ஒரு சிறு இசை
Oru Siru Isai
Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒரு சிறு இசை
Oru Siru Isai
- பக்கங்கள்
- 160
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- சந்தியா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789381343647
- ASIN
- 9381343640
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனித உறவுகளுக்குள் ஒளிந்திருக்கும் நுட்பமான உணர்வுகளையும் வண்ணதாசன் தனது தனித்துவமான மொழியில் இதில் பதிவு செய்துள்ளார். மண்ணின் மணமும், மனிதர்களின் ஆழமான மனவோட்டங்களும் இக்கதைகளின் வழியே மிக அழகாக வெளிப்படுகின்றன.
வாசகர்கள் இந்தப் புத்தகத…
Appears in following lists
user_8834
★ 4/5அருமையான புத்தகம். ஒரே ஒரு வரி கூட நிறைய விஷயங்களைச் சொல்கிறது. வண்ணதாசன் தன்னைச் சுற்றியுள்ள நுண்ணிய விஷயங்களையும், இயற்கையையும் எவ்வளவு கூர்மையாகக் கவனிக்கிறார் என்பது வியக்க வைக்கிறது.
user_8833
வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் இது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தொடர்ச்சியாக இவ்விருது பெறும் ஐந்தாவது நபர் இவர். வண்ணதாசனின் தனித்துவமான எழுத்து நடைக்கு இவ்விருது மிகவும் தகுதியானது.
user_8832
★ 4/5இறந்த சேதியைப் பேப்பரில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் போது "சமீபத்தில் கண்ணாடி மாத்திருப்பார் போல" என்கிற ஜான்சி, தான் சின்ன வயதில் தண்டவாளத்தில் பார்த்த பட்டாம்பூச்சி தான் இது என நம்பும் வயதானவர், செங்குளத்துப் பெரியம்மை, "நிலைக்கண்ணாடி மாறி மாப்பிள்ளை நீ" என்கிற பூர்ணலிங்க மாமா, "இன்னிக்கு என்னமோ எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிடணும் போலிருக்கு" என்கிற சுப்பு, நனைந்த கறுங்குடைக்கு விளக்குப்போட்டு ரசிக்கும் பாலையா, தண்டவாளங்களைத் தாண்டும் காந்தி டீச்சர், எல்லாரையும் தாராளமாய் கைபிடித்துப் பேசும் மூக்கம்மா ஆச்சி — வண்ணதாசன் வரிகளிலேயே சொன்னால் "ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் போல நிறைய முகங்கள்".
தூக்கி விசிறிட்ட சாவி விழும் இடத்தில் இடம்பெயர்ந்த கொத்துமயிர், எட்டிப் பார்க்கும் செம்பருத்திச் செடி, காத்தாடியில் படபடக்கும் புத்தகம் — எல்லாம் வண்ணதாசனின் கண்களுக்கு தான் படும். மரங்களில் சாமிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அத்தனை அன்போடு ஆரத்தழுவ அவருக்கு தான் வரும்; மரமும் பறவையும் பூக்களும் தான் வண்ணதாசன்!
user_8831
★ 5/5மகிழ்ச்சியான வாசிப்பு அனுபவம் தந்த புத்தகம்! வண்ணதாசனின் கவித்துவமான எழுத்து நடை மனதில் நீங்காத இடம்பிடிக்கிறது.
user_8830
★ 3/5மிகவும் வித்தியாசமான வாசிப்பு அனுபவம். எனக்கு எளிதான வாசிப்பு அல்ல — அவ்வளவு லாவகமாக வாசிக்க முடியவில்லை. ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது.
பச்சையான உறவு மற்றும் உணர்வு சார்ந்த கதைகள். ஒவ்வொரு பாத்திரங்களும் மட்டுமின்றி அந்தச் சுற்றுச்சூழல் அமைப்பு எல்லாம் மிகவும் ஏற்கத்தக்கதாக இருந்தன.
நான் நித்தமும் வாசிக்கின்ற நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன், சுஜாதா, ஜெயமோகன் இவர்கள் எழுத்துகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய அனுபவம்.
Genres
Shelves
More like this
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1
பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…
கிடை
'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுக்கிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் …
சோற்றுக்கணக்கு
அறுபதுகளின் திருவனந்தபுரம். சாலை பஜாரில் கெத்தேல் சாஹிப் என்ற மனிதர் ஒரு சாப்பாட்டுக் கடை நடத்துகிறார். அங்கே கோழிக்குழம்பும் மீன்கறியும் நிறைந்த உணவு பரிமாறப்படும், ஆனா…
Pudhumaipithan sirukadhaigal
தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்படும் படைப்பாளியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். 1930 மற்றும் 40-களில் எழுதப்பட்ட இக்…
ரயில் புன்னகை
மும்பை மின்சார ரயிலில் புன்னகைக்கும் ஒரு அந்நியன், குதிரை கடித்த மனிதனின் நகைச்சுவை, பாம்பு கடி நோயாளியை சிகிச்சை செய்ய முயலும் அரைகுறை மருத்துவன், கிராமத்தில் குடும்…
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை [Sivappu Kazhuthudan Oru Pachai Paravai]
Myths and legends jostle with the contemporary in these stories where social issues of our times resonate with the inevitability of the past. …
பெயர் தெரியாமல் ஒரு பறவை
வாழ்க்கையின் எந்தப் பல் சக்கரங்களுக்குள்ளும் என் வேட்டி நுனி கூட சிக்கி இதுவரை நைந்து போகவில்லை. இருந்தாலும் என் அக்கரை சார்ந்திருக்கிற உலகம் எது என்பதை என் படைப்புகள் சொல்லும்…
நடுகை
"ஒருவர் என்னைப் பிடுங்கட்டும், ஒருவர் என்னை நடட்டும், ஒருவர் தன் கைவிரல்களை உருவிக் கொள்ளட்டும். பிறிதொருவர் வந்து என் விரல்களைப் பற்றி..."
ஒளியிலே தெரிவது
"நான் என் கிளையோடும், இலையோடும், நிழலோடும் நின்றுகொண்டு இருக்கிறேன். நான் ஒளியிலே தெரிவேன். அல்லது என் நிழலில் உதிர்ந்த சருகின் மேல் ஒரு எளிய எறும்பு ஊர்ந்து கொண்டிருக்க…
மனுஷா மனுஷா
வாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து, தங்கள் தங்கள் தோழமையாலும், ஒரு பின்னமான நேரத்தாலும்...