Reviews for ஒரு சிறு இசை
30 reviews total
user_8834
★ 4/5 Feb 02, 2026அருமையான புத்தகம். ஒரே ஒரு வரி கூட நிறைய விஷயங்களைச் சொல்கிறது. வண்ணதாசன் தன்னைச் சுற்றியுள்ள நுண்ணிய விஷயங்களையும், இயற்கையையும் எவ்வளவு கூர்மையாகக் கவனிக்கிறார் என்பது வியக்க வைக்கிறது.
user_8833
Feb 02, 2026வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் இது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தொடர்ச்சியாக இவ்விருது பெறும் ஐந்தாவது நபர் இவர். வண்ணதாசனின் தனித்துவமான எழுத்து நடைக்கு இவ்விருது மிகவும் தகுதியானது.
user_8832
★ 4/5 Feb 02, 2026இறந்த சேதியைப் பேப்பரில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் போது "சமீபத்தில் கண்ணாடி மாத்திருப்பார் போல" என்கிற ஜான்சி, தான் சின்ன வயதில் தண்டவாளத்தில் பார்த்த பட்டாம்பூச்சி தான் இது என நம்பும் வயதானவர், செங்குளத்துப் பெரியம்மை, "நிலைக்கண்ணாடி மாறி மாப்பிள்ளை நீ" என்கிற பூர்ணலிங்க மாமா, "இன்னிக்கு என்னமோ எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிடணும் போலிருக்கு" என்கிற சுப்பு, நனைந்த கறுங்குடைக்கு விளக்குப்போட்டு ரசிக்கும் பாலையா, தண்டவாளங்களைத் தாண்டும் காந்தி டீச்சர், எல்லாரையும் தாராளமாய் கைபிடித்துப் பேசும் மூக்கம்மா ஆச்சி — வண்ணதாசன் வரிகளிலேயே சொன்னால் "ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் போல நிறைய முகங்கள்".
தூக்கி விசிறிட்ட சாவி விழும் இடத்தில் இடம்பெயர்ந்த கொத்துமயிர், எட்டிப் பார்க்கும் செம்பருத்திச் செடி, காத்தாடியில் படபடக்கும் புத்தகம் — எல்லாம் வண்ணதாசனின் கண்களுக்கு தான் படும். மரங்களில் சாமிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அத்தனை அன்போடு ஆரத்தழுவ அவருக்கு தான் வரும்; மரமும் பறவையும் பூக்களும் தான் வண்ணதாசன்!
user_8831
★ 5/5 Feb 02, 2026மகிழ்ச்சியான வாசிப்பு அனுபவம் தந்த புத்தகம்! வண்ணதாசனின் கவித்துவமான எழுத்து நடை மனதில் நீங்காத இடம்பிடிக்கிறது.
user_8830
★ 3/5 Feb 02, 2026மிகவும் வித்தியாசமான வாசிப்பு அனுபவம். எனக்கு எளிதான வாசிப்பு அல்ல — அவ்வளவு லாவகமாக வாசிக்க முடியவில்லை. ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது.
பச்சையான உறவு மற்றும் உணர்வு சார்ந்த கதைகள். ஒவ்வொரு பாத்திரங்களும் மட்டுமின்றி அந்தச் சுற்றுச்சூழல் அமைப்பு எல்லாம் மிகவும் ஏற்கத்தக்கதாக இருந்தன.
நான் நித்தமும் வாசிக்கின்ற நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன், சுஜாதா, ஜெயமோகன் இவர்கள் எழுத்துகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய அனுபவம்.
user_8829
★ 4/5 Feb 02, 2026தனிமையின் வேதனைப் பொழுதுகளின் போது கையில் வந்தமரும் பட்டாம்பூச்சி போல, ஒரு தென்றல் போல, ஒரு சிறு இசை போல வருடிப் போகும் இனிமை வாய்ந்தது வண்ணதாசனின் இருத்தல் — அவரது எழுத்துருவில்.
user_8828
★ 4/5 Feb 02, 2026எனக்கு இத்தொகுப்புடன் பெரிதாக இணைந்துகொள்ள முடியவில்லை. வண்ணதாசனின் எழுத்து நடை அழகானது என்றாலும், கதைகள் என் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமையவில்லை.
user_8827
Feb 02, 2026நம் சுற்றுப்புறங்களிலும் அன்றாட வாழ்க்கைக் காட்சிகளிலும் நாம் பெரிதாகக் கவனிக்காத தருணங்களிலிருந்து எடுக்கப்பட்ட கதைகள். அந்தச் சிறு சிறு விஷயங்களுக்குக் கொடுக்கப்பட்ட விவரணையும் கவனமும் இந்தத் தொகுப்பை அசாதாரணமானதாக மாற்றுகின்றன.
user_8826
★ 4/5 Feb 02, 2026மிகவும் உயிர்ப்பான வர்ணனைகளும், பன்முக கதாபாத்திரங்களும் கொண்ட தொகுப்பு. வண்ணதாசனின் கண்களால் உலகைப் பார்க்கும் அனுபவம் தருகிறது.
user_8825
★ 5/5 Feb 02, 2026வன்மம் இல்லாத வண்ணதாசன்! அவரது எழுத்தில் இருக்கும் அன்பும் பரிவும் ஒவ்வொரு கதையிலும் தெளிவாகத் தெரிகிறது. மனிதர்களை இத்தனை நேசத்துடன் பார்க்கும் பார்வை அரிது.