Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
காவல் கோட்டம்
Kaaval Kottam
- பக்கங்கள்
- 1173
- வடிவம்
- Hardcover
- பதிப்பகம்
- Vikatan Publication
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-10
- 8184765487
சாகித்ய அகடாமி விருது பெற்ற இந்த நாவல், மதுரையின் அறுநூறு ஆண்டுகால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமாகப் பதிவு செய்கிறது. உழைக்கும் மக்கள் கூட்டம் ஒன்று காலப்போக்கில் எப்படி 'குற்றப் பரம்பரை' என்று முத்திரை குத்தப்பட்டது என்பதையும், அவர்களின் வீரமும் சோகமும் நிறைந்த வாழ்வியலையும் இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. வெறும் காகித எழுத்துக்களாக இல்லாமல், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பண்பாட்டுப் பெட்டகமாக இது திக…
Quotes
புதிய படகைத் தண்ணீரில் இறக்குவதைப்போல கிராமங்கள் ஒவ்வொன்றாய் பெரியாற்று நீரில் இறங்கின. நீரோடு வாழப்பழகுதல் எளிதன்று. நீர் அவர்களுக்குள் இறங்கிப் பாய்ந்து கசிந்தபடி இருந்தது. நீரின் குணம் படியப்படிய மனிதனுக்குள் விளைச்சல் ஆரம்பித்தது. சம்சாரித்தனத்தின் உயிரே நிலத்தில் பயிர் விளையும்பொழுது மனத்துக்குள்ளும் அது விளைவதுதான்; நிலத்தில் பயிர் வாடும்போது மனதுக்குள் உயிர்வாடுவதுதான். நிலத்தின் கண்ணாடியாக மனித உடல் மாறிவிடுகிறது. நிலம் போர்த்திய பேருடலுடன் அலையும் மனிதர்கள் பயிர்களின் வேர்களை நரம்புகளெனத் தங்களுக்குள் ஊடுருவ விட்டுவிடுகின்றனர். பச்சைப் பயிர் வளர்ந்து, பரிய ஆரம்பித்து, பால்பிடித்து, முத்துமுத்தாக விளைந்து வயலிலே சாய்ந்து படுத்துறங்கும் காலத்திற்குள் விதவிதமான மன உணர்வுகளால் உருமாறியபடியே இருக்கின்றனர். பாய்ச்சிய நீரில் விளையும் பயிர் நிலத்தில் மட்டும் விளைவதில்லை. வேளாண்மை எங்கு நடக்கிறது என்பது ஒரு மர்ம விளையாட்டாகவே இருக்கிறது. இயற்கையின் பேரதிசயங்களுக்குள் கால் நனைத்து சம்சாரி வயல்வெளியெங்கும் நடந்து திரிகிறான்.
எது களவு என்பதை அதிகாரமே தீர்மானிக்கிறது
வீழ்ச்சிக்குப்பின் எவ்வளவு காலம் நிலைத்திருந்தாலும் கோட்டை அதன் அர்த்தத்தை ஓரு சிறு கல்லில் கூட தக்கவைத்துக் கொள்வதில்லை. அது அதனது அர்த்தத்தையும் அவசியத்தையும் ஒருபோதும் தான் தீர்மானிப்பதும் இல்லை. எதிரிகளால் நாற்புறமும் சூழப்பட்ட நிலையில் உட்பகுதியில் இருக்கும் பதற்றத்தையும், பயத்தையும் அது உணர்ந்ததுமில்லை. அவர்களின் பசியை அது அறியாது. முற்றுகையைக் கண்டு அது அஞ்சியதில்லை. வீழ்த்தப்பட்ட பின் சிதைந்துபோன நெடுங்கதவுகளின் வழியே வெட்டுண்ட தேகங்களை இழுத்துக்கொண்டு கரிய இரத்தம் வெளியேறும் போது அதைக் கண்டுகொண்டதுமில்லை. ஏதோ ஒரு மலைப்பகுதியில் இருந்து தன்னைச் செதில் செதிலாக வெட்டி எடுத்து வந்து இங்கே அடுக்கி வைத்தவர்களின் மீது அதற்குக் கோபம் இல்லை; ஆதரவு காட்டவும் தெரியாது. அது வெறும் கல் அவ்வளவுதான். மனிதன் தான் அதன் மீது கனவு காண்கிறான். கட்டியெழுப்புகிறான். ஏதேதோ செய்து அதன் பின்னால் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறான். செதுக்கி வழிபடுகிறான். நம்பி வரம் பெற விழைகிறான்.
Shelves
More like this
வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
சங்க காலக் கொடை வள்ளல்களில் ஒருவரான பாரியின் தன்னலமற்ற கொடைத் தன்மையையும், அன்பு மற்றும் இயற்கை வழிப்பட்ட அவரது வாழ்வியலையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது. பறம்பு நாட்ட…
முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதி…
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்
எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம். எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான். எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு …
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
சந்திரஹாசம்: முடிவில்லா யுத்தத்தின் கதை - தமிழ் கிராஃபிக் நாவல்
தென்னிந்தியாவின் பெரும் சாம்ராஜ்ஜியமாக நிலைகொண்டிருந்த சோழச் சாம்ராஜ்ஜியத்தின் மாமன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழனை வென்று ( கி.பி. 1279) பாண்டியப் பேரரசை நிறுவினான் ஜடாவர்…
காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான ''சாகித்ய அகடாமி விருது'' பெற்ற நாவல். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி…
வைகை நதி நாகரிகம்
வைகை நதிக்கரையில் 293 கிராமங்களில் புதைந்திருக்கும் 2500 ஆண்டுகால நாகரிகத்தின் கதையை இந்த நூல் விரிக்கிறது. கீழடி அகழாய்வில் கிடைத்த 5300க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் — …
கர்ணனின் கதை
திரு.பாலகுமாரன் அவர்களுக்கு. எவ்வளவு பெரிய பொறுப்போடு எழுதப்பட்ட நாவல். அது இந்த தேசத்தின் உங்களுக்கு உள்ள மிகப்பெரிய அக்கறை. ஆதங்கத்தோடு எழுதியிருக்கிறீர்கள். சங்கர்ர் ப…
தண்ணீர் தேசம்
இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
தாயுமானவன்
வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …
சில நேரங்களில் சில மனிதர்கள்
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…