ரிஷி மூலம் [Rishi Moolam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ரிஷி மூலம் [Rishi Moolam]

None

3.92/5 · 300+ ratings

The eeriness of Jayakanthan's two novellas in this volume is overwhelming and disturbing. The protagonists are helpless victims of psychological maladies. Their suppressed libido and Oedipus complex are areas Tamil writers generally dared not enter - at any rate in the 1960s, when they were written.The brilliant introvert Rajaraman is the quintessential good boy. The play of circumstances kindles…

Reviews

user_10879

★ 2/5
i am new user to this site how to read the book

user_10878

★ 3/5
nice

user_10877

★ 3/5
ஜெயகாந்தனின் முற்போக்கு படைப்புகளில் உள்ள புரட்சி கருத்துக்கள் இதில் இல்லை.மிக அந்தரங்கமான சில சிக்கல்களை அவரது கோணத்தில் காட்டுகிறார். படிக்கச் வேண்டிய படைப்பு.

user_10876

★ 5/5
This is my first Tamil book in a long time. Feeling more accomplished than ever after finishing this book compared to finishing an English book. A brave and controversial topic dealt in this book and I can only imagine the backlash that it got when it came out. While reading the preface, you try to think why and what the writer is so worked up about and he almost sounds like a failing writer who is trying to defend his stand, his opinions and his other works. He picks them apart literally and he justifies everything his critics has to say about him. Only after you get to the athiyaayam 2 of the book, you get to understand the core of the story and thus, shines light on the critic-artist clash. The story itself deals with a guy having major Oedipus complex, and how it surrounds him, engulfs him and creating a new persona out of him, and how he overcomes it (or he thinks at least) and making peace with it. A great read. I will read more of Jayakanthan in the days to come.

user_10875

★ 5/5
an another sarcastic story Jayakanthan, I am quite stunned by the story but this what it is , He shows the bare truth without any decoration. But I felt this story ends abruptly as he stated it was stopped in the Dinmani in 3 weeks. Probably he would explore more if it is longer. we missed it .

user_10874

★ 4/5
A wonderful book which explores a sensitive facet of the forging of a human personality. Deeply philosophical in certain parts and serves as a canvas for JK the thinker to express his opinions.

user_10873

★ 5/5
Mind blowing

user_10872

★ 3/5
Unless you need to think as a 60's teen, you can't enjoy or indulge you in this book. And you will find everything as a mistake and vulgar. So try this before having a second thought

user_10871

★ 4/5
It was embarrassing to read this. That’s what Jeyakanthan do to you. He embarrasses you. Put you down and help you relook yourself. I’m a big fan of him. Read almost every single book out there. But this one was really awkward. One takeaway I could get outta this is, the flawless mother’s love.

user_10870

★ 5/5
சாமியாராகிவிட்ட கிருஷ்ணையர் - இந்து தம்பதிகளின் இரண்டாவது மகன் ராஜாராமன் குறித்து மற்றவர்களின் (கிருஷ்ணையர், ரகுபதி, சாம்புவையர் - சாராதா மாமி மற்றும் அந்த ஊரார்) அபிமானங்களை விளக்குகிறது அத்தியாயம் 1, ராஜாராமனின் நான் யார் என்ற தன்னிலை விளக்கம் அத்தியாயம் 2, இது அவன் இல்லை அவனது நடமாடும் உயிரற்ற உடல் என்பதே அத்தியாயம் 3. பெரும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்ட கதை இது. ஏன்எனில் பாலுணர்வு பற்றிய பிரச்சனையை ரிஷி மூலம் கதையில் எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன். -கலைச்செல்வன் செல்வராஜ்.

