Reviews for காடோடி
28 reviews total
user_17107
★ 5/5 Feb 02, 2026வரலாறோ பூகோளமோ, மேற்கைப் படித்த அல்லது படிக்க வைத்த அளவு நாம் கிழக்கைப் படிக்கவில்லை என்பது நிதர்சனம். பூமத்திய ரேகையை ஒட்டிய தென் கிழக்கு ஆசியாவில் இருந்த அடர்ந்த வெப்ப மண்டல மழைக்காடுகள் காங்கோவையும் அமேசானையும் விட எந்த வகையிலும் சளைத்தவை இல்லை.
பல அரிய ஆதி உயிரினங்கள், ஓரிட வாழ்விகள், தொல்குடி மக்கள் கொண்ட போர்னியோ தீவுகளுக்கு கடவுச்சீட்டில்லாமல் காடோடியோடு ஒரு பயணம். நம்மைப்போல ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டு சுரண்டல்களுக்கும் சூறையாடல்களுக்கும் உள்ளாகி பின்னர் மலேசியா இந்தோனேசியா என பிரிக்கப்பட்ட இயற்கையின் கொடை நிலங்கள் தாம் இவை.
காடு குறித்த தகவல்களையெல்லாம் திரட்டி ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடாமல், அதில் சில தேர்ந்த பாத்திரங்களை வாழவைத்து உயிரோட்டமுள்ள, சொற்களஞ்சியம் நிறைந்த புனைவாக வழங்கியிருக்கிறார் ஆசிரியர். முடித்து இரண்டு நாட்களாகியும் பிலியவும், ஜோஸும், மூதாய் மரமும் என் தலைக்குள்ளேயே கூடாரம் அடித்து உக்கார்ந்திருக்கிறார்கள். சங்கிலி வாளின் இரைச்சல் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
முழு நீளத் திரைப்படம் எடுக்க அனைத்து அம்சங்களும் கொண்ட கதை. நம் மேற்குத் தொடர்ச்சி மழைக்காடுகளுக்கு என்ன நிலைமை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வெகு சொற்ப காலமே வாழ்ந்துவரும் மனித இனம் உலகுக்கு என்ன செய்து தன்னையும் அழித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர கானகத்தோடு பேசினால் புரியும். இயற்கை ஆர்வலர்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய காட்டின் ஆன்மா — காடோடி.
user_17106
★ 5/5 Feb 02, 2026காடோடி பற்றிய விரிவான மதிப்புரை. சூழலியல் குறித்த ஆழமான புரிதலை அளிக்கும் இந்த நாவல், வாசிக்க வேண்டிய முக்கியமான படைப்பு.
user_17105
★ 5/5 Feb 02, 2026காடுகளைப் பற்றிய கவர்ச்சிகரமான கதை. வாசிக்கும்போது காட்சிகளை எளிதாக கற்பனை செய்ய முடிந்தது. அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்!
user_17104
★ 5/5 Feb 02, 2026வெப்பமண்டல மழைக்காடுகள், இயற்கை மற்றும் முதனிகள் பற்றி அழகாக எழுதப்பட்ட நூல். மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் படைப்பு.
user_17103
★ 5/5 Feb 02, 2026சூழலியல் மற்றும் அதைச் சுற்றியுள்ள வணிகம் குறித்து கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல். இறுதியில் நீங்கள் காடுகளை நேசிப்பவராக மாறியிருப்பீர்கள்.
user_17102
★ 5/5 Feb 02, 2026என்னை மிகவும் பாதித்த புத்தகம் எனலாம். ஆரம்பத்தில் குதுகலத்தோடு ஆரம்பித்த பயணம் இறுதியில் கண்ணீர் சிந்த வைத்தது. அந்த காட்டிலேயே வாழ்ந்து ஒரு உணர்வை தந்துள்ளது.
ஒரு மரத்தின் இறப்பு ஒரு குடும்ப உறுப்பினரின் இறப்பைப் போல என்னை பார்க்க வைத்துள்ளது இந்த புத்தகம். மனிதனின் அனைத்து உணர்வுகளையும் ஆசிரியர் கண் எதிரே காட்டியுள்ளார்.
user_17101
★ 5/5 Feb 02, 2026காடோடி என்ற தலைப்பே முதலில் இந்த புத்தகத்தின் மீது எனக்கொரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. எனக்கு எந்த ஒரு வாசிப்பாளனும் நண்பராகவோ, குடும்ப உறுப்பினராகவோ இல்லை. ஏதோ மனதில் ஒரு தேடல் ஏற்படும், பின் அந்த தேடலுக்கான கருவியாக புத்தக மதிப்பீட்டு தளங்கள் இருக்கும். அங்கு தான் இந்த புதையலை கண்டடைந்தேன்.
இந்த நாவலை வாசித்ததை நான் என் வாழ்நாளில் பெரும் பேறாய் நினைக்கிறேன்.
user_17100
★ 5/5 Feb 02, 2026அறிவியல் முன்னேற்றம், வாழ்வியல் முன்னேற்றம் போன்றவற்றால் நாம் இயற்கைக்கு செய்யும் அளவற்ற தீங்கினை அழகு தமிழில் குத்திக்காட்டும் நூல். கதை படித்தேன் என்று சொல்வதை விட, கதையில் வாழ்ந்தேன் என்று சொல்லலாம். இயற்கையை போற்றும் நாவல். இதே போன்று இன்னும் பல நூல்களை ஆசிரியரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
user_17099
★ 5/5 Feb 02, 2026காடு, தாவரங்கள் மற்றும் விலங்குகளை நேசிப்பவர்களுக்கான சுவாரஸ்யமான தமிழ் புத்தகம். ஆசிரியர் நம்மை போர்னியோ காடுகளுக்கு அழைத்துச் சென்று, காடுகளின் முக்கியத்துவத்தையும் உணவுச் சங்கிலியையும் புரிந்துகொள்ள வைக்கிறார். காட்டழிப்பையும் அதன் மூலம் சார்ந்திருக்கும் விலங்குகள், பூச்சிகள், பறவைகள் மீதான பாதிப்பையும் விளக்குகிறார். காட்டில் வாழும் பழங்குடியினரின் வலி, அவர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் — அனைத்தையும் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் எழுதியுள்ளார்.
user_17098
★ 5/5 Feb 02, 2026காடு, காட்டழிப்பு, அதன் பின்னால் இருக்கும் வணிக அரசியலையும் மிக எளிமையாகவும் துல்லியமாகவும் வாசகர்களிடம் புகுத்திவிட்டார் எழுத்தாளர்.
கடைசி பக்கங்கள் வரை நம்மை காட்டின்னூடே பயணிக்க வைத்து, காடுகள் கட்டைகளாக மாற்றப்படும் போது அதன் வலியும் வேதனையும் நம்மிடம் கடத்தப்பட்டுவிடுகிறது.
அனைத்தும் இயற்கைதான் — இயற்கைதான் மதம், கடவுள், வாழ்க்கை. இனி காட்டைப் பற்றி எண்ணும்போது, எப்படி மறப்பேன் இவர்களை — பிலியவ், துவான், ஜோஸ், ஒமர், அன்னா. இதயத்தை கனக்க வைத்த துவான்-ரலா காதல்.