Reviews for ரயில் நிலையங்களின் தோழமை
22 reviews total
user_16344
★ 5/5 Feb 02, 2026ஆசிரியரின் கட்டுரைகள் என்றும் இனிமையானவை. அதுவும் பயணக்கட்டுரைகள் தனித்துவமானவை. அந்த வகையில் இன்னுமொரு நல்ல பயண நூல். இயற்கையையும் வரலாற்றையும் இணைத்து எழுதும் பாணி படிப்பவர்களை கவர்ந்திழுக்கிறது.
user_16343
★ 4/5 Feb 02, 2026ரயில் பயணங்களின் மீதும் ஆசிரியரின் எழுத்தின் மீதும் தனி பிரியம் கொண்டவன். அந்த வகையில் இந்த நூல் எனக்கு ஒரு விருந்து. பயணக்கட்டுரைகளை ரசிப்பவர்கள் மிகவும் ரசிக்கும் புத்தகம்.
user_16342
★ 5/5 Feb 02, 202618 பயணக்கட்டுரைகளின் தொகுப்பு இது. புத்தகத்தின் பெயரை வைத்துப் பார்த்தால் ரயில் நிலையங்கள் பற்றியதாக இருக்கும் என்று தோன்றும், ஆனால் பெரும்பாலும் வெவ்வேறு கிராமங்கள் மற்றும் இடங்களுக்கான பயணங்களைப் பற்றியது.
user_16341
★ 4/5 Feb 02, 2026அழகிய பயண அனுபவங்களின் தொகுப்பு! ஒவ்வொரு கட்டுரையும் புதிய இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இயற்கையின் அழகை ரசிக்க வைக்கும் மிக அருமையான நூல்.
user_16340
★ 4/5 Feb 02, 2026ரயில் சம்பந்தமான அன்றாட கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஆசிரியர் தான் பயணம் செய்த இடங்களைப் பற்றிய அனுபவங்களையும் அருமையான தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார்.
user_16339
★ 5/5 Feb 02, 2026ஆசிரியரை எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் நேசிப்பதற்கு காரணம் அவரது எளிமையான ஆனால் ஆற்றல்மிக்க உள்ளடக்கம். இந்த நூல் அவரது பயணக்கட்டுரைகளின் தொகுப்பு. சிறிய புத்தகம், ஆனால் சுவாரஸ்யமான வாசிப்பு. புதிதாக பயணக்கட்டுரைகள் வாசிக்க நினைப்பவர்களுக்கு பரிந்துரை.
user_16338
★ 4/5 Feb 02, 2026ஆசிரியரின் முழுமையான பயண அனுபவங்களை தாங்கிய நூல். பயணம் பற்றிய நமது பார்வையை மாற்றுகிறது, பயணத்தின் நோக்கத்தை புரிந்துகொள்ள வைக்கிறது.
பயணம் சில சமயங்களில் சிரமமாக இருக்கலாம், ஆனால் அதிலிருந்து நாம் ஏற்றுக்கொள்வதும் கற்றுக்கொள்வதும் தான் பயணத்தின் சாரம்.
user_16337
★ 4/5 Feb 02, 2026பொதுவாகவே அட்டை முதல் அட்டை வரை ஒரு புத்தகத்தை படித்துவிடுபவன். "திரும்பிப் பார்க்கையில் காலம் ஒரு இடமாகக் காட்சியளிக்கிறது" என்ற கவிதையில் தொடங்கும் முன்னுரையிலேயே இது வாசித்துவிட வேண்டிய புத்தகம் என நினைத்துக் கொண்டேன்.
அதற்கேற்றபடியே புத்தகம் முழுவதும் பயணக் குறிப்புகளை அள்ளித் தெளித்திருக்கிறார். மனித நாகரீக வளர்ச்சியின் முதல் அடியே பயணத்தில் தான் துவங்குகிறது.
தான் பயணித்த இடங்களைக் குறித்த தெளிவான ஒரு நூல். வயது வரம்பின்றி, விருப்பு வெறுப்பின்றி எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.
user_16336
★ 4/5 Feb 02, 2026ஆசிரியரின் நான்காவது புத்தகம் இது, மற்றொரு அருமையான பயணக்கட்டுரை.
ஆதிமனிதர்கள் வாழ்ந்த குடியம் குகை, நயாகரா நீர்வீழ்ச்சி, அந்தியூர் குதிரை சந்தை, ஆவுடையார் கோவில் குதிரை சிற்பங்கள், ஒடிசா பயணம், திப்பு சுல்தானின் மாளிகை, ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ, கம்பர் நினைவிடம், சி.என். டவர் உணவகம், ஜெய்விலாஸ் அரண்மனை வெள்ளி ரயில், பள்ளி சுற்றுலா, ரணக்பூர் சமண கோவில், மேடை நாடகம், ஊட்டியின் ஜான் சல்லிவன், குவெம்புவின் நினைவில்லம், பிகாஸோவின் ஓவியக்கண்காட்சி, ஷேக் சையத் கிராண்ட் மசூதி, கும்பல்கர் கோட்டை, சில்கா ஏரி, மகாத்மா சமாதி — இத்தனை விஷயங்களை வெறும் நூறு பக்கங்களில் சொல்ல ஆசிரியரால் மட்டுமே சாத்தியம்.
நேரில் கண்ட அனுபவங்களை எழுதியுள்ளதால் வாசிக்கும்போது சலிப்பு தோன்றாது. பள்ளி சுற்றுலாவில் ஜெயபால் பற்றிய கதை மனதிற்கு வருத்தமாக இருந்தது. மனிதன் உருவாக்கிய பணம் தான் இந்த பிரபஞ்சம் உருவாக்கிய பூமியை ஆள்கிறது.
ரயில் நிலையங்கள் பற்றிய நூல் என்று நினைத்து வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் அது ஒரே ஒரு கட்டுரை மட்டுமே என்பது ஒரு சிறு ஏமாற்றம். மற்றபடி, பயணக்கட்டுரைகள் வாசிக்க நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு நல்ல தொடக்கம்.
user_16335
★ 4/5 Feb 02, 2026பயணங்கள் மேற்கொள்வோர் தங்களது பயண அனுபவங்களை புகைப்படங்களாகவும், ஒளிப்பதிவுகளாகவும் இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர். காட்சிகள் மூலம் உலகைச் சுற்றிப் பார்த்தது போன்ற உணர்வையும், இந்த மாதிரி இடங்களுக்கு நாம் எப்போ போவது என்ற ஏக்கத்தையும் அவை ஏற்படுத்திவிடுகின்றன. எழுத்துகளில் அமைந்த பயணக் கட்டுரைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. 18 கட்டுரைகளைக் கொண்ட இந்நூலும் அத்தகைய உணர்வை உருவாக்குகிறது.
இப்புத்தகம் மூலம் அருவியில் நனையலாம், குகைக்குள் எட்டிப் பார்க்கலாம், அரண்மனையைச் சுற்றி வரலாம், ஓவியக் கண்காட்சிக்குப் போகலாம், கோட்டையின் உயரம் வரை சென்று வரலாம்.
ஒடிசா மாநிலம் சிறப்புமிக்க இடங்கள், தொல்லியல் களங்கள், இயற்கை வாழிடங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய கலாச்சார அட்லஸ் ஒன்றை வெளியிட்டுள்ளதாம். அதேபோல ஒன்று தமிழகத்திற்கும் தேவை என ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். எப்படியாவது காசு சேர்த்து ஒடிசா மாநிலத்தின் சில்கா ஏரியைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்துள்ளது. அந்த ஏரியில் டால்பின்கள் இருக்கிறதாம்!