அந்த அக்காவைத் தேடி [Andha Akkavai Thedi...]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அந்த அக்காவைத் தேடி [Andha Akkavai Thedi...]

None

4.11/5 · 44 ratings

Jayakanthan (24 April 1934 – 8 April 2015), popularly known as JK, was an Indian writer, journalist, orator, filmmaker, critic and activist. Born in Cuddalore, he dropped out of school at an early age and went to Madras, where he joined the Communist Party of India. In a career spanning six decades, he authored around 40 novels, 200 short stories, APART from two autobiographies. Outside literatur…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_18981

★ 4/5
Two short storires. This is one of the earlier work. He narrated the both work as communistic view. There are a lot of Proof Mistakes.

user_18980

★ 5/5
"அந்த அக்காவைத் தேடி" - ஜெயகாந்தன் ‘வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்து’ மற்றும் ‘அந்த அக்காவைத் தேடி’ எனும் இரண்டு பெருங்கதைகளை ஒரே தொகுப்பாக 1985ல் வெளியிட்டுள்ளனர். திரு ஜெயகாந்தன் தனது முன்னுரையில் கூறியதுபோல, இரண்டும் தனித்தனியாக எழுதப்பட்டாலும், இரண்டையும் சேர்க்கும்போது ஒரே கதைதான் என்பதை அறியமுடிகிறது. தற்போதைய LCU(Cinema Universe)க்கு முன்னோடி அப்போதைய Novel Universe. அதாவது சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா போன்றவர்கள் தனது, ஒரு நாவலில் பயன்படுத்திய கதைமாந்தர்களையும் அவர்கள் தொடர்பான சிற்சில சம்பவங்களையும், பிறநாவலிலும் தொடர் சம்பவங்களாக பயன்படுத்துவர். அதுபோல் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இந்நாவல்களை JNU(Jayakanthan Novel universe) எனலாம். திரு ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகளை வாசிக்க தொடங்குபோதெல்லாம் திரும்ப திரும்ப ஆச்சரியப்பட வைக்கிறார்., இன்றைய காலத்தில் வாசிக்கும்போதே முற்போக்கான கதைச் சம்பவங்களாக தெரிகிறதே, 40-50 வருடங்களுக்கு முன் இதையெல்லாம் எப்படி நமது முந்தைய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டிருப்பர்? எப்படி உள்வாங்கியிருப்பர்?… அப்படியான பெரும் மலைப்புடன் கடந்த பக்கங்கள் பல உள்ளது இப்புத்தகத்தில். நவீன கால யுவ, யுவதிகள் இப்படித்தான் ஒன்று கூடி தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது இருத்தியலுக்கோ, அல்லது வேறு காரணம் எதுவோ இருக்கலாம். ஆனால் திரு ஜெயகாந்தன் படைத்த நவயுக யுவ/யுவதிகள் ஒரு கொள்கையை முன்னெடுத்து, அதன் வழிநடக்க, வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் மற்றும் வேலையை விடுத்து வாழ முற்படுகின்றனர். இந்த முடிவில் ஒளிந்திருக்கும் கருத்தியலை நுட்பமாய் கவனித்தால், அது பொதுவுடைமை எனும் கம்யூனிசத்திற்கு சென்றடையும்.(தற்கால வாசகர்களுக்கு உதாரணம், கத்தி திரைப்பட இட்லி கதை) நாவலை வாசிக்கும் எந்த பெண்ணுக்கும், தன்னம்பிக்கையளிக்கும் வகையில் தெளிவான சிந்தனையும் திடமான நம்பிக்கையும் கொண்ட பெண்களாக "வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்து" நாவலின் பைரவியும் "அந்த அக்காவைத் தேடி" நாவலின் மாலாவும் ஜெ'வும் கதையின் முதன்மை கதை மாந்தர்களாக படைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நாவலின் கதையை ஒத்த திரைப்படங்களாக 'புவனா ஒரு கேள்வுக்குறி', 'மனதில் உறுதி வேண்டும்', 'வானமே எல்லை' போன்ற படங்களைச் சொல்லலாம். ஏனெனில், இந்நாவல்களில் சொல்லபட்ட பல நிகழ்வுகளோடு அப்படங்கள் ஒத்து போகிறது. The Impossible Dream எனும் கார்ட்டூன் படத்தின் கதையை பற்றி விளக்கியிருக்கும் விதம் மிக அற்பதம். வாசிக்கும்போதே நம் மனக்கண்ணுள் அப்படத்தின் காட்சிகள் தெளிவாய் விரிந்து நகரும். உன்னத அனுபவம் அது. பெண்ணியம் குறித்த ஞான போதனைகளுடன் நியாய யதார்த்தங்களை கொண்ட இந்நாவல்களால் நிச்சய தாக்கத்திற்கு உள்ளாவோம். புத்தகத்திலிருந்து… \ பெண்கள் தாமே தமது உருவ அழகில் மயங்கி, தன்னை ஒரு மோகினியாக நினைத்துக் கொண்டு, அசட்டுத்தனமான கற்பனைகளில் சிக்கி, ஆண்களைத் தம்மை ஆளத் தகுந்த