ஒரு சிறு இசை
Oru Siru Isai
Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒரு சிறு இசை
Oru Siru Isai
- பக்கங்கள்
- 160
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- சந்தியா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789381343647
- ASIN
- 9381343640
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனித உறவுகளுக்குள் ஒளிந்திருக்கும் நுட்பமான உணர்வுகளையும் வண்ணதாசன் தனது தனித்துவமான மொழியில் இதில் பதிவு செய்துள்ளார். மண்ணின் மணமும், மனிதர்களின் ஆழமான மனவோட்டங்களும் இக்கதைகளின் வழியே மிக அழகாக வெளிப்படுகின்றன.
வாசகர்கள் இந்தப் புத்தகத…
Appears in following lists
user_8834
★ 4/5அருமையான புத்தகம். ஒரே ஒரு வரி கூட நிறைய விஷயங்களைச் சொல்கிறது. வண்ணதாசன் தன்னைச் சுற்றியுள்ள நுண்ணிய விஷயங்களையும், இயற்கையையும் எவ்வளவு கூர்மையாகக் கவனிக்கிறார் என்பது வியக்க வைக்கிறது.
user_8833
வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் இது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தொடர்ச்சியாக இவ்விருது பெறும் ஐந்தாவது நபர் இவர். வண்ணதாசனின் தனித்துவமான எழுத்து நடைக்கு இவ்விருது மிகவும் தகுதியானது.
user_8832
★ 4/5இறந்த சேதியைப் பேப்பரில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் போது "சமீபத்தில் கண்ணாடி மாத்திருப்பார் போல" என்கிற ஜான்சி, தான் சின்ன வயதில் தண்டவாளத்தில் பார்த்த பட்டாம்பூச்சி தான் இது என நம்பும் வயதானவர், செங்குளத்துப் பெரியம்மை, "நிலைக்கண்ணாடி மாறி மாப்பிள்ளை நீ" என்கிற பூர்ணலிங்க மாமா, "இன்னிக்கு என்னமோ எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிடணும் போலிருக்கு" என்கிற சுப்பு, நனைந்த கறுங்குடைக்கு விளக்குப்போட்டு ரசிக்கும் பாலையா, தண்டவாளங்களைத் தாண்டும் காந்தி டீச்சர், எல்லாரையும் தாராளமாய் கைபிடித்துப் பேசும் மூக்கம்மா ஆச்சி — வண்ணதாசன் வரிகளிலேயே சொன்னால் "ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் போல நிறைய முகங்கள்".
தூக்கி விசிறிட்ட சாவி விழும் இடத்தில் இடம்பெயர்ந்த கொத்துமயிர், எட்டிப் பார்க்கும் செம்பருத்திச் செடி, காத்தாடியில் படபடக்கும் புத்தகம் — எல்லாம் வண்ணதாசனின் கண்களுக்கு தான் படும். மரங்களில் சாமிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அத்தனை அன்போடு ஆரத்தழுவ அவருக்கு தான் வரும்; மரமும் பறவையும் பூக்களும் தான் வண்ணதாசன்!
user_8831
★ 5/5மகிழ்ச்சியான வாசிப்பு அனுபவம் தந்த புத்தகம்! வண்ணதாசனின் கவித்துவமான எழுத்து நடை மனதில் நீங்காத இடம்பிடிக்கிறது.
user_8830
★ 3/5மிகவும் வித்தியாசமான வாசிப்பு அனுபவம். எனக்கு எளிதான வாசிப்பு அல்ல — அவ்வளவு லாவகமாக வாசிக்க முடியவில்லை. ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது.
பச்சையான உறவு மற்றும் உணர்வு சார்ந்த கதைகள். ஒவ்வொரு பாத்திரங்களும் மட்டுமின்றி அந்தச் சுற்றுச்சூழல் அமைப்பு எல்லாம் மிகவும் ஏற்கத்தக்கதாக இருந்தன.
நான் நித்தமும் வாசிக்கின்ற நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன், சுஜாதா, ஜெயமோகன் இவர்கள் எழுத்துகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய அனுபவம்.
Genres
Shelves
More like this
ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-1
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
என் இனிய இயந்திரா-1
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
யவன ராணி
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
பிரிவோம் சந்திப்போம்
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…