எழுதும் கலை [Ezhudhum Kalai]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எழுதும் கலை [Ezhudhum Kalai]

None

Author: Jeyamohan
4.47/5 · 38 ratings

நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது. இலக்கிய ஆக்கங்களில் ஈடுபடுபவர்களுக்கு இலக்கியத்தில் எது இதுவரை சாதிக்கப்பட்டிருக்கிறது என இது காட்டுகிறது. அதை அடைவதற்கான சவாலை அறிமுகம் செய்கிறது என்று சொல்லலாம். எழுத ஆரம்பிக்கிறவர்களுக்கு மட்டுமல்ல…

Reviews

user_13889

★ 5/5
எழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு கதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய வடிவங்களின் அடிப்படைகளை அறிமுகம் செய்துவைக்கிறது இந்நூல். ஒரு வாசகனாகவும் இதன் மூலம் அடிப்படை இலக்கணங்களை தெரிந்துக்கொண்டு ஒரு இலக்கியப்பிரதியிடமிருந்து எவற்றை எதிர்ப்பார்க்கலாம் என தெரிந்துக்கொள்ளமுடியும்.தமிழ்ச்சூழலில் எந்த கலைவடிவத்தை எடுத்து உடைத்து அதற்கான தர்கங்களை வரையறை செய்தாலும், ”அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது. கலை எதற்குள்ளும் அடங்காது” என்று சொல்கிறவர்கள் ஏராளம். இக்கண்ணோட்டம் அக்கலை வடிவத்தை முன்னோக்கி செல்ல அனுமதிக்காது. மேற்கத்திய நாடுகளில் இசை, திரைக்கதை, புகைப்படம் என அனைத்து கலைவடிவத்திற்கும் வரையறைகள் உள்ளன. புதிதாக அத்துறைக்கு வர ஆசைப்படும் ஆர்வலர்களுக்கு இவ்வரையறைகள் பெரும் உதவியாக இருக்கும்.சிட் ஃபீல்ட், ப்ளேக் ஸ்னைடர், ஜான் ட்ரூபி போன்ற அறிஞர்கள் திரைக்கதையின் கோட்பாட்டை உடைத்து வரையறை செய்தவற்றை படித்ததால் மட்டுமே திரைக்கதையின் மேல் ஆர்வமும் கவனமும் குவிந்து இன்று அது என் தொழிலாக மாறியுள்ளது.அதுபோல, இலக்கியத்தின் அடிப்படைகளை ஒருவர் சொல்லித்தராவிட்டால் அக்கலை வடிவத்தை அணுகும் முறை தெரியாமலேயே போய்விடும். இக்காரணத்தால் இன்று பலர் சினிமாவின் மூலம் மட்டுமே கதைகளை கேட்டு பழகி, ஒரு நாவலையோ சிறுகதையையோ படித்தால் - போர் அடிக்கிறது - என்று சொல்லத்தொடங்கிவிட்டனர். அவர்களை பொருத்தவரை திரைக்கதை வடிவத்தில் ஒரு கதை பொருந்தாவிட்டால், பக்கத்திற்கு பக்கம் திருப்பங்களை கொண்டிராவிட்டால் அக்கதை சலிப்பு தட்டிவிடும்.ஒரு காலத்தில் எனக்கும் இச்சிக்கல் இருந்தது. அதன் பின்னர், ‘நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்’ என்கிற ஜெயமோகனின் நூலினை பாதி வாசித்தப்பின்பு ஒரு தெளிவு கிடைத்தது. முன்னெப்போதையும் விட வாசித்தலின் மேல் ஆர்வம் பெருக்கெடுத்தது. பெரும் நாவல்களை வாசிக்க தூண்டியது.இந்நூல், ‘நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்’ நூலின் ஒரு குட்டி என்று சொல்லலாம். இந்நூலிலிருந்து கற்றுக்கொண்டவை:1. சிறுகதை சமையல் குறிப்புசிறுகதை என்பது சிறிய கதை என்று அர்த்தமாகாது. வாசகனை உள்ளூர இழுத்து பங்கெடுக்க செய்து, இறுதியில் எதிர்பாரா திருப்பத்துடன் ஒரு கதையை முடிப்பதே சிறுகதை. அத்திருப்பம் வாசகன் மனதில் இன்னொரு தொடக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.சிறுகதையின் மூலம் நீதி சொல்லக்கூடாது. அந்நீதி வாசகனுக்கு உணர்த்தப்பட வேண்டும். சிறுகதையின் முக்கியமான பங்கு வாசக பங்களிப்பு. அதனால் விவரிப்புகளும் மனவோட்டங்களும் சீராக வாசகனை அவ்விடத்திற்கே அழைத்துச்செல்லும்படி அமையவேண்டும். இது சிறுகதை எழுத்தையும் தாண்டி ஒரு கதையை நரேட் செய்யும்போதும் பயன்படுத்த வேண்டிய ஒரு யுக்தி.கதை சொல்லல் என்பது, ‘தகவல்களை ஒப்பிப்பது அல்ல. அனுபவத்தை கேட்பவருக்கு அளிப்பது’2. நாவல் ஒரு சமையல் குறிப்புஒரு முழுவாழ்க்கை சித்திரத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கவேண்டும். மையக்கதாபாத்திரம் என்று ஒன்று தேவையில்லை. அப்படி ஒரு பாத்திரம் இருந்தாலும், பிற கதாபாத்திரங்கள் முக்கியம். அவையனைத்தும் வெவ்வேறு தர்க்கங்களும் செயல்பட வேண்டும். அவர்களின் தத்துவங்களும் செயல்களும் ஒன்றோடொன்று முரண்படும்போது நாடகீய தருணங்கள் அமையும்.எழுதுவதே கலை. திரைக்கதையைப்போல அடுத்தடுத்த சம்வங்கள் அனைத்தையும் திட்டம்போட்டு நாவல் எழுதுவது உகந்ததல்ல. ஒரு தொடக்கம். ஒரு மையக்கரு. Designing Principle. ஆகியவற்றை மனதில் வைத்து எழுதிப்பார்த்து தான் நாவலை கண்டடைய வேண்டும். இதனால் ஒரு நாவலை முடிக்க பலவருடங்கள் ஆகலாம். என்பதுகளுக்கு முன்னர் வரை நாவல்கள் ஒரே நீரோட்டத்தில் உருண்டு திரண்டு பெருத்துக்கிடக்கும். டால்ஸ்டாயின் நாவல்கள் ஒரு உதாரணம். அதன் பின்னர் வந்த நவீன நாவல்கள் இன்னும் செறிவுடன் எழுதப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டால் அதன் அனைத்து பக்கங்களும் அதில் பதிவுசெய்யப்பட வேண்டியது அவசியம். எழுத்தாளனின் ஆழ்மன கேள்விகளுக்கு விடைதேடலே இந்நாவல்கள்.உதாரணம். ஒரு நாவல் 18ம் நூற்றாண்டு காலணிய காலம் என்கிற கதைக்களத்தை எடுத்துக்கொண்டால்: அச்சூழலின் மன்னர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், தாசிகள், படித்தவர்கள், ஏழைகள் - என அனைத்து தரப்பினரையும் உட்கொண்டு அந்நாவல் எழுதப்பட வேண்டும். பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் ஒரு சிறந்த உதாரணம்.இது போன்ற நாவல்கள் நமக்கு வாழ்க்கையை பற்றிய பருந்துப்பார்வையை அளிக்கிறது. புதிய புரிதல்களை உருவாக்குகிறது. நாவல் நமக்கு பாடம் புகுட்டாது. அந்நாவலை வாசித்து பெற்ற அனுபவங்களை சீராய்ந்து நாம் நமக்கான பாடங்களை உருவாக்கிக்கொள்கிறோம்.3. கட்டுரை ஒரு சமையல் குறிப்புகட்டுரை, ஆராய்ச்சிக்கட்டுரை என இரு வெவ்வேறு வடிவங்கள் உள்ளன. குழப்பிக்கொள்ள கூடாது. ஒரு கட்டுரை ஏற்கனவே வகுக்கப்பட்ட விழுமியங்களை மீண்டும் அடிக்கோடிட்டு சொல்லும். ஆராய்ச்சிக்கட்டுரை இதுவரை வரையறுக்கப்பட்ட கருத்துகளின் மேல்நின்று புதிய கருத்தை நிறுவும்.கட்டுரை ஒரே ஒரு சீர்கருத்தை மையமாக வைத்து எழுதப்பட வேண்டும். அதற்கு சம்மந்தம் இல்லாத எதையும் உள்ளே வைத்திருக்க கூடாது. ஒரு கருத்துக்கு ஒரு உதாரணம் போதுமானது. பிற உதாரணங்களை வாசகர்கள் யூகித்திக்கொள்வார்கள். இதன் பின்னர் எழுதுதல் பற்றிய சந்தேகங்களை வாசகர் கடிதங்கள் மூலம் ஜெயமோகன் பதிலளிக்கிறார். இதுவரை எழுததல் பற்றிய புத்தங்களில் ஜெயமோகனை தவிர சீராக எழுதியவர் எவருமில்லையென்றே தோன்றுகிறது. சிறந்த புத்தகம்.
Shelves
book Jeyamohan

