ஜே ஜே சில குறிப்புகள்
Share:

ஜே ஜே சில குறிப்புகள்

J.J. Some Notes

Check Price on Amazon
4.1/5 · 600+ ratings

ஜே ஜே சில குறிப்புகள்

J.J. Some Notes

4.1/5 · 600+ ratings
பக்கங்கள்
230
வடிவம்
Paperback
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788190080187

மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொண்ட எனக்கு, தங்களை என்னில் இனங்கண்டுகொள்ளும் மற்றவர்களின் தொடர்புகள் வாய்த்தவண்ணம் இருக்கின்றன. என்னைப் …

Interested in this book? Check Price on Amazon

user_5443

★ 5/5

ஜே.ஜே. சில குறிப்புகள் இதுவரை நம்பி வந்த கதை மரபிலிருந்து விலகி புதுமையான அனுபவம் தருகிறது. புதிய பின்புலமுள்ள படைப்புகள் வாசிக்க உந்தும் சக்தியாக இருந்து வருகிறது.

கற்பனைக் கதையாக வளராமல் சுயமான கருத்துக்களை உருவாக்கிக்கொண்டு விரிவடையும் நாவல். வாழ்க்கையுடன் கருத்தை ஆய்வு செய்கிறது - இதுவே இந்த நாவலின் நோக்கம். வாசிப்பின் மனத்தடையை விலக்குகிறது.

user_5442

★ 5/5

அருமையான புத்தகம். புத்தகத்திலிருந்து சில குறிப்புகள்:

"என் வாழ்கையில் எனக்கு எப்போதுமே திட்டம் என்று ஒன்று இருந்ததேயில்லை. சொந்த வாழ்வில் நாளை பற்றி நான் யோசித்ததே இல்லை. ஆற்றில் விழுந்துவிட்ட ஒரு கட்டை சுழிபுகளில் சுழன்று, சமவெளிகளில் ஓடி, ஏற்ற இறக்கங்களில் தத்தளிக்கிறது - என் போக்கை எப்போதும் இப்படித்தான் நினைத்துப் பார்க்கிறேன்."

"இவர்கள் கொண்டாடும் வெற்றி மீது நான் வெறுப்படைகிறேன்."

"இவர்கள் சொந்தம் பாராட்டிக்கொள்வது அனைத்தையும் நான் மறுக்கிறேன்."

user_5441

★ 5/5

பித்துப் பிடித்தது போல் நீண்ட நாட்களுக்கு என்னுள் தாக்கம் ஏற்படுத்திய படைப்பு!

"இப்போது நான் எதையும் சொல்லப்போவதில்லை. சொல்ல எனக்கு எதுவுமில்லை. நான் இப்போது மௌனம் சாதிக்கிறேன். மௌனம் உன்னதமானது. அது கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது. கேள்வியைச் சீரழிக்காமல் பார்த்துக்கொள்கிறது. பதில் உளறல்கள் கேள்வியைத் துவம்சம் செய்துவிடுகின்றன. சரியான கேள்விகள் அபத்தமான விடைகளின் குவியல்களில் அகப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாய்ப் போய்விட்டன. நான் ஒருபோதும் அதைச் செய்ய மாட்டேன்."

user_5440

★ 3/5

புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த நாட்களிலிருந்தே தமிழ் இலக்கியத்தில் நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆசையில் வாங்கிய புத்தகம்.

மலையாள எழுத்தாளரான ஜே.ஜே. அவர்களின் சிறுவயது முதல் மறையும் வரையிலான வாழ்க்கையின் சில பக்கங்களை இந்தப் புத்தகத்தில் காணலாம். பணம் சம்பாதிக்கும் நிலையில் இல்லாவிட்டாலும் அவரைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் இருந்தது.

இலக்கியக் கூட்டத்திற்கு வரும்போது எப்போதும் அவரைச் சுற்றி பல மனிதர்கள் இருந்தனர். ஓரிரு இடங்களில் ஜே.ஜே.யின் பார்வை மிகப் பிடித்தமாக இருந்தாலும், முழுமையான புத்தகமாக இது எனக்குப் பிடித்தமானதாக இல்லை. ஒருவேளை இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கான முதிர்ச்சி இன்னும் வரவில்லையோ என்னவோ.

user_5439

★ 5/5

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையிலும் வேலையிலும் ஒரு நாள் சலிப்பு தட்டிவிடும். இதற்கு இலக்கியவாதிகளும் கலைஞர்களும் விதிவிலக்கல்ல. அந்தச் சலிப்பிலிருந்து விடுபட இயற்கை, கலை, பயணம் வழியாக ஒரு பற்றுதலை ஏற்படுத்திக்கொள்கிறான் மனிதன். இதில் தவறியவர்களுக்கு வாழ்க்கை சுமையாக மாறுகிறது.

