Family novel. Balakumaran had a strong feelings for each character in this story. I think this will be all time favourite story for me.
கூட்டுக் குடும்பத்தைப் பற்றியும், கூட்டுக் குடும்ப தலைவன் அதை எவ்வாறு சிறப்பாக நிர்வாகம் செய்கிறான் என்பதையும் சிறப்பாக பாலகுமாரன் விளக்குகிறார்.
An experience to live through. Lots of points of view, not always agreeable, but ultimately transformative in the way Balakumaran's books are.
Book with dramatic events and simple storyline. Everything goes well as per plan for the hero including his death. Here and there, one could see good philosophical discussions about god, religion etc.
தலையணைப் பூக்கள்..
எழுத்தாளர்ப் பாலகுமாரனால் எழுதப்பட்டது.
திரு பாலகுமாரரின் நாவல் படிப்பது இதுவே முதல் முறை; இந்த நாவலைப் படிப்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவம்கட்டாயம் கிட்டும், இயல்பாக எல்லாத் தரப்பினரும் விரும்பும்படியாக இருக்கும் அவரது எழுத்துக்கள்.
இந்த நாவல் திரு ராமநாதன் என்ற ஒரு தனிநபரின் கும்பத்தில் நடக்கும் நிகழ்வை அழகாக அவரது பாணியில் எடுத்துக் கூறியிருப்பார் எழுத்தாளர்
ராமநாதனுக்குக் கடவுள் பக்தி மிகுதி. அவர் காஞ்சிப் பெரியவா மீது அளவுகடந்த பக்தியும்; மதிப்புடையவர். ஒரு காரியத்தைத் துடங்கும் முன்னர் அவர் பெரியவா இடம் ஆசிப் பெற்ற பின் தான் அந்தக் காரியத்தில் ஈடுபடுவார்.
கள்ளிடைக்குறிச்சியில் இருந்து இந்தச் சென்னைப் பட்டினத்துக்கு வந்து தன் குடும்பத்துடன் வாழ்கையை எப்படித் துவங்கினார் என்பதை அழகாகச் சொல்லியிருப்பார் எழுத்தாளர்.
திரு ராமநாதனுக்கு அவரது மனைவி(மங்களம்) மற்றும் நான்கு குழந்தைகள். முதலாம் மகன்(சுந்தர் ராஜன்), இரண்டாம் மகன் (நாகராஜன்), மூன்றாம் மகன் ( நடராஜன்),நான்காவது மகள். இவர்களுக்கு ராமநாதன்தம்பதியர் எப்படி ஒவ்வொருவருக்காக மருமகள் மற்றும் மாப்பிள்ளைத் தேடும் படலத்தை அழகாக எடுத்துக்காட்டியிருப்பார்த் தன் எழுத்து மூழுமாக.
முதலாம் மருமகள் (கல்பனா) துவங்கி இரண்டாம் மருமகள் ( வேதவல்லி) மற்றும் மூன்றாம் மருமகள் ( அனிதா) எப்படித் திரு ராமநாதனின் குடும்பத்தில் இனைந்து ஒன்றாக வாழ்ந்தனர் என்பதை அவரது பாணியில்கூறியிருப்பார்.
கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் புரிதலையும் மற்றும் அவர்களிடம் நிலவும் கருத்து வேறுபாடுகளைஅவர்கள் எப்படிக் குடும்பமாக ஒன்று சேர்ந்துச் சமாளிக்கிறார்கள் என்பதை அழகாக எடுத்துரைத்திருப்பார்எழுத்தாளர்.
திரு ராமநாதன் தன் சொந்த முயற்சியில் எப்படிச் சென்னை மாம்பலத்தில் ( மங்களம் அண்ட் கோ நிறுவனம்) ஆரம்பித்தார் எவ்வளவு கஷ்ட்டப்ட்டு முன்னுக்கு வந்தனர் என்பதைத் தன் எழுத்துகளில் சொல்லியிருப்பார்.
திடீர் என்று அவர்களின் குடும்பத்தில் பல குழப்பங்கள், அந்தக் குழப்பங்களுக்கு யார் காரணம்? இந்தத் துயரத்தால்ராமநாதன் தன் உயிரை விடுகிறார். பிற்பகுதியில் காலப்போக்கில் மங்களம் ்அண்ட் கோ ஏன் கடையைமூடியது? எதற்காகக் மூடியது போன்ற விஷயங்களை எழுத்தாளர் ஜனரஞ்சகமாக் கூறியிருப்பார்.
தந்தைக்குப் பின் சுந்தர் ராஜன் மங்களம் அண்ட் கோ எப்படி நடத்திச் செல்கிறான்? அவனுடைய தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவிகள்; சுந்தரா அண்ணாவுக்கு எப்படிக் கம்பெணி விஷயத்தில் உதவிக்கரமாக இருக்கிறார்கள் என்பதை அவரது எழுத்தில் காணலாம்.
இவர்களுக்கு ஏன் திடீர் எதிரி முளைத்தான்? அவனது எண்ணம் என்ன? அவனுக்கும் மங்களம் அண்ட் கோ குடுபத்துக்கும் நடக்கும் போராட்டத்தையும் மற்றும் அவர்கள் ஒன்று சேர்ந்து அந்தக் கெட்ட எண்ணம் கொண்டநபரை முறியடிக்கிறார்களா? எல்லாவற்றையும் கண் முன் கொண்டுவந்திருப்பார் எழுத்தாளர்ப் பாலகுமாரன்.