எஜமானர்களாக ஆக்கி அடிமைப்படுவதைத்தான் நடைமுறை வாழ்வில் நிறையவே பார்க்கிறோம். / \ "பின்னே என்ன? வசந்தா மாதிரி என்னால் புடவையைச் சுற்றிக் கொண்டு திரிய முடியாது. நான் குர்தாவும் ஜீன்ஸும்தான் அணிந்து கொள்கிறேன். இதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது." / \ தலைமுறைக்குத் தலைமுறை நியாயம் மாறுகிறது. இதுவரை மாறாதிருந்த அநியாயங்கள் இந்தத் தலைமுறையில் மாறத்தான் போகிறது என்ற நம்பிக்கையில்தான் இவர்களையெல்லாம் சகிக்க வேண்டியிருக்கிறது. / \ "நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கும் உடைய புதுமைப் பெண்களுக்கு உதாரணங்களே இல்லையென்றா நினைக்கிறார்கள்? தான் அப்படிப்பட்ட ஒருத்தியென்று இந்தப் பைரவி நிரூபித்துக் காட்டுவாள்!" / \ "எனக்குத் தோன்றுகிற முதல் விஷயம் ஒரு வேலைக்கு மனுப் போடுகிற கூட்டத்தைச் சேர்ந்தவள் அல்ல நான் என்பது. வேலையில்லாத் திண்டாட்டம் நிறைந்த நாடு இது. எவ்வளவோ ஏழைகள் ஒரு உத்தியோகத்துக்குப் போய்த் தான் தானும் தன்னைச் சேர்ந்த சில ஜீவன்களும் உயிர் வாழ முடியும் என்று தவித்துப் போராடுகிற தரத்தில் உழல்கிற இளைஞர்கள். அவர்களுக்கு இணையான ஏழைப் பெண்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்! என்னுடைய நண்பர்களில் பலர் அத்தகையவர் உண்டு. அவர்களை யெல்லாம் விட்டுவிட்டு டம்ப வாழ்க்கை வாழ்கிற இந்தக் குடும்பத்துக்கு இப்போது வருகிற வருமானம் போதாதென்று அந்த ஏழைகளின் வயிற்றுச் சோற்றைப் பறிக்கிற மாதிரி, வசதி உடையவர்கள் தங்களது உல்லாசச் செலவுக்காக உத்தியோகம் பார்ப்பது குறித்து நானே எவ்வளவு கடுமையாகப் பேசி இருக்கிறேன்." / \ “…அம்மா சொல்ற அந்தப் பழையகால மாட்டுத் தொழுவ வாழ்க்கை முறையும் எனக்குச் சரிப்பட்டு வராது. நான் ஒரு சுதந்திரப் பறவை. எனக்குத் தெரியும் சுதந்திரம் என்றால் சுயகட்டுபாடு என்று…” / \ "நடமாடும் தாவரங்களான மனிதர்களுக்குக் கலாசாரம் என்பது வேர். அந்த வேர் நன்கு பதிந்திருக்குமென்றால் முட்களுக்கு நடுவே எப்படி ரோஜாக்கள் சேதாரமின்றிப் பூத்துச் சிரிக்கின்றனவோ அப்படி, பல்சக்கரம் போல் சுழன்று வரும் இந்த வாழ்க்கைச் சகடத்தின் பற்களில் சிக்கிக் கொள்ளாமல், உருமாறாமல், ஊனப்படாமல் மனிதர்களும் சிரிக்க முடியும்! என்ற தைரியத்தை இந்த மெல்லிய ரோஜாக்கள் எனக்குத் தந்திருக்கின்றன..." / \ "புத்தகங்களில் சொல்வதையெல்லாம் நம்ப வேண்டுமென்பதில்லை. நமக்கு வேண்டியது - அதாவது நம்மை அபிவிருத்தி செய்து கொள்வதற்குத் துணையான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்" / \ இந்தச் சமூகத்தை மாற்ற விரும்புகிறவர்கள், இந்தச் சமூகத்தின் பிடிகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது. / \ தலைமுறைக்குத் தலைமுறை நியாயம் மாறுகிறது. இதுவரையில் மாறாதிருந்த அநியாயங்கள் இந்தத் தலை முறையினால் மாறத்தான் போகிறது. / \ "பெண்ணாகப் பிறந்துட்டமேன்னு தாழ்வுணர்ச்சி கொள்ளக்கூடாது; நாணிக்கோணிக் குறுகி ஒதுங்கப்படாது; அநாவசியமா வெட்கப்படக்கூடாது. ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்திலே புதிய நம்பிக்கை வரணும்" / \ "...நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணும் நற்குடிப் பெண்ணின் குணங்களாம்..." என்ற பாடல் வரிகளை நினைத்துக் கொண்டேன். / \ இதோ கண்முன் தெரிகிற இந்தப் பூமிக்கோளம் அனைத்து ஜீவராசிகளையும் சுமந்து கொண்டு எல்லையில்லா மோனப் பெருவெளியில் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் ஆனால் ஒரு கணக்கோடு, ஒரு கணமும் பிறழாத நியதியோடு இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதில் ஏதோ ஒரு புள்ளியில்தான் நான், எனது என்று கொள்ளும் அனைத்தும் நிறைந்துள்ளன. / \ இந்தப் புண்ணிய பூமிக்கோளின் மீது பகைமையும் போர் வெறியும் ஆதிக்கப் பேராசையும், மனிதர்களை அடிமைப் புழுக்கள் ஆக்குகிற அக்கிரமங்களும் சுரண்டலும், கடவுளையும் மனிதனையும் ஒட்டு மொத்தமாக அழித்துப் போடுகிற அபசாரக் கலைகளும் வியாபார - லாப வேட்கையும், வறுமைக் கொடுமைகளும், நோயும் மண்டி, வளர்ந்து கொதித்துக் கொப்பளித்துக் கொண்டிருப்பது ஒரு அவமான கரமான யதார்த்தம்... /
Shelves
book ஜெயகாந்தன் Jayakanthan