எழுத்தாளனுக்கும் இதே மூச்சுமுட்டலும் சலிப்பும் ஏற்படுவது வழக்கம். சிலர் எழுதுவதை நிறுத்துகின்றனர், சிலர் தம் எழுத்துலகிற்குள்ளாகவே தொலைந்துவிடுகின்றனர், ஒரு சிலர் மட்டுமே புதுமைகளைப் புகுத்தி தொடர்ந்து செயல்படுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு புது முயற்சியாகவும் பரிசோதனையாகவும்தான் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகளைப் பார்க்கிறேன்.

சு.ரா. தன் மனதில் நீண்ட நாள் கொதித்துக்கொண்டிருந்த ஒரு கொதிநிலையை இந்தப் புத்தகத்தின் மூலம் இறக்கிவைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது. உலக இலக்கியங்களைப் பெரிதாகப் போற்றும் நம் நாட்டில் ஏன் நம் தேசத்துப் பிற மொழி இலக்கியங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்ற ஆற்றாமையே இந்தப் படைப்பின் முதற்புள்ளி.

சி.ஜே. தாமஸ் என்ற கேரள எழுத்தாளருக்கும் ஜே.ஜே.யிற்கும் உள்ள பொருத்தம் - சி.ஜே. தாமஸ் வாழ்வின் நிஜம், ஜே.ஜே. புனைவின் உண்மை.

இந்நூலை எந்தக் காலத்திலும் எந்த நிலத்திலும் கொண்டு பொருத்திப் பார்த்தாலும் இதன் வடிவமும் தாக்கமும் மாறாது. இப்படி ஒரு படைப்பு ஒரு மொழிக்கு நிகழ்வது அரிது.

மறுவாசிப்புக்கு ஏற்புடைய இப்படைப்பு தமிழ் இலக்கிய உலகின் ஒரு நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பு என்று கூறலாம்.

Quotes

“இன்றைய இத்தாலிய எழுத்தாளனைத் தெரிந்தவனுக்கு இன்றைய கன்னட எழுத்தாளனைத் தெரியவில்லை. 'அமெரிக்க இலக்கியத்தின் புதிய போக்குகள்' பற்றி ஆங்கிலத்தில் ஆராய்ச்சி கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் பெற்ற இந்தி எழுத்தாளன் 'தமிழில் புதக்கவிதை உண்டா?' என்று கேட்கிறான். காஃப்கா என்கிறோம். சிமோன் த பூவா என்கிறோம். போர்ஹே என்கிறோம். குட்டிக்கிருஷ்ண மாராரைத் தெரியாது என்கிறோம். கோபாலகிருஷ்ண அடிகாவைத் தெரியாது என்கிறோம். எப்படி இருக்கிறது கதை? ஒவ்வொரு மொழி இலக்கியத்தையும், அம்மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தையும், அடுத்த மொழிகளில் அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்கு மட்டுமே தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் தனித்தனிப் பத்திரிகைகள் இந்திய மொழிகள் அனைத்திலும் துவக்கப்பட வேண்டும் என இரண்டு பத்தாண்டுகளாக நான் நண்பர்களிடம் சொல்லிவருகிறேன்.”

“இவர்கள் சொந்தம் பாராட்டிகொள்வது அனைத்தையும் நான் மறுக்கிறேன்”

“இவர்கள் கொண்டாடும் வெற்றி மீது நான் வெறுபடைகிறேன்”

More Quotes...
Shelves
சுந்தர ராமசாமி Novels நாவல் Sundara Ramaswamy Fiction book புனைகதை

More like this


ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.05/5 · 1K+ ratings
Check Price

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…

3.84/5 · 45 ratings
Check Price

மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்

புனைவுலகம் அதன் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பதைக் காட்டும் கதைகள் இவை, தீவிரமும் நுட்பமும் குன்றாமல் எளிமையான முறையில் கதைகளைச் சொல்ல முடியம் என்பதை - உணர்த்தும் பல கதைகள் …

Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.7/5 · 10K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 3K+ ratings
Check Price

கடல் புறா 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.16/5 · 2K+ ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-1

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

4.31/5 · 2K+ ratings
Check Price

கள்ளிக்காட்டு இதிகாசம்

தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…

4.15/5 · 2K+ ratings
Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

4.14/5 · 2K+ ratings
Check Price