user_10869

★ 5/5
"ரிஷிமூலம்" குறுநாவலை பல தசாப்தங்களின் முன்பே நான் பள்ளி மாணவனாக இருந்த சமயத்தில் வாசித்து இது சாத்தியமா என்று வியந்தது உண்டு. அன்றைய காலகட்டத்தில் இது போன்ற விரசம் நிறைந்த சர்ச்சைக்குரிய கருப்பொருள்களை அவர் கையாளும் விதம் அது அவருக்கே உரிய திறமை என்பதை விட வேறொன்றும் சொல்வதற்கில்லை. ஜெயகாந்தனின் எழுத்துக்கள் மீது எனக்கு அப்போது தொடங்கிய தீராத மோகம் இன்னும் தொடர்கிறது. என்னை பொறுத்தவரையில் ஜெயகாந்தனின் எழுத்துக்கள் நான் உபயோகிக்கும் அளவுகோல்! இதை வைத்துத்தான் மற்றைய எழுத்தாளர்களின் படைப்புகளை என்னால் தரம் பிரிக்கமுடிகிறது. இலக்கியம் என்கின்ற பெயரில் குப்பைகள் மலிந்த இன்றைய காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் தரம் மிக்க முன்பு படித்த இது போன்ற நாவல்களை மீண்டும் படித்து திருப்தி காண்கின்ற நிலமை தொடர்கிறது. அவரது நாவல்கள் போல் அவர் எழுதும் முன்னுரைகளும் அவரது தனிமுத்திரையை பறைசாற்றுவன. இந்த நாவலிலும் அது விதிவிலக்கல்ல! "ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன" நாவலில் வரும் பாத்திரங்கள் நியவாழ்விலும் உண்டு, எங்கள் ஊரிலேயே இது போன்றோர் இருந்ததை அறிந்திருக்கிறேன். இதை வாசிக்கும்போது பணவசதி படைத்த பங்களா போன்ற வீட்டில் தாயாரின் அரவணைப்பின் கீழே படித்து நல்ல நிலையில் இருந்த அந்த மூன்று முதிய பெண்கள் கொண்ட குடும்பத்தை நினைவு படுத்தியது. இது போன்ற விடயங்கள் ஜெயகாந்தன் எழுத்தில் மட்டும்தான் உணரமுடியும்! மனம் நிறைந்த திருப்தி!! *****

user_10868

how to read

user_10867

i unable to read any books. pls let me know how to download and read books.

user_10866

★ 4/5
மிக அருமையான முயற்சி.

user_10865

★ 3/5
இக்கதையில் எதோ ஒன்று இல்லை. அதிலும் இரண்டாம் கதை சற்று செயற்கையாக உள்ளது. அரை சாப்பாடு சாப்பிட்ட உணர்வு.

user_10864

★ 4/5
Classic Jeyakanthan. This books contains 2 short stories("Rishi Moolam" and "Aadum Naarkaligal Adugindrana") once again analyzing the different facets of human mind and society. This book also have a detailed and interesting preface by the author addressing his critics.

