Select a cover image
Searching for images...
Saving cover image...
காதுகள்
- பக்கங்கள்
- 160
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 5th Revised edition
- ISBN-13
- 9789384641092
எம்.வி.வி தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கம் அவர்தான். மகாலிங்கத்தின் மத்திய வயதில் (36, 37) அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள்கூட அவருக்குள் கேட்டன. வெங்கட்ராமன் வாழ்க்கையில் வாய்திறந்து அட்டகாசமாகச் சிரித்தவர் இல்லை. வசைச் சொல்லைப் பெய…
Appears in following lists
user_7569
★ 4/5எம்.வி.வெங்கட்ராம் தனது எண்பதாவது வயதில் இறக்கிறார் (1920-2000). நாவலின் மூலப்பாத்திரமான மாலி என்கிற மகாலிங்கத்தின் வாழ்க்கையைத் தனது வாழ்க்கை என்கிறார்.
அவருக்குத் தன் காதுகள் துவங்கி இன்னபிற புலன்களும் சேர்ந்துகொண்டு அவரை முழுக்க இம்சித்து உலுக்குகின்றன. தீய சக்தி, தெய்வசக்தி என்ற உருவங்கள் நேரெதிரே பல்வேறு வடிவங்கள் பூண்டு தன் மனக்கண்ணுள் நடத்தும் நாடகங்களால் அலைக்கழிக்கப்படுகிறார்.
ஒரு புத்தகம் வாசிக்கையில் அது நமது வாழ்க்கையில் கடந்த இன்னொரு நபரை நினைவுபடுத்தாமல் இருந்தால் அது சீர்மிகு புத்தகம் அல்லதானே? அதன்படியே எம்.வி.வி எனது தாத்தா காலத்துக்கு அழைத்துச் சென்று அவர் வாழ்வுக்கு நேர்மாறான இன்னொரு வாழ்க்கையைக் காட்டியிருக்கிறார்.
user_7568
★ 5/5ஒரு வழியாக முடித்துவிட்டேன். இவ்வளவு நாள் ஒரு நாவலை நான் வாசித்ததில்லை - அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது இந்த நாவல்.
எனக்குத் தெரிந்து அனைவரும் இந்த நாவலை ஒரு முறையாவது படித்துவிட வேண்டும், நாமே நம்மைச் சுயபரிசோதனை செய்ய ஏதுவாக இருக்கும்.
எம்.வி. இந்த நாவல் அவரது வாழ்க்கை அனுபவம் என்று சொல்கிறார். ஆனால் இது இந்த நூற்றாண்டில் இருக்கும் அனைத்து மனிதர்களின் மன உளைச்சலையும் பிரதிபலிக்கிறது. மகாலிங்கம் என்னும் மனிதனின் மனம் சார்ந்த கருத்துகளை முன்வைத்து ஒரு கருத்தை மற்றொரு கருத்து வென்றுகொண்டிருக்கிறது.
"பிரம்மை புகட்டும் எண்ணங்களை நான் என் எண்ணங்களாக ஏற்றுக்கொண்டுவிட்டால் எனக்கு முழுசாக பைத்தியம் பிடித்ததாகத் தானே அர்த்தம்" - என்னைப் பாதித்த வரி.
user_7567
★ 5/5அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக இறுதியில் வரும் ராமன் மற்றும் கருப்பன் உரையாடல்கள் மிகவும் வேடிக்கையாக இருக்கின்றன.
user_7566
★ 5/5இதற்கு முன் நீங்கள் வாசித்ததைப் போல் இருக்காது. மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர். அவரது எல்லா நாவல்களையும் விரும்புகிறேன். ஆனால் இன்னும் அவரது முழுப் படைப்புகளும் அச்சில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
user_7565
★ 3/5மிகவும் வித்தியாசமான நடையில் வித்தியாசமாய் எழுதப்பட்ட ஒரு நாவல். தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான படைப்பு.
Genres
Shelves
More like this
வேள்வித் தீ
ஒரு நெசவாளியின் கஷ்ட ஜவணத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் நாவலாக மட்டும் இது நின்றிருந்தால் கால ஓட்டத்தில் காணாமல் போன நாவல்களில் ஓன்றாகக் கரைந்து போயிருக்கும். அப்படியின்றி, ப…
நித்யகன்னி
நித்ய கன்னி அன்றாடம் நாம் காண்கிற காதற் கதையோ, கற்புக் கதையோ, கற்பு கேட்ட கதையோ அல்ல. மனிதன் உயர்வை நோக்கி நடத்தும் இயற்கைப் போராட்டங்களைச் சில விசித்திரப் பாத்திரங்களின் மூ…
என் இலக்கிய நண்பர்கள்
எம்.வி.வி.யின் எழுத்து, மென்மையும் திறந்த போக்கும் சக ஜீவன்களிடத்தில் பரிவும் கொண்டது. அவர். இளம்வயதிலேயே அபூர்வமான - இந்திய வாழ்க்கை மீண்டும் மீண்டும் ஆபத்தானதுங்கூட என்று…
உயிரின் யாத்திரை [Uyirin Yathirai]
அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும் தீவினைப் பயன்கள், முற்பிறவிச் சிந்தனைகள், பிறப்பறுத்தல் போன்றவற்றின் நிகழ்ச்சிப் …
பனிமுடி மீது ஒரு கண்ணகி
“எம். வி. வெங்கட்ராமின் சிறுகதைகளை வாசித்தபோது அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அகத் தூண்டுதலுக்குக் காரணமான உணர்வை அடையாளப்படுத்த விழையும் முயற்சிகளாகவே தோ…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்
வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…