நாக தீபம் [Naga Deepam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நாக தீபம் [Naga Deepam]

None

Author: Sandilyan
3.62/5 · 45 ratings

சரத்காலச் சந்திரன் வானிலிருந்து வீசிய முழு இன்ப ஒளியில். கூடாரத்தின் வாயிலில், மோகனாகரமாக நின்ற அந்தப் பருவ மங்கையின் பேரெழிலைப் பார்த்துப் பார்த்து பிரமித்து, நீண்ட நேரம் நின்றுவிட்ட ஹரிதாஸ் ஜாலாவின் மனோ நிலை விவரிக்க முடியாத அளவுக்குக் குலைந்து கிடந்தது. தோப்பின் மரங்களிலிருந்து எழும்பிய காற்று அவள் உடலில் பாய்ந்து அலை அலையாக அவள் சீலையைப் புரட்டிக் கொண் டிருந்தது கூட தன் எண்ணங்கள் அடியோடு நிலை…

Reviews

user_17292

★ 4/5
"நாக தீபம்" - சாண்டில்யன் ************************ வரலாற்று காலத்தை கொண்ட புனைவு நாவல்களில், சாண்டில்யன் அவர்களின் படைப்புகள் தலைசிறந்தவை எனலாம். அந்த வகையில், இந்திய வடமேற்கு பகுதியான ராஜபுதன பாலைவனங்களில், அதனை ஒட்டிய முகலாயர் படையெடுப்புக்குள்ளான பகுதிகளில்தான் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. முகலாயர் காலம் என்பதால் 13ம் நூற்றாண்டில் இக்கதை நடைபெற்றதாக கொள்ளலலாம். முகலாயர் சிறையில் அடைபட்ட ராஜபுதனத்தின் படைத்தளபதிகள் ஒருவனான "ஹரிதாஸ் ஜாலா"தான் கதையின் பிரதான பாத்திரம். தன் நாட்டின் மீது மிகுந்த பற்றுள்ளவனை, "நாகதீபம்" எனும் ராஜபுதனத்தின் பொக்கிஷத்தை கொணர, விடுதலை செய்யப்படுவதாக ஆரம்பிக்கிறது.கதை. அப்பயணத்தில் ஹரிதாஸ் ஜாலா சந்திக்கும் ராஜபுத்திரியுடனான சந்திப்பு, விரோத மொழியில் ஆரம்பித்து, மூத்த படைத்தளபதியான பிதாமகர் மூலம், அவர்களுக்குள் காதல் மொழியாக தொடர்கிறது. மேலும், சுந்தரதாஸ், ராஜ்புத்தின மன்னர் அமரசிம்மன் ராணா என பல்வேறு கதைமாந்தர்களும் இடம்பெறுகிறார்கள். அந்த "நாகதீபம்" எப்படி ஹரிதாஸ் ஜாலா கைக்கொள்கிறான், ராஜபுத்திரி-ஹரிதாஸ் காதலை பிரிக்க சுந்தரதாஸ் செய்யும் சூழ்ச்சிகள், முகலாய ஜஹாங்கீரிடம் நாகதீபத்தை ஒப்படைகிறானா, முகலாயருடன் போரில் ஈடுபடுகிறானா? என்பதெல்லாம் மீதி கதையாக செல்கிறது. நாட்டுப்பற்று, காதல், துரோகம், சூழ்ச்சி போன்ற பல, கதைமாந்தர்களின் உணர்வுகளை, வாசிப்பவருக்கு கடத்தப்படுகிறது. தொடராக வெளிவந்ததால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் 'முன்கதை சுருக்கம்' போல, ஓரிரு பத்திகள் அடுத்த அத்தியாயத்திலும் எழுதப்பட்டுள்ளது, சற்றே அயர்வை தருகிறது. ஹரிதாஸ் ஜாலா'வின் பாலைவன குதிரைப்பயணம், 'பொன்னியின் செல்வன்'-ன் வந்தியத்தேவனை ஞாபகடுத்துகிறது. சுவாரசிய வாசிப்புக்கு ஏற்ற நாவல்!

user_17291

★ 4/5
Fantastic novel by Sandilyan Sir talking about Rajputs & their cold battle with Kurram aka Shajahan & his Father Jahangir

user_17290

★ 3/5
Not so impressed …very ordinary novel on Rajputs

user_17289

★ 5/5
சாண்டில்யன் வீரம் காதல் மற்றும் துரோகம் என ஒரு சரித்திர கதைக்கு என்ன தேவையோ அதை கலந்து எழுதிய கதை நாக தீபம் இது மிகவும் சுவாரசியமானவை படிக்க படிக்க எதோ நாமும் ஹரிதாஸ் ஜாலா உடனே ராஜபுதினத்தில் பயணிப்பது போல் இருக்கும். அமர சிம்மன் ஜஹாங்கீர் உடன் சமாதானம் செய்து கொள்ளும் போது இந்த நாக தீபத்தை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது என்று கூறி கதையை தொடங்குகிறார் சாண்டில்யன் இறுதி வரை மிகவும் சுவையுடன் கதையை ஓட்டி சென்று இருக்கிறார் படித்து பாருங்கள் மிகவும் அருமையான கதை