user_10863

★ 5/5
“ரிஷிமூலம்” - ஜெயகாந்தன் ரிஷிமூலம், மற்றும் ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன எனும் இரண்டு நெடுங்கதைகளாலானது இப்புத்தகம். 1969 செப்டம்பர் -இல் முதற்பதிப்பு கண்டது இக்கதைகள். ஜெயகாந்தனின் 'ரிஷிமூலம்' கதைக்கு கிடைத்த விமர்சனங்களுக்கும் வசவுகளுக்கும், திருப்பி அடிக்கும்(பதிலளிக்கும்) வகையில், இப்புத்தகத்தில் இடம்பெற்ற ஜெயகாந்தனின் பெரும் முன்னுரை அமைந்துள்ளது. அத்தகைய பீடிகையுடன், 'ரிஷிமூலம்' கதையை அணுகியபோது, அந்த அளவுக்கான விமர்சனங்களை ஏன் ஜெயகாந்தன் எதிர்கொண்டார் என புரிந்துகொள்ள முடியும். ரிஷிமூலம் ----------- கதை எழுதப்பட்ட காலத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத, மனித ஒழுக்க வரம்புகளை, வெகுவாக கடந்த சம்பவங்களை கொண்டு மனித மனங்களாலான நியாயகற்பிதங்களை சொல்லும் கதைதான் ரிஷிமூலம். மாயவரம் கிருஷ்ணய்யருக்கு ஆறு பிள்ளைகள், 2 ஆண்கள் 4 பெண்கள். கிருஷ்ணய்யரின் நண்பர் சிதம்பரம் சாம்புவய்யர். அவரது மனைவி சாரதா. பிள்ளை பேறற்றவள். கிருஷ்ணய்யரின் மகனான ராஜாராமனை தன் மகனாக பாவிக்கிறாள். பின்னர் ராஜாராமனின் செயலால், கிருஷ்ணய்யர் குடும்பத்திற்கும், சம்புவய்யர் குடும்பத்திற்கும் ஏற்பட்ட மனவருத்தங்கள், ஒரே சம்பவத்தை, கதைமாந்தர் ஓவ்வொருவரும் தங்கள் பாணியில் புரிந்து கொண்டு நடந்துகொள்வது, என இக்கததையாடல் செல்கிறது. கொஞ்சம் சறுக்கினால் என்பதை விட, வாசிப்பவரின் முதிர்ச்சியை கொண்டே, இக்கதையின் தாக்கத்தை படிப்பினையாகவோ, வக்கிரமாகவோ உணர்ந்து கொள்ளமுடியும். ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன ------------------------------- சூதாடிக் கணவனின் விதவை அலங்காரவல்லியம்மாள், தனது மகன் ஆடலரசன், மற்றும் மகள்கள் செல்லம், ஜானகியுடன் பங்களாவில் வாழ்ந்து வருகிறாள். தனி ஒருவளாக அவர்களை வளர்த்து வக்கீல், பேராசிரியை, மேலாளர் எனப் பெரும் பொறுப்புகளுக்கு வரும்படி வளர்த்துவிட்டாள். இப்பேற்பட்ட பொறுப்புக்களுக்கு வந்த பின்னும், அவர்களுக்கென வாழக்கையை அமைத்து தராமல், தனது தாய்ப்பாசம் என்ற சுயநலத்தின் பொருட்டு, மாயத் தங்கச்சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளாள். ரிஷிமூலக்கதைக்கும் மேற்சொன்ன கதைக்கும் ஒரு புள்ளியில் மட்டுமே இணைப்பு உள்ளது. அதை நாம் சொல்லாது, வாசிப்பவரின் அனுபவ பூர்வ உணர்தலுக்கே விடுவதுதான் உசிதம். இரண்டு கதைகளும் சமூகத்தின் ஏதோ ஒரு மூலையில் இன்றும் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள்தான் என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். இவ்வாசிப்பு, நமது கலாச்சாரம், வாழக்கைநெறி பொருட்டு நிச்சயம் புதுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து... \ வணங்குவதும் வழிபடுவதும் மனித வாழ்க்கை சம்பந்தப்பட்டதே தவிர கடவுளோடு சம்பந்தப்பட்டது அல்ல; உரையாடுவதும் வரம் கேட்பது மனிதர்களின் எண்ணம் சம்பந்தப்பட்டதே தவிர இறைவன் சம்பந்தப்பட்டதல்ல ... மனித வாழ்க்கையினால் செழுமையும் மேன்மையுமுறுவது கலாச்சாரமாகும். மனிதத்தோடு மிகவும் சம்பந்தப்பட்டது 'கலாச்சாரம்' எண்ணங்களை விடவும் நடைமுறை சம்பந்தப்பட்டது. / புத்தகத்தின் முன்னுரையிலிந்து.... \ நான் கண்டதை அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப்பட்டதை, நான் கேட்டதை - அதாவது வாழ்க்கை எனக்குச் சொன்னதை நான் உலகத்துக்கு திரும்பவும் காட்டுகிறேன். அதையே திரும்பவும் உங்களிடம் சொல்லுகிறேன். அது அசிங்கமாக, அது அற்பமாக, அது கேவலமாக அல்லது அதுவே உயர்வாக, உன்னதமாக எப்படி இருந்தபோதிலும் எனக்கென்ன பழி ?அல்லது புகழ்? எனது முதல் சிறுகதைத் தொகுதி முன்னுரையில் நான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்த காலத்திலேயே மேலே கண்டவாறு எழுதியிருக்கிறேன். / \ நான் எந்த அரசியல் கட்சியை சார்ந்திருந்த போதிலும் எப்போதுமே எனது இலக்கிய வாழ்க்கையை கலப்படமில்லாமல் நடத்தி வந்திருக்கிறேன். தொழிலாளர்கள், ஏழைகள், பசித்தவர்கள், விபச்சாரிகள் பற்றிய கதைகளை எழுதுகிறபோது நான் மார்க்சியத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு கதைகள் எழுதுவதாக பலர் சொல்லுகிறார்கள். நான் அதை மறுத்ததில்லை. அது அப்படித் தானா என்று எனக்கு தெரியாது; அதனால்தான் மறுத்ததில்லை ஏனென்றால் நான் மார்க்சியத்தில் கற்றுத் துறைபோகிய அல்லன் நான். