்ததில் தான் தவறேது? அதை புரிந்துக் கொள்ள சிட்டி தயாராகவும் இல்லை! எத்தனை பொறுப்பான சிறுவனாக இருந்தானோ அதற்கு அப்படியே நேரெதிராக மாறத் தொடங்கினான்! பிறகு என்ன ஆனது என்பது தான் கதை.
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அந்தந்த நேரத்து நியாயத்தை ஜெயகாந்தன் தனது எல்லா படைப்புகளிலும் காட்டுவார்.முழுமையாக யாரையுமே வெறுக்க முடியாது.இதில் வரும் அனைத்து உரையாடல்களும் வாழ்க்கையின் உண்மையை பிரதிபலிக்கிறது.
“அவரவர் அனுபவம் அவரவருக்கு மட்டும்தானே பாடமாகிறது…?”இந்த வரி என்னுள் ஏற்படுத்திய தாக்கமும் அமைதியும் கேள்வியும் மிக மிக ஆழமானது. கடைசி இருபது பக்கங்கள் படிக்கையில் கண்களில் வழிந்துக் கொண்டே இருந்த கண்ணீரை நினைக்கையில் அவர் எழுதிய இந்த வரி தான் நினைவுக்கு வருகிறது- “மனிதனின் சகல சோகங்களுக்கும் வித்தான பிறவியெனும் பெருஞ்சிலுவையைத் தோளில் சுமந்து நிற்பவன் போன்று..”-அப்படித் தான் நானும் உணர்ந்தேன்.
Check my podcast on Spotify for this book’s summary-
ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய 'உன்னைப்போல் ஒருவன்' நாவல் பற்றிய வாசிப்பு அனுபவங்கள் இந்தப் பதிவில்.
மனித உறவுகளைப் பற்றி இந்தச் சமூகம் கொண்டிருக்கும் முன்முடிவுகளைப் பற்றிய தீர்க்கமான கேள்விகளை முன்வைக்கும், எளிமையான நாவல்.
30 வயதான தன் அம்மா அவர் மனத்துக்குப் பிடித்த இன்னொரு ஆணுடன் வாழத் தொடங்கையில், அந்தச் சராசரி ஏழைக் குழந்தைக்கு ஏற்படும் மனச் சிக்கல்களை, ஒரு சிறுவனின் மனவோட்டத்துடன் ஜெயகாந்தன் அவர்கள் அணுகியிருக்கிறார்.
நாவலிலிருந்து,
" காலத்திற்கேற்பவும் இடத்திற்கேற்பவும் ஒரு பொருளின் தன்மை மாறுபடும் என்பது விஞ்ஞானவிதி. விஞ்ஞானமே வாழ்க்கையோடு வேறெதையும் விடத் தொடர்பு கொண்டது. பூமியின் மீது கனம் மிகுந்திருக்கும் ஒரு பொருள் வான மண்டலத்திற்குப் போனால் மிதக்கின்ற பொருளாகிவிடும். இதுவே இடமாற்றத்தால் விளைந்த தன்மை மாற்றம். இதேபோன்று சமூக வாழ்விலும் தரத்திற்கேற்ற குண, பண்பு மாற்றங்களும் உண்டு பன்னிரண்டு வயதே முடிவுற்ற சிட்டி மாளிகைக் குடும்பத்தில் பிறந்திருந்தால் ஒன்றுமறியாத மழலை பேசும் குழந்தையாகத்தான் இருந்திருப்பான். ஆனால் அவன் மாளிகையில் பிறந்தவனோ, மாளிகையாக உயர முயலும் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்தவனோ அல்ல, அது அவனது பெரிய குற்றம்தான்! அந்தக் குற்றத்தின் விளைவாகவே அவனும் அவனைப் போன்ற அந்தத் தரத்துக் குழந்தைகளும் உடல் வளர்ச்சியில் குழந்தைகளாய் இருந்தாலும் உளவளர்ச்சியில் சராசரி மனிதனின் வளர்ச்சியே பெற்றிருக்கிறார்கள். வாழ்க்கை அவர்களுக்கு எதையும் மறைக்கவில்லை. அவர்களுக்கு ‘எல்லாமே’ தெரிந்துதான் இருக்கிறது "
1960-களில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் விவாதிக்கும் விஷயங்கள், இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.
YouTube பதிவாக: