ரயில் நிலையங்களின் தோழமை
Share:

ரயில் நிலையங்களின் தோழமை

Rail Nilaiyangalin Thozhamai

Check Price on Amazon
4.25/5 · 83 ratings

ரயில் நிலையங்களின் தோழமை

Rail Nilaiyangalin Thozhamai

4.25/5 · 83 ratings
பக்கங்கள்
100
பதிப்பகம்
Desanthri
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
1
ISBN-13
9789387484825

காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. பயணியின் கண்கள் உலகின் உன்னதங்களை மட்டுமில்லை இருட்டுக்குள் வாழும் மனிதர்களையும் அடையாளம் காட்டவே செய்கின்றன. உலகத்தை அறிந்து கொள்வதற்கான தேடுதலே இந்தப் பயணத்திற்கான தூண்டுதல். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_16327

★ 4/5

காமதேனு இதழில் தொடராக வந்த 18 பயணக்கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. வெளிநாடுகளிலும் வட இந்தியாவிலும் பயணம் செய்யும்போது கிடைத்த அனுபவத்தை கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

இதில் நிறைய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் அருமையாக இருந்தது. போன இடத்தை மட்டும் பார்க்காமல் அதை சுற்றி என்ன நடக்கிறது, அங்கு இருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை எல்லாம் கவனித்து எழுதியிருக்கிறார்.

இது இல்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அந்த அத்தியாயத்திற்கு பொருத்தமான படத்தையோ அல்லது புத்தகத்தையோ பரிந்துரைத்திருக்கிறார்.

பிடித்த கட்டுரைகள் — நயாகராவின் சாரல், கம்பனின் நினைவிடம், அரண்மனையின் உள்ளே, ரணக்பூரின் காலவிருட்சம், நியூயார்க்கில் ஒரு இரவு, பிகாஸோவின் முன்னால், கும்பல்கர் கோட்டை, காந்தியெனும் நெருப்பு.

மனதைக் கவர்ந்த சில இடங்களையும், ஆர்வத்தைத் தூண்டிய சில புத்தகங்களையும் குறித்து வைத்திருக்கிறேன். சிறிய புத்தகம் தான். பயணக்கட்டுரைகள் படிக்க நினைப்பவர்கள் இந்த புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.

user_16326

இந்த புத்தகம் மிகவும் கவர்ந்ததற்கு சில காரணங்கள் உண்டு. இதுவரை வாசித்த பயண கட்டுரைகளில் பயணம் சென்ற அனுபவம், காட்சி விவரணை மற்றும் அந்த இடத்தின் வரலாறு ஆகியவை அடங்கியதாக இருக்கும்.

ஆசிரியர் ஒவ்வொரு இடத்திற்கு போகும்போது மேற்கண்ட அனைத்தையும் நமக்கு கடத்துவதோடு மட்டுமல்லாமல், காணச் சென்ற அந்த இடமானது தனக்கு மற்ற இடங்களை நினைவுபடுத்தியவை அனைத்தும் பகிர்கிறார். வெறும் உணர்வு சார்ந்த நினைவலைகள் இல்லாது அறிவார்ந்த ஒப்பீட்டு ஆய்வையும் நம்மோடு பகிர்கிறார்.

மைசூர் பற்றிய நினைவலைகள் உணர்வுகள் சார்ந்தது. மைசூர் என்ற இடத்தை கேட்கும்போதெல்லாம் நினைவுக்கு வருவது குடும்பத்துடன் சென்று கண்டு களித்த அந்த தருணங்களை மீள்பார்வை செய்வதற்கு ஒரு ஒளிப்படம் கூட இல்லையே என்ற ஏக்கம் தான்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பழமையான கட்டிடங்களுக்கு முன் நம் தமிழ்நாட்டு பழமை வாய்ந்த கட்டிடங்கள் ஒன்றுமே கிடையாது என்ற அவதானிப்பு சற்று திகைப்பூட்டினாலும், அறிவார்ந்த ஒரு கருத்தாகப் பார்க்கிறேன்.

ஒடிஷா மாநிலத்திற்கு போக வேண்டும் என்ற ஆசையை ஒரு கட்டுரை அளித்திருக்கிறது. அங்குள்ள அரிசியின் விளைச்சலைப் பற்றிய தகவல்கள் அறியாதவை.

இந்த புத்தகத்துடன் சேர்த்து ஆசிரியரின் 4 புத்தகங்களை வாசித்துவிட்டேன். ஒன்று கூட சலிப்பு தட்டவில்லை. அவரின் படைப்புகளை மேலும் வாசிக்க ஆவலோடு இருக்கிறேன்.

user_16325

★ 4/5

இந்த புத்தகத்தில் தன் பயண அனுபவங்களையும், நிறைய வரலாற்று தகவல்களையும் தன் எழுத்தின் மூலம் மிகவும் அழகாகவும், சுருக்கமாகவும் விளக்கியுள்ளார்.

சுற்றுலா என்றால் வழக்கமாக ஊட்டி, கொடைக்கானல் என்று செல்லும் நபர்களுக்கு இந்த நூலை படித்த பிறகு நிறைய மாற்றம் வரும். நம் தமிழ்நாட்டில், இந்தியாவில் இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருப்பதே நமக்கு தெரியவில்லையே என்று ஆச்சரியப்படுவோம். ஒரு இடத்துக்கு செல்லும் முன்பு அந்த இடத்தை பற்றி தெரிந்து கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும்.

நிறைய இடங்களுக்கு தன் எழுத்தின் மூலம் நம்மை அழைத்து செல்கிறார். அறியாத பல இடங்களையும், வரலாறுகளையும் தேடி தேடி நமக்கு அழகாக எடுத்து கூறுவதே தனி சிறப்பு.

வெளிநாட்டிலோ வேறு மாநிலத்திலோ பயணிக்கும்போது அங்கு தமிழ் பேசும் நபர்களை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று ஒரு இடத்தில் கூறியிருப்பார். இது நிறைய பேருக்கும் அனுபவம் இருக்கும்.

காந்தியை பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருப்பார் — இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளையர்களைக் கூட மரியாதையாகவே விமர்சனம் செய்தார், ஒரு முறை கூட அவர்களை இழிவாக பேசியதில்லை என்று.

கல்வி நிலையங்களை உருவாக்கியதில் சமணர்கள் முன்னோடிகள். மலைக்குகைகளில் சமண பள்ளிகளை நிறுவினார்கள். சாதி சமய வேறுபாடற்ற சமத்துவக் கல்வி அவர்களாலே முதன்முறையாக வழங்கப்பட்டது.

சிறந்த புத்தகம், நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்.

user_16324

★ 4/5

ரயில் தொடர்பான பயணக் கட்டுரைகளின் தொகுப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் இவை பொதுவான பயணக் கட்டுரைகளாக இருந்தன. கட்டுரைகளில் ஒன்றின் தலைப்பே புத்தகத்திற்கு பெயராக வைக்கப்பட்டுள்ளது.

user_16323

★ 4/5

100 பக்க புத்தகம்தானே என்று, அடுத்த பெருநாவல் எடுப்பதற்கு முன், ஒரு எளிய வாசிப்பாக ஓரிரவில் வாசித்து முடிக்கவே இப்புத்தகத்தை தேர்வு செய்தேன். ஆனால், பக்கத்தின் எண்ணிக்கையில் அடங்கியதல்ல ஒரு புத்தகத்தின் தரம், பகிர்ந்த நேர்த்தியில் அடங்கியது என்று உணர வைத்தது.

ஆசிரியரின் பயணக் கட்டுரைதானே, அப்படியே எளிதில் வாசித்து கடந்துவிடலாம் என்று நினைத்த என்னை, அவர் எழுத்தில் கடத்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும், அவர் பகிரும் அனுபவத்திற்கு சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு குறிப்பினை கோர்த்து கொடுத்துள்ள விதமும், அவர் தேடி தேடி பயணப்பட்ட இடமும், என்னை ஈர்த்தன.

எனக்கு மிகவும் பழக்கப்பட்ட இடங்களிலேயே எனக்குத் தெரியாத பல விடயங்களை போகிற போக்கில் புகுத்தி சென்றிருக்கிறார். பயணக் கட்டுரையின் முக்கியத்துவத்தை அறிய செய்தமைக்கு நன்றிகள்.

Shelves
எஸ். ராமகிருஷ்ணன் Travel பயணம் S. Ramakrishnan book

More like this


தேசாந்திரி-1

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

4.32/5 · 900+ ratings
Check Price

துணையெழுத்து

நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…

4.24/5 · 600+ ratings
Check Price

இலக்கற்ற பயணி [Ilakkatra Payani]

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியாவின் குறுக்கும்நெடுக்குமாகப் பலமுறை பயணம் செய்திருக்கிறேன். உலகத்தை அறிந்துகொள்வதற்கான தேடுதலே எனது பயணத்திற்க்கான தூண்டுதல். ஒவ்வொரு …

4.29/5 · 100+ ratings
Check Price

இந்திய வானம்

பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும்…

3.98/5 · 55 ratings
Check Price

நிலம் கேட்டது கடல் சொன்னது [Nilam Kettadhu Kadal Sonnadhu]

இயற்கையில் பெருமலையும், சிறுபுல்லும் ஒன்றே. இரண்டிற்கும் பேதமில்லை. காணும் மனிதன் தான் பேதத்தை உருவாக்குகிறான். பயன்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்குள் உலகை இழுத்து அடைத்து விடப்…

4.22/5 · 23 ratings
Check Price

உறுபசி-1

நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்க…

3.85/5 · 400+ ratings
Check Price

கதா விலாசம்

தமிழின் ஆகச்சிறந்த இலக்கியப் படைப்புகளைப் புதிய கோணத்தில் அறிமுகம் செய்யும் ஒரு உன்னதமான பயணமே இந்த நூல். பாரதியார் முதல் தற்கால எழுத்தாளர்கள் வரை பல ஆளுமைகளின் படைப்புக…

4.23/5 · 300+ ratings
Check Price

சஞ்சாரம்

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல்…

4.16/5 · 300+ ratings
Check Price

மறைக்கப்பட்ட இந்தியா [Maraikkappatta India]

ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…

4.18/5 · 200+ ratings
Check Price

யாமம் [Yamam]

எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையி…

3.96/5 · 200+ ratings
Check Price

உப பாண்டவம் [Uba pandavam]

இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. …

4.09/5 · 200+ ratings
Check Price

இடக்கை [Idakkkai ]

With new possibilities in storytelling. The Final Solitude exposes the injustice that prevailed during Emperor Aurangazeb's rule in a fictional sm…

4.14/5 · 200+ ratings
Check Price