Quotes from இதுவே சனநாயகம்
வேர்களைப்பற்றிய அறிவு என்பது, விஞ்ஞானத்தின் ஒரு பகுதிதான். பண்டைக்காலத் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்வது ஐரோப்பியக் கொடும்பிடியிலிருந்து இத்தருணத்தில் நம்மை விடுவிக்க உதவும் என்பது இடதுசாரி ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
சைவத்திலும் வைணவமே வீச்சுடைய நெறியாக வாழ்ந்ததும் தெரிய வருகின்றது. இந்நிலைமைக்கான காரணங்கள் என்ன? மறுபுறத்தில் சமணத்தின் தொன்மை சுட்டும் சான்றுகள் ஒப்பீட்டளவில் நெல்லை மாவட்டத்தில் மிகுதியாக உள்ளன. குறிப்பாகக் கழுகுமலை, வள்ளியூர், மறுகால்தலை, சிங்கிகுளம் ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம்.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
சைவ நாயன்மார் அறுபத்து மூவரில் மதுரைக்குத் தெற்கிலுள்ள நிலப்பகுதியிலிருந்து யாரும் இடம்பெறவில்லை என்பது ஆய்வுக்குரிய செய்தியாகும். அதேநேரத்தில் இப்பகுதியில்
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
அரங்கேறியிருக்கின்றது. ஆனந்தவிகடன், தினமணி, சுஜாதா, ஐராவதம் மகாதேவன், அமெரிக்கன் கான்சலேட், ஆல் இண்டியா ரேடியோ, தூர்தர்சன், வெளிநாட்டுப் பிராமணர் ஆகியோருக்காகவும் கிரியாவின் தற்காலத்திற்காகவும், அரைப்பார்ப்பனர்களாலும் புதிய பார்ப்பனர்களாலும் (Neo Brahmins) தயாரிக்கப்பட்டுள்ள அகராதி இது. “சர்வ ஜனாஉற் சுகினோ பவந்து
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
சுருக்கமாகச் சொன்னால் தற்காலம், எழுத்துத்தமிழ் என்னும் இரண்டு போர்வைகளில் தமிழன் கையைக்கொண்டே தமிழன் கண்ணைக்குத்தும் அவலம் மீண்டும் ஒருமுறை வெற்றிகரமாக
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
அரசு அல்லது அதிகாரம் சார்ந்ததாகச் சொற்பொருள் தருவதில் அகராதி தனிக்கவனம் செலுத்தியிருக்கிறது. எடுத்துக் காட்டாக ‘அவைத்தலைவர்’ என்ற சொல் சட்டமன்ற மக்களவைத் தலைவரை மட்டுமே குறிப்பதாக அகராதி சொல்கிறது. சாதாரணக் கூட்டத்தின் தலைவர் அவைத்தலைவர் ஆகமாட்டாரா? ‘சீர்மரபினர்/முன்னாள்
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
தெரியும். இது Neo Brahminismத்தின் முகங்களில் ஒன்று.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
இது போல். எனவே ஒரு ‘பொதுஎழுத்து மொழி’ என்பது பன்முகமான பண்புகளைக் குலைத்தும் அழித்தும் மேலெழுகிற ஆதிபத்தியம் ஆகும்.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தேபோல் சொட்டுச் சொட்டென்னத் துளிக்க துளிக்க என் குட்டன் வந்தென்னைப் புறம் புல்குவான்
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'
வைதீகம் இங்கே பார்ப்பனியத்தின் காவல் கோட்பாடாக மட்டுமே இருந்தது. வருணாசிரமமே (விசயநகரப் பேரரசர்களால்) இங்கே இந்துத்துவத் திற்குக் கால்கோள் இட்டது என்பதே வரலாற்று உண்மை.
தொ. பரமசிவன் (Tho. Paramasivan) — 'இதுவே சனநாயகம்'