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததனால் அப்போதெல்லாம் என்னைப் பற்றி அப்படி கூறுவதை ஒரு பெருமையாகக் கருதி வந்திருக்கிறேன். அப்படி கூறினாலும் நான் மறுக்க மாட்டேன். / \ சிறந்த தனி மனிதர்கள் உருவாக வாய்ப்பற்ற சமுதாயம், சிறந்த சமுதாயம் ஆகாது. ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்காக போராடுகிற தன்மை இல்லாத தனி மனிதத்துவத்துக்கு அர்த்தமில்லை. செக்கு மாடு களை உற்பத்தி செய்யும் சமுதாயம், தேடி அழிகிற (Philistone) சமுதாயம் ஆகும். / \ இந்த சமுதாயத்தை என் எழுத்து கெடுத்துவிடும் என்ற குற்ற உணர்வு எனக்கு இல்லை. புதிதாக கெடுப்பதற்கு இங்கு ஒன்றும் இல்லை. எனது எழுத்துக்களை பாடப்புத்தகமாக வைக்கச் சொல்லி நான் மனு போடவில்லை. எனது எழுத்துக்களுக்கு அந்த தகுதி இல்லை என்று நான் சொல்லவில்லை. உங்கள் பள்ளிகளுக்கு அந்த பக்குவம் இன்னும் வரவில்லை என்று சொல்லுகிறேன். / கதைகளிலிருந்து… \ நான் என்கிற அகந்தையாம். அந்த அகந்தை எனக்கு ரொம்ப உண்டு. நான்தான் அகந்தை; அகந்தைதான் நான். என்னை வைத்து தான் நான் எல்லாவற்றையும் அறிகிறேன். எண்ணில் இருந்து விலகியும் என்னை வைத்து தான் நான் என்னையே அறிகிறேன். / \ காவேரியானால் என்ன, கங்கையானால் என்ன? எந்த சாக்கடையானால் என்ன? எந்த சமுத்திரமானால் என்ன? எல்லாமே ஒன்றுக்கு வாய்த்த பல பெயர்கள்தானே! எல்லா நதிக்கரையிலேயும் ஒரு மசானமும் உண்டு. எல்லாம் மசானங்களிலும் பிணங்கள் உண்டு. பிணங்களிலே பேதங்கள் என்ன? ஆண் பிணம், பெண் இனம், தாய் பிணம், தந்தை பணம்-எல்லாம் ஒரே பிணந்தான். மசானங்களிலே எந்த மசானம் ஒசத்தி? எது தாழ்த்தி? கல்கத்தா நகரத்தில் இருக்கே காளி கட்டம் - அங்கே ஓடுறதே ஒரு சாக்கடை - அப்படி சொன்னா காளி உபாசகன் அங்கேயே பலி போட்டுடுவான் - அது கங்கையின் அம்சமோ, அல்லது கங்கையோவாம்! அந்த கங்கையே பாதி மசானம்தான்! அந்த கரையிலே உயிருள்ள பிணங்கள் தீர்த்தமாடிகொண்டிருக்கும்... எதிர்கரையிலே வெந்தும் வேகாமலும் கரிஞ்சு போன மசானப் பிணங்கள் மதிலே மிதந்துண்டிருக்கும் அதையும் பவித்திரமான அள்ளித் தலையில் தெளிச்சுண்டு தான் போவா.அதையும் பார்த்துதான் சிரிச்சிருக்கேன். அதை எப்படி அள்ளி தலையிலே தெளிகிச்சுக்குறாளோ, அதே மாதிரி ரிஷி மகராஜ்னு என் காலிலேயும் விழுந்துட்டு போவா. அவா நதி மூலமும் பாக்கறதில்லே ரிஷி மூலமும் பாக்கறதில்லை. நான் அதுக்காக அங்கு போகல்லே. நான் போன பாதையிலே என் காலிலே நாடிகளும் பட்டிருக்கு. பிணங்களும் பட்டிருக்கும்..., காவி கட்டிண்டு, சடாமுடி வளர்த்துண்டு தபோமுனி ஆகணும்னு... நான் போகல்லே. நான் கட்டினு போன துணியே நாளா வட்டத்தில் காவியாயிடுத்து, தாடியும் முடியும் நானா வளர்த்தேன்? அது தானா வளர்ந்துட்டுது? ஒரு வேஷமும் வேண்டாம்னு போனவனுக்கு அதுவே ஒரு வேஷமாப் போயிடுத்து. எல்லாமே ஒரு வேஷம் தான். எதுவுமே வேண்டாம்னு போனா, அதுவே ஒரு வேஷம் தான்! உயிருக்கு உடல் வேஷம்; உடலுக்கு பல வேஷம்! எனக்கு சிரிப்பு சிரிப்பா வரதே. \ அலங்காரவல்லியம்மாள் ஏன் இப்பட��� ஆடுகிறாள்? அது என்ன அது மாத்திரை? பெரியண்ணாவுக்கு என்ன? அவர் எங்கு இருக்கிறார்? எப்போது வருவார்? தனது குழந்தைகளை இத்தனை வயதுக்கு மேலும் இப்படியே வைத்துக் கொண்டிருக்கிறாளே, இவள் என்ன தாய்? ஏன் அவர்களின் வாழ்க்கையில் தன்னை தவிர இன்னொரு துணை, தாம்பத்தியம் என்கிற பந்தம் ஏற்பட வேண்டும், அதனை தானே முன்னின்று ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி, ஒரு தாய்க்கு வந்தே தீரவேண்டிய பாச உணர்ச்சி இவளுக்கு வரவே இல்லை? அவர்களும் அது பற்றி சிந்திப்பதே இல்லையா? அவர்கள் சிந்திக்கவில்லையா? அல்லது அலங்காரவல்லியம்மாள் சிந்திக்கவிடவில்லையா? ஒருவேளை இதையெல்லாம் எண்ணி எண்ணி குழப்பமுற்று என்ன செய்வதென்று யோசித்தவாறுதான் அலங்காரவல்லியம்மாள் அந்த ஆடும் நாற்காலியில் அமர்ந்து தனிமையில், இரவில், இருளில் விடியும் வரை அவள் மனமும் நினைவும் அலைபாய்கிற மாதிரி இப்படியும் அப்படியும் இழுபடுகிற மாதிரி முன்னும் பின்னும் முரண்படுகிற மாதிரி உந்தி உந்தி ஆடுகிறார்களோ? 'கிர் கிர்...கிர் கிர்...கிர் கிர்...' என்று ஆடுகிற பதில் சொல்கிறது. தெரியாது; தெரியாது; தெரியாது! /
Shelves
Jayakanthan India ஜெயகாந்தன்-3 Fiction book