More like this


ஒரு மனிதன் ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீட…

4.11/5 · 44 ratings
Check Price

பாரீஸுக்குப் போ

பாரிசில் இருந்து சென்னை வரும் சாரங்கனில் இருந்து தொடங்கும் கதை விமானநிலையத்தில் வரவேற்கும் லலிதா , மகாலிங்கத்துடன் இணைந்து கதை நகர்கிறது. சாரங்கன் எனும் ஒரு புரட்சிகர க…

4.11/5 · 44 ratings
Check Price

உன்னைப் போல் ஒருவன் [Unnai Pol Oruvan]

ஒரு ஆண் கல்யாணம் செய்து கொள்ளும்போது, தனக்காகவே செய்து கொள்வதாக நினைக்கிறான்; பெண்ணும் அப்படியே நினைக்கிறாள். தனக்காகச் செய்து கொள்கிற எந்தக் காரியமும் அதிருப்தியாய்த்தான் ம…

4.11/5 · 44 ratings
Check Price

பிரம்மோபதேசம் [Brammopadhesam]

நமது பழைய பெருமைகளையும் இந்தியாவின் ஆன்மாவையும் கொன்று வரட்டு சீலம்பேசி,வேற்றுமை வளர்த்து, இரட்டை வேடம் போட்டு திரியும் ஜாதிப்பித்திலும் வரட்டு கெளரவத்திலும் தன்னை அழித்…

4.11/5 · 44 ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

4.11/5 · 44 ratings
Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

4.11/5 · 44 ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 2

தமிழ் இலக்கிய உலகின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலையும், சமூக முரண்பாடுகளையும் ஆழமாகப் பிரதிபலிக்கும் சிறந்த படைப்புகளின் தொகுப்பு இது. 1950-களின் இறுதியிலிருந்த…

4.11/5 · 44 ratings
Check Price

அக்கினி பிரவேசம் [Akkini Pravesham]

Akkini Pravesham | அக்கினி பிரவேசம் Tamil Novels

4.11/5 · 44 ratings
Check Price

கருணையினால் அல்ல [Karunaiyinaal Alla]

அமைதியான விஷயங்களை அணுகும் எழுத்தும் அமைதியான ரசனையும் கூட நம்மிடையே வளர வேண்டும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்த முயற்சியில் தான் பல சிறுகதைகளை எழுதியுள்ளதா…

4.11/5 · 44 ratings
Check Price

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

வாழ்க்கைக்கு நிறைவைத் தேடுவதாகப் பேசுவதெல்லாம் பொய். வாழ்க்கை நிறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் நமக்கோ மேலும் மேலும் குறைகள் வேண்டும். குறைந்தபட்சம் நம்முள்ளே இருக்கும் ஆக்ரமிப்…

4.11/5 · 44 ratings
Check Price