பல போராட்டங்களுக்குப் பிறகு மறுபடியும் ஒரு பெறிய அடி அந்தக் குடும்பத்துக்கு. அந்த அடி என்னவென்றால் சுந்தர் ராஜன் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கைக்குப் போவது. சுந்தரா மரண விளிம்பில் இருந்து மீண்டு எழுந்துவந்தானா? என்ன ஆனது இந்த அழகிய குடும்பம்? போன்ற பல விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தலையணைப் பூக்களுக்கு எழுத்தாளர் விளக்கம் கொடுத்திருப்பார்ப் பாருங்கள் வெகு அருமைச் சொல்ல வார்த்தை இல்லை....
பாலமுருகன். லோ
i am going to read this book
The novel revolves around a joint family and their struggles in day-to-day life both internal and external. It touches upon the concepts of religion, God and family values. A highly recommended book for people who love family drama. Some of the writing in the novel shows the intensity and maturity of the writer and it is easy to relate oneself to it.
பாலகுமார் அவர்கள் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக அவரின் இந்த தலையணைப் பூக்கள் என்கிற இந்த புத்தகத்தை வாசித்தேன். அவருடைய உரை நடை, எழுத்து, பெண்களை அவர் பார்க்கும் கோணமும், அவர்களுக்கு கொடுக்கும் மதிப்பும் மிகவும் பிடித்து இருந்தது. இதை வெறும் கதையாக பாராமல் அந்த அந்த கதாபாத்திரத்தின் மூலம் அவர் கூறியவற்றை (ஆன்மிகம், பெண்கள், குடும்ப மேலாண்மை, உறவுகளின் முக்கியத்துவம், கணவன் மனைவி உறவு, கூட்டு குடும்ப ஒற்றுமை, உறவுகளுக்குள் உள்ள ஒற்றுமை, நிதி மேலாண்மை, தொழில் பற்றிய பார்வை) புரிந்துகொண்டல் இதுவும் சிறந்த புத்தகம்.
ennala padika mudiyala because book Open aagala
#264
Book 25 of 2024- தலையணைப் பூக்கள்
Author- பாலகுமாரன்
“நேசிப்பதைவிட, நேசிக்கப்படுவது எத்தனை சுகம். எவ்வளவு கர்வம்.”
மாதம் ஒரு பாலகுமாரன் புத்தகம் படிக்க முடிவெடுத்து சென்ற மாதம் நான் படித்த புத்தகம் தான் இது. கிராமத்திலில் இருந்த தன் நிலங்களை விற்று நகரத்திற்கு தொழில் தொடங்கும் கனவோடு வருகிறார் ராமநாதன். “மங்களம் & கோ” என்ற கடையைத் தொடங்குகிறார். பிற்காலத்தில் அது ஒரு குடும்ப வியாபாரமாக மாறுகிறது. ராமநாதனின் கடவுள் நம்பிக்கை தான் அவருடைய எல்லா முயற்சிக்கும் பலமாய் இருக்கிறது. கூட்டு குடும்பம், ஆன்மிகம்,வெற்றி, தோல்வி,குடும்பத்தில் வரும் கருத்து வேறுபாடுகள் இவற்றை எல்லாம் சுற்றித் தான் கதை நகர்கிறது. இந்த கதை சீரியலாகவும் வந்துள்ளது, ஆனால் அது பாலகுமாரன் படைப்பைப் போல் அல்லாது ஒரு typical சீரியல் போலிருக்கும்.
காஞ்சி மகாபெரியவரை சந்தித்த தாக்கத்தால் அவரையே இந்தக் கதையின் மையக்கருவாக்கியிருக்கிறார் பாலகுமாரன். இது ஒரு open ended கதை, இது இப்படித் தான் முடியும் என எளிதில் ஊகித்து விடலாம். ஆனால், இதன் மூலம் வரும் அனுபவம் எனக்கு புதிது. இந்தக் கதையை அவரவர் எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் இந்த அனுபவம் வேறுபடும். எனக்குள் இருந்த பல குழப்பங்களுக்கு இந்த புத்தகம் மூலம் விடை கண்டுகொண்டேன். பாலகுமாரன் புத்தகம்-ஒரு அழகான அனுபவம்!
Available on- Kindle unlimited and Amazon
My Rating- ⭐️⭐️⭐️⭐️⭐️
கிராமம் விட்டு நகரம் வந்து மக்கள் & கோ எனப்படும் தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி கூட்டு குடும்பமாய் வாழும் ஒரு மனிதனின் இயல்பு வாழ்க்கை தொகுப்பு. "குருப்பிரம்மா... குரு விஷ்னு.." என்று சுந்தராவால் கதை ஆரம்பித்து, "உன் ஆனந்த மோகன வேணுகானமதில், அலைபாயுதே.." என்று அவனூடே கதை நிறைவேறியது.
நாவலின் சிறப்பு - கதை மாந்தர்களின் பாத்திர படைப்பு.
நாவலின் ஏமாற்றம் - யூகிக்க முடிந்த கதை.