More like this


அக்னிப்பிரவேசம் [Agnipravesam]

His trilogy on human relationships Agnipravesam, Sila Nerangalil sila Manithargal and Gangai Enge Pogiral is still extremely popular and the theme…

3.92/5 · 300+ ratings

அக்கினி பிரவேசம் [Akkini Pravesham]

Akkini Pravesham | அக்கினி பிரவேசம் Tamil Novels

3.92/5 · 300+ ratings

பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.92/5 · 300+ ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangathu Devadhaigal]

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

3.92/5 · 300+ ratings

Cinnamon Gardens

Set among the upper classes in the gracious, repressive and complex world of 1920s Ceylon (Sri Lanka), this evocative novel tells the story of two…

3.92/5 · 300+ ratings

Thanneer Desam

Author: Vairamuthu

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

3.92/5 · 300+ ratings

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1 [Jayakanthan Sirukathaigal, Part 1]

ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 1 யுக சந்தி இல்லாதது எது இரண்டு குழந்தைகள் நான் இருக்கிறேன் பொம்மை தேவன் வருவாரா? துறவு பூ உதிரும் குறைப் பிறவி யந்திரம். …

3.92/5 · 300+ ratings

கருணையினால் அல்ல [Karunaiyinaal Alla]

அமைதியான விஷயங்களை அணுகும் எழுத்தும் அமைதியான ரசனையும் கூட நம்மிடையே வளர வேண்டும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்த முயற்சியில் தான் பல சிறுகதைகளை எழுதியுள்ளதா…

3.92/5 · 300+ ratings

கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

3.92/5 · 300+ ratings

யாருக்காக அழுதான்? [Yaarukkaaga Azhuthaan?]

Two novellas - Yaarukaga azhudhan? and enakkaga Azhu !

3.92/5 · 300+ ratings