user_17288

★ 4/5
வீரத்தால் வீழ்த்த முடியாத சமூகத்தைத் துரோகத்தாலும்,குடியான்களின் நலனையும் காரணம்காட்டி அடிபணிய வைக்க முடியும்.மக்களின் நலனை பெரிதும் விரும்பும் மன்னர்கள் போரில் ஏற்படப்போகும் உயிரிழைப்பை தடுத்து நிறுத்தவே சமாதான முயற்சியில் ஈடுபடுகின்றனர் எஞ்சி இருக்கும் வீரர்களின் உயிராவது மிஞ்ச வேண்டும் அது நாட்டிற்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கமே அடங்கி இருக்கும். ராஜபுத்திரனான ஹரிதாஸ் ஜாலா போரில் மொகலாயப் படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் சிறைவாசத்தில் இருந்தவனை அரசர் ஜஹாங்கீர் விடுதலை செய்கிறார்,அதற்காக மேவார் ராணாவிடம் இருக்கும் குடும்ப சொத்தான நாகதீபம் என்றழைக்கப்படும் ரத்தினத்தைத் தன்னிடம் ஒப்படைத்தால் போர் நடவடிக்கைகள் அவர்கள் சாம்ராஜ்ஜியத்தின் மீது தொடுக்கப்படாது என்ற உறுதியையும் அளிக்கிறார். மேவார் ராணாவிடம் படைத் தளபதியாக இருந்த ஹரிதாஸ் ஜாலா தற்போது மொகலாயத் தூதுவனாக மாறி நாகதீபத்தைக் கைப்பற்ற ராஜபுதனத்திற்குச் செல்கிறான்,அவர்களின் பிதாமகரான ஜயன் சந்தாவத்தின் மூலம் சிறுவயதில் அவரின் பேத்தியை தான் திருமணம் செய்து கொண்டது விவரம் அறிய நேர்கிறது. ராஜாபுதனப் பெண்ணான பிதாமகரனின் பேத்தி மொகலாயத் தூதுவனாக மாறிய ஹரிதாஸ் ஜாலாவை கணவனாக ஏற்க மறுப்பவள் அவனின் உள்ளத்தில் புதைந்து கிடந்த துன்பத்தைத் தெரிந்த பின்பு அவனுடன் வாழ விரும்பினாலும் ஹரிதாஸ் ஜாலாவால் தான் செய்து கொண்டிருக்கும் தூதுவனான தவறை நினைத்து எதிலும் விருப்பத்துடன் ஒன்ற முடியாமல் போகிறது. எதற்காகத் தூதுவனாக வந்தானோ அந்த நாகதீபத்திற்குப் பதினைந்து நாள் காவலாக இருக்கும் பொருட்டு மேவார் ராணா ஹரிதாஸ் ஜாலாவிடமே அதை ஒப்படைக்கிறார்.அதன் முடிவில் ஜஹாங்கீர் மகனிடம் அதைக் கொடுத்து தன் ஆணையை முடித்துக் கொண்டவன் மொகலாயர்களை எதிர்த்து போரிட விரும்பியதை அவனின் ராணாவாலே தடுத்து நிறுத்தப்படுகிறது. பிதாமகரையும் போரில் இழந்தபிறகு நாட்டில் இருக்கும் எஞ்சிய உயிர்களுக்காகச் சமாதானத்திற்கு மேவார் ராணா உடன்படுகிறார் அதை முன்னின்று ஹரிதாஸ் ஜாலா செயல்படுத்துகிறான்.
Shelves
Sandilyan book Historical Fiction

More like this


கடல் புறா 1 [Kadal Pura]

Author: Sandilyan

கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…

3.62/5 · 45 ratings

உடையார் - பாகம் 6 [Udaiyar - Part 6]

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

3.62/5 · 45 ratings

Sivakamiyin Sabadham, Volume 1: Paranjyothi's Journey

A masterpiece by Kalki Krishnamurthy, recipient of India's highest literary honour – the Sahitya Akademi Award, 'Sivakamiyin Sabadham' is a…

3.62/5 · 45 ratings

Ponniyin Selvan - The Pinnacle of Sacrifice, Vol. 2

The second volume of the fifth part in the series 'Ponniyin Selvan', deals with the sacrifice that Ponniyin Selvan makes in giving up the great ki…

3.62/5 · 45 ratings

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

3.62/5 · 45 ratings

அவனி சுந்தரி [Avani Sundari]

Author: Sandilyan

சு மார் ஆறடி உயரமும் மூன்றடி அகலமும் உள்ள பெரிய சரீரத்துடனும், அதிலிருந்த கடுமையான கன்னக் கதுப்புகளுடனும், அந்த கதுப்புக்கள் வரை ஏறி வளைந்திருந்த அடர்ந்த கரிய மீசையுட…

3.62/5 · 45 ratings

மலை வாசல் [Malai Vasal]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.62/5 · 45 ratings

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

3.62/5 · 45 ratings

சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

3.62/5 · 45 ratings

பல்லவ திலகம் [Pallava Thilagam]

Author: Sandilyan

Historical Based Fiction Written By Sandilyan

3.62/5 · 45 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

Kalki is very famous for his historical novel Ponniyin Selvan. He has also written many social novels.

3.62/5 · 45 ratings

குற்றப் பரம்பரை [Kutrap Parambarai]

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

3.62/5 · 45 ratings