More like this


ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

Author: Jeyamohan

இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும்…

4.47/5 · 38 ratings

வெண்முரசு – 03 – நூல் மூன்று – வண்ணக்கடல்

Author: Jeyamohan

வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்…

4.47/5 · 38 ratings

ஊமைச்செந்நாய்

Author: Jeyamohan

ஊமைச்செந்நாய் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். உயிர்மை பதிப்பக வெளியீடாக 2008ல் வெளிவந்தது. யதார்த்தக்கதைகள், செய்திவடிவக் கதைகள், மிகையதார்த்தக் கதைகள் ஆகி…

4.47/5 · 38 ratings

உலோகம்

Author: Jeyamohan

உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுட…

4.47/5 · 38 ratings

தன்மீட்சி

Author: Jeyamohan

இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…

4.47/5 · 38 ratings

ஏழாம் உலகம்

Author: Jeyamohan

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.47/5 · 38 ratings

இந்தியப் பயணம் [India Payanam]

Author: Jeyamohan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு…

4.47/5 · 38 ratings

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

Author: Jeyamohan

இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொ…

4.47/5 · 38 ratings

இலக்கியத்தின் நுழைவாயிலில் [Ilakkiyathin Nuzhaivaayilil]

Author: Jeyamohan

இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொ…

4.47/5 · 38 ratings

இன்றைய காந்தி

Author: Jeyamohan

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பா…

4.47/5 · 38 ratings

பனி மனிதன்

Author: Jeyamohan

இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு ப…

4.47/5 · 38 ratings